Jump to content

அக்காவும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை. வேலை எப்பிடியோ தெரியாது என்று நான் யோசிக்க, உமக்கு எல்லாம் அது கடினமாக இருக்காது. முதலில போய்  கேழும். வேலை பழக்கி விடுவினம் தானே என்று சொல்ல, சரி வியாழக் கிழமை போய் கேட்பம் என எண்ணிக்கொண்டு சரி போய்ப் பாக்கிறன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். 

அவன் கூறிய தபாற் கந்தோர் என் வீட்டில் இருந்து காரில் என்றால் பத்து நிமிடம் தான். எனவே நடந்து கூடப் போகலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வியாழன் காலை வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு போய் பார்த்தால் அங்கு எந்த அக்காவையும் காணவில்லை. ஒரு அண்ணா தான் வேலை செய்துகொண்டு இருந்தார். அக்காவின் பெயரைக் கூறி அவர் இல்லையா என்று கேட்டதுக்கு,  வியாழனில் தான் தான் வேலை செய்வதாகவும் மற்றைய நாட்களில் தான் அக்கா வேலை செய்வதாகவும் கூறினார். சரி என்று கூறிவிட்டு திரும்பி வரும்போது என்னடா இது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே. இன்று அக்கா இல்லாமல் போய்விட்டாரே என மனம் எண்ணினாலும் சரி பார்ப்போம் என்று விட்டு இருந்துவிட்டேன்.

நான் நடத்தும் தமிழ்ப் பள்ளிக்கு அருகிலே ஒரு பெரிய கடை. அந்தக் கடையினுள்ளேதான் தபாற் கந்தோரும் இயங்குகிறது. எனது பள்ளியில் ஏதும் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள், ஒன்றுகூடல்கள் என்பன நடக்கும்போதெல்லாம் அந்தக் கடையில் தான் நான் தண்ணீர், ஜூஸ் , பிஸ்கட் போன்றவற்றை வாங்குவது. அக்காவைத் தெரியாவிட்டாலும் கடையில் வேலை செய்பவர்கள் என்னுடன் நட்புடன் கதைப்பார்கள். அடுத்து வந்த சனிக்கிழமை தமிழ் பள்ளிக்குப் பொருட்கள் வாங்கப் போகும்போது பார்த்தால் அந்த அக்கா அங்கு நிற்பது தெரிய,  நான் அவரிடம் சென்று, என் நண்பன் குமரன் நீங்கள் வேலைக்கு ஆட்கள் தேடுவதாகக் கூறினான் என்றேன்.

ஓம் எனக்கு வேலைக்கு ஆட்கள் தேவை தான். உங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் வேலை தெரியுமோ என்றார். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லித் தந்தால் ஓரிரு வாரங்களில் பழகிவிடுவேன் என்றேன். புதிதாகப் பழக்குவது என்றால் அதுக்கு மூன்று மாதம் செல்லும். எனக்கு வேலை தெரிந்தவர்கள் தான் தேவை என்றார். அட இத்தனை நாட்கள் சும்மா வீட்டில் இருந்ததுக்கு பக்கத்துப் போஸ்ட் ஆபீசில் போய்ப் பழகியிருக்கலாமே என்று மனதில் எழுந்த ஆதங்கத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சரி என்ர மனிசன் தானே வழமை போல் திட்டினால் திட்டீற்றுப் போகட்டும் என்று இருந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் பள்ளிக்கூடத்துக்குத் தண்ணீர்ப் போத்தல் வாங்கக் கடைக்குப் போய் பணம் செலுத்த வரிசையில் நிக்க, இங்க நீங்கள் தானே வந்து வேலை கேட்டது. பே பண்ணீற்று ஒருக்கா வந்து கதைச்சிட்டுப் போறீங்களே என்று அக்கா கேட்க, குபீர் என மனதில் எழுந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது. அக்காவிடம் போனால் நான் உங்களுக்கு வேலை பழக்கிறன். நீங்கள் எந்த நாட்கள் பிறீ என்றார் அக்கா.  நான் சனிக் கிழமையைத் தவிர எல்லா நாளும் பிறீ தான் என்று சொல்ல திங்கட் கிழமை வாங்கோ என்று சொல்லி அனுப்பினார் அக்கா. வீட்டுக்கு வந்த உடன மனிசனிட்டை விசயத்தைச் சொல்ல மனிசன்ர சந்தோசத்தைப் பாக்க வேணுமே. 

