Jump to content

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்

Editorial / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0

-க. அகரன்

இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. 

பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

வடக்கு மாகாண சபை நாளையுடன் (23) நிறைவுறும் நிலையில், அதனூடாக அரசியல் பிரவேசம் செய்த பலரும், இன்று ஆளுக்கோர் அரசியல் களத்தைப் புலம்பெயர் தமிழர்களின் பலத்தோடு மாத்திரம் அமைக்க முனைந்து வருவதானது, எவ்வகையில் ஆரோக்கிமான பாதையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்வர்.

புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தில் அதிலும் குறிப்பாக தமிழர் அரசியலில், தமக்கான சாதக சூழலை ஏற்படுத்த முனையும் நிலையிலேயே, இலங்கை அரசியலின் செல்நெறியை  இந்தியா நிர்ணயித்து வருகின்றது. இது இலங்கைக்கும் சரி, போர்ப் பாதிப்புகளால் இன்னல்களைச் சந்தித்த தமிழர் தரப்புக்கும் சரி ஆரோக்கியமானதல்ல.

இந்நிலையிலேயே, நீண்ட கால அரசியல் செயற்பாட்டை கொண்டதும், தமிழர்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழரசுக் கட்சியை முதன்மையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெறுமனே நிபந்தனையற்ற ஆதரவினூடாக அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வருவதானது, எதைச் சாதிக்கப் போகிறது என்பது கேள்வியே.

இன்று, அரசியல் கைதிகளின் விடயம் பூதாகரமாகியுள்ள நிலையில், அந்த விடயத்திலும் கூட்டமைப்பு, தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறியுள்ளதுடன், காலம் கடத்தும் செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்குமப்பால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் விடயம், அரசியல் தீர்வு என்பவற்றுக்கான தீர்வைப் பெற வேண்டிய நிலையில், அரசாங்கத்துக்கான ஆதரவைக் கூட்டமைப்புத் தளர்த்திக்கொள்ள முடியுமா? எதிர்வரும் நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பாதீட்டுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவே போகின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இச்சூழலில், இந்த வருடத்தில் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் போது, இரண்டு கோடி ரூபாய் கைமாறப்பட்டது என்கிற சர்ச்சை, காலம் கடந்த நிலையில்,  அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது என்று, கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, அது நம்பிக்கை இல்லாப் பிரரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மட்டும், தனித்து வழங்கப்பட்டதல்ல. 

தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கும் பட்சத்தில், மறைமுகமான நிதிப்பங்களிப்புகள் கிடைக்கும் என்பதற்கான நல்லெண்ண வெளிப்பாடாகவே, அதைப் பார்க்கவேண்டும். எனவே, தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு உள்ள அதிருப்தியான தன்மைகளைக் கலைவதற்கு, அபிவிருத்தி என்ற தளத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

இதனால், பாதீட்டின் ஊடாக வரும் சில அபிவிருத்தி திட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனித்துச் செயற்படமுடியாது என்பது உண்மைதான். எனவே பாதீட்டுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தே தீரும் என்பது அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாள்களாக வெளிப்படுத்திவரும் கருத்துகளில் இருந்து உணரமுடிகின்றது.

இதற்கான வாய்மூல உத்தரவாதமொன்றும், ஐ. தே. கவின் முக்கியஸ்தரான எரான் விக்கிரமரட்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரால் வழங்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரொருவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். 

இவ்வாறான சூழலிலேயே, அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியில் பரந்துள்ள பல்வேறுபட்ட விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தைப் புறந்தள்ளித் தாம் செயற்படுவது, சாத்தியமற்ற செயற்பாடு என்ற கருத்தைக் கூட்டமைப்பு வெளியிடும் என்பதும் பலருக்கும் தெரிந்துள்ளது. 

இருந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தமோ, பொது அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களின் ஊடான அழுத்தங்களாலோ பாதீடு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித தாக்கத்தையும் செலுத்த முடியாது.

