Jump to content

‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு


Recommended Posts

‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு

ammachi-300x200.jpg

வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உணவகம்’ என்று வடக்கு மாகாண சபை வைத்திருக்கிறது.

ஏனைய எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கில் ‘அம்மாச்சி’ என்று இதற்குப் பெயர் வைத்திருக்கின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, ‘அம்மாச்சி’ என்று அந்த உணவகங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதால், தொடர்ந்தும் அதே பெயரைத் தான் வைக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.

கோண்டாவிலில் இந்த உண வகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25 ஆம் நாளுக்குப் பின்னர் வைக்கலாம்.

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கெல்லாம் “அம்மாச்சி“ என்று தான் வைக்க வேண்டும் என்றில்லை.

அவற்றை பாரம்பரிய உணவகங்கள் என்று போடலாம். அதிலும் பாரம்பரியம் மிக்க உணவகம் என்று போடுவது நல்ல பெயராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, “அம்மாச்சி உணவகம்“ என்ற பெயரை மாற்றுமாறும், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உணவகங்களுக்கு சிங்களப் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.

இந்த நெருக்கடியினால், எந்தப் பெயரும் சூட்டப்படாமல் கோண்டாவிலில் ஒரு உணவகம் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், வரும் 24ஆம் நாளுடன் முடிவடைந்த பின்னர், நிர்வாக அதிகாரம் ஆளுனரின் கையில் வரவுள்ளது.

அதன் பின்னர், அம்மாச்சி உணவகங்களின் பெயர்களை மாற்றுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், வடக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தும் வேலையை ஆளுனர் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார் என்று ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/10/22/news/33630

Link to comment
Share on other sites

அநியாயங்கள் அதிகநாள் நீடிப்பதில்லை. ஆயினும் அது விரைவில் அழிவதைக் காணமுடியவில்லையே என்பதுதான் ஆதங்கம்.  Bildergebnis für smileys+ect

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

அநியாயங்கள் அதிகநாள் நீடிப்பதில்லை. ஆயினும் அது விரைவில் அழிவதைக் காணமுடியவில்லையே என்பதுதான் ஆதங்கம்.  Bildergebnis für smileys+ect

என்ன இப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்?

மக்கள் இடையே பெயர் அடைந்து விட்ட, அம்மாச்சி பெயரை பயன் படுத்தி, யாவாரம் செய்யவும், அரச அமைப்பை மூட வைக்கவும் அருமையான வாய்பு வருகிறது தெரியவில்லையா? ??

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

என்ன இப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்?

மக்கள் இடையே பெயர் அடைந்து விட்ட, அம்மாச்சி பெயரை பயன் படுத்தி, யாவாரம் செய்யவும், அரச அமைப்பை மூட வைக்கவும் அருமையான வாய்பு வருகிறது தெரியவில்லையா? ??

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Ankajan.png?zoom=1.2100000262260437&resi

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில். உள்ள தனது இல்லத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது அம்மாச்சி தொடர்பில் தான் கூறிய கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை என குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

ஊடக சந்திப்பில் நான் எந்த ஒரு இடத்திலும் இருக்கின்ற அம்மாச்சியினுடைய பெயரினை மாற்றம் செய்யப்போவதாக சொல்லவில்லை இந்த ஊடக சந்திப்பில் எனது கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை அல்லது தெளிவாக விளங்கி கொள்ளவில்லை என்றே கருதுகின்றேன்.

ஊடகவியலாளர்கள் சூழலிற்கு வெளியேயான கருப்பொருளிற்கு சென்றுள்ளனர். மாகாண சபை முடிந்ததும் அம்மாச்சியை அழிக்கும் திட்டம் எம்மிடம் இல்லை இது மத்திய அரசின் திட்டம் என்பதனையே நான் கூறுகின்றேன். அதாவது அம்மாச்சி உணவகம் என்பது வடமாகாண சபைக்குரிய திட்டம் இல்லை இது முற்று முழுதாக மத்திய அரசினுடைய திட்டம் இதனை மாகாண அரசு மாகாண அரசினுடைய திட்டம் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர் இது எமக்கான ஒரு அவமானம் இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை ஆனால் எமது பிரதேசத்தில் அமையும் போது அது தமிழில், தமிழ் பாரம்பரியத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே தமிழர் ஒவ்வொருவரினதும் விருப்பமாகும் அதுவே எனது எதிர்பார்ப்பு. இதனை தான் நான் கூற வந்தேன்.

