Jump to content

அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு

அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்புGoogle

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்போது போலிஸ் எச்சரித்தது. 

நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்புTwitter

 

https://www.bbc.com/tamil/global-46003656

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 11 பேர் பலி, 6 பேர் காயம்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரிலுள்ள வழிபாட்டு தலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 6 போர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

shooting.jpg

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஒப் லைப் என்ற யூத வழிபாட்டுத்தலத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளதுடன் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மர்ம நபர் காயமடைந்த நிலையில், பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

“அனைத்து யூதர்களும் மரணிக்க வேண்டும்” என சத்தமிட்டவாறு குறித்த மர்மநபர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிதாரி 46 வயதுடைய ரொபர்ட் பௌஸர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/43367

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.