Jump to content

55 கிமீ நீளம், 4 லட்சம் டன் இரும்பு..  கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¤à¯ à®à®£à¯à®à¯à®à®¿à®±à®¤à¯

55 கிமீ நீளம், 4 லட்சம் டன் இரும்பு..  கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை!

உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.

சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது.

அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் இந்த சாலை இடம்பிடித்து இருந்தது. அதை சரி செய்ய இந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 

நà¯à®³à®®à¯ à®à®©à¯à®©?

இந்த நிலையில் இந்த பாலம் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 22.9 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. 6.7 மீட்டர் தரையிலும், மீதமுள்ள தூரம் பேர்ல் நதி மீதும் செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது.

à®à®©à¯à®© à®à®°à¯à®®à¯à®ªà¯

இந்த பாலம் அதிக அளவு ஸ்டீல் மூலம் கட்டப்பட்டது. ஈபிள் கோபுரம் கட்ட பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 4 லட்சம் டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட எல்லா விதமான இயற்கை பேரிடர்களிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

à®à®¤à¯à®¤à®©à¯ வரà¯à®à®®à¯ à®à®à¯à®®à¯

இதில் பயணிக்க மொத்தம் 45 நிமிடம் மட்டுமே ஆகும். முன்பு பாலம் இல்லாமல் சுற்றி செல்ல 3 மணி நேரம் வரை ஆகி இருக்கிறது. இந்த பாலத்தை கட்ட 8 வருடம் ஆகியுள்ளது. 2009 டிசம்பரில் இந்த பாலத்தை கட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

à®à®¿à®±à®ªà¯à®ªà¯ à®à®©à¯à®©

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கடலுக்கு நடுவில், பாதுகாப்பிற்காக பெரிய செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த தீவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலத்திற்கு சப்போர்ட் அளிக்கப்படுகிறது. இந்த பாலம் வரும் 24ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/china-builds-the-longest-bridge-the-world-on-sea-332395.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கட்டட சாதனைகள் மிகப் பிரபலம். இடிந்துவிழும் கட்டடங்கள், கோபுரஙகள் வரிசையில் இதுவும் சேர்க்கப்படாமல் விட்டால்ச் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்

 

 

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள பெய்பான்ஜியாங் பாலமானது உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள யுனான் மற்றும் குயிஷோ மாகாணங்களுக்கு அமைந்துள்ள இந்த பாலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பெய்பான்ஜியாங் ஆற்றின் மேலாக 600 மீற்றர் ஆழத்தில் யு வடிவ பள்ளத்தாக்குகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 1341 மீற்றர் நீளமும் ஆற்றின் மேற்பரப்பிலிருந்து 565.4 மீற்றர் செங்குத்துத் தூரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

பெய்பான்ஜியாங் பள்ளத்தாக்கில் பரவியிருக்கும் இந்த பாலத்தின் அமைப்பு, கிழக்கு சீனாவின் ஷிஜியாங் மாகாணத்தில் ஹங்ஷோ நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.

குயிஷோ போக்குவரத்துக்கான மற்றுமொரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த பாலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது.

பாலத்தின் கட்டுமானத்தின் விளைவாக இரண்டு மாகாணங்களிலும் மலைப்பகுதியில் வாழும் மக்கள் வெளியே சென்று உலகை அறிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்துள்ளது.

 

http://athavannews.com/உலகின்-மிக-உயரமான-பாலமாக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்முட்டையிடும் வாத்து ஹாங்காங் பிரிட்டிஸ் இடமிருந்து விடுதலையாகின பிற்பாடு சைனா கொங்கொங்கின்  நிர்வாக கட்டமைப்புக்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தான் சொல்லும் ஆட்களைத்தான் தேர்தலில் நிறுத்தனும் என்பதுக்கு எதிராக  மாணவர் போராட்டம் நடந்தது தற்போது அது நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் முழுமையான ஜனநாயகம் எனும் போர்வையில் தன்னை விட்டு பிரிந்து போககூடாது என்பதில் சைனா இந்த பாலத்தை அமைத்ததன் மூலம் கவனமாகவே உள்ளது bbc சொல்வது போல் சைனாவுக்கு  வெள்ளையானை அல்ல இந்தப்பாலம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Image may contain: sky, water and outdoor