எனக்கு மத்திய அரசினுடைய திட்டத்தினையோ அல்லது மாகாண அரசினுடைய திட்டத்தினையோ எனது திட்டம் என மார் தட்டிக்கொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை அத்துடன் எப்பொழுதும் எனக்கு மாகாண அரசின் அதிகாரத்தை குறைக்கும் எண்ணமோ அல்லது மத்திய அரசிற்கு அதிகரித்து கொடுக்கும் எண்ணமோ என்னிடம் இல்லை என மேலும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

http://globaltamilnews.net/2018/100324/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல – தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் உயிர்ச்சொல்:

October 23, 2018

01-7.jpg?resize=800%2C533

அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர்.

அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அம்மாச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு,
வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக அவை தோற்றம்பெற்ற காலப்பகுதியில் விவசாய அமைச்சராகப் பணியாற்றியவன் என்ற வகையிலும், அம்மாச்சி என்ற பெயரை பரிந்துரைத்தவன் என்ற வகையிலும் சில தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

தென்னிலங்கையில் மத்திய விவசாயத் திணைக்களத்தினால் ‘ஹெல போஜன் சால’ என்ற பெயரில் உணவகங்கள் அமைக்கப்பட்டு அவர்களது பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் வடக்கு மாகாணசபை தோற்றம்பெற முன்னரோ அல்லது அதற்குப் பின்னர் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் 2016ஆம் ஆண்டில் அம்மாச்சி உணவகங்களை உருவாக்கும் வரையிலோ இவ்வாறான உணவகங்களை வடக்கில் உருவாக்குவதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. அவ்வாறு உருவாக்குமாறு மாகாண விவசாய அமைச்சையோ திணைக்களத்தையோ கோரவும் இல்லை. நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் இல்லை.

இந்நிலையிலேயே, தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒரு கூறாக உள்ள எமது பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கான விற்பனைக் கூடங்களை அமைப்பதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தீர்மானித்து அதற்கான பெயராக அம்மாச்சி என்ற நாமமும் சூடப்பட்டது. வெறுமனே வடக்கின் பாரம்பரிய உணவகம் என்று அழைப்பதைவிட இலகுவில் உச்சரிக்கத்தக்க, அதே நேரம் எமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பெயராக அமைந்தால் மக்கள் மத்தியில் இலகுவில் போய்ச்சேரும் என்பதன் அடிப்படையிலேயே அம்மாச்சி என்ற பெயர் தீர்மானிக்கப்பட்டது.

முதலாவது அம்மாச்சி உணவகம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டது. அதே ஆண்டில் இரண்டாவது அம்மாச்சி உணவகம் வவுனியாவிலும், மூன்றாவது அம்மாச்சி உணவகம் கிளிநொச்சியிலும், ஐந்தாவது அம்மாச்சி உணவகம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் மன்னாரிலும் திறந்துவைக்கப்பட்டன. இந்த அம்மாச்சி உணவகங்களின் உருவாக்கத்தில் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒருசதமேனும் பயன்படுத்தப்படவில்லை. வவுனியா அம்மாச்சி உணவகம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நன்கொடை நிதியிலும், ஏனைய மூன்று அம்மாச்சி உணவகங்களும் மாகாணசபைக்குரிய குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்துமே உருவாக்கப்பட்டன.

நான்காவது அம்மாச்சி உணவகம் திருநெல்வேலியில் அம்மாச்சி என்ற பெயர்ப்பலகை இல்லாமலே 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் இயங்கிவருகிறது. பின்விளைவுகள் பற்றி புரிந்துகொள்ளாத விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மத்திய விவசாயத் திணைக்களத்திடம் இருந்து இதற்கான நிதியைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, மத்திய அரசாங்கம் அம்மாச்சி என்ற பெயரைப் பயன்படுத்தாமல் ஹெ போஜன் சால என்ற பெயரையே சூட்டவேண்டும் என்று அடம்பிடித்தனர். விவசாய அமைச்சராக நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மத்திய அரசாங்கம் சாதாரண அதிர்ஸ்டலாபச் சீட்டுக்கள் தொடங்கி வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வரை கொவி செத, தன நிதானய, தருசவிய, அணங்கி, திவிநெகும, நிலமெகவர, ஹம்ரதெலிய என்று சிங்களப் பெயர்களையே தமிழில் ஒலிபெயர்த்து பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு, மத்திய அரசாங்கம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்வரை மிக நாசூக்காகச் சிங்களத் திணிப்பை மேற்கொண்டுவரும்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட உணவகம் மத்திய அரசின் நிதியூட்டலில் உருவாக்கப்பட்டதாயினும் அது மாகாணத்துக்கானதாகவும், மாகாண விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைந்திருப்பதாலும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் பிரதிநிதி என்ற வகையில் ஹெல போஜன் சால என்று பெயர் சூட்டுவதை விடாப்பிடியாக நிராகரித்தேன்.

