Jump to content

புதிய அமைச்சரவை நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை நியமனம் Live Update

 In இலங்கை      October 29, 2018 2:05 pm GMT  

Cabinet_re-shuffle2_lg.png

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது.

  • மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான்
  • ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல
  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா
  • மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – பைசர் முஸ்தபா
  • கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் – விஜித் விஜயமுனி சொய்சா
  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக – ரஞ்சித் சியாமலபிட்டிய
  • விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
  • கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ
  • துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக – மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
  • வெளிவிவகார அமைச்சராக – சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்
  • சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
  • நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ

http://athavannews.com/புதிய-அமைச்சரவை-நியமனம்-live-upd/

Link to comment
Share on other sites

20 minutes ago, கிருபன் said:

புதிய அமைச்சரவை நியமனம் Live Update

 In இலங்கை      October 29, 2018 2:05 pm GMT  

 

 

  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா

 

டக்கிளஸ் சின் இந்த பதவி மிச்ச அனைத்து தமிழ் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்க போகின்றது. யாழ்ப்பாணத்தில் குறைந்தது 20 சதவீத வாக்குகளாவது டக்கிளசுக்கு அடுத்த தேர்தலில் கிடைக்கும். இது பொதுசன பெரமுன அல்லது சுதந்திர கட்சிக்கு அனுகூலமாக அமையும்.

தமிழ் தேசியத்துக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் த.தே.கூ, விக்கி ஐயாவின் கட்சி, சைக்கிள் கட்சி என்று பிரிந்து செல்கையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்காத வாக்குகள் டக்கிளஸ் கூட்டணி வைக்கும் கட்சிக்கும் ஐ.தே,க விற்கும் சாதகமாக போகும். டக்கிளசின் போட்டியாக ஐ.தே,க தான் அமையும்.

Quote

நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ

கொள்ளை அடிக்க மிகவும் வசதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று....
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்
 
இன்று.......
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், உட்புறம் மற்றும் உணவு
 
குறை நினைக்கப்படாது அரசியலில் இதெல்லாம் சகஜம். :cool:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வடிவேல், வசந்த, அளுத்கமகே அமைச்சரவையில் இணைந்தனர்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமே ஆகியோர், புதிய அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வசந்த சேனாநாயக்க - சுற்றுலத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதியமைச்சர் 

ஆனந்த அலுத்கமகே - சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்

வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடிவேல்-வசந்த-அளுத்கமகே-அமைச்சரவையில்-இணைந்தனர்/175-224435

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.