Jump to content

வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை

வடக்கு, கிழக்­கு, ம­லை­யக பகு­தி­களில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை  உரு­வாக்க வேலைத்­திட்­டங்கள் அவ­சியம்

2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்­ளி­ வி­ப ரங்களின் பிர­காரம் 381,834 பேர் வேலையற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதில் இளை ஞர்­களே அதி­க­மாக இருக்கின் றனர். அத்­துடன் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத் துக்கும் குறை­வான தகு­தியை கொண்­ட வர்கள் 137,615 பேர் வேலை யற்­ற­வர்­க­ளாக உள் ளனர். கல்விப் பொதுத் தரா­தர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகை­மையை கொண்­ட­வர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்­ப­தாக புள்­ளி­ வி­பர திணைக்­க­ளத்தின் தகவல் மூலங்கள் தெரி­வித்­துள்­ளன. அதிலும் 30 வய­துக்கு மேற் பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலை­யற்று இருக்­கின்­றனர்.

veetham-47e5642b2280a7afa7492b67d5c2cef53f26eca3

நாட்டில் 10 இலட்சம் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை புதி­தாக உரு­வாக்­கு­வ­தாக நல்­லாட்சி அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்­தது. வேலை­யின்­மையை குறைப்­பதை நோக்­க­மா­கக்­கொண்டே இந்த வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் 2020 ஆம் ஆண்­டுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் எந்­த­ளவு தூரம் இந்த இலக்கு அடை­யப்­பெற்­றுள்­ளது என்­பதை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் அர­சாங்கம் பல்­வேறு புள்­ளி­வி­ப­ரங்­களை வெளியி­டு­கின்­றது. ஆனால் உண்­மையில் தற்­போ­தைய சூழலில் வேலை­யின்மை வீதம் எவ்­வாறு உள்­ளது? புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்க என்ன செய்­ய­வேண்டும்? சர்­வ­தேச முத­லீ­டு­களை கவ­ரு­வ­தற்கு என்ன தேவையை பூர்த்தி செய்­ய­வேண்டும் ? யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் வேலை­யின்­மையின் நிலைமை என்ன? அப்­ப­கு­தி­களில் புதிய தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த என்ன செய்­ய­வேண்டும் ? என்­பன தொடர்பில் பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

தற்­போ­தைய நிலை­மையில் வேலை­யின்மை வீத­மா­னது குறைந்த மட்­டத்தில் பதி­வா­கி­யி­ருந்­தாலும் அது இன்னும் சாத­க­மான நிலை­மைக்கு வர­வில்லை. 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்­டா­கும்­போது வேலை­யின்மை வீத­மா­னது 4.6 வீத­மாக பதி­வா­கி­யி­ருந்­தது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீத­மா­னது 4.2 வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. 2010 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் வேலை­யின்மை வீத­மா­னது சுமார் நான்கு வீதம் அல்­லது ஐந்து வீதத்­துக்கு குறை­வா­கவே நீடித்து வரு­கின்­றது. 2013 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீத­மா­னது 4.4 ஆகவும் 2014 ஆம் ஆண்டில் 4.3 வீத­மா­கவும் 2015 ஆம் ஆண்டில் 4.7 வீத­மா­கவும் 2016 ஆம் ஆண்டில் 4.4 வீத­மா­கவும் பதி­வா­கி­யி­ருந்­த­தாக புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அதே­போன்று எண்­ணிக்­கையில் பார்க்­கும்­போது 2018 ஆம் ஆண்டின் இரண்­டா­வது காலாண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 381834 பேர் வேலை­யற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதில் இளை­ஞர்­களே அதி­க­மாக இருக்­கின்­றனர். அத்­துடன் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத்­துக்கும் குறை­வான தகு­தியை கொண்­ட­வர்கள் 137615 பேர் வேலை­யற்­ற­வர்­க­ளாக உள்­ளனர். கல்விப் பொதுத் தரா­தர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகை­மையை கொண்­ட­வர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை­யின்றி இருப்­ப­தாக புள்­ளி­வி­பர திணைக்­க­ளத்தின் தகவல் மூலங்கள் தெரி­வித்­துள்­ளன. அதிலும் 30 வய­துக்கு மேற்­பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலை­யற்று இருக்­கின்­றனர்.