திங்கள் காலை எழுந்து வடிவா வெளிக்கிட்டு ஒன்பது மணிக்கு டாண்  என்று அங்க போய் நிண்டா அக்காவைக் காணவில்லை. தபாற்கந்தோர் இருட்டாய் இருக்கு. திடும் என்று ஒரு பதட்டம் மனதில் ஓட முன்னால் உள்ள கவுண்டரில் நின்றவனிடம் போய் போஸ்ட் ஒபிஸ் எத்தனை மணிக்குத் திறக்கும் என்று கேட்க, ஒன்பதுக்குத் திறக்க வேண்டும். ஆனால் அந்த மேடம் வர லேற் என்கிறான் அவன். என்னடா இது முதல் நாளே இப்பிடியாக் கிடக்கு என்று யோசித்தபடி நிக்க ஒரு ஐந்து நிமிடத்தின் பின் அக்கா ஓட்டமும் நடையுமாக  வாறா. சொறி சரியான ட்ராபிக் என்றபடி கதவைத் திறந்து அதில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்  அலுவலைப் பார்க்கிறா. அதற்குள் அங்கு வரிசையாக ஆட்கள். கதவைத் திறந்து இப்ப சனி வந்திடுவார். அதுக்குப் பிறகுதான் உங்களை உள்ளுக்குள் கூப்பிடலாம் என்று கூறிவிட்டுப் போகிறா. ஏழரைச் சனி, பொங்குசனி எல்லாம் முடிஞ்சு போட்டுதே. இப்ப எந்தச் சனியோ என்று நான் கண்டதையும் எண்ணிக்கொண்டு வேறுவழியின்றிக் காவலிருக்க அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த சனி ஹாய் அக்கா, எப்படி இருக்கிறாய்? என்றபடி வந்து கை குலுக்கியவன் சிங்கின் மகன் சனி என்பதில் மனம் நின்மதியானது. ............

 

 

வரும்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த, கருத்தும் பதிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

8 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சந்தைக்கு இல்லை யாழுக்கு

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

நான் எழுதுத முதல் ஆரப்பா கதை சொன்னது?????

45 minutes ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

அதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

6 hours ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

தொடருமக்கா

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

 

13 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

அட இதில ஒன்றிரண்டு வரி வருது மறந்திடேன் .

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

14 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

 

49 minutes ago, குமாரசாமி said:

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

இதை அந்த மனுசன் காது பட சொல்ல வேண்டும் வருத்தப்படுவார் சிங்கன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனைப் பார்த்த உடனேயே அவன் பிரச்சனை காரன் இல்லை என்று என் மனம் சொல்ல அவனோடு இலகுவாகக் கதைக்க முடிந்தது.போஸ்ட் ஆபீஸ்  வேலை தெரியுமா என்று அவன் கேட்க, இரண்டு வாரத்தில் பிடித்துவிடுவேன் என்ற என்னை எடுப்பதா வேண்டாமா என்பதுபோல் அவனுக்கு ஒரு தயக்கம் முகத்தில் தெரிந்தது. அவன் இல்லை என்று சொன்னாலும் என்ற பயத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னர் கொஞ்சம் பழகினானான் என்று சொல்ல, நீ கவலைப்படாதே ஒரு வாரத்திலேயே நான் அவாவுக்குப் பழக்கிப்போடுவன் என்று அக்கா சொல்ல எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது.