இதன் பின்னர், வடக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் அப்போதைய மத்திய விவசாய அமைச்சர் கௌரவ துமிந்த திசநாயக்க அவர்கள் தொடர்புகொண்டு ஹெல போஜன் சால என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். கௌரவ முதலமைச்சர் அவர்கள், வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றி பிரபல்யம் ஆகிவிட்ட அம்மாச்சி என்ற பெயரை ஹெல போஜன் சால என்ற பெயராக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதை கௌரவ துமிந்த திசநாயக்க அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். மேலும், ஹெல என்பதன் தமிழ்ப்பதம் ஈழம் என்பதன் அடிப்படையில் தேவையாயின் ஈழ உணவகம் என்ற பெயரைப் பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதை அடுத்தே திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அம்மாச்சி என்ற பெயர்ப் பலகை இல்லாமலேயே திறந்துவைக்கப்பட்டது.

அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்.

பொ.ஐங்கரநேசன்,
வடக்கு மாகாணசபை உறுப்பினர்,
முன்னாள் விவசாய அமைச்சர்.

 02-6.jpg?resize=800%2C53303-4.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/100343/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவில் பால் பண்ணை பக்கம் இருக்கும் அம்மாச்சி போயிருக்கிறேன்.

வித்தியாசமான அனுபவம். வரிசையாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள், பாரம்பரிய உணவுகளை சமைக்கிறார்கள். உங்களுக்கு விருப்பமானதை வாங்கி சாப்பிட்டு, அடுத்த பிரிவு உணவை சுவைக்கலாம். நல்ல முயற்சி மட்டுமல்ல, பல பெண்கள் வருமானம் பெற வாய்ப்பு.

அசைவம் கிடையாது. 

பயித்தம் பணியாரம், குழிப் பணியாரம், களி, கஞ்சி, தோசை, சம்பல், பால் பிட்டு,  இடியப்பம், சொதி, குரக்கன் பிட்டு, குரக்கன் ரொட்டி.....

இட்லி, வடை, பால் சோறு.

அடுத்த தடவை, சிங்களப் பக்கம்  ருசிக்க போகவேண்டும்.

 

Link to comment
Share on other sites

18 minutes ago, Nathamuni said:

 பல பெண்கள் வருமானம் பெறம் வாய்ப்பு.

நாதம்ஸ் அதுமட்டுமில்ல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கே உதவிகள் வழங்கப்படுகின்றன/ இதில் போரால் பாத்திக்கப்பட்ட பெண்கள்தான் அதிகம். இங்கு நான் அடிக்கடி போவேன். நல்ல சுத்தமான ஆரோக்கியமான உணவு. ஆனால் இலையான்களுக்கும் ஏதாவது செய்தால் இதுதான் யாழின் சிறந்த உணவகம்.,

அரசியலில் இது சகஜமப்பா.

மத்திய அரசாங்கத்தின் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மாட்டம் என்று பிடிவாதம் பிடித்துவரும் மாகாணசபைக்கும் ஒரு சலாம். இந்த திட்டத்தில் இதுவரை குறைந்தது ஒரு நூறு குடும்பமாவது பிழைக்குது + பல ஆயிரக்கணக்கோருக்கு மலிவாக நல்ல உணவும் கிடைக்குது.

மிச்சம் எல்லாம் அரசியல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

நாதம்ஸ் அதுமட்டுமில்ல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கே உதவிகள் வழங்கப்படுகின்றன/ இதில் போரால் பாத்திக்கப்பட்ட பெண்கள்தான் அதிகம். இங்கு நான் அடிக்கடி போவேன். நல்ல சுத்தமான ஆரோக்கியமான உணவு. ஆனால் இலையான்களுக்கும் ஏதாவது செய்தால் இதுதான் யாழின் சிறந்த உணவகம்.,

அரசியலில் இது சகஜமப்பா.

மத்திய அரசாங்கத்தின் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மாட்டம் என்று பிடிவாதம் பிடித்துவரும் மாகாணசபைக்கும் ஒரு சலாம். இந்த திட்டத்தில் இதுவரை குறைந்தது ஒரு நூறு குடும்பமாவது பிழைக்குது + பல ஆயிரக்கணக்கோருக்கு மலிவாக நல்ல உணவும் கிடைக்குது.

மிச்சம் எல்லாம் அரசியல்.

 

சிங்களவருடனான அரசியல் வேறு... இலங்கைக்குள் வாழும் தமிழர்கள் பொருளாதாரம் வேறு என்ற சிந்தனை அடுத்து வரக்கூடிய வட கிழக்கு மாகாண அரசுகளுக்கு இருக்க வேண்டும்.

இலங்கை அரசு, ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி வருமானம் $70 மில்லியன் என புளங்காகிதம் அடைகிறது.

