Jump to content

இலங்கை அரசியல் நெருக்கடிகளும் சீனாவின் சதுரங்கமும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்


Recommended Posts

குமுதம் ரிப்போட்ட்ரில் இன்று (02.11.2008) வெளிவந்த கட்டுரையின் முழுவடிவ்ம்.
.

இலங்கை அரசியல் நெருக்கடிகளும் சீனாவின் சதுரங்கமும்

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

.
முன்னைநாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழராலும் சிங்கள ஜனநாயக சக்திகளாலும் மேற்குலகின் மனித உரிமை அமைப்புகளாலும் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டபட்டவர். தனது ஜன்மவிரோதியான மகிந்த ராஜப்கசவை சிறைக்கு அனுப்புவேன் என சூழுரைத்துவந்த இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன அக்டோபர் 26ல் திடீரென மகிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமித்துள்ளார். இதை உலகநாடுகள் எதிர்பார்க்கவில்லை. 
.
மகிந்த உலகறிந்த சீன ஆதரவாளர். அவருக்குச் சீனா தேர்தல் நிதி கொடுத்ததாக நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பின்னனியில்தான் ”மீண்டும் மகிந்த” என்கிற சினிமாவை பெரும் பொருட்செலவில் சீனாவே கதை வசனம் எழுதித் தயாரித்துள்ளதாக நம்பப்படுகிறது. கிளைமக்ஸ் காட்ச்சியின் முன்னம் மகிந்த இந்தியாவுக்கு வந்தமை மிக முக்கியமான முக்கியமான திருப்பமாகும்.
இது ’இந்தியாவை அமரிக்கா பக்கம் நகராமல் பார்த்துக்கொள்வதும் இந்திய சார்பாக இருக்கும் இலங்கை மற்றும் உலகத் தமிழர்களை அமரிக்கா பக்கம் நகர்த்துவதும்’ என்கிற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தும் சீனாவின் சூப்பர் காய்நகர்த்தல்கள்தான். இறுதியில் களைத்துபோய் உலக தமிழர்களில் ஒருசிலராவது தனக்கு பின்னே வருவார்கள் என சீனா அனுபவபூர்வமாக நம்புகிறது. 
.
தோற்றுபோயிருந்த மகிந்த ராஜபக்ச அணி 2018 பெப்ருவரி 10ல் இடம்பெற்ற உள்ளூராட்ச்சி தேர்தலில் பெருவெற்றி பெற்றது. கதை முடிந்துவிட்டது என நம்பியிருந்த வேழையில் மகிந்த ராஜபக்ச பெற்ற அசுர வெற்றி ஜனாதிபதி சிறிசேனவை கலங்கடித்தது. இங்கிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்ய இந்திய உளவு அமைப்பு சதி செய்வதாக சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தது வெளியில் கசிந்தது. இது ஒன்றும் புதிய விழையாட்டல்ல. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்றுபோனது மகிந்த ராஜபக்சவும் இந்திய உளவு அமைப்பின்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தடவை இந்தியாவுக்கு சிறிசேன வில்லனாகவும் மகிந்த கதாநாயகனாகவும் ஆகியதுதான் முக்கிய திருப்பம். காத்திருந்து எதிர்வினைகளை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம்தான் இந்தியாவின் அணுகுமுறைகளை புரிந்துகொள்ள வேண்டும். எனினும் தென்னாசிய ஆடுகழத்தில் அமரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பாதை இருக்கிறது என இந்தியாவை நம்பவைக்கும் தனது நேரு - கிருஸ்ணமேனன் காலத்து ராஜதந்திரத்தை சீனா இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. 
. 
2015ல் இருந்தே மகிந்த ராஜபக்ச தன்னைக் கொலைசெய்ய முயன்றார் என ஜனாதிபதி சிறிசேன குற்றம் சாட்டி வந்தார். அதனால் சிறீசேன பகை மறந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுமே எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். இத்தோடு ரணில் தொலைந்தார் என்றே பலரும் நம்பினார்கள். பல நாடாளு மன்ற உறுப்பினர்கள் மகிந்த தரப்புக்கு தாவும் சூழல் நிலவியதையும் மறுக்க முடியாது. ஆனால் ஜனாதிபதி சிறிசேன தப்பாகவோ அல்லது சூழ்ச்சியாகவோ சில அடிப்படைத் தவறுகளோடுதான் தனது பகைவனான மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருக்கிறார். 
.
2015ல் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு கொண்டுவரபட்ட 19ம் திருத்ததின்படி ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்க அதிகாரமில்லை. இலங்கை அரசியலில் சிறிசேன ஒரு குள்ளநரி நரி ஏன்பதில் சந்தேகமில்லை. அவர் மேற்படி தவறு என்கிற எலியையும் வைத்துத்தான் மகிந்தவுக்கு பிரதமர் பதவி என்கிற கட்டுச்சாதத்தை வளங்கியிருக்கிறார். சிறிசேன இலங்கை அரசியல் அமைப்பினைக் கண்டுகொள்ளாமலும் அமைச்சர் அவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ சபாநாயகருக்கோ அறிவிக்காமலும் அதிரடியாக மகிந்தவை பிரதமராக நியமித்தார். சீனாவை இந்தியாவை அமரிக்காவை எல்லாம் ரணில் மகிந்தவோடு ஆடுகழத்தில் இறக்கிச் சுளல விட்டு விட்டு தன்னைப் பலப்படுத்துவது மட்டுமாகவே சிறீசேனாவின் உள் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