அன்றே வேலை பழக ஆரம்பிச்சாச்சு. தபாற்கந்தோர் புதிது என்பதும் நல்ல வசதியாகக் கட்டி இருந்ததும் பார்க்க ஆசையாக இருக்க, எனக்கே ஒரு வாரத்தில் எப்பிடியும் பழக்க வேணும் என்ற வைராக்கியம் வந்து எட்டு மணித்தியாலங்கள் ஐந்து நாட்களும் பழகி அக்காவின் வாயால் பாராட்டும் வாங்கியாச்சு. நீங்கள் அடிப்படை விடயங்கள் எல்லாம் பழகிவிட்டியள். ஒரேயடியா யாராலும் பழக்க ஏலாது. நீங்கள் கெட்டிக்காரி. நான் கொஞ்ச சம் கொஞ்சமா உமக்குப் பழக்கிப் போடுவன் என்று சொன்ன அக்கா ஒரு பெரிய குண்டையும் தூக்கிப் போட்டா. இன்னும் இரண்டு வாரங்களில் நான் சிறிலங்கா போறன். நீங்கள் தனியாத்தான் செய்ய வேணும் எண்டதும் எனக்குத் தலை சுத்த வெளிக்கிட்டித்து. ஐயோ அக்கா என்ன சொல்லுறியள் என்று நான் கேட்க,சனியும் உங்களோட நிப்பான். அதனால பயம் இல்லை. என்று அக்கா கூறினாலும் முதலாளியோட எப்பிடி நிண்டு வேலை செய்யிறது .... அதிலும் வரும் இரண்டு கிழமையிலும் எவ்வளவு வேலை பழக்க முடியுதோ அவ்வளவும் பழகி முடிக்கவேணும் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டு ஓரளவுக்கு எல்லாம் பழகியாச்சு.

எங்கு நான் போவதானாலும் வெள்ளணவே போய்விடுவேன். இப்போதும் அப்பிடித்தான். என் வீட்டிலிருந்து பத்து நிமிடக் கார் ஓட்டம். ஒன்பதுக்கு வேலை தொடங்கும். நான் போய் கதவு திறந்து அலாமை நிப்பாட்டிப்போட்டு அயன்சேவை  திறப்பதற்கான அழுத்தியை அழுத்திவிட்டு ஐந்து நிமிடம் காத்திருக்க அது திறக்கும். அதன்பின் ஸ்கிரீனை உயிர்ப்பித்து user name, pass word போட்டுத் திறந்து பணப்பெட்டி, முத்திரைகள்,  சில்லறைகள், சீல் எல்லாம் எடுத்து ஒழுங்கு செய்து போட்டு நிமிர்ந்தால் பென்ஷன் எடுக்க வாற கிழடுகள் கொஞ்சம் வரிசையில நிக்குதுகள். நல்ல காலம் சனி தூரஇருந்து வருவதால் இன்னும் வரவில்லை என்பதே பெரிய நின்மதியாக இருக்க, ஒரு அரை மணிநேரம் எந்த இடையூறும் இல்லாமல் தனியா வேலை செய்த பெருமிதம் என் மனதில். அடுத்தநிமிடமே என்ன அக்கா எல்லாம் ஓகேயா என்றபடி சனி அறையுள்  வர என்னை அறியாமலே ஒரு பதட்டம் வந்து சூழ்கிறது. என்றாலும் நான் அதை வெளியே காட்டாது அவன் பார்வை என் முதுகில் குத்த நின்று வேலை செய்கிறேன். அவனும் என்ன எண்ணினானோ" அக்கா நான் முன்னேயுள்ள கவுண்டரில் நிக்கிறேன். ஏதும் பிரச்சனை என்றால் கூப்பிடு என்று கூறிவிட்டுச் செல்ல எனக்கோ சரியான சந்தோசம்.

ஒரு சிறிய சூப்பர் மாக்கற்றுக்குள் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் என்றபடியால் அப்பப்ப ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். முதல் நாள் ஒரு பத்துத் தடவைகள் சனி சனி என்று கூப்பிட்டு, இரண்டாம் நாள்  ஏழு எட்டுத்தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு மூன்றாம் நாள் மூன்று தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு, வார இறுதியில் அவனை ஒரு தடவை கூடக் கூப்பிடாது திடமானபின் அடுத்து வந்த இரு வாரங்களும் நான் தனியாகவே வேலை செய்யுமளவு வந்திட்டன். மூன்று வாரங்கள் விடுமுறையில் சென்ற அக்கா திரும்பி வந்து கணக்குவழக்கெல்லாம் பார்த்து எந்தப் பிழையும் இல்லை கெட்டிக்காறி  என்று பாராட்டிய பாரராட்டில எனக்கு நானே தலையில கிரீடம் வைக்காத குறை.

