Jump to content

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

October 28, 2018

 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

 

 

 

 

 

 

 

 

இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுவோம் என்று தெரிவித்த கருணா, நாட்டின் அபவிருத்திகளை முன்னெடுக்கும் செயல் வீரர்கள் தாம் என எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களுடன் கிழக்கில் உள்ள முஸ்லீம் ஏகாதிபத்திய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் கருணா கூறியுள்ளார். இந்த நிலைமை ஏற்பட கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.

இதனால் கிழக்கில் பல நிலங்கள் பறிபோகின்றது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு முதலியவையும் தீரக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாணக்கியமான தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மதிப்பிற்குரிய சாணக்கியமான தலைவர் சம்பந்தனை கேட்டுக் கொள்ளதாகவும் கருணா கூறினார்.

 

http://globaltamilnews.net/2018/100996/

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி சொன்னது உண்மை.

ஆனால், அதே அழுத்ததை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவராக, தான் வழங்கமுடியாது என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

வார்த்த்தைக்கு வார்த்தை தலைவர் என்று விளிக்கும் மகிந்த மாத்தயாவோடும்,  தம்பிகளின் துணையோடும் கருணா அம்மான் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பார். ஆனால் அவற்றை அப்படியே சிங்களவர்களைக் குடியேற்றக்கொடுப்பார்!

Link to comment
Share on other sites

இதற்குப் பச்சை போடவேண்டும். போட்டால் இந்தக் கோதாரியை வரவேற்றதுபோலாகிவிடும். பச்சையைப் பாதுகாத்து பின்பு தருகிறேன்.

23 minutes ago, Kavi arunasalam said:

E60057-ED-7-C73-413-F-8-F8-D-7-A978245-E

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎27‎/‎2018 at 8:07 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!


 இப்பத் தான் உங்களுக்கே விளங்கி இருக்கு....மற்றவர்களுக்கு போகப் போக விளங்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 8:40 AM, Kadancha said:

அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

இவர்  பிரான்சுக்கு  வந்திருந்தபோது

ஒவ்வொரு  பேச்சிலும் 

தொப்பி பிரட்டிகள்

தொப்பி பிரட்டிகள்   என்ற சொல்லைப்பாவிப்பார்

ஆனால் இறுதியாக தொப்பி  பிரட்டியை  பிடித்து  தொங்கிக்கொண்டு தான் ஓடிப்போனார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

அதை தவிர, கருணாவிடம் அரசியல் இறைமை என்பது இல்லை, அது எப்போதும் சிங்களம் வகுத்த கோட்டுக்குளேயே நிற்கவேண்டும்.

முனைய பதிவுகளில் சொன்னதை போலவே, கருணாவை ராஜபக்சே அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சொறி லங்கா அரசாய் பொறுத்தவரையில், கருணா இன்னமும் enemy of the State.

கருணாவை, சொறி லங்கா supreme court தான் அரசு எதிரி இல்லை என்று பிரகடனப்படுத்தலாம். அல்லது சொறி இலங்கை அதிபர். ஓர் பிடி இருக்கவேண்டும் என்பதற்காகவே, இதை சொறி லங்கா அரசு செய்யவில்லை. கருணாவும், ஏன் அதை கண்டு கொள்ளவில்லை என்பது புரியாமல் உள்ளது.    

மாறாக, சாம்-சும், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசியல் இறைமை உண்டு, அதை வைத்து அவர்கள் வேறு பேரம் பேசுகிறார்கள்.

இந்த கருத்துக்களில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

Link to comment
Share on other sites

On 10/28/2018 at 1:10 PM, Kadancha said:

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா இப்படி "ஆணித்தரமான" பேசிப் பேசித் தானே தான் சார்ந்த இயக்கத்தை மட்டும்மல்ல தனது மனைவியையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தினார்!

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது காணெளி ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்டு பின்பு ஒருவரே கேள்விகளை கேட்க விறுவிறு என்று யோசிக்காமல் பாடமாக்கி வைத்திருந்ததை சொல்வத போலவே இருக்கிறது.ஆனாலும் எல்லாமே சரியாக சொல்கிறார்.

இருந்தும் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டதென்று அரசு கூறியபின்னரும் 6வருடங்கள் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் செய்த எல்லாவிதமான அநியாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று நித்திரையால் எழும்பி வந்து திட்டமிட்ட ஒரு காணெளியை காட்டுறார்.சம்பந்தர் செய்ய வேண்டுமென்று சொல்வது சரி அதை இவரே கூட இருந்த மகிந்தவுக்கு சொல்லி தமிழர் பிரச்சனையை தீர்க்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

கிழக்கிலே பிள்ளையானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவருக்கில்லை என்கிறார்கள்.

