Jump to content

அமெரிக்காவில் வேகமாக வளரும் இந்திய மொழி எது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நினாபடத்தின் காப்புரிமை Getty Images Image caption முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர்

கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு.

உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை.

உலகப் பொருளாதார கருத்துக்களம் வெளியிட்ட ஒரு இணையதள வீடியோவின் கூற்றுப்படி, 2010ல் இருந்து 2017 வரையிலான காலகட்டத்திற்குள் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு என்ன காரணம்?

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில்தான் முக்கியமாக தெலுங்கு மொழி பேசப்படுகிறது. இந்த இரு மாநிலங்களையும் சேர்த்த மக்கள் தொகை 84 மில்லியனாகும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகாமாக பேசக்கூடிய மொழிகளில் 4வது இடத்தில் தெலுங்கு உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு வரை தெலுங்கு பேசும் மக்கள் தொகை 4 லட்சம். இது 2010ஆம் ஆண்டைவிட இருமடங்கு அதிகம்.

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 மொழிகளில், 7 மொழிகள் தெற்கு ஆசியாவை சேர்ந்தவை.

தெலுகு

ஏன் தெலுங்கு?

ஹைதராபாத் நகரத்திற்கும், அமெரிக்க பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது காரணமாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்காவில் உள்ள அரசு சாரா அமைப்பான தெலுங்கு மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரான பிரசாத் குனிசெட்டி. தொழில்நுட்ப துறையில் பணிபுரிவதற்காக 2001ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத்.

1990களின் இடையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி, மென்பொருள் பொறியளர்களின் தேவையை அதிகரித்தது.

ஹைதராபாத் நகரத்தில் இருந்து பலரும் வேலைக்காக எடுக்கப்பட்டனர். இரு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களிலும் சேர்ந்து 800 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு முக்கியமாக இடமான ஹைதராபாத்தில் இருந்து மாணவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்.

காலப் போக்கில் அமெரிக்காவில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்த மக்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்தனர்.

மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின சிஇஓ சத்ய நடெல்லா ஹைதராபாத்தில் பிறந்தவர்படத்தின் காப்புரிமை Getty Images Image caption மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின சிஇஓ சத்ய நடெல்லா ஹைதராபாத்தில் பிறந்தவர்

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் H-1B விசா பல இந்தியர்களுக்கு உதவியது. அமெரிக்காவில் பணிபுரிய சென்றதில் 70 சதவீதத்தினர் இந்தியர்கள். இந்த விசா பெற்றவர்கள், அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கும் நிலை பெறுவதற்கும் உதவியது.

முதல் இந்திய-அமெரிக்க குடிமகளாக மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நதெல்லா ஆகியோர் சற்று பிரபலமான தெலுங்கு மொழி பேசக்கூடிய நபர்கள்,

தற்போது அமெரிக்காவில் அதிகம் பேசக்கூடிய தெலுங்கு மொழி, ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.

குடிவரவு ஆய்வுகள் மையத்தின் தகவலின்படி, 2010-17க்குள் ஸ்பானிஷ், சீன மொழி, அரபு மற்றும் இந்தி மொழி பேசுபவர்களும் அதிகரித்துள்ளனர்.

தெலுகு

அமெரிக்காவின் மக்கள் தொகை 320 மில்லியனாக இருக்க, அதில் ஆங்கிலத்தை தவிர இதர மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன். இவர்களில் பெரும்பாலானோர் பரவலாக பேசக்கூடிய மொழி ஸ்பானிஷ்.

பொதுவாக பெரும்பாலும் பேசக்கூடிய தெற்காசிய மொழிகளில் முதலிடத்தில் இந்தி உள்ளது. அதனை தொடர்ந்து உருது, குஜராத்தியை அடுத்து தெலுங்கு உள்ளது.

பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல, இத்தாலி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் 2 லட்சத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

தெலுங்கு மொழி பேசுபவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 80 சதவிதத்தினர் ஆங்கிலம் நன்றாக தெரியும் என்று கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-45956687

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.