அதுக்குப் பிறகு அக்கா  எனக்குத் தனியான  ஸ்டொக் யுனிட் எல்லாம் தயார்படுத்தி வெளியில உள்ள கவுண்டருக்கு என்னை அனுப்பியாச்சு. அக்கா உள்ள - கண்ணாடி அறையுக்குள்ள. நான் வெளியே திறந்த கவுண்டரில. ஆனாலும் தபால்களை, பொதிகளை வாங்குவது எனக்கு இலகுவாக இருக்க என் கவுண்டர் எனக்காகவே செய்ததுபோல் என் உயரத்துக்கும் பொருந்திப்போக,இனி பென்ஷன் எடுக்கும் வரையும் இது தான் என் வேலை என்று என் மனம் ஆசையாக நினைத்துக்கொண்டது.

அக்கா என்னைப்போல் உயரம் இல்லாவிட்டாலும் நல்ல முகலட்ஷணமாத்தான் இருப்பா. சாதாரணமாகக் கதைக்கும்போது  கூடக்  கொஞ்சிப்பேசுவதுபோல் இருக்கும். என்னிலும் மூன்று வயதுதான்  கூட. ஆனாலும் அவாவை பெயர் சொல்லிக் கூப்பிட என்னால் முடியவில்லை. அக்கா என்றே நானும் கூப்பிட்டுப் பழகிவிட்டுது. நான் வேலைக்குப் போன புதுசு என்பதால் நான் வேலை மட்டும் தான் செய்வன். அல்லது  சும்மா கடைக்குள் வந்து போகும் வாடிக்கையாளர்களை புதினம் பார்த்துக்கொண்டு இருப்பன்.எமது தபாற் கந்தோரில் காலையிலும் பூட்டும் நேரமும் தான் சனம் வரிசையில் நிற்கும். மற்றப்படி ஒன்று இரண்டு பேர்வந்து போய்க்கொண்டு இருப்பர்.  அக்கா என்னைக்கூப்பிட நான் உள்ள போய் மற்றக்கதிரையில் இருந்து ஒரு ஒன்றரை மாதத்தின் பின்தான் கதைக்க ஆரம்பித்தது.

அக்காவுடன் கதைத்தபின் தான் அவர் ஊர் குடும்ப விபரம் தெரியவந்தது. அவரின் இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் 24 வயது டென்டிஸ்ற்  என்றும் இரண்டாமவர் 22 வயது ஒப்ரோமெட்ரி என்றும் சொன்னபோது  இரண்டாவது வேலை என்ன என்று எனக்கு விளங்காமல் அது என்ன வேலை என்று கேட்டேன். அவ கிட்டத்தட்ட கண் டொக்டர் போல தான். நல்ல சம்பளம் நிவேதா. மூண்டே மூண்டு நாள் தான் வேலை. வருஷம் நாற்பத்தெட்டாயிரம் சம்பளம். இரண்டுபேரும் நல்லா உழைக்கினம். கலியாணம்கட்டி ஒவ்வொருத்தருக்கும் இரண்டு பிள்ளைகளும் நல்ல சிறப்பா இருக்கினம்  என்று கூற, இருபத்தி நாலாகியும் என் மகள் இன்னும் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறாளே என்னும் ஆதங்கம் மனதில் எழுந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கணவர் கேட்க அவரிடம் அக்கா பற்றிய விபரங்களை சொல்ல, அவர்களை தனக்குத் தெரியும் என்கிறார் என் கணவர். நாம் கடை நடத்தியபோது ஒரு அரைமைல் தள்ளி இருந்த கடை இவர்களது கடை என்றும், கடை நடத்த முடியாமல் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டுப் போனவர்கள் இவர்கள் தான் என்றும் என் கணவர் கூற நீங்கள் வேறு யாரையோ சொல்லுறியள் போல என்று நான் மறுக்க, எங்கள் கடையில் வேலை செய்த ஒருவர் இவர்களுக்குச் சொந்தக்காரர் என்றும் அவர் இவர்களைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார் என்றும் கணவர் சொன்னபோது அதற்குமேல் மறு க்கவில்லை நான்.