உண்மையில் இந்த மீன் சந்தை புலம் பெயர் தமிழர்களுக்கானது. பிரித்தானியாவில், ஆட்டு இறைச்சியில் பார்க்க தமிழ் மக்கள் மீனை கூடுதலாக அண்மைக்  காலங்களில் வாங்குகின்றனர்.

ஆனால் இதனை ஏற்றுமதி செய்பவர்கள் சிங்களவர்கள். தமிழர் பகுதியில் அடாத்தாக வாடிகள் அமைத்து பிடித்து அனுப்புகின்றனர். மறுபுறம் கேரள முதலாளிகளும் அனுப்புகின்றனர்.

ஆனால் தமிழ் பகுதி மீனவர்களோ, பெரும் படகுகளுக்கு முதல் போட வழியில்லை. நமது சிறிய படகுகளில் பிடிக்கும் மீன்கள் உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே போதுமானது என்கின்றனர்.

மிகப் பெரும் கடல் வளம் கொண்ட தமிழ் பகுதிகளின் மாகாண அரசுகள், சிறந்த முறையில் இயங்கி, இந்த கடலுணவு சந்தையை ஒருங்கமைக்க வேண்டும்.

கிரிகெட் வீரர் சங்கக்கார, கருணா அம்மான் போன்றோர் றால் பண்ணை வைத்து இருக்கிறார்கள். வடக்கே ஒன்றாவது இருக்கிறதா?

இதோ பலாலி விமான நிலையம் திறக்க போகின்றனர். இந்திய பயணிகள் யாழ்ப்பாணம் வருவார்கள். நல்லூர், நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பார்க்க வருவார்கள். யாழ் கோட்டை, ஊர்காவற்றுறை கடல் கோட்டை போன்ற பல இடங்கள் புகழ் பெறும்.

என்ன திட்டம் உள்ளது?

Link to comment
Share on other sites

15 hours ago, பிழம்பு said:

மாகாண சபை முடிந்ததும் அம்மாச்சியை அழிக்கும் திட்டம் எம்மிடம் இல்லை இது மத்திய அரசின் திட்டம் என்பதனையே நான் கூறுகின்றேன். அதாவது அம்மாச்சி உணவகம் என்பது வடமாகாண சபைக்குரிய திட்டம் இல்லை

வடமாகாணத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் வடமாகாண சபையால் தானே நிறுவப்பட்டவை.

நாமல் ராஜபக்ச போன்ற காடையர்களுடன் சேர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்த அங்கஜன் போன்ற அடிவருடிகள் தங்கள் விசுவாசத்தை காட்ட இது மத்திய அரசின் திட்டம் என்று பொய்களை அவிழ்த்துவிடலாம்.

இது உண்மையில் மக்களின் திட்டம். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இடையில் காடையர்கள் வந்து இது மத்திய அரசின் திட்டம் என்று பொய்களை சொல்லி பிழைப்பு நடத்துவது எடுபடா.

வடமாகாணத்தில் வாள்வெட்டுக்கும்பல்கள், கஞ்சா கடத்தல், சமூகவிரோத செயல்கள் போன்றவை  அங்கஜன் போன்ற காடையர்கள் அமைச்சர்களாக இருக்கும் மத்திய அரசின் திட்டம் என்று சொல்லலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, அபராஜிதன் said:

வடமாகாண சபையின் ஒரே ஒரு வெற்றி கரமான திட்ட்மென சொல்லலாம்

வட மாகாண அரசு திட்டமா?

அப்படி தெரியவில்லை. இது சந்திரிகாவின் திட்டம்...

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப் பட்டு சந்திரிகாவினால் முன்னெடுக்க பட்டு, அந்தந்த மாகாண அரசுகளிடம் கையளிக்கப் பட்டது .

தமிழ் பிரதேசங்களில் சிங்கள பெயர் சரி வராது என்பதால் அம்மாச்சி பெயர் வந்தது. இந்த திரியின் தலைப்பே அதுதானே. சிங்கள பெயரை  பயன் படுத்த முனைகிறார்கள்.

இந்த வவுனியா அம்மாச்சி கடை போர்டு சொல்கிறது... இது EU-Sri Lanka பெண்களுக்காண ப்ராஜெக்ட் என.

large_Vu.png.b72fab2c2a1c3142656645ad906a89e7.png

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

வட மாகாண அரசு திட்டமா?

அப்படி தெரியவில்லை. இது சந்திரிகாவின் திட்டம்...

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப் பட்டு சந்திரிகாவினால் முன்னெடுக்க பட்டு, அந்தந்த மாகாண அரசுகளிடம் கையளிக்கப் பட்டது .

தமிழ் பிரதேசங்களில் சிங்கள பெயர் சரி வராது என்பதால் அம்மாச்சி பெயர் வந்தது. இந்த திரியின் தலைப்பே அதுதானே. சிங்கள பெயரை  பயன் படுத்த முனைகிறார்கள்.

