Jump to content

இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா?

40.jpg

சேது ராமலிங்கம்

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சிகளுக்குள் பெரும் மோதல் வெடித்து அரசியல் நெருக்கடியாக மாறியது. இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கடந்த 26ஆம் தேதியன்று மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைப் பதவி நீக்கம் செய்வதாக எழுத்துபூர்வமாக அறிவித்தார். அவருடைய கட்சியையும் கூட்டணி ஆட்சியிலிருந்து விலக்கினார். உடனடியாகப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பார் என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதே போல ராஜபக்சே பதவி ஏற்று அமைச்சரவையும் நியமித்தார். இது எந்த வகையிலும் இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் தான் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் கூறி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முரண்பட்டார்.

இன்னொரு பக்கம் தனக்குப் பெரும்பான்மை இருப்பதாகவும் அதை நிரூபிக்கப் போவதாகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் கூறிவருகிறார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறிசேனாவினால் குறைக்கப்பட்டன. இதற்கிடையே ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்களும் நடைபெற்றுவருகின்றன.

சில ஆண்டுகளாகவே ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும். கடந்த ஏப்ரலில் ரணில் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் சிறிசேனாவும் ராஜபக்சேவும் இணைந்த கூட்டணியால் கொண்டுவரப்பட்டது. ஈழத்தமிழர்களும் முஸ்லிம்களும் ரணிலை ஆதரித்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. தற்போது இரு தரப்பினருக்குமான மோதல் உச்சமடைந்து அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவின் ஆதிக்க அரசியல்

40f.jpg

இலங்கை முழுவதும் உறுதியற்ற அரசியல் நிலைமை காணப்படுகிறது. இந்த நிலைமைக்குக் காரணம் ரணிலுக்கும் ராஜபக்சேவுக்குமான இடையிலான அதிகாரப் போட்டி என்பதாக மட்டும் ஊடகங்கள் சித்திரிக்கின்றன. உண்மையில் தெற்காசியாவில் இந்திய – அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராகச் சீனா நடத்தும் ஆதிக்க அரசியல் போட்டியாகும். இந்த ஆதிக்க அரசியல் சதுரங்கத்தில் தற்போது சீனா தனது காய்களை வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது

இந்தியா மட்டுமே தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவருவதாகக் கருதப்பட்டது. இலங்கையைத் தனது காலனிச் சொத்தாகவே இந்தியா கருதிவந்ததாகவும் இதில் யார் தலையிடுவதையும் இந்தியா விரும்பவில்லை எனவும் மதிப்பிடப்பட்டது. ஆனால், தெற்காசிய நாடுகளில் மட்டுமின்றி, ஆசியா முழுமைக்குமான ஆதிக்க சக்தியாக வளர்ந்துவரும் சீனாவின் பங்கு குறித்து யாரும் மதிப்பிடவில்லை.

தெற்காசியாவில் தனது ஆதிக்க நலன்களுக்கெதிராக உள்ள சக்திகளை நசுக்க இந்திய அரசைப் பயன்படுத்திக்கொள்ளுமளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. நான்காம் ஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியாவின் உதவியைச் சீனா தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தியா, அமெரிக்காவுடனான தனது உறவைப் பலப்படுத்த துவங்கியபோதே அதற்கு எதிரிடையாகவே சீனா தனது ஆதிக்கத்தை தெற்காசியாவில் வளர்க்கத் தொடங்கியது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உறவைப் புதுப்பித்த சீனா

இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், இலங்கை அரசு சீனாவுடன் தான் கொண்டிருந்த உறவைப் புதுப்பித்துக்கொண்டு அதை வளர்க்கத் தொடங்கியது. அதற்காகத் தயாராக இருந்த சீனாவும், இலங்கையின் அரவணைப்பைப் பயன்படுத்திக்கொண்டு இப்பகுதியில் கால் ஊன்றத் தொடங்கியது.