வரும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கம் 3

 

வேலை தொடங்கி மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. கெட்டிக்காரி கெட்டிக்காரி எண்ட  அக்காவின் வார்த்தை கேட்டு எனக்கே புளிச்சுப்போச்சு. ஒவ்வொருநாளும் வேலை முடிய காசுக்கணக்குப் பார்த்து ஸிஸ்டத்தில் கிளீயர்  செய்துவிட்டுப் போனால் அடுத்தநாள் காலையில் புதிதாகத் தொடங்கும் கணக்கு. அதில் பல பிரிவுகள் இருந்தாலும் முன்பக்க ஸ்கிரீன்  Front Office என்றும் ,மற்றையது Back Office என்றும் இருக்கும்.  எமக்கான வேலைகள் அனைத்தும்  முன்பக்க ஸ்கிரீனின் ஊடாகவே நடைபெறும். கணக்கு வழக்குப் பார்ப்பது, ஏதாவது தவறாகச் செய்தால் திருத்துவது இன்னும் பலவும்  Back Office  ஊடாகச் சென்றே செய்யமுடியும். எனக்கு அதை உடனே அக்கா சொல்லித்தரவில்லை. கொஞ்ச  நாட்கள் போகட்டும் என்று இழுத்தடிதத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு வார முடிவிலும் எனக்கு முன்னால் நின்று Balancing செய்வதாகக்கூறி கடகட என்று எல்லாவற்றையும் அழுத்துவார். எனக்கோ சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தது என்று கூறுவினமே அதுபோல் இருக்கும். ஆனால் என் கணக்கில் பணம்சரி என்று வருவதனால் நானும் எனக்குக் சொல்லித் தாருங்கள் என்று அக்காவைக் கரைச்சல்ப் படுத்துவதில்லை. மாதம் ஒருமுறை TP டிரேடிங் பீரியட் முழு பலன்ஸ் வரும். அதை நான் இல்லாவிட்டாலும் அக்காவே செய்து கொள்ளுவார். ஏனெனில் அது மாத முதல் வாரத்தில் வரும் புதன் கிழமையே வரும்.நானோ புதனில் வேலை செய்வதில்லை.

முதல் நாள் செவ்வாய் என் கணக்கு எல்லாம் பார்த்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிய அக்கா புதன் கிழமை இரவு எனக்குப் போன் செய்து "சொறி நிவேதா உங்கள் கணக்கில் 199 பவுன்ஸ் சோட். நானுமோ எல்லாம் வடிவாத் தேடிப் பார்த்திட்டன். காசு சோட் தான்" என்றவுடன் எனக்கு நெஞ்சு பிசைய ஆரம்பிச்சிது. நேற்று எல்லாம் சரியாத்தானே அக்கா இருந்தது என்று நான் கேட்டதற்கு அது நீங்கள் ஏதும் பிழைகள் விட்டிருந்தால் உடனே காட்டாது. மாத முடிவிலதான் காட்டும். நீங்கள் மாறி ஆருக்கும் குடுத்திருப்பியள்
என்றார். ஐயோ அக்கா எனக்குவேலைக்கு வர பயமாக கிடக்கு என்றேன் நான். அதுக்கெல்லாம் பயந்து வேலையை விடுறதோ ?? நீங்கள் இனிக்க கவனமா இருங்கோ. கொஞ்சம் கொஞ்சமா கட்டுங்கோ என்றுவிட்டு வைத்துவிட, பக்கத்தில கேட்டுக்கொண்டு இருந்த மனிசன் நான் வேலையை விட்டாலும்  என்ற பயத்திலோ என்னவோ சிலவேளை நீ மாறிக் குடுத்திருப்பாய். எதுக்கும் நான் நாளை காசைத் தாறன். கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்திடு என்று சொல்ல, என்னடா திட்டப்போகிறார் என்று நினைக்க மனிசன் காசைத் தந்து விடுறாரே என்று ஆச்சரியப்பட்டபடி காசைக் கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்தன்.   

