Jump to content

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
டேவ் லீ பிபிசி
 

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை Reuters

பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவன பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கையாளும் விதத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யக்கோரி அந்நிறுவனத்தின் பணியாளர்கள் போராட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.

"உங்களில் பலரும் கொண்டுள்ள கோபத்தையும், ஏமாற்றத்தையும் என்னால் உணர முடிகிறது" என்று கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

 

"நமது சமூகத்தில் நீண்ட காலமாகவும், தற்போது கூகுள் நிறுவனத்திலும் நிலவி வரும் இப்பிரச்சனையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் முழு உறுதிகொண்டுள்ளேன்" என்று அந்த மின்னஞ்சலில் அவர் மேலும் கூறியுள்ளார்.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?படத்தின் காப்புரிமை WALKOUT ORGANISERS

போராட்டத்திற்கான காரணம் என்ன?

பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையில் அந்நிறுவன பணியாளர்களுக்கு நீண்டகாலமாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், சென்ற வாரம் அந்நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவி விலகினார். மேலும், அவருக்கு கூகுள் நிறுவனம் சுமார் 90 மில்லியன் டாலர்கள் வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, எதன் அடிப்படையில் அந்த உயரதிகாரியின் மீதான புகார் விசாரிக்கப்பட்டது என்ற கேள்வியை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் எழுப்பியதால் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில், பணி நேர்காணல் நடத்தியபோது பெண்ணொருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக கூகுள் நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரியான ரிச்சர்ட் தேவால் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?படத்தின் காப்புரிமை TWITTER/GOOGLEWALKOUT

இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக குறைந்தது 48க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு எவ்வித பணமும் வழங்கப்படவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பணியாளர்களின் கோரிக்கை என்ன?

இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள கூகுள் பணியாளர்களின் மேசையில் ஒட்டப்பட்டுள்ள தாளில், "பாலியல் துஷ்பிரயோகம், தவறான நடத்தை, வெளிப்படைத்தன்மை அற்ற நிலை, வலுவற்ற பணிச்சூழல் போன்றவற்றை எதிர்த்து சக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் போராடுவதற்காக நான் சென்றுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் பணியாளர்கள் அந்நிறுவனத்துக்கு வைத்துள்ள கோரிக்கைகளில் சில:

  • ஊதியம் மற்றும் பணிவாய்ப்பில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவருவதை உறுதிசெய்வது
  • பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றச்சாட்டுகளை கையாளும் அணுகுமுறை பற்றிய அறிக்கையை வெளியிடல்
  • பாலியல் துஷ்பிரயோகத்தை பாதுகாப்பாகவும், யாருக்கும் தெரியாமலும் பதிவு செய்ய ஒரு தெளிவான, சீரான, உலகளாவிய உள்ளடக்கிய செயல்முறையை உருவாக்குவது
  • பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி நேரடியாக தலைமை செயலதிகாரியிடமும், இயக்குனர்கள் குழுவிடமும் பதிலளிப்பதற்கு அனுமதித்தல்
  • பாலியல் துஷ்பிரயோகம், பாகுபாடு சார்ந்த குற்றச்சாட்டுகளை நிறுவனத்துக்குள்ளேயே விசாரணை நடத்தி தீர்த்து வைக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரல்

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?படத்தின்

https://www.bbc.com/tamil/science-46059786

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.