Jump to content

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட,கிழக்கு முழுவதும் மகிந்தாவின் ஆட்சி வரணும் என்று நினைக்கிறீங்களா ஜீவன் சிவா? 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
4 minutes ago, ரதி said:

வட,கிழக்கு முழுவதும் மகிந்தாவின் ஆட்சி வரணும் என்று நினைக்கிறீங்களா ஜீவன் சிவா? 

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

உங்களது கருத்தைப் பார்த்தால் முழு நாட்டையும்  சிங்களவனிடம் கொடுத்து விட்டு தமிழன் அவன் கீழ் அடிமையாய் இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது 

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

உங்களது கருத்தைப் பார்த்தால் முழு நாட்டையும்  சிங்களவனிடம் கொடுத்து விட்டு தமிழன் அவன் கீழ் அடிமையாய் இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது 

அப்படியென்றால், அதாவது மக்கள் மகிந்தவை விரும்பி தேர்வு செய்தால் என்ன செய்யலாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

அப்படியென்றால், அதாவது மக்கள் மகிந்தவை விரும்பி தேர்வு செய்தால் என்ன செய்யலாம் 

 

மக்கள் மகிந்தவை தெரிவு செய்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது இங்கிருந்து கொண்டு...அவர்கள் விருப்படி அனுபவிக்கட்டும் என்று வேடிக்கை பார்க்க மட்டுமே என்னால் முடியும்....ஆனால்,அங்குள்ள மக்கள் இப்படி முட்டாள் தனமான முடிவு எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

முன்பு நடந்தவைகளை வைத்து, எதிர்வு கூறமுடியாது தான்.

கருணாவின் அசைக்க கூடிய அல்லது அசைக்க முடியாது என்ற தன்மை, சிங்களம் கிழித்த கூட்டுக்குள் தான் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அடிப்படையாக, கருணாவிடம் தான் நினைக்கும் அரசியல் கருத்துக்களை  சொல்வதற்கு, சொறி சிங்கள யாப்பிற்கு உட்பட்டுக்  கூட,   இறைமை இல்லை.

இப்பொது கூட, கருணா  கூறுபவை ராஜபக்சேயால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில், கருணா சிங்களத்தோடு கிழக்கு தமிழ் நலன் சார் நிலைப்பாட்டில் நிற்கமுடியாது.

இவை, அரசியலில் மட்டுமல்ல, கருணை சொல்லும் அபிவிருத்தியிழும், கருணா இதனை நிதர்சனமாக காண்பார்.

இலங்கைத் தீவில் இருக்கும் பிரச்சனையனையின்  ஓர் பரிமாணம், ஓர் இனம் தானே முழு தேசிய செல்வங்களை உரித்ததாக்க  கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது.

இந்த பிரச்னைனையின் முரண்பாடு, இனத்துவேச அரசால், அரசியல் யாப்பால்  இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளது.  


முன் பதிவுகளில் கூறியது போல, கருணா இதனை தனிப்பட்ட உறவின் (ராஜ்பகேசே அரசாங்கம்) மூலம் கையாளலாம் என்று நினைத்தால், அதுவே கருணாவின் புதைகுழியாக மாறினாலும் ஒன்றும் புதினமில்லை.

கருணா, சிலவேளைகளில், தனிப்பட்ட முறையில் அசைக்க முடியாதவர் ஆகலாம், ஆனாலும் அது கிழக்கை சிங்களத்துக்கு விலை கொடுத்தே முடியும். அது, குருநாவீட்ற்கும் கிழக்கு மக்களுக்கும் பாரிய முரண்பாடாக மாறும்.   