இந்த வவுனியா அம்மாச்சி கடை போர்டு சொல்கிறது... இது EU-Sri Lanka பெண்களுக்காண ப்ராஜெக்ட் என.

large_Vu.png.b72fab2c2a1c3142656645ad906a89e7.png

இல்ல தல 

இது ஐங்கரநேசன் அவர்களனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என நினைக்கிறேன், தமிழகத்தின் அம்மா உணவகம் திட்டத்தை அப்படியே கொப்பி பண்ணி ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

சிங்களவருடனான அரசியல் வேறு... இலங்கைக்குள் வாழும் தமிழர்கள் பொருளாதாரம் வேறு என்ற சிந்தனை அடுத்து வரக்கூடிய வட கிழக்கு மாகாண அரசுகளுக்கு இருக்க வேண்டும்.

இலங்கை அரசு, ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி வருமானம் $70 மில்லியன் என புளங்காகிதம் அடைகிறது.

உண்மையில் இந்த மீன் சந்தை புலம் பெயர் தமிழர்களுக்கானது. பிரித்தானியாவில், ஆட்டு இறைச்சியில் பார்க்க தமிழ் மக்கள் மீனை கூடுதலாக அண்மைக்  காலங்களில் வாங்குகின்றனர்.

ஆனால் இதனை ஏற்றுமதி செய்பவர்கள் சிங்களவர்கள். தமிழர் பகுதியில் அடாத்தாக வாடிகள் அமைத்து பிடித்து அனுப்புகின்றனர். மறுபுறம் கேரள முதலாளிகளும் அனுப்புகின்றனர்.

ஆனால் தமிழ் பகுதி மீனவர்களோ, பெரும் படகுகளுக்கு முதல் போட வழியில்லை. நமது சிறிய படகுகளில் பிடிக்கும் மீன்கள் உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே போதுமானது என்கின்றனர்.

மிகப் பெரும் கடல் வளம் கொண்ட தமிழ் பகுதிகளின் மாகாண அரசுகள், சிறந்த முறையில் இயங்கி, இந்த கடலுணவு சந்தையை ஒருங்கமைக்க வேண்டும்.

கிரிகெட் வீரர் சங்கக்கார, கருணா அம்மான் போன்றோர் றால் பண்ணை வைத்து இருக்கிறார்கள். வடக்கே ஒன்றாவது இருக்கிறதா?

இதோ பலாலி விமான நிலையம் திறக்க போகின்றனர். இந்திய பயணிகள் யாழ்ப்பாணம் வருவார்கள். நல்லூர், நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பார்க்க வருவார்கள். யாழ் கோட்டை, ஊர்காவற்றுறை கடல் கோட்டை போன்ற பல இடங்கள் புகழ் பெறும்.

என்ன திட்டம் உள்ளது?

நன்றி நாதம்ஸ் / இதைத்தான் நானும் இங்கு அடிக்கடி எழுதி துரோகிப்பட்டம் வாங்கினேன் 

புரிவுக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

வடமாகாணத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் வடமாகாண சபையால் தானே நிறுவப்பட்டவை.

நாமல் ராஜபக்ச போன்ற காடையர்களுடன் சேர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்த அங்கஜன் போன்ற அடிவருடிகள் தங்கள் விசுவாசத்தை காட்ட இது மத்திய அரசின் திட்டம் என்று பொய்களை அவிழ்த்துவிடலாம்.

இது உண்மையில் மக்களின் திட்டம். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இடையில் காடையர்கள் வந்து இது மத்திய அரசின் திட்டம் என்று பொய்களை சொல்லி பிழைப்பு நடத்துவது எடுபடா.

வடமாகாணத்தில் வாள்வெட்டுக்கும்பல்கள், கஞ்சா கடத்தல், சமூகவிரோத செயல்கள் போன்றவை  அங்கஜன் போன்ற காடையர்கள் அமைச்சர்களாக இருக்கும் மத்திய அரசின் திட்டம் என்று சொல்லலாமே!

ஐயோ ஐயோ இந்தாள் வேற நித்திரையால் எழும்பி வந்து சீதை ராமனுக்கு அம்மம்மாதானே எண்டு அடம் பிடிக்குது 

சரி அத்தையாவே இருக்கட்டும் - ராமாயணம் நல்லாத்தானே இருக்குது 

 

3 hours ago, அபராஜிதன் said:

வடமாகாண சபையின் ஒரே ஒரு வெற்றி கரமான திட்ட்மென சொல்லலாம்

நீங்களுமா 

விக்கியர் வேற திருநெல்வேலியில் உள்ள கடை திறப்புவிழாவை வேற பகிஷ்கரித்தவர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

இல்ல தல 

இது ஐங்கரநேசன் அவர்களனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என நினைக்கிறேன், தமிழகத்தின் அம்மா உணவகம் திட்டத்தை அப்படியே கொப்பி பண்ணி ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என நினைக்கிறேன்

நீங்கள் சொல்வது சரிதான்.