உள்ளூர் ஆட்ச்சி சபை தேர்தல் பெரு வெற்றியின் பின்னர் மகிந்தவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போ சிறிசேனவின் நெறியாழ்கையில் நடக்கிற தெருக்கூத்தில் கோமாளிக் கதநாயகனாக வேசங்கட்ட சமதித்ததின்மூலம் மகிந்த தனது அடுத்த தேர்தல் வெற்றி வாய்ப்பையும் கேழ்விக் குறியாக்கிவிட்டார். இதன்மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் சிறி சேனவுக்கும் லாபம்கிடைக்கலாம். 
.
என்ன முடிவென்றாலும் அதை அரசியல் அமைப்பு சட்டபடி பாராளுமன்றில் எடுங்கள் என்கிற இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் மீண்டும் தங்கள் நிகட்ச்சி நிரலில் இலங்கை தமிழர் பாதுகாப்பை இணைத்துள்ளனர். இது தமிழருக்கும் சம்பந்தருக்கும் கிடைத்த வெற்றியாகும். மனோ கனசனும் ரவூப் ஹக்கீமும் ரிசாத் பதிதியூனும் இணைந்து எடுத்த சந்தர்ப வாதமற்ற கொள்கை முடிவு நிலைத்தால் நிச்சயம் வரலாறில் பேசப்படும். 
.
ரணிலும் வல்லவர்தான். அவர் பதட்டப்படவில்லை. அரசியல் அமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. நானே இலங்கையின் சட்டபூர்வமான பிரதமர் என அறிவித்தார். தொடர்ந்து மேற்க்குநாடுகளின் தூதர்களையும் இந்திய தூதரையும் சந்தித்தார். சபாநாயரூடாக நாடாளுமன்றத்தை கூட்டும்படி ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடி அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் அரசியல் அமைப்பை மதிக்கும்படிக்கும் நாடாளு மன்றத்தைக் கூட்டுமாறும் ஜனாதிபதி சிறிசேனவிடம் கண்டிப்புக் காட்டின. 
அபிவிருத்தி உதவிகள் தொடருமென்று தெம்பூடிய இந்தியாவும் அரசியல் அமைப்புச் சடத்தை அனுசரித்துப் போகுமாறு சிறிசேனவிடம் தெரிவித்தது. இந்த பின்னணியில் மகிந்த பக்கம் சாய்ந்தவர்கள் பலரும் மீண்டும் ரணில் பக்கம் வந்தனர். மகிந்தவின் கட்ட்சியிலும் சந்திரிகா சார்பானவர்கள் ரணிலை ஆதரித்தனர். நாடாளுமன்றத்தை கூட்டவேண்டுமென தமிழர் தலைவரும் எதிர்க்கட்ச்சித் தலைவருமான சம்பந்தரும் கேட்டுக்கொண்டார். 
.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க ரணிலுக்கு 113 உறுப்பினர் ஆதரவு தேவை. 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தலைமை தனது நகர்வுகளுக்கு நிபந்தனைகள் உள்ளது என உறுதியாகத் தெரிவித்துள்து. இந்தப் பின்னணியில் உலக நாடுகளும் எதிர்க் கட்ச்சிகளும் கேட்டுகொண்ட நாடாளுமன்றத்தை கூட்டும்படியான பொதுக்கோரிக்கையை ரணில் சிக்கென பற்றிக்கொண்டார். நாடாளுமன்றத்தைக் கூட்டுக என்கிற ரணிலின் கோரிக்கையில் 126 உறுப்பினர்கள் கையொப்பமிட்டது ரணிலின் முதல் வெற்றியாகும். 
.
எல்லாம் நல்லபடி நடந்தால் அரசியல் கைதிகள் விடுதலை உட்பட தமிழரின் முக்கிய கோரிக்கைகளில் ஒரு சிலதாவது விரைவில் நனவாக வாய்ப்புள்ளது. 
.
முன்னைய மகிந்த ராஜபக்சவின் ஆட்ச்சியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 2004 சுனாமியின்போது அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அனுமதி ஏதுமின்றி நிவாரணப் பணிக்கென அமரிக்க கடற்படை இலங்கையில் தரை இறங்கியது. இதுபற்றி அமரிக்கா எந்த நாட்டுக்கும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் முன்னம் 1987ல் இந்தியா வடகிழக்கில் தரை இறங்கியது. ’அரச குடும்பம் பிழவுபட்டால் அடுத்த ஊரார் கட்டபஞ்சாத்து’ இதைத்தானே மகாவம்சம் சொல்கிறது. மகிந்த ராஜபக்ச நல்ல ஞாபகசக்தி உள்ள தலைவர் என்பதில் சந்தேகமில்லை.

 
 
 
திருத்தம் - 2004 சுனாமியின்போது அன்றைய ”ஜனாதிபதி” என்பதை பிரதமர் என மாற்ற வேண்டும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.