கருணா ஒரு சாணக்கியன்(நீங்கள் விரும்பினாலும் ,விரும்பா விட்டிடாலும்)...தலைவரை மாதிரி அடியடா,புடியடா,எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று ஒரு விஷயத்தை அவர் கையாள்வதில்லை....அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா "சாணக்கியனோ" எண்டு தெரியாது ஆனால் "நக்கியவன்" எண்டு தெரியும். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

நம்பிட்டம் வடகிழக்கை இணைத்து வைக்க சொல்லுங்க பார்ப்போம் மீண்டும் அண்ணைய  ஏற்றுக்கொள்ளலாம் ( உரிமையை பிறகு பார்ப்போம்)

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

கருணா ஒரு சாணக்கியன்(நீங்கள் விரும்பினாலும் ,விரும்பா விட்டிடாலும்)...தலைவரை மாதிரி அடியடா,புடியடா,எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று ஒரு விஷயத்தை அவர் கையாள்வதில்லை....அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு

இவன் எல்லாம் ஒரு ஆள் என்று , எங்களின் எதிர்காலத்தை அடியோடு அழித்தவன் . 

Link to comment
Share on other sites

4 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

உங்களது இந்த கருத்த்தானது  மேடைகளில் அலங்காரமாய் பேசுவதற்கும் தன்னை சிறந்த ஜனநாயகவாதியாக,  அகிம்சைவாதியாக பாசாங்கு செய்வதற்கும் வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஜதார்ததம் அதுவல்ல என்பது உலக வரலாற்றை படித்தால் தெரியும். 

உலகின பெரும்பாலான நாடுகளின் சுதந்திரம் அவர்களின்  இருப்பு  சுதந்திர வாழ்வு  உறுதி செய்யப்பட்டது  அவர்களின் ஆயுத பலத்தினாலேயே சாத்தியமாயிற்று. இன்றைய மேற்கு நாடுகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டது அவர்களின் போர்பலத்தினால்தான். சில எல்லை நிர்ணயங்களை வேண்டுமானால்  சில விட்டுக்கொடுப்புகள் ,அரசியல் பலம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் பின் பலமாக அவர்களின் போர்வலிமை தான் இருந்தது என்பது 15 - 19 நூற்றாண்டுகளின் ஐரோப்பிய வரலாற்றை வாசித்துப் பாருங்கள் புரியும். இன்று ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அவர்கள் பேசும் மொழிவாரியாக அமைந்தது தற்செயலாக நடந்தது அல்ல. அவர்களின் அரசியல் வாக்குபலத்தால் அமைந்ததும் அல்ல. மாறாக அந்நிய ஆக்கிரமிப்புக்களை மூர்க்கமாக எதிர்தது நின்ற அந்நாடுகளின் வாழ்ந்த முன்னோர்களின் போர் வலிமையாலேயே அது சாத்தியமாயிற்று. அந்த வலிமையின் தியாகத்தின் பலன்களையே இன்றைய தலைமுறை ஐரோப்பியர்கள் அனுபவிக்கிறார்கள். 

துரதிஷ்ரவசமாக  எமது முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் போர்வலிமை அற்ற பலவீனமானவர்களாகவும் இருந்து அந்திய ஆக்கிரமிப்புக்களை முறியடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள் அல்லது அடிபணிந்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தமிழர்களின்  துரதிஷரம் அண்மைய ஆயுத போராட்டத்திலும் அவர்கள் தோற்றுப் போனாரகள். இனிமேல்ஏதாவது ஒரு பேரதிசயம் நடந்தால் அன்றி வாக்குப்பலத்தினாலோ அரசியல்ப்பலத்தினாலோ உலகத்தில் வாழும்  சுதந்திர மனிதரகளை போன்ற சுதந்திர வாழ்வு கிடைக்கப்போவதில்லை. சில தற்காலிக சலுகைகள் சில அனுசரிப்புக்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்  இதுதான் இன்றைய Reality. 

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பலத்தினால் மக்கள் சிறந்த முடிவை எடுப்பதில்லை. 