சரி இன்றுடன் காலம் முடியப் போவதில்லை.இனி என்றாலும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவது காணெளி ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்டு பின்பு ஒருவரே கேள்விகளை கேட்க விறுவிறு என்று யோசிக்காமல் பாடமாக்கி வைத்திருந்ததை சொல்வத போலவே இருக்கிறது.ஆனாலும் எல்லாமே சரியாக சொல்கிறார்.

இருந்தும் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டதென்று அரசு கூறியபின்னரும் 6வருடங்கள் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் செய்த எல்லாவிதமான அநியாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று நித்திரையால் எழும்பி வந்து திட்டமிட்ட ஒரு காணெளியை காட்டுறார்.சம்பந்தர் செய்ய வேண்டுமென்று சொல்வது சரி அதை இவரே கூட இருந்த மகிந்தவுக்கு சொல்லி தமிழர் பிரச்சனையை தீர்க்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

கிழக்கிலே பிள்ளையானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவருக்கில்லை என்கிறார்கள்.

சரி இன்றுடன் காலம் முடியப் போவதில்லை.இனி என்றாலும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் பார்க்கலாம்.

அப்படியில்லை .....கூத்தமைப்பின் மீது அவ்வளவு வெறுப்பில் உள்ளனர் கிழக்கு மக்கள் 
நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

கருத்து உன்மை ஆனால் தலைவனாக எல்லாம் ஏற்க முடியாது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இந்த ஆரூட பூசணத்துக்கு இன்னும் ஒரு பதவியும் கொடுக்கல்லையா..??!

5 இடத்தில் இருக்கும் பணக்காரர் இவர்.. 2 ம் இடத்துக்காவது நகரனும். மகிந்த தான் நிதியமைச்சர். நீங்கள் அவர் காலை சுற்றி வருவதே சிறப்பு மிஸ்டர் முரளிதரன். 

?

Link to comment
Share on other sites

On 10/30/2018 at 12:23 AM, Kadancha said:

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

On 10/30/2018 at 10:05 AM, அக்னியஷ்த்ரா said:

நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

 

On 10/30/2018 at 5:20 AM, போல் said:

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

ஆகா

கேள்வியும் நானே பதிலும் நானே ஸ்டைல் 

இதைத்தான் நாங்கள் 30 வருசமா பாத்திட்டமே 

இன்னமுமா....

 

இங்கு ஒருத்தர் வேறு திரியில் டக்லஸுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் 20 வீத வாக்குகளை பெற்றுவிடுவாராம் என்று கவலைப் படுகின்றார். காரணம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாராம். அட பாவியளே, மக்களுக்கு எது பிடிக்கும் + யாரை தேர்ந்தெடுக்கணும் என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த அடிப்படையே புரியாம ஜனநாயக விரோதிகள் இன்றும் கைகளில் துவக்கு இருப்பதாக கனவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் உள்ள நாம் கூட மகிந்த ராஜபக்சேவினைக் கோருகின்றோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில், கருணா அம்மானை நிறுத்த வேண்டும், அதன் மூலம் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு உறுதிப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

ஏற்றுக்கொள்ளப்படுவது வேறு. தேர்தலில் வெல்வது வேறு.

பிரபாகரன் - பலருக்கு அவர் பல்வேறு படிகளில் அவருடன் முரண்பாடு இருந்தது.

ஆனால் , தலைமை என்று வரும் போது, வெகு சிறிய பகுதியினரை தவிர, அவராய் பொதுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படியே செல்வ நாயகமும்.

அமீர், அப்படி ஓர் காலத்தில் இருந்தார், அனல் தக்கவைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை வைண்ட் அப் பணணும் அம்மானோட ஜடியா ராஜபக்சேக்கள் சொல்லிவிட்டது...

அவையன்ற எம்பிமாரை ஓடிப்போய் மகிந்த உடன் நிற்பதற்கான அழுத்தம் போடுறாராம். 

ஏதோ அம்மானால முடிஞ்சது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

அடேங்கப்பா  ரொம்பதான் குசும்பு :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

யூ மீன் அசைக்க முடியாத "சகதி"... ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

முன்பு நடந்தவைகளை வைத்து, எதிர்வு கூறமுடியாது தான்.