1993இல் தென்மேற்கு இலங்கையிலுள்ள கல்லே நகரத்தில் உள்ள கப்பற்படைத் தளத்தில் சீனாவைச் சேர்ந்த ‘நோரிங்கோ’ நிறுவனம் பிரமாண்டமான ஆயுத கிடங்கு ஒன்றைத் திறந்து விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இலங்கை அரசு தனக்குத் தேவையான அனைத்து ராணுவத் தளவாடங்களையும் இக்கிடங்கைத் தவிர வேறு யாரிடமும் வாங்கக் கூடாது.

ஈரானுக்கு அனுமதி ஏன்?

40g.jpg

சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவைக்கொள்ள சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக்கொள்ள அந்நாட்டுக்குச் சில சலுகைளுடன் சபுகஸ்கந்தா என்ற பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் தென்னிலங்கையில்உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர் மின் நிலையம் அமைப்பதற்கும் ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்குத் தேவையான நிதி என்று ஈரான் முன்வைத்த தொகையானது மிக அதிகமாக (300 விழுக்காடு) இருந்தாலும் இத்திட்டம் கைகூடினால் இலங்கைக்கு ஒரு பெரும் தொகையை வளர்ச்சி நிதியாக அளிக்க ஈரான் முன்வந்தது. எதிர்காலத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிராகத் திரும்பும் சூழ்நிலை உருவானால் இலங்கை மண்ணில் ஈரான் இருந்தால் அது தனக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை இத்திட்டத்தை அமல்படுத்தப்படத் தொடங்கியது.

இலங்கையின் தென்கோடிக் கடற்கரையிலுள்ள ஹம்பத்தொட்டா நகரை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் துறைமுக நகராக உருவாக்கிடவும் சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. சீனாவின் தனியார் நிறுவனங்களால் கட்டப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டமானது விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்திலேயே பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் கண்டெய்னர் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, விமான நிலையம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுவிடும்.

கடலடிக் கம்பி வடம் எதற்கு?

இதற்கும் மேலாக 2008 ஏப்ரலில் இருந்து தூத்துக்குடியையும் கொழும்புவையும் இணைக்கும் கடலடிக் கம்பி வடத்தையும் (கேபிளையும்) சீனா கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் தொலைபேசியையும் இணைய வசதியையும் உலகத்தோடு இணைப்பதில் கடலடிக் கம்பி வடங்களே முக்கியப் பங்காற்றுகின்றன. டாட்டாவுக்குச் சொந்தமான கடலடிக் கம்பி வடங்களும் ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ஃபிளாக் என்ற கம்பி வடங்களும் ஏர்டெல்லின் சுனில் மிட்டல் மற்றும் சிங்டெல்லுக்குச் சொந்தமான 121 கம்பி வடங்களும் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இத்துறையில் தனியாரைப் போலவே பிஎஸ்என்எல்லும் 2006இல் இலங்கை டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து 306 கிமீ நீளமுள்ள கடலடியில் செல்லும் கம்பி வடச் சேவையை தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் நிறுவியது.

40h.jpg

ஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்றினால் 180 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கம்பி வடச் சேவை 2006 அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது இக்கம்பி வடச் சேவை சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆனந்தகிருஷ்ணன் என்ற மலேஷியத் தொழிலதிபரின் நிறுவனத்திடம் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து பிஎஸ்என்எல் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி மற்றும் இணையதள மின்னஞ்சல் தகவல்களை ஒட்டுக் கேட்பதும் பதிவு செய்யவும் சீன உளவு நிறுவனங்களினால் முடியும். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் விழாவில் ராஜபக்சே சகோதரர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர்.

களத்தில் இறக்கப்பட்ட நாடுகள்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய - அமெரிக்க ராணுவம் ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய - அமெரிக்க கப்பற்படைகள் கூட்டாக மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவை தொடங்கிய 2006இலிருந்து இன்று வரை இவற்றுக்கு எதிரிடையாகச் சீனாவானது இலங்கையின் பல துறைகளிலும் வெகு வேகமாகக் கால் பதித்துள்ளது. ஆயுத உற்பத்தி, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சாலைகள் அமைத்தல், தொடர் வண்டித் தொழில் மற்றும் துறைமுகத் துறை ஆகிய துறைகளில் தனது முதலீட்டைக் குவித்துத் தொழிலை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. 1990களைப் போல இந்தச் செயல்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு அது தன்னுடைய நாட்டையும் ஹாங்காங் தொழில் நிறுவனங்களையும் மட்டுமே நம்பியிருக்கவில்லை. தனது ஆதரவு நாடுகள் அனைத்தையும் களத்தில் இறக்கியுள்ளது. 2006 டிசம்பரில் இருந்து 2007 ஜூலைக்குள் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும், மலேஷியாவிலும், வங்க தேசத்திலும், பாகிஸ்தானிலும் சீன அரசுடன் தொடர்புடைய மேற்கூறிய நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