அரசியல் அதிகாரவர்க்கத்தால் தனிப்பட்ட வாழ்வில் எதுவித முன்னேற்றங்களோ மாற்றங்களோ காணமுடியாதவிடத்து, தம்மிடம் உள்ள வாக்குப்பலத்தை வைத்து தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவார்கள். இந்த எதிர்ப்பானது பெரும்பாலும் எதுவித தூரநோக்கோ, அரசியல் நோக்கங்களோ கொண்டதல்ல. தமக்கும் வலிமை உள்ளது என்ற உணர்வைக் காட்டவே. இதனால்தான் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அண்மையில் பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய்ர் பொல்சொனாரோ ஜனாதிபதியாக வரமுடிந்தது.

இலங்கையில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரிகளைத்தான் தெரிவு செய்கின்றார்கள்!

சிலவேளை தமிழ் மக்களும் ஒரு சமூகமாக கூட்டுத் தற்கொலையை விரும்பித் தெரிவு செய்யக்கூடும். ☹️

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

வாக்குப் பலத்தினால் மக்கள் சிறந்த முடிவை எடுப்பதில்லை. 

அரசியல் அதிகாரவர்க்கத்தால் தனிப்பட்ட வாழ்வில் எதுவித முன்னேற்றங்களோ மாற்றங்களோ காணமுடியாதவிடத்து, தம்மிடம் உள்ள வாக்குப்பலத்தை வைத்து தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவார்கள். இந்த எதிர்ப்பானது பெரும்பாலும் எதுவித தூரநோக்கோ, அரசியல் நோக்கங்களோ கொண்டதல்ல. தமக்கும் வலிமை உள்ளது என்ற உணர்வைக் காட்டவே. இதனால்தான் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அண்மையில் பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய்ர் பொல்சொனாரோ ஜனாதிபதியாக வரமுடிந்தது.

இலங்கையில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரிகளைத்தான் தெரிவு செய்கின்றார்கள்!

சிலவேளை தமிழ் மக்களும் ஒரு சமூகமாக கூட்டுத் தற்கொலையை விரும்பித் தெரிவு செய்யக்கூடும். ☹️

சரியான கருத்து கிருபன். மூன்று போர்களின் மூலமாக தான் ஜேர்மனிய சாம்ராஜயத்தின் எழுச்சி சாத்தியமானது. 1864 ல் நடைபெற்ற டென்மார்க- பெருசிய யுத்தம், 1866 ல் நடைபெற்ற அவுஸ்ரய - பெருசிய புத்தம், 1870/71 களில் நடைபெற்ற பிரான்ஸ் உடனான யுத்தம் . பிரான்ஸ் முறியடிக்கப்பட அதுவரை பெரஷ்யா உட்பட பல்வேறு சிற்றசுகளாக இருந்த ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்கள்  இணைந்து ஐரொப்பாவின் மிகப்பெரும் இராணுவ,  பொருளாதார சக்தி கொண்ட நாடாக ஜேர்மனி உருவாக காரணமாயிற்று.

ஆனால் அதே ஜேர்மனி ஆக்கிரமிப்பு சக்தியாக முதலாம் இரண்டாம் உலக யுத்தத்தில் மாறிய போது ஐரோப்பிய நாடுகள் மூரக்கமாக எதிர்தது தமது போர்வலிமை மூலம் தத்தமது மக்களின்  இறைமையை காப்பாற்றிக் கொண்டன. அதறகாக பாரிய உயிர் பொருள் இழப்புக்களை அந்நாடுகள் சந்தித்தன. இருப்பினும் அவர்கள் காப்பாறிய மக்களின் இறைமை பெறுமதி மிக்கது.  ஐரோப்பிய வரைபடத்தை மாற்றிய பல தன்னாட்சி கொண்ட  சுதந்திர நாடுகள் உருவாக இவ்விரண்டு போர்களும் காரணமாகின. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

கருணா "சாணக்கியனோ" எண்டு தெரியாது ஆனால் "நக்கியவன்" எண்டு தெரியும். ? 

புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இருந்த இடத்தில் இருந்து கொண்டு புலம்பத் தான் தெரியும் ...பாவம் அவர்களுக்கு யதார்த்தம் தெரியவில்லை 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

பொறுங்கப்பா சனாதிபதி பதவியை அவருக்கு தான் கொடுக்க போறார். 

முன்னர் பிரதி அமைச்சராக இருந்து செஞ்சவர் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

பொறுங்கப்பா கும்மான் என்ன தேர்தலில் நின்றவரா? எப்போதும் பின்கதவு தானே. மலம் எப்படி வெளியேறுகிறதோ அவ்வாறே ஆற அமர தான் நடக்கும்.

தேசிய பட்டியல் மூலம் எம்பி ஒருவர் ராஜினாமா செய்து தானே கும்மான் வரலாம்.

Link to comment
Share on other sites

18 hours ago, tulpen said:

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

 

19 hours ago, tulpen said:

துரதிஷ்ரவசமாக  எமது முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் போர்வலிமை அற்ற பலவீனமானவர்களாகவும் இருந்து அந்திய ஆக்கிரமிப்புக்களை முறியடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள் அல்லது அடிபணிந்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தமிழர்களின்  துரதிஷரம் அண்மைய ஆயுத போராட்டத்திலும் அவர்கள் தோற்றுப் போனாரகள்.

 

19 hours ago, tulpen said:

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

வரலாற்று அனுபவங்கள்தான் எங்கள் மக்களை எந்த கேள்வியுமின்றி // கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு // என்று சொல்லி முள்ளிவாக்காலில் குழிதோண்டிப் புதைத்தது. அப்ப இந்த வரலாற்று அனுபவங்கள் கை கொடுக்கவில்லையே. உலகநாடுகள் எதிர்த்து நின்ற போதும் மக்கள்தான் பாதுகாப்பு என்று சொல்லி மக்களையே அழித்த கதையை மறுபடியும் கேட்டகத்தயாரில்லை. யதார்த்தத்தை உணருங்கள். ஆரம்பத்தில் எமது போராட்டத்தின் நியாயத்திற்காக உதவிக்கரம் நீட்டிய நாடுகளே வாய் பொத்தி, புலிகளை அழிக்க உதவியபோது கண்ணீர் விட்டவனில் நானும் ஒருவன். 

யதார்த்தம் என்பது வேறு வரலாறு என்பது வேறு.

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

இதுவரை கும்மான் செய்த அரசியல் என்ன? ( மக்களுக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

ஆமாம்.. முதல் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கிலை தமிழ் மக்களுக்கு.. விடியலை உருவாக்கிட்டார். எனி இரண்டாம் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கை வங்காள விரிவுடாக் காணும் பரப்பி விடுவார்.. அடுத்த சிங்கப்பூர்.. கிழக்குத் தான். இப்படியே வாய் பார்த்துக்கிட்டு இருங்க..

அங்கால ஒருத்தர்.. வடக்கின் வசந்தம் என்று வந்து நெடுந்தீவைச் சிங்கப்பூர் ஆக்கிட்டார்.. மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாச்சி அமைச்சிட்டார்.. இப்ப மீண்டும் வந்திருக்கார்...  இதுகளை எல்லாம்... உங்களை போல சிலர் இப்படி...!

உங்க கொண்ணர்.. 5ம் இட சொறிலங்கா பணக்காரன் நிலையில் இருந்து உலகப் பணக்காரன் ஆகிடுவார். நீங்களும்.. அவரை நம்பி பின்னால் அலையும் சில பேரும்.. அப்படியே தான் இருப்பீங்க. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

இதுவரை கும்மான் செய்த அரசியல் என்ன? ( மக்களுக்கு)

பொறுத்திருந்து பாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பொறுத்திருந்து பாருங்கள் 

  •  இன்னுமா..உங்க கொண்ணர்.. 2004 இல வெளில போனவர்.. 14 வருசமாச்சு.. இன்னுமா..??! ? ?
Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

 

 