கருணாவின் அசைக்க கூடிய அல்லது அசைக்க முடியாது என்ற தன்மை, சிங்களம் கிழித்த கூட்டுக்குள் தான் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அடிப்படையாக, கருணாவிடம் தான் நினைக்கும் அரசியல் கருத்துக்களை  சொல்வதற்கு, சொறி சிங்கள யாப்பிற்கு உட்பட்டுக்  கூட,   இறைமை இல்லை.

இப்பொது கூட, கருணா  கூறுபவை ராஜபக்சேயால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில், கருணா சிங்களத்தோடு கிழக்கு தமிழ் நலன் சார் நிலைப்பாட்டில் நிற்கமுடியாது.

இவை, அரசியலில் மட்டுமல்ல, கருணை சொல்லும் அபிவிருத்தியிழும், கருணா இதனை நிதர்சனமாக காண்பார்.

இலங்கைத் தீவில் இருக்கும் பிரச்சனையனையின்  ஓர் பரிமாணம், ஓர் இனம் தானே முழு தேசிய செல்வங்களை உரித்ததாக்க  கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது.

இந்த பிரச்னைனையின் முரண்பாடு, இனத்துவேச அரசால், அரசியல் யாப்பால்  இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளது.  


முன் பதிவுகளில் கூறியது போல, கருணா இதனை தனிப்பட்ட உறவின் (ராஜ்பகேசே அரசாங்கம்) மூலம் கையாளலாம் என்று நினைத்தால், அதுவே கருணாவின் புதைகுழியாக மாறினாலும் ஒன்றும் புதினமில்லை.

கருணா, சிலவேளைகளில், தனிப்பட்ட முறையில் அசைக்க முடியாதவர் ஆகலாம், ஆனாலும் அது கிழக்கை சிங்களத்துக்கு விலை கொடுத்தே முடியும். அது, குருநாவீட்ற்கும் கிழக்கு மக்களுக்கும் பாரிய முரண்பாடாக மாறும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

 

karuna amman and women à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஓமோம் அதெண்டால் உண்மைதான்.....உப்பிடி கட்டிப்பிடிச்சால் அவரை என்னெண்டு அசைக்கிறது? sign0186.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 8:02 PM, ஜீவன் சிவா said:

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

அண்ணை ...இது தப்பு என்றால் கூத்தமைப்பிற்கு மக்கள் எந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கினம். 
செய்வதை பார்த்துத்தான் வாக்களிக்கவேண்டுமென்றால் கூத்தமைப்பிற்கு வாக்குவிழாது செருப்பால் திரத்தி திரத்தி வெளுவை வேண்டுமென்றால் விழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் ,தீபாவளி ,வருடப்பிறப்பிற்கு தீர்வு பொதியுடன் வரும் சம்மையும் ,சமஷ்ட்டி புகழ் சும்மையும் மக்கள் நம்பி வாக்குகளை கடாசும் போது நோபல் பரிசு எல்லாம் பெரிசா என்ன ...? 

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

செய்வதை பார்த்துத்தான் வாக்களிக்கவேண்டுமென்றால் கூத்தமைப்பிற்கு வாக்குவிழாது செருப்பால் திரத்தி திரத்தி வெளுவை வேண்டுமென்றால் விழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் ,தீபாவளி ,வருடப்பிறப்பிற்கு தீர்வு பொதியுடன் வரும் சம்மையும் ,சமஷ்ட்டி புகழ் சும்மையும் மக்கள் நம்பி வாக்குகளை கடாசும் போது நோபல் பரிசு எல்லாம் பெரிசா என்ன ...? 

நாங்களெல்லாம் பொங்கலுக்கு தமிழ் ஈழம் வரும் + தீபாவளிக்கு தமிழ் ஈழம் வரும் + இறுதி யுத்தம் + அடுத்த வருடம் தமிழ் ஈழத்தில்தான் மலரும் என்று பல ஜூஜுபிகளைப் பார்த்து கேட்டு வளர்ந்தனாங்கள் // முடிவில சுடுகாடுதான் கண்ட மிச்சம்.

ஜனநாயகம் என்பது வேறு அராஜகம் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்து பல சகாப்தங்களாகிவிட்டன. இல்லாவிட்டால் ஸ்கொல்லில பலர் நாட்டை விட்டே வெளியேறி வந்து வீர வசனம் பேசி இருக்க மாட்டார்கள்.

மக்களை அவர்கள் விருப்பப்படி தெரிய விடுவோம் - அதன் வழி போவோம். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக துவக்காலயே ஒன்னும் புடுங்க முடியலை, நாம எழுத்திலையா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.