Image may contain: sky, ocean, outdoor and water

Image may contain: ocean, sky, outdoor, water and nature

Image may contain: sky, night, outdoor and water

Image may contain: sky, ocean, bridge, outdoor, water and nature

ஹாங்காங்கில் இருந்து சீனா வரையிலான உலகின் மிக நீளமான கடல்பாலம்  நேற்று  திறக்கப்பட்டது. 
55 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் இந்தப் பாலம் கடந்த 2016ம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்ட போதும், 
இந்த ஆண்டில் தான் அது முழுமை பெற்று திறக்கப்பட்டது. 
சுமார் 200 கோடி டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இப்பாலத்தை... 
சீன அதிபர் சீ ஜின் பிங்.... நேற்று  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

பொன்முட்டையிடும் வாத்து ஹாங்காங் பிரிட்டிஸ் இடமிருந்து விடுதலையாகின பிற்பாடு சைனா கொங்கொங்கின்  நிர்வாக கட்டமைப்புக்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தான் சொல்லும் ஆட்களைத்தான் தேர்தலில் நிறுத்தனும் என்பதுக்கு எதிராக  மாணவர் போராட்டம் நடந்தது தற்போது அது நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் முழுமையான ஜனநாயகம் எனும் போர்வையில் தன்னை விட்டு பிரிந்து போககூடாது என்பதில் சைனா இந்த பாலத்தை அமைத்ததன் மூலம் கவனமாகவே உள்ளது bbc சொல்வது போல் சைனாவுக்கு  வெள்ளையானை அல்ல இந்தப்பாலம் .

இது வேறு நாடுகளில், முக்கியமாக மேட்ற்கு ஆதரவு நாடுகளில், கட்டப்பட்டிருந்தால், bbc குறைகலின் கனதியை, பொறியியல் சாதனை, புதுமை என்று குறைத்து, பொறியியல் அடற்புதம் என்று சொன்னாலும் மிகைப்படாது என்று சொல்லியிருக்கும்.  

சீனாவின் வரலாற்றில், இப்படிப்பட்ட பொறியியல் திருப்பு முனைகள் இது முதல் தடவை அல்ல.

மொங்கோலியா படையெடுப்பை சமாளிப்பதத்திற்கு, ஓர் பெரிய ஆற்றையே அந்த நேரத்தில் எதிர் வலமாக  திருப்பி பாதையெடுக்க வைத்த வரலாறு சீனாவிடம் உண்டு. ஆற்றின் பெயரை மறந்து போய்விட்டது.   

அமெரிக்காவின் தொழிநுட்ப பாய்ச்சல், ஹிட்லரின் மற்றும் ஹிம்லர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் கொண்டெடுக்கப்பட்ட,   கண்மூடித்தனமான germanic ethnic superiority எனும் நம்பிக்கையும் அதனால் வந்த master race எனும் கொள்கையுமே பிரதான காரணமாக இருந்தது.

ஆயினும், சீனாவின் தொழில்நுட்பபம, பொறியியல், பொருளியல் வளர்ச்சி என்பது, அதனிலும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து அறிவியல் சொத்துக்களை கையகப்படுத்தினாலும் (எந்த நாடு அப்படி செய்யவில்லை?), பெரும்பாலும் சீனமக்களை சிறப்புத்தேர்ச்சியடைய வைப்பதன் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.

யதார்த்தமாக, கிந்தியாவே சீனாவை தொழில் நுட்பம், பொறியியலில் விஞ்சியிருக்க வேண்டும். ஏனெனில், கைத்தொழில் புரட்சியில் முழுமையாக திளைத்த பிரித்தானியாவே, காலனித்துவ ஆட்சி செய்தலும், கிந்தியாவின் அதிகார மையங்களோடு கொஞ்சிக்குலாவி இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.