Jump to content

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை! – மஹிந்த ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை! – மஹிந்த ராஜபக்ஷ

mahinda-n-maithri-720x450.jpg

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் கூறப்போகும் கருத்து தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அந்தவகையில், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென அவர் கூறியுள்ளார். அதாவது பதவிநிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, அவற்றின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது.

மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மைத்திரி அமைச்சுப் பொறுப்பை வகித்திருந்தார். இப்போது ஜனாதிபதியாக மைத்திரி செயற்படும் நிலையில், மஹிந்த பிரதமராக உள்ளார். இந்த பதவிநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளனவே தவிர, செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லையென மஹிந்த குறிப்பிடுவதானது, சகல விடயதானங்களும் தமது கட்டுப்பாட்டில் இருக்குமென்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை தன்னுடைய அரசியல் பாதையும் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பாதையும் வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தமையே பிளவிற்கு காரணம் என ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தன்னை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகளின் பின்னர் பிரதமர் அதுகுறித்து அவ்வளவாக கரிசனை கொள்ளாமையும் காரணமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான செய்திகளின் பின்னர் நல்லாட்சி ஆட்டம் காண ஆரம்பித்தது. இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று, அதன் வெளிப்பாடாக நேற்று முன்தினம் மாலை அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறியது. வெளியேறி சில நிமிடங்களில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

நாட்டின் அரசியலில் ஏற்பட்ட இத்திடீர் மாற்றம் தொடர்பாக பல கருத்துக்கள் வெளிப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, இனிவரும் கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் மஹிந்த சூட்சகமாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

mahinda-and-maithri.jpg

mahinda-and-maithri-3.jpg

mahinda-and-maithri-2.jpg

mahinda-and-maithri-1.jpg

 

 

http://athavannews.com/கதிரைகள்-மாறியுள்ளனவே-தவ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைகள் மாறியுள்ளனவே அன்றி திருடர்கள் மாறவில்லை ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.