Jump to content

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

IMG-9698-720x450.jpg

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார்.

அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார்.

இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர்.

இதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த கட்சியில் அனந்தி சசிதரன் உள்ளிட்ட தமிழரசு கட்சி அதிருப்தியாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/அனந்தி-சசிதரன்-தலைமையில்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

CBC6-C96-E-D2-F9-446-F-9-D88-7-F073-A7-C

ஊர்காவற்துறை நவரத்தினம் அவர்கள் ஆரம்பித்த கட்சியின் பெயர் போல உள்ள்தே?

தகர் மூளை என்று அவரை நக்கலடித்தவர்கள் ... இப்போது மீண்டும் ... அவர் வழியில்...!

வாழ்க்கை ஒரு. வட்டம் தான்!

Link to comment
Share on other sites

அனந்தி சசிதரன் அவசரப்பட்டு ஆனந்தசங்கரி போன்ற சுயநலவாதிகளை இணைத்துக் கொள்ளாமல், சிற்றம்பலம் ஐயா, விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் வழிநடத்தலில்  பொறுமையுடன் கட்சியை முன்னெடுத்து சென்றால்,  விரைவில் எட்டப்பர்களின் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி போன்றவற்றை குப்பைக்குழியில் போட்டு மூடிட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசு நல்லா கிடைக்குது போல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருப்பது முப்பது பேர் இதில் முன்னூறு கட்சிகள், நல்ல தமாசு..! :)

ஏன் இந்த சிவஞானம், சிறிதரன் மற்று அரியேந்திரன் இவர்களெல்லாம் இன்னமும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை? கூடிய சீக்கிரம் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து அழிய வாழ்த்துக்கள்.! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வெளிநாட்டு காசு நல்லா கிடைக்குது போல ?

கொடுக்கிற ஆட்களுக்கு தானே  தெரியும் ஏதும் கொடுத்ததோ ??:grin::unsure:

Link to comment
Share on other sites

22 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் இருப்பது முப்பது பேர் இதில் முன்னூறு கட்சிகள், நல்ல தமாசு..! :)

ஏன் இந்த சிவஞானம், சிறிதரன் மற்று அரியேந்திரன் இவர்களெல்லாம் இன்னமும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை? கூடிய சீக்கிரம் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து அழிய வாழ்த்துக்கள்.! :grin:

இனி அழிவதற்கு ஒன்றுமில்லை. எரிகிற வீட்டில் புடுங்கினது லாபம் அவ்வளவுதான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை புதிய கட்சிகள் உருவானாலும்  ஈழத்தமிழர்களுக்கு அளந்த அளவு அவ்வளவுதான் என்பதை முள்ளிவாக்கால் அழிவு சொல்லி விட்டது.
அதன் பின் எத்தனை வருடங்கள் சென்று விட்டது?

இன்றுவரை அழிவுகளில் கூட பிரதிபலன் கிடைக்காத இனமாக தமிழினம் இருக்கின்றது.

 ஆனந்தி சசிதரன் ஏதாவது புதிய வழிமுறைகள் இருந்தால் செய்யட்டும். வாழ்த்துக்கள் சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி சசிதரன் பிழையானவர் இல்லை. அதனால் அவர் தனக்கென்று ஒரு அரசியல் கட்சி அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக நான் நினைக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை, தமிழர் உரிமைகள் தொடர்பாகவும், அவற்றை அடையும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஒரேமாதிரியான கருத்தோட்டத்தில் இருப்பவர்கள் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் ஒருங்கிணைவதே சரியானது என்று படுகிறது.

திரு விக்னேஸ்வரன், திரு கஜேந்திரகுமார், திருமதி ஆனந்தி சசிதரன் போன்றவர்கள் ஒரு பொதுவான அமைப்பில் ஒருங்கிணைந்து பயணிப்பதே தமிழர்க்கான பலத்தைச் சேர்க்கும்.

ஆளாளுக்கு ஒரு கட்சி தொடங்கி, வாக்குகளைப் பிரித்து, சிதைந்து போவதைக் காட்டிலும் இது பரவாயில்லை.

புரிந்துகொண்டால்ச் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

IMG-9698-720x450.jpg

 

லெப்பை, பாதர், அய்யா நிக்கினம்.... ஒரு ஆமத்துறு மொட்டையையும் காணமே.

சொல்லி அனுப்பி இருந்தால் நாக விகாரை ஹெட் மொட்டை  ஆமத்துறு ஒரு எட்டு வந்திருப்பாரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.