சாதகமான முதலாளிகளை உருவாக்குவது

40i.jpg

பிற நாடுகளில் தனக்குச் சாதகமான ஒரு முதலாளி வர்க்கத்தை (பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் செய்தது போன்றது) உருவாக்கும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது. இதனால், இலங்கையில் இந்திய முதலாளிகளின் மூலதனம் இல்லை எனத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இலங்கையில் 25 இந்திய நிறுவனங்களின் 1500 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடு உள்ளது. ஆனால், இது சீனாவின் முதலீட்டை ஒப்பிடும்போது குறைவே. இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடே ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேலானது (உதாரணமாக ஹம்பத்தொட்டா துறைமுக நகர் உருவாக்குவதற்கான முதலீடு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்) சீனா மறைமுகமாகத் தன்னைச் சார்ந்துள்ள ஹாங்காங், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் மூலமாகப் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் தெற்காசியாவில் மட்டுமின்றி ஆசியா முழுமைக்கும் பொருளாதார ராணுவத் திட்டங்களைப் பிற நாடுகளில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது, பிறப்பில் சீனர்களல்லாத முதலாளிகளின் கூட்டமொன்றைத் திட்டமிட்டு அது வளர்த்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் குறுகிய காலத்தில் எப்படி வளர்த்தெடுப்பது? அதற்கு முதல் தேவை எவருக்கும், குறிப்பாக இந்தியாவுக்கு, சந்தேகம் ஏற்படாமல் ரகசியமாகச் செயல்படுவதுதான். இப்படி சீனாவின் நிறுவனங்களோ அல்லது ஹாங்காங்கிலிருந்து செயல்படும் சீனாவின் நிறுவனங்களோ செயல்பட்டால் அவை சந்தேகத்தை உருவாக்கும். ஆனால், சீனாவின் நல்லுறவுடன் உள்ளதும் சீனர்கள் அதிகமாக வாழ்கின்றதுமான நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவின் முன்னணி தொழில்நிறுவனங்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.

திட்டமிட்டே காய் நகர்த்தும் சீனா

இந்த நிறுவனங்களைச் சீன அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்று இந்திய அரசு அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும்பட்சத்தில் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சீனாவின் பக்கம் சேர்ந்துவிடும் அபாயம் உண்டு. அதனால் இந்தியாவினால் ஒன்றுமே செயல்பட முடியாது என்று திட்டமிட்டே சீனா காய் நகர்த்திவருகிறது.

இதற்கு எல்லாம் உச்சமாக சீனா அனைத்து விதமான ராணுவத் தளவாடங்களையும் ஆலோசனைகளையும் நிதி உதவியையும் இலங்கை அரசுக்கு அள்ளிக் கொடுத்தது ஏன்? இது ஒரு எளிமையான தந்திரம்தான். சீனாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் என்பதுதான். சீனாவுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் நாடுகள் இலங்கையைப்போல திட்டவட்டமான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என்பதை சம்பந்தப்பட்ட உறவு நாடுகளின் அரசுகளுக்கு இந்த நான்காம் ஈழப் போரின் ராணுவ முடிவுகள் மூலம் தீர்க்கமாக அறிவிப்பதே சீன அரசின் நோக்கம். ஆனால், சீனா திட்டமிட்டதற்கு மாறாக இந்திய அரசு 2015இல் ராஜபக்சேவை அதிகாரத்திலிருந்து நீக்கிட ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் ஒரு மத்தியஸ்தம் செய்து வைத்து ஆட்சிக்குக் கொண்டுவந்தது. இதன் நோக்கம் தொடக்கத்திலிருந்தே சீனத்தின் ஆதரவாளரான ராஜபக்சே இலங்கையில் சீனாவுக்கு அதிக இடமளிப்பார் என்பதுதான். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ராஜபக்சே மூல உத்தியாக சீனாவை இலங்கையில் அனுமதித்ததுதான். ஹம்பத்தொட்டா துறைமுகத்தைத் கட்ட அனுமதித்தது, இலங்கையின் கடல்வெளியில் சீனத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுமதித்தது ஆகிய ராஜபக்சேவின் நடவடிக்கைகள் இலங்கையைச் சீனத்தின் சொத்தாக மாற்றும் அளவுக்குச் சென்றன. இதனால்தான் இந்தியா ரணில் – சிறிசேனாவின் கூட்டணியைக் கொண்டுவந்தது. அதற்குப் பின்னர் இந்தியா இலங்கையின் விவகாரத்தில் மூன்று மாத காலம் முக்கிய கவனம் செலுத்தவில்லை.