இந்த திட்டத்தினை சிங்கள பகுதிக்கு கொண்டு சென்று, சந்திரிகா தலைமையில் முன்னெடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நிதியுடன் வேறு பெயரில் வந்தது. அந்த சிங்கள பெயரை அம்மாச்சிக்கு வைக்க முயல்கின்றனர் என தெரிகிறது.

வடக்கு மாகாண சபை­யி­ன் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ருவை வரவேற்றுள்ளார் நிதியமைச்சர்!

Published by tamilavan @ November 10, 2017 3:11 pm

வடக்கு மாகாண சபை­யி­னால் முன்­னெ­டுக்­கப்­படும் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ருவை நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர வரவேற்றள்ளார்.

அத்திட்டத்தின் மேம்மபாட்டிற்காக 25 மில்­லி­யன் ரூபாவினை ஒதுக்­கீடு செய்­வ­தா­கவும் தெரிவித்துள்ளார்.

“போரி­னால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை குறித்த வியா­பார நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு வச­தி­ய­ளிக்­கும் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ரு­வை மெச்­சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் குறித்த இந்த முயற்­சி­க்கு தா மேலும் ஆத­ர­வ­ளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனின் என்னக் கருவில் உருவானதே “அம்மாச்சி” திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

கனவு நனவாகின்றது! முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

 
 
 
வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வட மாகாணசபையின் கனவு நனவாகின்ற ஒரு நல்ல நாள் இன்று என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

mqdefault-720x450.jpgவடமாகாணத்தில் முதன் முதலாக சுற்றுலாப் பயணத்துறை பணியகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“2013ல் வடமாகாணசபை தனது நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து வட பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவாவில் உரிய முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்த போதும் இதற்குரிய நியதிச்சட்டம் தயாரித்தல், உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பற்பல தடங்கல்களால் இதுவரை காலமும் இந்த சுற்றுலாத்துறைப் பணியகம் எம்மால் அமைக்கப்பட முடியாது போயிற்று.

நீண்ட காலப்போருக்குப் பிந்திய வளர்ச்சிப் பாதையில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கை வகிக்கக்கூடியது. வட மாகாணத்தில் பல சுற்றுலா மையங்கள் இயற்கை வளங்களுடன் கூடியதாக அமைந்துள்ள போதும் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கும் சுற்றுலா மையங்களாக மாற்றி அமைப்பதற்கும் இதுவரை காலமும் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் இனி தீர்க்கப்படுவன.

கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு முழுமையான பங்களிப்புக்களை எம்மால் வழங்க முடியாமல் போன போதும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவற்றிலும் சில குறைபாடுகள் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வன்னேரிக்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்று புனரமைப்புச் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக தயார் நிலையில் உள்ள போதும் இப் பகுதிக்கு செல்லும் முருகண்டியில் இருந்து வன்னேரிக்குளம் வரையான பாதை குன்றும் குழிகளுமாக காணப்படுகின்றதால் இதன் பயன்பாடு பூச்சிய நிலையிலேயே உள்ளது.

எனவே சுற்றுலா மையங்கள் புனரமைப்புச் செய்யப்படும் போது இலகுவில் அந்த இடத்தை சென்றடையக்கூடிய வழிவகைகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு முக்கிய கட்டமைப்புக்களையும் நாம் அமைக்க வேண்டும்.

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலா அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இப் பகுதி மக்களின் நன்மைகளையும் வாழ்வாதார முன்னேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் வட பகுதிக்கான கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பிறழ்வு அடையா வண்ணம் எமது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மத்திய அரசும் அதன் முகவர்களும் எமது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் மிகக் கவனமாக உற்று நோக்கிய வண்ணம் உள்ளனர் போல் தெரிகிறது.

வட மாகாணசபையால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளில் மத்திய அரசும் இடைச்செருகல்களை ஏற்படுத்தி எமது திட்டங்களைத் தாம் வளைத்துப் போட கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது.

இதற்கான மிகச்சிறிய உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன். எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே“அம்மாச்சி உணவகம்”.

அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.

அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது.

புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது.

எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம் இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம்.

ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் உங்கள் சுற்றுலாத்துறைப் பணிகளை முன்னெடுக்கும் போது உங்களுக்கு பலவிதமான அழுத்தங்களையும் இடர்பாடுகளையும் தருவதற்கு வனத்துறை, நில அளவைத்திணைக்களம், கனியவளத் திணைக்களம், கடலோரப்பாதுகாப்பு சபை, வனவிலங்குப் பாதுகாப்பு துறை என பல துறைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

இத் திணைக்களங்கள், அமைப்புக்களின் உள் நுழைவுகள் இன்றி எமது முன்னெடுப்புக்கள் சீரிய பாதையில் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

சுற்றுலாத்துறை விரிவாக்கத்தின் போது இயற்கை சார்ந்த சுற்றுலா மையங்களை விருத்தி செய்வதுடன் எமது பகுதிகளில் காணப்படக்கூடிய பனை மற்றும் தென்னைகளில் இருந்து பெறக்கூடிய பொருட்கள், கடல் வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தலாம்.

பனை வளங்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகிய கைவண்ணப்பொருட்கள் மற்றும் வட பகுதியின் கலை நயத்தை எடுத்தியம்பக்கூடிய ஓவியங்கள், அலங்காரங்கள் போன்றவையும் விற்பனைக்காக சேர்த்துக் கொள்ளப்படலாம்.

சுற்றுலா மையங்களின் பாதுகாப்புக்கள் தொடர்பிலும் நாம் கூடுதலான கவனங்கள் எடுக்க வேண்டும். அண்மையில் கூட வெளிநாட்டில் இருந்துவந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மோசமாகக் கையாளப்பட்ட சம்பவம் ஒன்று பத்திரிகையில் பார்த்ததாக ஞாபகம்.

எனவே சுற்றுலாத்துறை விரிவாக்கம் செய்யப்படும் அதே தருணத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

வடமாகாணத்தின் யாழ்குடா நாட்டுப்பகுதி மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதுடன் நிறைந்த கடல் உணவு வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம்.

எனவே இவ் வளங்கள் எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கே பயன்பட வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழியவளைப்பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கு 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பாரை மீன்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனால் ஒரே இரவில் அந்த மீனவர் கோடீஸ்வரராக மாறிவிட்டார் எனவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு ஒரு வாரம் கடக்க முன்னரே அப் பகுதியில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு இடம் பெற்றது என்று அறிகின்றேன். அவர்களுடன் எமது மீனவர்களும் பொதுமக்களும் அரசியற் தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு நிலை ஏற்பட்டுள்ளது.

எமது ஒவ்வொரு அசைவுக்கும் பிறர்தரப்பில் இருந்து பல முனைத் தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் முயற்சி வடிவிலும்வந்து கொண்டிருப்பதாக நாம் உணர்கின்றோம்.

எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் ஆகிய அனைத்தையும் சீரழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விடயங்கள் பற்றி இச்சபையில் நான் கூறுவதன் நோக்கம் உங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது ஏற்படக் கூடிய இடர்களையும் மற்றும் தடைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே.

இன்றைய இந்த இயக்குநர் சபையின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் அனைவரும் சிறந்த கல்விமான்களாக, சமூகத்தில் உயர் நிலையில் காணப்படக்கூடிய அங்கத்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக சமூக வளர்ச்சியிலும் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு உள்ளவர்களாகவும் காணப்படுகின்றீர்கள்.

ஆகவே உங்களால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் வட மாகாணசபையின் வளர்ச்சிக்கும் இப் பகுதியில் உள்ள மக்களின் மேம்பாட்டை மையப்படுத்துவதற்கும் ஏற்றவாறு இருக்கும் என்று நம்புகின்றேன்.

எனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் உங்களுக்குத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்” என குறிப்பிட்டார்.

http://www.netrigun.com/2018/06/08/கனவு-நனவாகின்றது-முதலமை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் இலையான்களுக்கும் ஏதாவது செய்தால் இதுதான் யாழின் சிறந்த உணவகம்.,

இலையான்களுக்கு நுளம்புகளுக்கும் ஒன்றும் செய்ய இயலாது அடிக்க அடிக்க வரும் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலையான்களுக்கு நுளம்புகளுக்கும் ஒன்றும் செய்ய இயலாது அடிக்க அடிக்க வரும் :grin:

FKFK50.JPG

இது ஐரோப்பிய இறைச்சிக் கடைகளில் வைத்திருப்பார்கள்.

ஏன் இன்னும் அங்கு வரவில்லை என தெரியவில்லை. நாலைந்து வைத்தால் போதுமே.