இது முழு நாட்­டி­னதும் வேலை­யின்மை வீதம் தொடர்­பான தக­வல்­க­ளாக உள்­ளன. இந்­நி­லையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் ஊவா மற்றும் மலை­யக பிர­தே­சத்­திலும் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­வ­ரு­கின்­றது. இவை தொடர்­பிலும் கவனம் செலுத்­த­வேண்டும்.

வேலை­யின்மை வீதம் அதி­க­ரிப்­ப­தற்கு பல்­வேறு கார­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. சனத்­தொகை அதி­க­ரிப்பு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்கும் செயற்­பாடு செயற்­தி­ற­னற்­ற­தாக இருத்தல் முத­லீ­டுகள் அதி­க­ரிக்­காமை பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் காணப்­ப­டு­கின்ற அடிப்­படை பிரச்­சி­னைகள் சேமிப்பு குறை­வ­டைதல் சிறிய நடுத்­தர வர்த்­தக தொழில் முயற்­சி­யா­ளர்கள் ஊக்­கு­விக்­கப்­ப­டாமை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணிகள் இதில் தாக்கம் செலுத்­து­கின்­றன.

எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக எமது நாட்டின் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். ஏற்­று­ம­திகள் அதி­க­ரிக்­க­வேண்­டு­மாயின் ஏற்­று­மதி உற்­பத்தி அதி­க­ரிக்­க­வேண்டும். அத்­துடன் உள்­நாட்டு வெளிநாட்டு முத­லீ­டுகள் அதி­க­ரிக்­க­வேண்டும். இவற்­றுக்­கான சூழல் உரு­வா­கும்­போது புதிய தொழில்­வாய்ப்­புகள் அதி­க­ரிக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

 எனவே அர­சாங்கம் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து அதிக முத­லீ­டு­களை கவர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இதற்­காக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சாத­க­மான சூழலை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் செய்­து­கொள்­ளப்­படும் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் முக்­கி­ய­மா­ன­வை­யாக அமை­யலாம். ஆனால் அவை எமது நாட்­டுக்கு சாத­க­மாக இருக்­க­வேண்டும். அவற்­றினால் அதி­க­ளவு பாதிப்பு எமது நாட்­டுக்கு ஏற்­ப­டாமல் இருக்­க­வேண்டும்.

இதே­வேளை யுத்தம் நடை­பெற்ற வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் வேலை­யின்மை அதி­க­மாக பதி­வா­கின்­றது. இது தொடர்பில் அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கின்றது.

அதா­வது கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீதம் 4.2 வீத­மாக பதி­வா­கி­யி­ருக்­கும்­போது அதன் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் நிலைமை மிகவும் மோச­மாக உள்­ளது. அதா­வது வட மாகா­ணத்தின் வேலை­யின்மை வீத­மா­னது 7.7 வீத­மாக உள்­ளது. இதுவே அதி­க­மான வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. இரண்­டா­வ­தாக கிழக்கு மாகாணம் உள்­ளது. இந்த மாகா­ணத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 6 ஆக அமைந்­துள்­ளது. இந்த இரண்டு மாகா­ணங்­க­ளி­லேயே அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­யுள்­ளது.

ஏனைய மாகா­ணங்­களில் வேலை­யின்மை வீதம் குறை­வா­கவே உள்­ளது. மாவட்­டங்­களை எடுத்து நோக்­கும்­போது யாழ்ப்­பாண மாவட்­டமே மிக மோச­மான நிலையை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த மாவட்­டத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 10.7 வீத­மாக காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வது அதி­கூ­டிய வேலை­யின்மை நிலவும் மாவட்­ட­மாக 6.6 வீதத்­துடன் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் உள்­ளது.

