Jump to content

பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம்

by in செய்திகள்

india-china-300x200.jpg

அரசியல் கொந்தளிப்பின்  மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து  வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச  நியமிக்கப்பட்டிருந்தார்.  இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது

அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், பௌத்த சிங்களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் அரசியல் இயந்திரம், இன்று பிளந்து போய் கிடக்கிறது.  மகிந்த,  ரணில்,   இருதரப்புக்கள் சிறிலங்காவின் தலைமைத்துவ அதிகாரம் தமது கை களிலேயே உள்ளது என்று உரிமை கோரி வருகின்றனர்.

சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் கொந்தளிப்பு சர்வதேச ஊடகங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சீன -இந்திய பத்திரிகைகள் தமது முக்கிய கவனத்தை கொண்டுள்ளன.   இந்த நிலையில் சர்வதேச நிலையிலிருந்து ஒரு பார்வை இங்கே வைக்கப்படுகிறது.

பிராந்திய வல்லரசுகளின் கைகள் ஒங்கி இருக்கும் காலம் இது. ஆசியாவில் அரசியல் முன்னுரிமை பெறும் பொருட்டு மூன்று பிரதான வல்லரசுகள் போட்டியிடுகின்றன.  நான்காவதாக ரஷ்யாவும் தனது கிழக்கு கரை குறித்த அதிக கரிசனை கொண்டுள்ளது. mahinda-chen-1-300x200.jpg

ஜப்பானிய -இந்திய அரசுககள் வடக்கு அத்திலாந்திக்கரை தேசங்களின்  தாராள ஜனநாயகத்தின் பேரால் ஒன்றுடன் ஒன்று ஒத்து செயற்படுகின்றன. கீழைதேய வர்த்தக கம்யூனிச கொள்கை கொண்ட  சீனாவை, தமது கூட்டு நடவடிக்கைகள் மூலம் கொள்ளடக்கும் தன்மையை தமது மூலோபாயமாக  கொண்டிருக்கின்றன.

சிறிலங்கா  போன்ற  சிறிய நாடுகள் வல்லரசுகளின் போட்டியின் மத்தியில் தமது நலன்களை முன்னிறுத்திக் கொள்ளும் கொள்கைகளை தம்மகத்தே கொண்டிருக்கின்றன. சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் நாட்டின்  வெளியுறவு கொள்கையை பொறுத்தவரையில் தமது சார்புதன்மையை வெளிப்படையாக காட்டி கொள்ளாத ஒரு போக்கை கொண்டிருக்கின்றன.

இருந்த போதிலும் மௌனக் கொள்கை மற்றும்  செயல் அளவில் ஐக்கிய தேசிய கட்சி வடக்கு அத்திலாந்திக்கரை தேசங்களின் சார்புத்தன்மையை அதிகம் கொண்டிருந்தது.

அதேவேளை சுதந்திர கட்சி அதிகம் சீன சார்புத்தன்மையை ஒத்த உள்நாட்டு கொள்கையை, தனது மௌனமான வெளியுறவு விவகாரங்களில்  சீன சார்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் இருந்து வருகின்றது.

இருந்த போதிலும் தமது நடை முறை ஆட்சி நலன்களின் அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் சிறிலங்கா சார்பாக, எந்த  வல்லரசுகளுடனும் பேரம் பேசும் சக்திகளாக இருந்து வருகின்றன.

அணிசேரா அமைப்பு காலாவதியாகி விட்ட போதிலும், தாம் அணிசேரா தன்மையை சர்வதேச உறவு கொள்கையில் கடைப்பிடித்து வரவேண்டும்  என்றே கொழும்பு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் விதைந்துரைத்தும் வந்திருக்கின்றன.

Ranil-met-Diplomats-1-300x200.jpg

பிராந்திய வல்லரசு நாடுகளைப் பொறுத்தவரையில் அவை தமது நலன்களை மையமாக கொண்டு சிறிலங்காவில்  எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அக்கட்சியின் செல்வாக்கை தம் வசம் வைத்திருக்கும் முயற்சியிலேயே இருந்து வந்திருக்கின்றன.

சிறிலங்காவின் அயல் தீவான மாலைதீவில் அண்மையில் இடம் பெற்ற அரசியல் கொந்தளிப்பின் பின்னர், ஜனாதிபதி யமீன் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உருவானது. யமீன் சீன சார்பாளராகவும் பெருமளவிலான  இந்திய எதிர்ப்பாளராகவும் இருந்து வந்திருந்தார்.