இந்தக் குழப்பகரமான நிலையிலேயே, வடக்கு மாகாணசபை கலைவதோடு, அடுத்த கட்டத் தேர்தலுக்கான முனைப்புகளும் தொடங்கியுள்ளன. அந்தத் தொடக்கம், வெறுமனே கருத்தியல் மோதல்களாக அன்றி, அரசியல் பிறழ்வுகள் ஏற்படும் நிலைக்கு, வழிசமைத்துள்ளமையே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வகையான  அச்சங்களைத் தோற்றுவித்துள்ளது. 

மாவை சேனாதிராஜா, அடுத்த மாகாணசபைத்தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையில், அத்தளம் நோக்கிய, அவரது முனைப்புகளில், இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாட்டை, மேடை மேடையாக விமர்சித்து வரும் நிலை காணப்படுகிறது.

இந்த இடத்தில், சில விடயங்களை ஞாபகப்படுத்தவேண்டிய தேவையும் இப்பத்திக்கு உள்ளது. அதாவது 2013 ஆம் ஆண்டு, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முனைப்புகள் ஆரம்பித்திருந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, பல அரசியல் ஆர்வலர்களும் நேரடியாகவும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும், விக்னேஸ்வரன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கான அரசியல் தலைவராக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எடுத்துரைத்திருந்த போதிலும், ‘தலைப்பாகை கட்டியவனெல்லாம் தலைவன், அவன் வாக்கு நிலையானது’ என்ற எண்ணப்பாட்டுடன் விக்னேஸ்வரனை முதலமைச்சராக நிறுத்தி, தாமே வெற்றி பெற வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஐந்து வருடங்கள் கழித்து, தமது தீர்மானத்தைப் பெரும் பாவமாக கருதுகின்றேன் என்ற கருத்து, அரசியல் ஆசையின் வெளிப்பாடா,  தமிழ் மக்களுக்கு எதையும் செய்து முடிக்காமல் போய்விட்டதே என்கின்ற வேதனையின் வெளிப்பாடா என்பது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டிய நிலைமையில் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். 

இந்நிலையில் கூட்டமைப்பின் அடுத்த தலைமை, மாவை சேனாதிராஜாவாக, மறைமுகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ. தே.கவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது என்ற அபாயச்சங்கை, செல்வம் அடைக்கலநாதன் ஊதியுள்ளார்.

இந்த அபாயச்சங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழ் மக்களால் ஊதிக்காட்டப்பட்ட போதிலும், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத நிலையிலேயே, தற்போது, செல்வம் அடைக்கலநாதனுக்கு அந்தச் சங்கை, ஊதி எச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. 

மாகாண சபையினூடாகத் தமது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய பலரும், தம்மை இன்று, நட்சத்திர  அரசியல் புள்ளிகளாக எண்ணி, கட்சிகள் ஆரம்பிக்கும் படலமும் வடக்கில் அரங்கேறத்தொடங்கியுள்ளது. 

அனந்தி சசிதரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சி ஏற்கெனவே,  தெரிவித்தது போன்று, புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடு, ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அதன் நோக்கம், அதன் மறைமுகச் செயற்பாடுகள் எதைச் சாதிக்க முனையப்போகின்றது என்பது, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் ஐயமும் கலந்த கலவையாகவே உருப்பெற்றுள்ளது. 

ஈ.பி.ஆர்.எல்.எவ்ஐ பொறுத்தவரையில், எப்போது முதலமைச்சர் புதிய கட்சியை ஆரம்பிப்பார், அதனுடன் தாமும் ஒட்டிப் பயணிக்க எண்ணியுள்ள நிலையில், அனந்தியின் கட்சி அறிவிப்பு, பெரும் குழப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசாங்கத்தில் உள்ள பலருக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்பான விடயங்களால், ஏற்படப்போகும் மாற்றங்கள் அல்லது கட்சித்தாவல்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மஹிந்தவுடன் மைத்திரி அணி கூட்டுசேர்ந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பம் கொண்டுள்ள நிலையில், ஐ. தே. க, தனது ஆட்சியை நிலை நிறுத்தவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் சிலவற்றுக்கு இணங்கி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, ஐ.தே.க முற்படும் என்பது, சந்தேகத்துக்கு இடமின்றிய நிலையில், அந்த இணக்கப்பாடு அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான பதிலை தரும் என எதிர்பார்க்க முடியாது.

