Jump to content

மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன்

kamal-720x450.png

இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை  தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-முன்னைய-ஆ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணம் என் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.பிரதமராக நீடிப்பாரேயானால் தமிழ் மக்களை கவரக் கூடிய விதமாக அவசர அவசரமாக ஏதாவது செய்ய முற்படலாம்.முன்னர் போல் நடக்க முற்படமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

ஏற்கனவே கிடப்பில் உள்ள புதிய அரசியல் யாப்பையும் தானே முன்மொழியலாம்.

அழித்தலுக்கு எப்படிப்பட்டவரோ அதேமாதிரி ஆக்குதலுக்கும் அவரே சிறந்தவர்.

ரணிலால் ஒர போதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.அவருக்கு வேலை தனிப்படை அமைத்து யார்யார் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பார்த்து எப்படி பிரிப்பது என்பதோடு சரி.மைத்திரி எதுக்கு லாயக்கில்லாத ஆள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த எண்ணம் என் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.பிரதமராக நீடிப்பாரேயானால் தமிழ் மக்களை கவரக் கூடிய விதமாக அவசர அவசரமாக ஏதாவது செய்ய முற்படலாம்.முன்னர் போல் நடக்க முற்படமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

ஏற்கனவே கிடப்பில் உள்ள புதிய அரசியல் யாப்பையும் தானே முன்மொழியலாம்.

அழித்தலுக்கு எப்படிப்பட்டவரோ அதேமாதிரி ஆக்குதலுக்கும் அவரே சிறந்தவர்.

ரணிலால் ஒர போதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.அவருக்கு வேலை தனிப்படை அமைத்து யார்யார் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பார்த்து எப்படி பிரிப்பது என்பதோடு சரி.மைத்திரி எதுக்கு லாயக்கில்லாத ஆள்.

சிங்கள அரசியல் தலைமைகள் எவருமே இதயசுத்தியோடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் புலிகளை வெற்றிகொண்ட வெற்றிவாத மனநிலையிலிருந்தும் வெளியே வரப்போவதேயில்லை.

மறுபுறம் தமிழர்கள் பிளவுண்டு பல கட்சிகளை புற்றீசல்கள் போன்று தோற்றுவிப்பதும், சுயநல நோக்கங்களுக்கும், சுகபோகத்திற்கும் தமிழர்களின் அரசியலை ( எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல்) தலைமைதாங்கி நடாத்த முற்படுவதும் எதையும் தமிழர்களுக்கு தரப்போவதில்லை. அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கமுடியாத வெறும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சிங்கள அரசியல் தலைமைகள் எவருமே இதயசுத்தியோடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் புலிகளை வெற்றிகொண்ட வெற்றிவாத மனநிலையிலிருந்தும் வெளியே வரப்போவதேயில்லை

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

கைதிகளை விடுவிப்பாராக இருந்தால் ஏதோ செய்ய முற்படுகின்றார் என்று சொல்லலாம். ஆனால் மேற்கு உலகம் மகிந்த மீதான விசாரணைகளை வைத்து அழுத்தம் கொடுக்காவிட்டால் பழைய பல்லவியைக் காட்டுவார். 

மகிந்த சிங்களவர்களுக்குத்தான் தலைவர்! தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் சொறிலங்கா  சுதத்திரம் பெற்ற நாள் முதல் தமிழருக்கு சிங்கள அரசியல் வாதிகளால் எந்த ஒரு நன்மையும் பெற்றதில்லை தமிழர்கள் உங்களை போல் ஓராயிரம் முறை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டும் இன்னும் சிங்களவரையும் ஹிந்தியர்களையும் நம்புவதை எப்படி சொல்வது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

தமிழல் தேசியகீதம் பாடுவதை குடும்பமா எதிர்கிறார்கள்.

வரும் மாவீரர் விழாவிலே தெரிந்துவிடும், மகிந்தா, பழையவரா இல்லையா என.

Link to comment
Share on other sites

முன்னய ஆட்சியில் செயற்பட்டதைப்போன்று செயற்படுவதற்கு என்ன இருக்கின்றது ? உரிமைக்கான போராட்டத்தையும் அது சார்ந்த மக்களையும் அழித்தாகிவிட்டது. எஞ்சியது மிஞ்சியது எல்லாம்   உடலாலும் உளவியாலாலும் பொருளாதராம் உடமைகள் என அனைத்திலும் ஊனப்பட்ட மக்கள். என்னுமொருபக்கம் தேரிழுத்து திருவிழா கொண்டாடி பேரினவதத்தை அண்டிப்பழைக்கும் கூட்டம்.  என்ன செய்வது எப்படி போராடுவது மக்களோடு எப்படி இணைவது என்ற எந்த முடிவுக்கும் வரமுடியாத அரசியல் தலமைகள். இவற்றுக்குள் மகிந்த தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க எதுவும் இல்லை. போர்க்குற்றங்களை கடந்து மகிந்த  திரும்ப அதிகாரத்துக்கு வருவதே பேரினவாதத்திற்கு பெரும் வெற்றி. 

சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவும் பேரினவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புலிவருகின்றது இருக்கின்றது என்று சில நாடகங்கள் நடத்தலாம் அல்லது இஸலாமியர்களின் பரவலைத் தடுக்கலாம். மகிந்த மைத்திரி ரணில் சந்திரிக்க எல்லாம் தமிழர்களை கொன்றதின் எண்ணிக்கையில் கூடிக்குறையலாம் தவிர அடிப்படையில் சிங்களப் பேரினவாதிகள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.