வரலாற்று அனுபவங்கள்தான் எங்கள் மக்களை எந்த கேள்வியுமின்றி // கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு // என்று சொல்லி முள்ளிவாக்காலில் குழிதோண்டிப் புதைத்தது. அப்ப இந்த வரலாற்று அனுபவங்கள் கை கொடுக்கவில்லையே. உலகநாடுகள் எதிர்த்து நின்ற போதும் மக்கள்தான் பாதுகாப்பு என்று சொல்லி மக்களையே அழித்த கதையை மறுபடியும் கேட்டகத்தயாரில்லை. யதார்த்தத்தை உணருங்கள். ஆரம்பத்தில் எமது போராட்டத்தின் நியாயத்திற்காக உதவிக்கரம் நீட்டிய நாடுகளே வாய் பொத்தி, புலிகளை அழிக்க உதவியபோது கண்ணீர் விட்டவனில் நானும் ஒருவன். 

யதார்த்தம் என்பது வேறு வரலாறு என்பது வேறு.

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

 

 

நான் குறிப்பிட்டது  துவக்கைவிட வாக்கு சீட்டு பலமானது என்ற பாசாங்குதனமான ஒற்றை வரி சம்பந்தமானது மட்டுமே அதற்காகவே வரலாற்றில் ஆயுத வலிமையே நாடுகளின. இறைமையை சுதந திரதமை நிர்ணயம் செய்துள்ளது என்ற வரலாறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தேன். நீங்கள் அதற்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக  விவாதத்திற்கு எந்த சம்பந்தமும்  இல்லமல் முள்ளிவாய்க்கால், கண்ணீர் என்று உளறிக்கொட்டியுள்ளீர்கள். அப்படிப்பார்தாலும் எமது போர் ஆயுத வலிமையை விட  எதிரியின் ஆயுத வலிமை  மேலோங்கியதால் தோல்வியுற்றார்கள் தமிழர்கள். இது வெளிப்படையான உண்மை.  இங்கும் நீங்கள் சொன்ன வாக்கு வலிமையை விட  துவக்கு வலிமை தான் வெற்றியடைந்தது.

வாக்குசீட்டு வலிமை மிகுந்தது என்றால் உலக நாடுகள் இராணுவத்தை இப்போதும் பெருக்க வேண்டிய அவசியமோ ஆயுதங்களை குவிக்க வேண்டிய தேவையோ இருக்காது. யதார்ததத்தில் கூட  நாடுகளின் ஆயுத  வலிமையே அந்த தேசிய இன மக்களின் இறைமையை சுதந்திர வாழ்வை உறுதி செய்கிறது. 

வாக்குசீட்டு வலிமையானது என்ற கூற்று பாசாங்குத்தனமான பசப்பு வார்ததை. நீங்கள் கூறியது உண்மை என்றால் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சரவஜன வாக்கெடுப்பு மூலம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். இது தான் யதார்த்தம்  .நீங்கள் கூறியது அல்ல. ஆயுத வலிமை மூலம் தமிழரை தோறகடித்த சிங்கள நாடு தமிழரின் உரிமைகளை வாக்கு சீட்டு மூலம் கொடுக்கப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

3 hours ago, ஜீவன் சிவா said:

 

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

 

1 hour ago, nedukkalapoovan said:

ஆமாம்.. முதல் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கிலை தமிழ் மக்களுக்கு.. விடியலை உருவாக்கிட்டார். எனி இரண்டாம் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கை வங்காள விரிவுடாக் காணும் பரப்பி விடுவார்.. அடுத்த சிங்கப்பூர்.. கிழக்குத் தான். இப்படியே வாய் பார்த்துக்கிட்டு இருங்க..

அங்கால ஒருத்தர்.. வடக்கின் வசந்தம் என்று வந்து நெடுந்தீவைச் சிங்கப்பூர் ஆக்கிட்டார்.. மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாச்சி அமைச்சிட்டார்.. இப்ப மீண்டும் வந்திருக்கார்...  இதுகளை எல்லாம்... உங்களை போல சிலர் இப்படி...!