வடக்கு மாகாணசபை, தனது ஆட்சியை நிறைவு செய்து கலையப்போகும் நிலையில், வடக்கு பிரதேசத்தில் செய்து முடித்த விடயங்களை உள்ளடக்கி பட்டியலொன்றை முன்வைக்கும் போது, அது தமிழ்த் தலைமைகளுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.

 எதிர்பார்ப்புகளுடன் அமைக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, இறுதியில் அதன் தவிசாளராலேயே “வீணடித்துவிட்டோம்” என்று ஆதங்கப்படும் நிலையை தோற்றுவித்துள்ளதெனில் தமிழ்த் தலைமைகளின் ஆளுமையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவே உணரவைத்துள்ளது. 

யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து, மீள கட்டியெழும்ப வேண்டிய இனத்தின் ஒரு தளம், ஆரோக்கியமற்றதாகக் காணப்படும் நிலையில், அதை முண்டு கொடுத்து நிமிர்த்தவேண்டிய தமிழ்த் தலைமைகள், தமக்குச் சாதகமாகத் தப்பித்துக்கொண்டமையும் அத்தருணத்திலேயே பெரும்பான்மையின ஆட்சி அதிகாரத்துக்கு முண்டுகொடுத்து அதைக் காத்துவருவதும் எவ்வகையில் ஏற்பது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்துள்ளது.

எனவே, இவ்வாறான அரசியல் தலைமைகளுக்கு மாறாக மாற்றுத் தலைமையொன்றின் தேவை தமிழர் தரப்பில் உணரப்பட்டாலும் கூட, அது தற்போது கட்சி ஆரம்பிக்கும் தலைவர்களால் சாதிக்கமுடியுமா என்கின்ற கேள்வி நிறையவே உள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர், ப. சத்தியலிங்கம் நிகழ்வொன்றில் கருத்துரைக்கும்போது,  “சசிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பெண் செயலாளர் நாயகமாக இருக்கின்ற முதலாவது கட்சி என்கின்ற பெருமை அவருக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ அதனூடாகத் தமிழர்களுக்குப் பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே” எனத்  தெரிவித்துள்ளார்.

இந்த ஐயப்பாடு, பலருக்கு உள்ள நிலையில், வரும் மாகாணசபைத் தேர்தல், வடக்கில் கொதி நிலையை உருவாக்கும் என்பதற்கப்பால், பெரும் மோதல்களையும் உருவாக்கவும் வழிசமைக்கும்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவில் சமூகத்தின் நிலைப்பாட்டை உதாசீனம் செய்து, கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கூட்டணியுடன் கைகோர்த்து, அவமானங்களைச் சந்தித்ததோ, அதேபோன்றதான கசப்பான அனுபவத்தை, அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்காமல், பாதீட்டுத்திட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் அறிந்துகொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிலைநிறுத்தி, முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைப்பாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே, தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினூடாக அரசாங்கத்தைக் காத்துக்கொள்ளமுடியுமாக இருந்தாலும், தமிழ் மக்களின் வாக்கு என்ற தளத்தில், பாரிய சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் காரணமாக, வடக்கு மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் தமிழர் தரப்புக் கட்சிகளாகத் தம்மைப் பிரகடனப்படுத்தி உள்ளவர்களும் பிரகடனப்படுத்த முனைபவர்களும் தமக்குள் மோதுவதோடு மாத்திரமின்றி, தமது குப்பைகளைத் தாமே கிளறி ஆய்வு செய்யும் நிலையில், தேசிய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, தமிழர்களின் விருப்பு வெறுப்புகளைக் குழி தோண்டிப் புதைக்க முனையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே, எதிர்க்கால தமிழர் நிலைப்பாட்டைச் சிந்தித்து, ஓரணியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படாத வரையில், தமிழர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதென்பது, கைக்கெட்டாத நிலையாகவே போகும். அது, ‘கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக மாறும்’ என்பதைக் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, அரசியல்வாதிகள் உணரத் தலைப்பட வேண்டும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-அரசியலில்-புதிய-கட்சி-உருவாக்கமும்-தடம்மாறும்-தலைமைகளும்/91-224036

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.