அதுக்குப் பிறகு ஒரு மாதம் கணக்கு எல்லாம் மைனஸ் இல்லாமலிருக்க, வேலை செய்யும்போது மிக அவதானமாக வேலை செய்ய ஆரம்பிச்சன். ஒருநாள் கணக்கு முடிக்கும்போது 89 பவுண்ஸ் அதிகமாக இருக்க, அக்கா எதோ பிழை விட்டிட்டன் போல. இவ்வளவு காசு எப்பிடிக் கூட வரும் என்று கேட்க, ஒருநாள் கூட வந்தால் அடுத்தநாள் கணக்கு சரியாய்  இருக்கும் நிவேதா. நீங்கள் கவலைப் படாமல் போங்கோ என்று அக்கா கூற, வீட்டுக்குப் போனாலும் எப்பிடி அவ்வளவு காசு ஓவராய் இருக்கு?? ஆரின் பணத்தைத் தவறாகக் குடுத்தேன் என்று இரவு எவ்வளவுதான் யோசித்தும் விளங்கவே இல்லை. அடுத்தநாள் காலை அக்காவிடம் "எப்பிடி அக்கா  இவ்வளவு காசைச் சனம் வாங்காமல் போனது" என்று கேட்க நீங்கள் சிலவேளை காசைப் பிழை யாய் எண்ணி இருப்பீர்கள். இன்று கனக்குப் பாருங்கோ சரியாக இருக்கும் என்றதும் மேலும் மனத்தைக் குழப்பாமல் வேலை செய்ய, வேலை முடிவில் பணமும் சரியாக இருக்க என்னடா இது நான் தான் காசைப் பிழையாக எண்ணி வைத்துவிட்டேனோ என்ற குழப்பம் வந்தாலும், அடுத்து சனி ஞாயிறு வந்ததால் அதை மறந்து வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த வார முடிவிலும் கணக்கு ஓகே. மாத முடிவில் பார்த்தால் மீண்டும் 125 பவுன்ஸ் காசு லொஸ்ற்.

எனக்கு இந்த வேலை வேண்டாம் அக்கா. நீங்கள் வேறு யாரையும் பாருங்கள் என்று நான் கூற, எவ்வளவு கஷ்டப்பட்டு நான் உங்களை பழக்கி வச்சிருக்கிறன். நீங்கள் துணிவான  பெண் என்று பார்த்தால் இப்பிடி வேலையை விடப்போறன் எண்டுறியள் என்று உசுப்பேற்ற, வேறு வழியின்றி சரி இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்பம் என்று மனத்தைத் திடப்படுத்தியபடி வீட்டுக்கு வந்து மனிசனிடம் சொல்ல, மனிசன் இம்முறை பணம் தந்து உடனே கட்டு என்று கூறாமல் உன் சம்பளத்தில் ஒவ்வொரு வாரமும் தருவதாகக் கூறிக் கொஞ்சம்கொஞ்சமாக கட்டு என்று சொல்ல, நானும் அக்காவிடம் அப்பிடியே சொன்னன். அக்காவும் பரவாயில்லை நிவேதா நான் கொப்பியில எழுதி வைக்கிறன். கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடியுங்கோ என்றுகூற வேலையும் தொடர்ந்தது. இடையில் இரு இருப்பது பவுன்ஸ், அறுபது பவுன்ஸ் என்று மைனஸ் வர அதுவும் என் கணக்கில் ஏற என் மனமோ வேலையை விடுவதா இல்லையா என்று ஊசலாடியபடி தொடர்ந்தது.

சனங்கள் வந்தால் ஒன்றாகக் காலையில் வருவார்கள், மதியம் உணவு நேரம் வருவார்கள், பள்ளி விட்டதும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவார்கள், மாலையில் ஐந்து தொடக்கம் ஐந்தரை வரை வரிசையில் நிண்டு உயிரை வாங்குவார்கள். இடையில் அக்கா உள் அறையில் யூ டுயூப்பில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பா, பிள்ளைகள், தங்கைகளுடன் போனில் கதைத்துக்கொண்டிருப்பா, அல்லது என்னை உள்ளே கூப்பிட்டு வைத்து கணவர் செய்யும் வேலை பற்றி பிள்ளைகள் செய்யும் வேலைப்பற்றி முன்னர் சொன்னதை மறந்து அல்லது எனக்கு நினைவில் இருக்காது என்று எண்ணி மாற்றிச் சொல்லிப் புழுகிக்கொண்டு இருப்பா. நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தலை ஆட்டியபடி இருப்பன். ஆனாலும் உள்ள ஒரு குரல் கேட்கும் "என்ன நீ இயல்புக்கு மீறி நல்ல பிள்ளைபோல் எல்லாத்தையும் கேட்டுத் தலையாட்டுறியே. எதிர்க்கேள்வி கேளன்" என்று . ஆனாலும் நான் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டே இருப்பன். ஏனெண்டால் வேலைத்தளத்தில் முதலாளி நிற்பதில்லை. அக்காவைத் தவிரக் கேள்வி கேட்க வேறை யாருமில்லை. கன  தூரம் கார் ஓடத் தேவையில்லை. இப்பிடியான வசதிகளால் அக்காவை சகிச்சுக் போகப் பழகினாலும்  சில நேரம் நிவேதா இங்க வாங்கோ, இந்தப் பாட்டைக் கேளுங்கோ, எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ என்பா. முதல் நாள் எனக்குப் பாட்டைக்  கேட்ட உடனே அக்கா பாடினது தான் என்று விளங்கினாலும் விளங்காததுபோல் "ஆரக்கா பாடினது. சுருதி சேர்ந்து பாடினால் நல்லாய் இருக்கும்" என்றன். நேர எல்லாரும் நல்லாய் இருக்கு என்று சொன்னவை. நான் தான் பாடினது. உங்களுக்கு ரெக்கோட் பண்ணினதில கேட்டதால அப்பிடி இருக்கு என்றா. எங்க பாடினாலும் பாட்டு சுருதியோட பாடினால் நல்லாத்தானிருக்கும் என்று சொல்ல நினைத்தும் சொல்லவில்லை.  

