Jump to content

#MeToo விவகாரத்தில் ஏன் இத்தனை கடுமை? தீர்வை நோக்கி செயல்படுவதில் என்ன சிக்கல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விஷ்ணுப்ரியா ராஜசேகர்
பிபிசி தமிழ்
 
மீ டூஉபடத்தின் காப்புரிமை Getty Images

இதை நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்? சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?

மீ டூ (#MeToo) இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்கள் முன் வைக்கப்படும் அடுத்தடுத்த கேள்விகள் இவை.

ஒரு புகாரை தெரிவிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு கேள்விகள் கேட்பது இயல்புதான். ஆனால் புகாரை தெரிவிப்பவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்கிவிடுவதாக நமது கேள்விகள் இருப்பதில் நியாயமில்லை.

மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. இது எந்த ஒரு தனிமனித தாக்குதலுக்கும் வித்திடக்கூடாது என்ற ஆதங்கம் சரிதான். ஆனால் அதே சமயம் புகார் கூறும் பெண்கள் தரப்பில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு ஒரு புகார் தெரிவித்தால் முதலில் அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை நோக்கிய கேள்விகள்? பின் நீ ஏன் அங்கு சென்றாய்? ஏன் அவ்வாறு நடந்து கொண்டாய்? அவர்கள் உன் மீது அந்தத் தாக்குதலை நடத்தும்படியாக நீ என்ன செய்தாய் என ஆயிரம் கேள்விகள்?

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஏன்முன்வரவில்லை?

சின்மயிபடத்தின் காப்புரிமை Chinmayi Sripada/Facebook

நம் வீட்டில் ஒரு பொருள் திருடு போய்விட்டது என்றால் அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதுகுறித்து வெளியில் கூறவோ தயங்குவதில்லை.

ஏனென்றால் அதில் குற்றம் செய்தவர் தண்டனைக்குரியவராகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வெளியே கூறுவதற்கான இணக்கமான சூழல் ஒன்றும் இங்கு நிலவவில்லை.

மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் அல்ல அவளது குடும்பத்தினர் முழுவதும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

அப்படியென்றால் யார் புகாருக்கு ஆளாகிறார்களோ, அவர்களுக்கு குடும்பம் இல்லையா? அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்கலாம்?

இந்த மீ டூ இயக்கத்தில் ஒரு புகார் கூறிவிட்டால் மறு தரப்பில் உள்ளவர் குற்றவாளி என்று அர்த்தமில்லை. இது முழுக்கமுழுக்க பெண்கள் தாங்கள் பேசத் தயங்கியதை தைரியமாக எடுத்துக் கூறுவதற்கான ஒரு கருவிதான்.

இத்தனை கடுமை ஏன்?

சென்னையில் சின்மயி, லீனா மணிமேகலை, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீ டூ புகார் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இருதரப்பினருக்கு பொதுவானதாக கேள்விகளை முன் வைப்பது பத்திரிகையாளர்களின் கடமைதான். ஆனால் மீ டூ போன்ற புகார்கள் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அத்தனை கடுமை காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இரண்டு தரப்பையும் நியாயமாக அணுகவேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் ஒருவர் புகார் கூறினால் அதை பொறுமையாக கேட்டு அதற்கு தீர்வு என்ன என்பதையும், இதைப் போன்ற குற்றங்கள் எதிர் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிப்பதே மீ டூ புகார்களை நாம் ஆக்கப்பூர்வமானதாக அணுகுவதாக அமையும்.

என்ன நடந்தது? எப்போது நடந்தது? இத்தனை வருடங்கள் கழித்து சொல்வது ஏன்? என திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளையே கேட்க வேண்டிய அவசியம் என்ன?

மீ டூ வை பொறுத்த வரையில் சமூக வலைத்தளங்களே முக்கிய ஊடகம். இருப்பினும் தொலைக்காட்சி போன்ற முதன்மை ஊடகங்கள் இம்மாதிரியான விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவது இருதரப்பிலும் ஏற்படும் மன உளைச்சல்களை பெருமளவு குறைக்கக்கூடும்.

பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்பதை நாம் செய்தியில் பார்த்தோ அனுபவத்தினாலோ தெரிந்து கொள்கிறோம்.

பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும்போது அவர்களின் கனவுகளுக்கு இடையூறாக பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, பணியிடங்களிலோ பாலியல் தொல்லைகளை சந்தித்தால் எவ்வளவு பெரிய கொடுமை அது?

விசாகா வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வழக்குரைஞர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள பெண்களுக்கென இம்மாதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

me too

ஹாலிவுட் தொடங்கி தற்போது இந்தியா சினிமா, தென்னிந்தியா சினிமா, தொலைக்காட்சித் துறை என அனைத்திலும் தங்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்பட்ட தொல்லைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

திரைத் துறைகளில் மட்டும் அல்ல சிறு சிறு நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும்

அதற்கு வழிகாட்டியாக ஊடகங்கள் இருக்க வேண்டும் ஆனால் அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே அது குறித்து ஏளனமாக கேள்வி கேட்பதும், புகார் கூறுபவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் சரியன்று.

புகார் கூறுபவர்களை கேலி செய்யும் விதமாக மீம்களை தயாரிப்பது என்கிற போக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.

இன்னும் சில இடங்களில் பெண்கள் நெருப்பாக இருந்தால் ஏன் மீ டூ எழுகிறது என்பது போன்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

இது பெண்களை பாராட்டுவதாக நினைத்து அவர்கள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இதுவும் பெண்ணின் நடத்தை குறித்து மறைமுகமாக எழுப்பப்படும் கேள்விதான்.

இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது பெண்கள் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்ல. எனவே இம்மாதிரியான புகார்களை அணுகுவதில் ஆண்களுக்கும் பெரும் பங்குண்டு.

மி டூபடத்தின் காப்புரிமை @TARAOBRIENILLUSTRATION

பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினால் மட்டுமே அதற்கான தீர்வை எட்ட முடியும். எனவே காலம் காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனை குறித்து இப்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்பதை நாம் வரவேற்க வேண்டும்.

மீ டூ மூலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் குற்றங்கள் அனைத்தும் குறைந்துவிடும் என்பதோ அல்லது இதனால் அனைத்துமே மாறிவிடும் என்பதோ பொருள் அல்ல. இதன்மூலம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அதை வெளிப்படையாக கூற முன் வருவார்கள்.

இம்மாதிரியான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக சித்தரிக்கப்படும் நிலை மாறும்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு தங்களின் பெயர் வெளியே வந்துவிடும் என்று தெரிந்தால் அச்சம் ஏற்படும். இது இந்த மீ டூ இயக்கத்தின் தொடக்கப்புள்ளி.

எனவே தற்போது பெரிதாக வெடித்துள்ள இந்த மீ டூ வை அழுத்தி வைக்கப் பார்க்காமல் அதன் மூலம் நாம் என்ன தீர்வை எட்டப் போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-45942044

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.