Jump to content

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே நீங்கள் அப்ப நல்லாட்சி எண்ட புட்டுக்கு மா குழைச்சுக்கொண்டிருக்கேக்கை சொன்னம்.....எதையும் எழுத்து மூலத்திலை வாங்கிக்கொண்டு குழைக்கத்தொடங்குங்கோ எண்டு......

சொன்ன எங்களுக்கு உங்கடை எல்லாம் தெரிஞ்சவர் தந்த பட்டம் "புலம்பெயர் கோஷ்டி"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

சொன்ன எங்களுக்கு உங்கடை எல்லாம் தெரிஞ்சவர் தந்த பட்டம் "புலம்பெயர் கோஷ்டி"

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

அந்த பெயரை வேறை என்ரைவாயாலை சொல்லோணுமாக்கும் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு...

ஒன்றுக்கு இரண்டு தரம் இந்தியாவைக் கேட்டிடிட்டீங்களோ?

Link to comment
Share on other sites

52 minutes ago, Nathamuni said:

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

 

19 minutes ago, குமாரசாமி said:

அந்த பெயரை வேறை என்ரைவாயாலை சொல்லோணுமாக்கும் :grin:

வெக்கப்படாம சொல்லுங்கோ 

அந்த முருகன்தானே அவர்.

Bildet kan inneholde: 1 person

Link to comment
Share on other sites

எழுதினாலும் அதற்கு வலுவான சாட்சியும் வேண்டும் என்பதை மறந்திடாதீங்கோ. எழுதிக் கையெழுத்திட்டவரை மாத்திவிட்டால் அல்லது அவர் மாறிவிட்டால் எல்லாம் நாறிவிடும். தேர்தலும் வருகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது": மஹிந்தவிடம் கூறிய சம்பந்தன்

இலங்கை அரசியல் சர்ச்சை: ராஜபக்‌ஷவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

"நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

 

இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

"பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும். அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்" என்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்

முன்னதாக தமிழ் மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்ஷவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், "கடந்த நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி எதனைச் சாதித்திருக்கின்றதென்ற கேள்வி இருக்கின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடமாக நல்லாட்சி அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் அல்லது முடிவுகளும் கைநழுவிப் போயுள்ள சூழலையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது."

"ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இறுக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்."

"இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத இரண்டு தரப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அவ்வாறு ஆதரவளிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆகவே நடுநிலை வகிப்பதுதான் சிறந்தது." என்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டதால் இலங்கை அரசியலில் சர்ச்சைகள் எழுந்தன. நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46027827

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுக்கு இரண்டு தரம் இந்தியாவைக் கேட்டிடிட்டீங்களோ?

கடவுளே எண்டு கும்புட்டு கேக்கிறன்.....

தயவு செய்து கிந்தியாவை மட்டும் சாட்சிக்கையெழுத்து போட கூப்பிடாதையுங்கோ......

கடைசியிலை இருக்கிற கொஞ்சநஞ்ச நலன்களுக்கும் நாசம்

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு

இதில் மீண்டுமொருமுறை சம்மந்தனின், சம்மந்தன் கும்பலின் அரைவேக்காட்டுத் தனமும் முட்டாள் தனமும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.  

அதென்ன மொட்டையாக "தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம்"?

முதலாவது, தமிழ் மக்களுக்கு எப்படியான தீர்வு அவர்களின் அடிப்படை, சுயநிர்ணய உரிமைகளை உறுதிப்படுத்தும் என்ற விபரங்கள் சம்மந்தனுக்கும், சம்மந்தன் கும்பலுக்கும் தெரியாது. இது இவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் மூலம் அறியப்பட்ட ஒன்று.    

இரண்டாவது, சம்மந்தனும், சம்மந்தன் கும்பலும் (மாவை, சுமந்திரன், சரவணபவன், ....) தேர்தலில் வெல்வதற்காக போலி வாக்குறுதிகளை மக்கள் முன்வைப்பவர்கள் என்பது காணொளி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

எனவே, எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவாத ஆவணங்களிலும், எப்படியான தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் (தீர்வுகள் விபரங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்), எவ்வளவு காலத்துக்குள் செய்து முடிக்க உடன்படுகிறார்கள், அவ்வாறு வழங்கிய உத்தரவாதங்களை அவர்களால் முழுமையாக செய்ய முடியாவிட்டால், தமிழீழ தனிநாடு அமைவதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்த உத்தரவாதத்தை ஒரு கடதாசிலை எழுதி கையெழுத்து வைச்சி எடுத்துகொண்டுபோய் உங்க கக்கூசிலை வைச்சி அவசரத்துக்கு ------ துடைக்க பாவிச்சுட்டு எப்படியிருக்கேண்டு வந்து சனங்களிட்டை சொல்லுங்க. அரசியல் கட்சி மட்டுமல்ல சர்வ அதிகார வல்லமைகொண்ட ஜனாதிபதிகூட அப்படியான ஒரு உத்தரவாதத்தை தர முடியாது. அப்படி தங்தாலும் அது உத்தரவாதமாக கொள்ளப்படமுடியாது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு உத்தி. 

வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு உசிதமான அப்படி ஒரு தீர்வை ( இன்றய தருணத்தில் அது சிறிலங்காவின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றாலும் கூட) தமிழருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இதயசுத்தியுடன் முயற்சி செய்வோம் என்று சிங்களத்தலைவர்களின் கையெழுத்திட்டு ஒரு ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டாலும் விசயம் முடிந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் தொடரும். அப்படி ஒரு உத்தரவாதம் வெறும் செல்லாக்காசு.

உத்தரவாதம் எழுத்து மூலம் பெறப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை மீறுபவர் எப்படியான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்பதையும் ஆணித்தரமாகவும் விளக்கமாகவும் அதே ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தவேண்டும். இப்படியான ஒப்பந்தத்தில் இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய எந்த நாடுகளும் உள்வாங்கப்படக்கூடாது.

சட்டத்தை கரைச்சி குடிச்ச நம்ப  பிரிலியண்ட் எக்ஸ்பர்ட்  சுமந்திரன் அவர்களை  கொஞ்ச நாட்களா காணலை.. இப்பவே கண்ணை கட்டுதே எண்டு சொல்லி அடங்கிட்டாரா அல்லது  வாழ்க்கை வெறுத்து போதி மரத்துக்குகீழ் போய் குந்திட்டாரா. 

Link to comment
Share on other sites

3 hours ago, vanangaamudi said:

ஆமா இந்த உத்தரவாதத்தை ஒரு கடதாசிலை எழுதி கையெழுத்து வைச்சி எடுத்துகொண்டுபோய் உங்க கக்கூசிலை வைச்சி அவசரத்துக்கு ------ துடைக்க பாவிச்சுட்டு எப்படியிருக்கேண்டு வந்து சனங்களிட்டை சொல்லுங்க. அரசியல் கட்சி மட்டுமல்ல சர்வ அதிகார வல்லமைகொண்ட ஜனாதிபதிகூட அப்படியான ஒரு உத்தரவாதத்தை தர முடியாது. அப்படி தங்தாலும் அது உத்தரவாதமாக கொள்ளப்படமுடியாது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு உத்தி. 

வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு உசிதமான அப்படி ஒரு தீர்வை ( இன்றய தருணத்தில் அது சிறிலங்காவின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றாலும் கூட) தமிழருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இதயசுத்தியுடன் முயற்சி செய்வோம் என்று சிங்களத்தலைவர்களின் கையெழுத்திட்டு ஒரு ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டாலும் விசயம் முடிந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் தொடரும். அப்படி ஒரு உத்தரவாதம் வெறும் செல்லாக்காசு.

உத்தரவாதம் எழுத்து மூலம் பெறப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை மீறுபவர் எப்படியான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்பதையும் ஆணித்தரமாகவும் விளக்கமாகவும் அதே ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தவேண்டும். இப்படியான ஒப்பந்தத்தில் இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய எந்த நாடுகளும் உள்வாங்கப்படக்கூடாது.

சட்டத்தை கரைச்சி குடிச்ச நம்ப  பிரிலியண்ட் எக்ஸ்பர்ட்  சுமந்திரன் அவர்களை  கொஞ்ச நாட்களா காணலை.. இப்பவே கண்ணை கட்டுதே எண்டு சொல்லி அடங்கிட்டாரா அல்லது  வாழ்க்கை வெறுத்து போதி மரத்துக்குகீழ் போய் குந்திட்டாரா. 

ஆமா! இந்த வல்லரசுக்கு வல்லரசுகளான அமெரிக்க, ருசிய அணு ஒப்பந்தத்திவிருந்து விலகப்போவதாக சனாதிபதி டிரம் சொன்னதாக ஒரு செய்தி.... ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம்.. மகிந்தரோடு 10 வட்டம்.. பின்னம்..மைத்திரி ரணில் சந்திரிக்காவோடு 20 வட்டம் பேசினியள்... அப்ப எல்லாம் சும்மா வாய் மூலம் தான் உத்தரவாதம் எடுத்தியளோ. எனித்தான்.. சாணக்கியமாக எழுத்து மூலம் வாங்கப் போறியளாக்கும்.  பெரிய சட்டாம்பிகளுக்கு அடிப்படை சட்டாம்பி அம்சமே விளங்காமல் தான் இவ்வளவு காலமும் சாணக்கியம் பண்ணினேளோ..?!

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

முன்னம்.. மகிந்தரோடு 10 வட்டம்.. பின்னம்..மைத்திரி ரணில் சந்திரிக்காவோடு 20 வட்டம் பேசினியள்... அப்ப எல்லாம் சும்மா வாய் மூலம் தான் உத்தரவாதம் எடுத்தியளோ. எனித்தான்.. சாணக்கியமாக எழுத்து மூலம் வாங்கப் போறியளாக்கும்.  பெரிய சட்டாம்பிகளுக்கு அடிப்படை சட்டாம்பி அம்சமே விளங்காமல் தான் இவ்வளவு காலமும் சாணக்கியம் பண்ணினேளோ..?!

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

இந்த சாணக்கிய மழையை நாங்களும் 30 வருசமா பாத்தமே 

போகும் பாதை பிழை என்று சொன்னவற்றில் இருந்து அதை எதிர்த்தவர்கள்வரை போட்டுத்தள்ளி, கடைசியில் கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு என்று சொல்லி எமக்காக மரணிக்க தயாரா இருந்தவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள்வரை சாவிற்கு அழைத்து சென்ற சாணக்கியத்தையும் அனைவரும் அறிவர்.

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

donald duck laughing GIF

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.