 

வரும்   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

இப்பிடியே அக்காவின் பொய், புளுகு, பாட்டு எல்லாம் கேட்டு அலுத்துப்போன ஒரு செவ்வாய்க்கிழமை வேலை முடிய என் கணக்கை முடித்து பலன்ஸிங் செய்ய என் கணக்கில் 580 பவுன்ஸ் ஓவர் காட்டுது. எனக்குப் பயத்தில என்ன செய்யிறது எண்டு விளங்கேல்லை. மைனஸ் எண்டால் நான் பிழை விட்டுட்டன் என்று சொல்லலாம். இது அதிகமாக காசு இருக்கு எண்டால் ..... ஐயோ அக்கா என்னக்கா இவ்வளவு காசு அதிகமா இருக்கு. என்ன என்று பாருங்கள் என்றேன். நீங்கள் பயப்பிட வேண்டாம் நிவேதா. மைனஸ் எண்டால் தான் பயம். இது நான் தான் முத்திரை எதையோ உங்களுக்கு மாறி போட்டுட்டன் போல இருக்கு. அதுதான் உங்களுக்கு இவ்வளவு காசு கூட இருக்கு என்று காட்டுது. நான் எதுக்கும் என் எக்கவுண்டுக்கு மாற்றுகிறன். கவலைப் படாதேங்கோ என்றுவிட்டு அன்றைய கணக்கை நேர்படுத்தித்தர,  என்னிடம் தந்திருக்கும் முத்திரைகள் எல்லாம் சரியாக இருப்பதாகத்தானே  அக்கா காட்டுது. பிறகு எப்படி நீங்கள் போட்டதைக் காட்டவில்லை என்றேன் நான். அது சிலவேளை  சிஸ்டம் காட்டாது. உங்களுக்கு என்ன. இப்ப எல்லாம் ஓகே தானே என்று கூற நானும் பேசாமல் போய்விட்டேன்.

ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் தம்பி தன் வங்கிக் கணக்கில் காசு போட வருவார். அன்றைக்குப் பார்த்து என்னிடம் வரவேண்டியவர் அடுத்தவரை விட்டுவிட்டு அக்காவின் கவுண்டர் பக்கம் போக எனக்கு என்னடா இது இந்தப் பொடியன் ஏன் என்னைத் தவிர்க்கிறார் என்று எண்ணியபடியே மற்ற வாடிக்கையாளர்களைப்  பார்த்துவிட்டு நிற்க, அக்கா என்னை தன் அறைக்கு வரும்படி கூப்பிட, நானும் கதைவைத் திறந்து உள்ளே செல்கிறேன். அந்தத் தமிழ்ப் பெடியன் அக்காவின் கவுண்டரில் நிக்கிறான். நான் அவனைப் பார்த்து சிரித்தபடி என்னக்கா என்கிறேன்.