Fly Killer 
2 x 18w - 120sq m Coverage
 
Manrose
  • Energy efficient UV-A Lamp
  • The FK150 consumes 41.5W with a coverage of 120m²
  • Made from crack, fade, scratch and oil resistant high quality aluminium
  • Multiple mounting options of wall, suspended or free standing
  • It also comes complete with a large removable collection tray for easy cleaning
  • Prewired and fitted with a 3 pin plug
  • Approved to EN60335-2-59 CE/GS/ROHS/REACH/PAH (TUV)
  • Power: 2x18w
  • Coverage: 120m²
  • Durable ABS fire proof plastic side panels
  • Large removable collection tray for easy cleaning
  • High quality aluminium, easy to clean. Crack, fade, scratch and oil resistant
  • Full protected outer mesh
  • Energy efficient UV-A lamp
  • Wall mountable, suspending or free standing
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலையான்களுக்கு நுளம்புகளுக்கும் ஒன்றும் செய்ய இயலாது அடிக்க அடிக்க வரும் :grin:

இலையானை ஒருகையாலை விசுக்கி விசுக்கி கலைஞ்சுக்கொண்டு மற்றக்கையாலை அள்ளிச்சாப்பிடுறதிலையும் ஒரு  சுகம் இருக்கு கண்டியளோ..:cool:

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

வட மாகாண அரசு திட்டமா?

அப்படி தெரியவில்லை. இது சந்திரிகாவின் திட்டம்...

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப் பட்டு சந்திரிகாவினால் முன்னெடுக்க பட்டு, அந்தந்த மாகாண அரசுகளிடம் கையளிக்கப் பட்டது .

தமிழ் பிரதேசங்களில் சிங்கள பெயர் சரி வராது என்பதால் அம்மாச்சி பெயர் வந்தது. இந்த திரியின் தலைப்பே அதுதானே. சிங்கள பெயரை  பயன் படுத்த முனைகிறார்கள்.

இந்த வவுனியா அம்மாச்சி கடை போர்டு சொல்கிறது... இது EU-Sri Lanka பெண்களுக்காண ப்ராஜெக்ட் என.

large_Vu.png.b72fab2c2a1c3142656645ad906a89e7.png

 

9 hours ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது சரிதான்.

இந்த திட்டத்தினை சிங்கள பகுதிக்கு கொண்டு சென்று, சந்திரிகா தலைமையில் முன்னெடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நிதியுடன் வேறு பெயரில் வந்தது. அந்த சிங்கள பெயரை அம்மாச்சிக்கு வைக்க முயல்கின்றனர் என தெரிகிறது.

வடக்கு மாகாண சபை­யி­ன் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ருவை வரவேற்றுள்ளார் நிதியமைச்சர்!

Published by tamilavan @ November 10, 2017 3:11 pm

வடக்கு மாகாண சபை­யி­னால் முன்­னெ­டுக்­கப்­படும் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ருவை நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர வரவேற்றள்ளார்.

அத்திட்டத்தின் மேம்மபாட்டிற்காக 25 மில்­லி­யன் ரூபாவினை ஒதுக்­கீடு செய்­வ­தா­கவும் தெரிவித்துள்ளார்.

“போரி­னால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை குறித்த வியா­பார நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு வச­தி­ய­ளிக்­கும் ‘அம்­மாச்சி’ எண்­ணக்­க­ரு­வை மெச்­சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் குறித்த இந்த முயற்­சி­க்கு தா மேலும் ஆத­ர­வ­ளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனின் என்னக் கருவில் உருவானதே “அம்மாச்சி” திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

11 hours ago, ஜீவன் சிவா said:

ஐயோ ஐயோ இந்தாள் வேற நித்திரையால் எழும்பி வந்து சீதை ராமனுக்கு அம்மம்மாதானே எண்டு அடம் பிடிக்குது 

சரி அத்தையாவே இருக்கட்டும் - ராமாயணம் நல்லாத்தானே இருக்குது 

 

நீங்களுமா 

விக்கியர் வேற திருநெல்வேலியில் உள்ள கடை திறப்புவிழாவை வேற பகிஷ்கரித்தவர் 

 

நினைவில் இருந்தே எழுதினேன், தகவல்களில் பிழைகள் இருக்க சாத்தியமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இது ஐரோப்பிய இறைச்சிக் கடைகளில் வைத்திருப்பார்கள்.

ஏன் இன்னும் அங்கு வரவில்லை என தெரியவில்லை. நாலைந்து வைத்தால் போதுமே.

ஐரோப்பிய கொசுக்களுக்கு உள்ள போனால் கரண்ட் அடித்துவிடும் என்று தெரியும் போல வராது இலங்கை கொசுக்கள் இலையான்கள்  கரண்டு நெருப்பு இதுகளுக்குள்ளால கடந்து செல்லும் கண்டியளோ

 

அந்தளவுக்கு இலங்கையின் வட கிழக்கு வளர்ச்சியடைவில்லையே 

4 hours ago, குமாரசாமி said:

இலையானை ஒருகையாலை விசுக்கி விசுக்கி கலைஞ்சுக்கொண்டு மற்றக்கையாலை அள்ளிச்சாப்பிடுறதிலையும் ஒரு  சுகம் இருக்கு கண்டியளோ..:cool:

அப்படி என்னத்ததான் கண்டியளோ ஈ கலைக்கிறத்துல :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.