Jump to content

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடு நிலைமை வகிப்பதே சிறந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sures1_CI.jpg?zoom=1.1024999499320984&re
தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் அல்லது உத்தரவாதம் அளிக்காது விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் நடு நிலைமை வகிப்பதே சிறந்தது. இதனையே என்னுடைய கட்சி செய்யும். அதே போன்ற நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டும். என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போது ஒரு ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒரு மாற்றம் ஏற்படப் போகின்றது தொடர்பில் யாருக்குமே எதுவுமே தெரியாது. ஆனாலும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மாற்றத்தை ஏற்படுத்தி முன்னாபள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவை பிரதமராக நியமித்திருக்கின்றார்.

அதே நேரம் ஐனாதிபதியின் செயற்பாட தவறானது என்றும் தான் தான் தற்போதும் பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார்.
இதனால் நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மகிந்த ராஐபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஆதரைவக் கோரியிருக்கின்றனர். ஆகையினால் கூட்டமைப்பினர் எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகின்றனர் என்பது தொடர்பில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே இந்த நேரத்தில் சரியானதொரு முடிவை தமிழ்த் தரப்புக்கள் எடுக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில் கடந்த நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி எதனைச் சாதித்திருக்கின்றதென்ற கேள்வி இருக்கின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடமாக நல்லாட்சி அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் அல்லது முடிவுகளும் கைநழுவிப் போயுள்ள சூழலையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டியப பல்வேறு பிரச்சனைகள் இரக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

ஆதற்கமைய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, வடக்கு கிழக்கில் இராணுவத்தை குறைக்க, வடகிழக்கில் காணிகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்த, வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்த இனப்பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

ஆதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதற்கப்பால் மக்கள் நலன் சார்ந்து இதனையே முன்வைக்க வேண்டியிருக்கிறது. இந்த விடயங்களை இருவரில் ஒருவரேனும் ஏற்றுக் கொண்டால் அவரிற்கு ஆதரவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆனால் இதனை யாரும் ஏற்காவிட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிப்பது அர்த்தமற்றதாகும்.

ஏனெனில் முன்னைய ஆட்சிக்கு ஆதரவளித்து எதுவும் நடக்காதது போல் இனிமேலும் வெறுமனே ஆதரவளித்த எதவுமே நடக்காத நிலைமை தான் ஏற்படும். ஆகiயினால் இவர்கள் யாரும் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் எங்களால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க முடியவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும் கூற முடியும்.

ஆகவே இந்த தருணத்திலாவது கூட்டமைப்பு சரியான முறையில் சிந்தித்து தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒரு காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் யாருக்கும்; ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத இரண்டு தரப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அவ்வாறு ஆதரவளிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆகவே நடு நிலை விக்கப்பது தான் சிறந்தது.

இன்றைய நிலையில் அவர்கள் தமது நிறைமைகளை சர்வதேச சமூகத்தினருக்கு கூறியுள்ளனர். அதே போன்று தமிழ்த் தரப்புக்களும் தமது நிலைமைகளை சர்வதேசத்திற்கு கூற வேண்டும்.;. அதாவது தமிழ் மக்கள் நலன்சார்ந்து முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் கூறமுடியும்.

எங்களிடமும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். அவரும் இத்தகைய கோரிக்கைகளையே முன்வைக்கின்றார். இதனை கூட்டமைப்பும் முன்வைக்க வேண்டும். இதனை தனித்து முன்வைக்க வேண்டுமாக இருந்தால் அதனைச் செய்யவும் இது குறித்து யாருடனும் பேச வேண்டுமாக இருந்தால் பேசுவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஆகவே இதனையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்பினர் செய்ய வேண்டியது அவசியம். அந்தக் கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதே வேளை கடந்த ஐனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்றதிகார ஐனாதிபதிமுறை ஒழிக்கப்படும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், ஊழல் ஒழிக்கப்படும, ஊழல் குற்றவாளிகள்; குற்றவாளிக்கூண்டில் நிறுத்தபடுவார்கள் என்று இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் அவற்றுக் கெல்லாம் இன்றைக்கு என்ன நடந்திருக்கின்றதென்பதை பார்க்க வேண்டும்.