இதனால் இந்திய மேலைத்தேய நாடுகளின் நேரடி அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. மாலைதீவு இந்து சமுத்திரப் பிராந்திய தீவு என்பதன் பலனாக இந்தியா மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் மாலைதீவில் சீனா தோல்வி காண வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியாவின் புறநிலங்களில் ஒன்று போன்ற வகையில், சிறிலங்கா மிக அருகாமையில் அமைந்துள்ள ஒரு இறையாண்மை மிக்க தீவு ஆகும் மேலும் சிறிலங்காவின் ஆட்சி தலைவர்களின் குணாதிசயங்களின் பிரகாரம் எந்த நாட்டுடனும் தமது எதிர்ப்பை அரசியலில் காட்டிக் கொள்ளாத போக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு  புதுடெல்லி புரிந்துணர்வு கொள்கையா (New Delhi consensus)  அல்லது பீஜீங் புரிந்துணர்வு கொள்கையா (Beijing consensus)  என இரண்டில் ஒன்று என்ற  நிலையை நோக்கி சிறிலங்காவை  கொண்டு செல்லும் பாணியில் அமைந்திருக்கிறது.

South China Morning Post பத்திரிகை தனது ஒவ்வொரு  கட்டுரைகளிலும் சிறிலங்காவுக்கு சீனா செய்த உதவிகள் யாவற்றையும் திரும்ப த்திரும்ப எடுத்து கூறி வருகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்பு நாட்டை கட்டி எழுப்பி பில்லியன் கணக்கான பணத்தை சீனா வழங்கி உள்ளது. கொழும்பு துறை முக நகர கட்டுமானத்திற்கு சீனா 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது .

இவ்வருட ம் ஜூலை மாதத்தில் கூட சீன தலைவர் ஷி ஜின் பிங் 287 மில்லியன் டொலர்களை உதவித்தெகையாக கொடுத்தள்ளார்  என பல்வேறு வகையில் சிறிலங்கா, சீனாவுக்கு கடமைப்பாடு உடையது என்ற வகையில் அழுத்தமாக கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

MODI-RANIL-300x200.jpg

இந்தியப் பத்திரிகைகளை பொறுத்தவரை அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்த பேச்சு அதிகம் உள்ளது. நாட்டின் அரசியல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது போய்விடும் நிலை ஏற்பட்டால், மேலைத்தேய போக்கு வலுவிழந்த நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் சிறிலங்கா தமது செல்வாக்கிலிருந்து தூர  விலகி சென்று விடும் என்பது இந்திய பார்வையாக உள்ளது.

சீன- இந்திய இராஜதந்திரிகள்  நாம் உள்நாட்டு அரசியலில் தலையிடமாட்டோம் ,ஆனால் உன்னிப்பாக கவனிப்போம் என்று வாக்குறுதி கூறி உள்ளனர்.  இது இருபகுதியும் இந்த தீவின் மீது தாம் காட்டும்  முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தி உள்ளனர்.

தம்மால் கட்டி அமைக்கப்பட்டுள்ள கடல் சார் பாதுகாப்பு குறித்த மூலோபாய பிடியை இருதரப்பும் முக்கியமாக கருதுகின்றன. இந்த ஆட்சி மாற்றத்தில் போட்டி போடும் அரசியல் தலைவர்கள் யாராவது தமது நலன் எல்லைகளின் சிவப்புக் கோட்டை தாண்டுகின்றார்களா என்பது தான் இவர்களது பார்வை.

அதேவேளை  இந்த ஆட்சிகவிழ்ப்பு நிகழ்வு கூட, அந்த சிவப்புக் கோட்டின் எல்லையில் வைத்து தான் நிகழ்திருக்கிறது என்பது இங்கே முக்கியமானதாகும்.

300 மில்லியன் அமெரிக்க டொலர் வீட்டுத்திட்டம் சீன கைகளில் இருந்து இந்திய கைகளுக்கு மாற்றம் பெற்றது.

அம்பாந்தோட்டையிலே சீன கப்பற்தளத்திற்கு அருகே இந்திய செல்வாக்கிற்கு அதிகம் இடம்கொடுக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகம் ஜப்பானிய இந்திய நாட்டங்களுக்கு உள்ளானது போன்றன சீன வலுவிழப்பு நடவடிக்கைகளாக சீனதரப்பால் பார்க்கப்பட்டது.

இந்த நிலையே அரசியல் சட்ட வரைமுறைகளுக்கு அப்பால் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சியை கைப்பற்றும் நிலையை ஏற்படுத்தியது.

ஆக பிராந்திய மற்றும் பூகோள வல்லரசுகளின் நலன்களின் முன்னால் எந்த சிறிய நாட்டு அரசியல் சட்டங்களும்  யாப்புகளும் வெறும் குப்பை கூளங்களே.

  • லண்டனில் இருந்து ‘புதினப்பலகை‘க்காக லோகன் பரமசாமி.

 

http://www.puthinappalakai.net/2018/11/01/news/33994

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.