40j.jpg

இந்த நிலையில் தன்னையும் மற்ற இரு அமைச்சர்களையும் கொல்ல ரா நிறுவனம் சதி செய்ததாகவும் சிறிசேனா உணர்ச்சிவசப்பட்ட நாடகத்தனமான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு இந்தியாவிலிருந்து மறுப்புத் தெரிவிக்கவே, இது பிரதமருக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம் என்று சமாளித்தார். இதனையடுத்து மிக வேகமான முறையில் ஆட்சிக் கவிழ்ப்பானது சீனாவின் ஆதரவுடன் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இதை எதிர்த்தன. இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி ஜனநாயக நெறிகளுடன் செயல்படுமாறு அறிவுரை கூறின. இந்தியாவும் பவ்யமாக அதனை வழிமொழிந்துள்ளது. ஆதிக்க அரசியலின் ஒற்றுமை இதுதான். இதிலிருந்தே அந்த அணிக்கு எதிராக உள்ள சீனத்தின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளலாம்.

இந்திய நலன்கள் பாதிக்கப்படுமா?

தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் இந்திய - அமெரிக்க ஆதரவு அணியாகவும் எதிர்த் தரப்பில் சீன ஆதரவு அணியாக சிறிசேனாவும் ராஜபக்சேவும் உள்ளனர். ராஜபக்சே பிரதமரானது இலங்கையின் மீதான இந்திய நலன்களைப் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், ராஜபக்சே தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சியினர் இலங்கை முழுவதும் இந்திய எதிர்ப்பைப் பரப்புரை செய்துகொண்டே சீனத்துக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அந்நாட்டின் துறைமுக வளர்ச்சித் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே ஈஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினலை இந்தியாவுக்குத் தர மாட்டோம் என்று அறிவித்தார். இது 2017இல் இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்தியாவுக்குத் திட்டமிட்டபடி, முக்கியமான திட்டங்களான திரிகோணமலை எண்ணெய் கிணறுகள், யாழ்ப்பாணத்திலுள்ள பலாய் விமான நிலையம், ஹம்பத்தொட்டரவில் மாட்டாலா விமான நிலையம் மற்றும் கொழும்புவுக்கு வெளியே எரிவாயு கிணறுகள் ஆகியன அளிக்கப்பட வேண்டியவை. ஆனால், இனி என்ன ஆகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.

இலங்கையின் வரலாறே அந்நாடு உலக மேலாதிக்க நாடான அமெரிக்காவின் ஏஜென்டாக இருந்து அதன் சார்பாக இலங்கை மேலாதிக்கம் செய்யப்படும் நாடாகவே இருந்துள்ளது. தற்போது இரு தரப்பினரிலும் யார் வெற்றி பெறுவார் என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும் தற்போது சீன ஆதரவு (ராஜபக்சே - சிறிசேனா) அணியினரின் கையே ஓங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

ஆதாரங்கள்:

1.Times of India, October 27,2018

2.Red cat and white cat - Contradictions of market socialism, by Robert Weil. Published by monthly review, Newyork.

3. Foreign Investment of China, China - A Modern Social - Imperialist Power (an integral part of the capitalist-imperialist system)

 

https://minnambalam.com/k/2018/10/31/40

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.