Jump to content

Recommended Posts

 

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம்.

கூட்டமைப்பின் ஆதரவு என்பது எமது கோரிக்கைகளை ஏற்று அதற்கான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் தலைமைத்துவத்தினைப் பொறுத்தே அமையும்.

எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இந்தியாவுடன்-கலந்துரையா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

இலங்கையில் இருக்கும் ஒரே பிடிமானம் நீங்கதான் .. எவ்வளவு கேட்டாலும் கொடுப்பினம். பல்கா ஒரு அமொன்ட் கேளுங்க .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இறைமையையும்...தன்னாதிக்கத்தையும்...பாதுகாப்பதாச் சத்தியப் பிரமாணம் எடுத்து...பாராளுமன்றத்தில்...அங்கத்துவம் வகிக்கும்...நீங்கள்...எதற்காக...இந்தியாவிடம் அறிவுரை கேட்கிறீர்கள்?

சர்வதேசம்...தமிழருக்கு...இதுவரை...என்னத்தை..வெட்டிப் பிடுங்கியுள்ளது?

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

இந்தியா சொல்லிப் போட்டுது என்று சொல்லி....நீங்கள் அனைவரும்...மகிந்தவுக்கே....ஆதரவளிக்கப் போகின்றீர்கள் என்பது உறுதியாகி விட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இவர்களை கால் தூசிக்கும் மதிக்கவில்லை என்பது, 
இவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான்.. இவர்களின்  முட்டாள்  தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சிங்களத்தின் இறைமையையும்...தன்னாதிக்கத்தையும்...பாதுகாப்பதாச் சத்தியப் பிரமாணம் எடுத்து...பாராளுமன்றத்தில்...அங்கத்துவம் வகிக்கும்...நீங்கள்...எதற்காக...இந்தியாவிடம் அறிவுரை கேட்கிறீர்கள்?

சர்வதேசம்...தமிழருக்கு...இதுவரை...என்னத்தை..வெட்டிப் பிடுங்கியுள்ளது?

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

இந்தியா சொல்லிப் போட்டுது என்று சொல்லி....நீங்கள் அனைவரும்...மகிந்தவுக்கே....ஆதரவளிக்கப் போகின்றீர்கள் என்பது உறுதியாகி விட்டது!

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragunathan said:

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

இந்த முறை....மகிந்தர்...இந்தியா போனபோது....அவற்றை தலயில அடிச்சி....இந்தியா சத்தியம் வாங்கி இருக்காம்!?

முக்கிய காரணம்....போர்க்குற்ற விசாரணை...மீண்டும் கிளறப் பட்டால்....இந்தியா...தலைப்பாயும்  இல்லாமல்...கோவணமும் இல்லாமல் ....உலக அரங்கில் நிற்க வேண்டி வரலாம்!

ரணில்..ஒரு வேளை... விசாரணைக்கு இணங்கினாலும்....மகிந்த கடைசி வரையும் இணங்க மாட்டார் என்ற காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்!

கமலஹாசன் அண்மையில்....கூறியதைக் கணக்கிலெடுக்கும் போது....ஒன்றும்...ஒன்றும்...கூட்ட....இரண்டு வருகின்றதே!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

கிந்தியா இதில் விருப்பமிலை என்பதை காட்டிக் கொண்டு, எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற யதார்த்தத்தை பின்னிரு உருவாக்க முனைகிறது.

ஆனால், மகிந்தவும், சீனாவும் கொடுக்கும் குளிசையில் கிந்தியா முடமாக்கினாலும் வியப்பில்லை.

மகிந்த குடுப்பதிற்க்கு கிந்தியா மேல்   ஓர் ஆத்திரம் உண்டு. அது மகிந்த வெளியில் கூறும் அதிபர் தேத்தலில் கிந்தியா குள்ள நாரி வேலை செய்தது அல்ல.

கிந்தியாவின் யுத்தத்தை தானே நடத்தினேன் என்பதன் பின்பும், 2012 UNHRC பிரேரணனிக்கு கிந்தியா ஆதரவு வழங்கியதும் அதன் மூலம் OISL அறிக்கை 100 மேற்ப்பட்டவர்களில் யுத்த குற்றசாட்டை சுமத்தி தயாரிக்கப்பட்டதும்.

அதிகாரத்தில் ஏறி, தக்க தருணத்திக் மகிந்த கிந்தியாவின் கழுத்தை அறுபதத்திற்கு தகுந்த வாய்ப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

இந்த முறை....மகிந்தர்...இந்தியா போனபோது....அவற்றை தலயில அடிச்சி....இந்தியா சத்தியம் வாங்கி இருக்காம்!?

முக்கிய காரணம்....போர்க்குற்ற விசாரணை...மீண்டும் கிளறப் பட்டால்....இந்தியா...தலைப்பாயும்  இல்லாமல்...கோவணமும் இல்லாமல் ....உலக அரங்கில் நிற்க வேண்டி வரலாம்!

ரணில்..ஒரு வேளை... விசாரணைக்கு இணங்கினாலும்....மகிந்த கடைசி வரையும் இணங்க மாட்டார் என்ற காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்!

கமலஹாசன் அண்மையில்....கூறியதைக் கணக்கிலெடுக்கும் போது....ஒன்றும்...ஒன்றும்...கூட்ட....இரண்டு வருகின்றதே!?

கமல் என்ன சொன்னார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ragunathan said:

கமல் என்ன சொன்னார்?

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-முன்னைய-ஆ/

Link to comment
Share on other sites

5 hours ago, ragunathan said:

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

அது வெரி சிம்பிள்!

சீனா பில்லியன் கணக்கில அள்ளி கொட்டுது. மகிந்தடையும் பில்லியன் கணக்கில கொள்ளையடிச்ச காசு இருக்கு. அப்ப இந்தியன் கண் வேறெங்கே போகப்போது?

சூப்பிரசுவாமி நேரடியா கையை நீட்டி அள்ளி வாங்கிக்கொண்டு போறார்.
மற்றாக்கள் இராசதந்திர பொதிக்குள்ள ஒளிச்சு ஒளிச்சு கொண்டு போக்கினம்.
இவ்வளவு தான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது தான் சுயமாக சிந்திக்கப் போகிறீர்கள்?

இப்போது தானே பேரம்பேச நல்ல சந்தர்ப்பம்.எமது பிரச்சனைகள் ஒன்றா இரண்டா?இரண்டு பேரிடமும் தூக்கி போடலாமே?நல்லாட்சியில் விட்ட தவறை மீண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அறியப்படுவது என்னவெனில் சுயமாய் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறார்கள். இவர்களால் எப்போதுமே தெளிவாக உறுதியாக பேசமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்திக்கடன் வைக்கிறது இந்தியா விரதமிருந்து செடில் குத்தி பறவைகாவடி எடுக்கிறது சம்சும்சேனா கோஸ்டி. இது வழமைதானே. சொந்த புத்தி இல்லாத வேஸ்ட்டு பேர்வழிகள் . மைத்திரியும் ரணிலும் ஒண்ணா இருக்கையிலை எதிர்கட்சி அரியாசனத்திலை இருந்து புடுங்க முடியாததை மகிந்த வந்தபிறகு புடுங்கமுடியுமெண்டு இவை நினைத்தால் இவையிடை தலைக்குப்பின்னாலை ஒரு ஒளிவட்டம் தெரிந்தால்தான் உண்டு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முன்னரே மகிந்தவை பிரதமராக எப்படி நியமிக்கமுடியும்? மகிந்த ஆட்சியமைத்தால்  எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து  சம்பந்தன் உடனடியாக விலகி ரணிலுக்கு வழி விடவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.