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

 

1 hour ago, nedukkalapoovan said:
  •  இன்னுமா..உங்க கொண்ணர்.. 2004 இல வெளில போனவர்.. 14 வருசமாச்சு.. இன்னுமா..??! ? ?

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 3:33 PM, tulpen said:

நான் குறிப்பிட்டது  துவக்கைவிட வாக்கு சீட்டு பலமானது என்ற பாசாங்குதனமான ஒற்றை வரி சம்பந்தமானது மட்டுமே அதற்காகவே வரலாற்றில் ஆயுத வலிமையே நாடுகளின. இறைமையை சுதந திரதமை நிர்ணயம் செய்துள்ளது என்ற வரலாறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தேன். நீங்கள் அதற்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக  விவாதத்திற்கு எந்த சம்பந்தமும்  இல்லமல் முள்ளிவாய்க்கால், கண்ணீர் என்று உளறிக்கொட்டியுள்ளீர்கள். அப்படிப்பார்தாலும் எமது போர் ஆயுத வலிமையை விட  எதிரியின் ஆயுத வலிமை  மேலோங்கியதால் தோல்வியுற்றார்கள் தமிழர்கள். இது வெளிப்படையான உண்மை.  இங்கும் நீங்கள் சொன்ன வாக்கு வலிமையை விட  துவக்கு வலிமை தான் வெற்றியடைந்தது.

வாக்குசீட்டு வலிமை மிகுந்தது என்றால் உலக நாடுகள் இராணுவத்தை இப்போதும் பெருக்க வேண்டிய அவசியமோ ஆயுதங்களை குவிக்க வேண்டிய தேவையோ இருக்காது. யதார்ததத்தில் கூட  நாடுகளின் ஆயுத  வலிமையே அந்த தேசிய இன மக்களின் இறைமையை சுதந்திர வாழ்வை உறுதி செய்கிறது. 

வாக்குசீட்டு வலிமையானது என்ற கூற்று பாசாங்குத்தனமான பசப்பு வார்ததை. நீங்கள் கூறியது உண்மை என்றால் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சரவஜன வாக்கெடுப்பு மூலம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். இது தான் யதார்த்தம்  .நீங்கள் கூறியது அல்ல. ஆயுத வலிமை மூலம் தமிழரை தோறகடித்த சிங்கள நாடு தமிழரின் உரிமைகளை வாக்கு சீட்டு மூலம் கொடுக்கப் போவதில்லை. 

அது மட்டுமல்ல, அந்த வாக்குகளித்திற்கு வலிமையை கொடுப்பது ஓர் அரசிடம் இருக்கும் வன்முறையைப் பிரயோகிக்கும்  ஏகபோகம்.

அந்த  வன்முறையைப் பிரயோகிக்கும்  ஏகபோகதை சட்டவலிமை கொடுக்கும் நீதிமன்றதிற்கு கூட அத்திபாரம் கூட வன்முறையே. அது சிவில், கிரிமினல், மிலிட்டரி justice என்று பாரப்படுத்தப்பட்டுள்ளது.

உரிமைகள் ஒரு போதும் வழங்கப்பட்டதாக வரலாற்றில் உள்ளது அருமை. chezc-slovak ஓர் விதிவிலக்கு.

பிரித்தானியரிடம் இருந்து கூட, காந்தி உரிமையை பிடுங்கி தான் எடுத்தார். ஆனால், பிரித்தானியரின்  இரத்தம் ஓடவில்லை. ஏனெனில், அதற்கு முதலே பிரித்தானியா வங்குரோத்தை அடைந்து விட்டது. அது கூட ஆயுத வலிமையான ஜெர்மனி உடன் சண்டை பிடித்தே. காந்தி பிடுங்கிய உரிமை, நேருவால் ஆட்சிமாற்றமாக மாற்றப்பட்டது வேறு விடயம்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.