அதே­போன்று அதற்­க­டுத்த மூன்­றா­வது இடத்தில் வேலை­யின்மை கூடிய மாவட்­ட­மாக 6.4 வீதத்­துடன் திரு­கோ­ண­மலை மாவட்டம் காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 6.1 வீத­மாக காணப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யாழ்ப்­பாணம் மட்­டக்­க­ளப்பு கிளி­நொச்சி மற்றும் திரு­மலை ஆகிய மாவட்­டங்­களில் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் நில­வு­கின்­றது.

எனவே இந்த நிலைமை குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் அதி­க­ள­வான முத­லீ­டு­களை செய்து அங்கு தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். இது தொடர்பில் அண்­மையில் இலங்­கையின் பொரு­ளா­தார நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்­டி­ருந்த உலக வங்கி போருக்குப் பிந்­திய காலப்­ப­கு­தியில் உறு­தி­யாகக் கால்­ப­தித்­துள்ள இலங்கை தற்­போது எதிர்­கா­லத்தை நோக்­கிய பார்­வையைச் செலுத்­து­வ­துடன் வறு­மையை முடி­விற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஒவ்­வொரு வாய்ப்­புக்­க­ளையும் தழு­விக்­கொள்­ள­வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

அத்­தோடு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­துடன் நெகழ்­வுத்­திறன் கொண்ட வலு­வான பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும் என்றும் உலக வங்கி தெரி­வித்­தி­ருந்­தது.

அந்­த­வ­கையில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளையும் தழு­விக்­கொள்ள அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். அத­னூ­டா­கவே வேலை­யின்மை பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடியும். அத்­துடன் நாட்டின் உற்­பத்தி பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் தேவைப்­ப­டு­கின்­றன.

அதா­வது ஏற்­று­மதி செய்­யக்­கூ­டிய பொருட்­களை உற்­பத்தி செய்யும் நிலைமை அதி­க­ரிக்­க­வேண்டும். அதற்­கேற்­ற­வா­றான முத­லீ­டு­களை கவ­ர­வேண்டும். ஏற்­று­மதி வரு­மா­னத்தைப் பொறுத்­த­வரை எமது நாடு இன்னும் மந்த கதி­யி­லேயே செயற்­பட்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை பெருந்­தோட்ட உற்­பத்­திகள் ( தேயிலை ரப்பர் ) மற்றும் கைத்­தொழில் உற்­பத்­தி­க­ளி­லேயே நாங்கள் தங்­கி­யுள்ளோம். பெருந்­தோட்ட உற்­பத்­தி­களில் தேயிலை பிர­தா­ன­மா­கவும் கைத்­தொழில் உற்­பத்­தி­களில் ஆடை உற்­பத்­திகள் பிர­தா­ன­மா­கவும் உள்­ளன.

இந்­நி­லை­யில் கடந்த 10 வரு­டங்­களை நோக்கும் ஏற்­று­மதி வரு­மானம் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வந்­துள்­ள­போ­திலும் இன்னும் போது­மான வரு­மா­னத்தை நாடு பெற­வில்லை என்றே தெரி­கின்­றது. எனவே தற்­போ­தைய சூழலில் ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும் சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களை பலப்­ப­டுத்தும் வகை­யி­லான திட்­டங்­களும் விரைந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இத­னூ­டாக கணி­ச­மா­ன­ளவு தொழில்­வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்க முடியும். தற்­போ­தைய சூழலில் சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்கள் பாரிய சிக்­கல்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கண்டு அவர்­களை பொரு­ளா­தார ரீதியில் பலப்­ப­டுத்த வேலைத்­திட்­டங்கள் அவ­சி­ய­மாகும். எனவே அர­சாங்கம் என்ற ரீதியில் பலப்படுத்த வேலைத்திட்டங்கள் அவசியமாகும். எனவே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

https://www.tamilnaatham.org/2018/10/unemloment-in-north-east.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.