ஏனெனில் நிறைவேற்றதிகார முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. இனப்பிரச்சனைகக்கும் தீர்வு வருமென்று எதிர்பார்க்க முடியாது. ஊழலை எதிர்ந்து அதற்கு இடமில்லை என்று கூறி அவர் இன்றைக்கு மகிந்தவையே மிள கொண்டு வந்திருக்கின்றார்.

ஆகவே ஊழல் பற்றி அவருடைய சிந்தனை என்ன என்ற கேள்வி எழுகின்றது. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்தவிடம் இருந்து ரணிலிலிடம் வந்தார். இப்ப ரணிலிடம் இருந்து மகிந்தவிடம் போயிருக்கின்றார். உண்மையில் அவர் யாருக்குமே விசுவாசமில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் கிஞ்சித்தும் அவருக்கு அக்கறையில்லை. அவரைப் பொறுத்தவரையில் இன்னும் ஒரு தடவை தான் ஐனாதிபதியாக இருக்க வேண்டுமென்பதே நோக்கமாகும். அதற்கமையவே அவர் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/101179/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி கருணாநிதி மாதிரி கறுத்த கண்ணாடி என்றாலும் மாட்டலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா போன்ற நாடாளுமன்ற ஆட்சிமுறையுள்ள நாட்டில் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தின் தலைவர்களுக்கு வழங்கும் நிலம் - உரிமை - ஆட்சியமைப்பு - அரசியல் சாசனம் - அதிகார பரவலாக்கம் என்பன சம்பந்தமான உறுதிமொழிகள் பின்னர் அவை உறுப்பினர்களின் வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கலாம் அல்லது நீதிமன்றத்தின் துணையோடு தூக்கிவீசப்படலாம்.

எவரும்  ஒரு நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணான எந்த நிபந்தனைகளையும் போடமுடியாது. யாராவது அப்படி உறுதிமொழி வழங்கினாலும் அது செல்லாது. அப்படி ஒரு  உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும் அரசியல் பலம் ஒரு தனிமனிதன் கையில் இருக்கப்போவதுமில்லை. இலங்கையின் சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் எழுதிய ஒப்பந்தங்கள்கூட முந்திய காலங்களில் கிழித்து வீசப்பட்டுள்ள நிலையில் ஆளும் சிங்களக்கட்சிகளுக்கு நிபந்தனையின்கீழ் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. 

அரசியல்வாதிகளைப்பொறுத்தளவில் அந்த அந்த நேரத்தில் பேரம்பேசப்பட்டு கைமாறும் பெட்டிகள் மட்டும்தான் நிஜம். நிபந்தனைகளை போடுவதும் பின் அவற்றிற்கு ஆட்சியாளர்கள் உயிர்கொடுத்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்புவதெல்லாம் வெறும் கேலிக்கூத்து. சரியாக எழுந்து இருந்து பேசமுடியாத மனிதரெல்லாம் இந்த தள்ளாத வயதில் அரசியல் செய்ய தயார் என்றால் அதன் உந்து சக்திதான் என்ன? 

அரசியல்வாதி என்ற சொல்லுக்கு நமது தலைவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணம் முற்றிலும் வேறானது. முக்கியமாக ஒரு அரசியல்வாதிக்கு இருக்கவேண்டியது தெளிவான சிந்திக்கும் திறன். நிலைதளம்பாத கொள்கைரீதியான பார்வை. தீர்க்கதரிசனம். அயரா உழைப்பு. அதெல்லாம் இந்த வயதில் எட்டாக்கனி. எந்த பழுத்த அரசியல்வாதியாக இருந்தாலும் இலட்சோபலட்சம் தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை இவர்போன்ற மனிதர்களின் கையில் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.