Jump to content

நடிகர்கள் அர்ஜூன், தியாகராஜன் மீது குற்றச்சாட்டு - தொடரும் பாலியல் புகார்கள் #MeToo


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Arjunபடத்தின் காப்புரிமை Facebook/Twitter

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்'

நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் 'மீ டூ' இயக்கத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படப்பிடிப்பில் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார்." என்கிறது அந்நாளிதழ்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்ந நடிகை, "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நான் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதிநேர அடிப்படையில் நடித்தனர். அந்த காட்சியில் மாணவிகள் குழுவாக சேர்ந்து நடித்தனர். அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார்.

மேலும் அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்." என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

மறுப்பு

பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்றும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் கூறினர் என்கிறது அந்நாளிதழின் மற்றொரு செய்தி.

நடிகர் அர்ஜூன் பெண்களை மிகவும் மதிப்பவர். அவரிடம் இருந்து சுருதி ஹரிகரன் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அர்ஜூன் மீது அவர் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும். அவரை பற்றி தென்இந்திய சினிமா உலகிற்கு தெரியும். இந்த துன்புறுத்தல் நடந்தபோதே அவர் இதை பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும் என்று அர்ஜூனின் மனைவி ஆஷா ராணி, மகள் ஐஸ்வர்யா கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

அதுபோல, நடிகர் தியாகராஜன் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது தினமலர் நாளிதழ்.

Presentational grey line MeToo Presentational grey line

அடுத்த ஐஸ்வர்யா ராய் என ஆசை காட்டினார்

'அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என, ஆசை காட்டினார்' என, நடிகரும், இயக்குனருமான, தியாகராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார் என்கிறது தினமலர் நாளிதழ்.

"பிரசாந்த், கதாநாயகனாக நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், நான் புகைப்பட கலைஞராக பணிஆற்றினேன். அப்படத்தின் இயக்குனரான தியாகராஜன், 'தாய்லாந்து நாட்டு பெண்கள், எனக்கு மசாஜ் செய்தனர்; அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன்' எனக்கூறி, சில புகைப்படங்களை, என்னிடம் காட்டினார்.இதை தொடர்ந்து, நள்ளிரவில் நான் தங்கி இருந்த, அறை கதவை தட்டி பயமுறுத்தினார். இரவு முழுவதும் துாங்காமல், பயத்துடன் இருந்தேன். ஷூட்டிங்கின் போது, ஆபாசமாக பேசுவார். என்னை, 'அடுத்த ஐஸ்வர்யா ராயாக மாற்றுகிறேன்' என்றார்." என்று பிரித்திகா மேனன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார் தியாகராஜன்

https://www.bbc.com/tamil/india-45936449

Link to comment
Share on other sites

Arjun-21.jpg

பாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

 

http://muthalvan.com/பாலியல்-புகார்-5-கோடி-கேட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg?sqp=-oaymwEiCKgBEF5IWvKriq

எல்லோரும் டி. ராஜேந்தர் மாதிரி கதாநாயகியை தொடாமல் நடிக்குக .. ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.