Jump to content

ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

T20-Ranking-list-720x450.jpg

ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

நியூசிலாந்தின் மார்டின் கப்டில் ஆறாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் எட்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேஸன் ரோய் ஒன்பதாவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சதாப் கான் 757 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் இஸ் சோதி 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் 685 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ராஷித் 676 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆறாவது இடத்திலும், விண்டிஸ் அணியின் சமுவேல் பத்ரி ஏழாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தஹீர் எட்டாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் பில்லி ஸ்டேன்லேக் ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வாசிம் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை வீரர்கள் தரவரிசையில் அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 345 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி 313 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் சகிப் ஹல் ஹசன் 310 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 136 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 124 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாடமிடத்திலும், 118 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா மூன்றாமிடத்திலும் உள்ளன.

 

http://athavannews.com/ரி-20-கிரிக்கெட்-தரவரிசைப்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.