"என்ன நிவேதா இப்பிடிப் பெரிய பிழை விட்டிருக்கிறியள். இவர் காசு போடத் தர நீங்கள் அவற்றை அக்கவுண்டில் இருந்து காசை எடுத்திருக்கிறியள்"  என்று கோபமாகக் கேட்க்கிறார். கஸ்டமர்களுக்கு முன் அது யாராய் இருந்தாலும் பண்பாகக் கதைக்க வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் அக்கா சின்னப் பிள்ளையை வெருட்டுமாப்போல் என்னைக் கேட்டவுடன் எனக்கு சுரீர் என்று கோபம் வந்தாலும் நான் பிழை விட்டதாகக் கூறியபடியால் "எப்ப அக்கா" என்றேன். போன கிழமை என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டது. "ஓமக்கா இவர் போன செவ்வாய் 290 பவுண்ட்ஸ் டிப்போசிட் செய்தவர். ஓ... எனக்கு இப்ப விலங்கிவிட்டுது. அந்த ஓவர் வந்த 580 பவுண்ட்ஸ் இவர் காசாகத்தான் இருக்கும். உங்களிடம் தானே அக்கா அந்தக் காசு இருக்கு. குடுங்கோ" என்றேன்.
அக்காவின் முகம் ஓடிக் கறுக்க "இவாவின் அக்கவுண்டில் அண்டைக்கு எதோ கூடக் கிடைத்ததுதான். எதுக்கும் நாங்கள் காமராவைச் சுத்திப் பார்த்துவிட்டுத்தான் தருவோம் என்றா". பொடியும் ஓமென்று தலையாட்ட, "அக்கா சனி ஆபீஸ் இல் தான் இருக்கிறான். நான் காமராவைச் செக் செய்துவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு அக்காவின் பதிலை எதிர்பார்க்காது முதலாளி சணி இருக்கும் அறைக்குள் நுழைந்து அவனிடம் நான் பிழைவிட்டுவிட்டேன் என்று விடயத்தைக் கூறினேன். பெடியனிடம் றிசீற்ரை  வாங்கி அதில் நேரத்தைப்  பார்த்துவிட்டு காமராவைப் பார்க்க டிப்போசிட் மேலேயும் விட்ரோ கீழேயும் இருக்க, நான் மாறி அழுத்திவிட்டிருந்தேன். அதனால்த்தான் எனது கணக்கில் 580 அதிகமாக வந்திருந்தது. நாம் காமராவைப் பார்த்தவுடன் அக்காவும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கண்டுபிடிச்சாச்சோ என்றா ஆங்கிலத்தில்.

நானும் உடனே "ஓமக்கா நான் தான் தவறுதலாக விட்ரோ அமத்திவிடடேன்" என்றேன். உடனே "அந்த ஓவர் வந்த பணம் எங்கே" ?என்று சணி  கேட்டான். உடனே நான் "அக்காதான் எல்லா ஓவரையும் தனக்கு மாற்றி எடுத்துவிட்டா" என்றேன். ஒரு அரை நிமிடம் யாரும் பேசாத அமைதி. அக்கா என்ன சாட்டைக் கூறலாம் என்று யோசித்துவிட்டு "நான் முத்திரைகளை மாறி நிவேதாவுக்கு மாற்றியதாக எண்ணி அதை மாற்றினேன்" என்று குரலில் தொய்வோடு கூற, நானோ கொடுப்புக்குள் வந்த சிரிப்பை அடக்கியபடி வெளியே வந்து அந்தப் பெடியனுக்கு மீண்டும் 580 பவுண்ட்ஸ்களை டிப்போசிட் செய்து றிசீற்ரையும் கொடுத்துவிட்டு மனதுள் மகிழ்வு பொங்க மிகுதி வேலைகளைத் தொடர்ந்தேன்.

 

வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

சரி சரி அதுக்காகக் கண்ணைக் கசக்க வேண்டாம் ?

17 hours ago, புங்கையூரன் said:

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

??

11 hours ago, MEERA said:

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

நீங்கள் யாருக்கும் பார்சல் - பரிசு அனுப்புவதில்லையா ????

10 hours ago, suvy said:

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

என் ஆசை உங்களுக்குத்தான் அண்ணா விளங்கியிருக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அக்கா எதோ பிரச்சினைக்குள்  உங்களை தள்ளி விடப்பார்க்கிறா..நல்ல  வேளை தப்பித்துவந்துவிடீர்கள்

 அனுபவ கதை பலருக்குப்பயன் படும் தொடருங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.