Jump to content

அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன்

October 21, 2018

jail1.jpg?resize=1024%2C768

அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில நாட்களில் அங்கு தான் போனதாகவும் அவர்களைக் கண்டு கதைத்தபின் அடுத்தடுத்த நாளே பிரதமரை சந்தித்ததாகவும், கதைத்ததாகவும் சொன்னார். பிரதமர் எல்லாவற்றையும் கேட்டபின் பொறுங்கள் சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோரோடு பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்னாராம். சித்தார்த்தன் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். கைதிகளைத் திரும்பக் காணும்போது அவர்களுக்கு ஏதாவது ஓர் உத்திரவாதத்தை நான் வழங்க வேண்டும். அதையாவது தாருங்கள் என்று. அதற்கும் ரணில் சொன்னாராம் பொறுங்கள் நான் மேற்சொன்ன நபர்களோடு கலந்தாலோசித்த பின் அதைத் தருகிறேன் என்று.

சித்தார்த்தன் இதைக் கூறி சரியாக ஐந்து நாட்களின் பின் கடந்த புதன்கிழமை அதே போன்ற ஒரு பதிலை அரசுத்தலைவர் மைத்திரி கூட்டமைப்பின் மேல் மட்டத்திற்கு வழங்கியிருக்கிறார். அதன்படி சித்தார்த்தனுக்கு ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட அதே ஆட்களோடு கலந்தாலோசித்த பின் ஒரு தீர்மானத்தை எடுக்கலாமென்று அவர் கூறியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்படித்தான். கலந்தாலோசிப்பதை பற்றிப் பேசுவது, சந்திப்பிற்கு நாள் குறிப்பதைப் பற்றிப் பேசுவது என்றெல்லாம் பேசிப் பேசியே கைதிகளுக்கு இன்று வரையிலும் விடுதலை கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த புதன்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கலந்து கொள்ளவில்லை. அவருடைய இந்தியப் பயணத்தை முன்னிட்டு அவரால் பங்குபற்ற முடியவில்லையாம். ரணில் இல்லாத ஒரு சந்திப்பில் மைத்திரி எப்படி ஒரு தீர்வைத் தருவாரென்று சம்பந்தர் நம்பினார்? அதை நம்பி ஒரு கொழும்பு ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

கைதிகளின் விடயம் ஒரு தீர்வின்றித் தொடர்வதற்கு காரணம் என்ன? அரசாங்கத்தின் மீது போதிய அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதுதான். அவ்வழுத்தத்தை யார் பிரயோகித்திருந்திருக்க வேண்டும்? மக்களாணையைப் பெற்ற பிரதிநிதிகள் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். அல்லது கைதிகளுக்காகப் போராடும் மாணவர்களும் பொது அமைப்புக்களும் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் மீதும் அரசாங்கத்தைப் பாதுகாக்க விரும்பும் வெளித்தரப்புக்கள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க விரும்பும் எல்லாத் தரப்புக்களோடும் அரசாங்கத்தோடும் பேரம் பேசியிருந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவ்வாறான பேரம் பேசும் அரசியல் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்த்தரப்பு நெருக்கினால் அரசாங்கம் ஒரு விடயத்தைச் சொல்லும். கைதிகளை விடுதலை செய்தால் அது கடும் போக்கு இனவாதிகளைத் தூண்டுவதாக அமைந்து விடும். அவர்கள் மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்று. இதையேதான் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளும் கூறி வருகிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுத்தால் அது மகிந்தவிற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்று அவர்கள் தமிழ்த்தரப்பிற்கு புத்திமதி கூறுகிறார்கள்.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். மகிந்தவோ மைத்திரியோ இருவருமே அரசுடைய தரப்புக்கள். பெரிய இனம். வெற்றி பெற்ற தரப்பு. அரசுடைய தரப்பு என்பதால் உலகம் முழுவதிலும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளைக் கொண்ட ஒரு தரப்பு. அதே சமயம் தமிழர் தரப்போ அரசற்ற ஒரு சிறுபான்மை. தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பு. இத்தரப்பை நோக்கி அரசாங்கமும் வெளியுலகமும் என்ன கேட்கின்றன? வெற்றி பெற்ற தரப்பிலுள்ள கடும்போக்காளர்கள் பலமடையக்கூடாது என்பதற்காக தோற்கடிக்கப்பட்ட சிறிய தரப்பை விட்டுக்கொடுக்குமாறு கேட்கிறார்கள். அதாவது வென்ற தரப்பு தோல்வியுற்ற தரப்பை மேலும் விட்டுக்கொடுக்குமாறு கேட்கிறது. வென்ற தரப்பின் பிரதிநிதிகள் தமது தரப்பிலுள்ள கடும்போக்காளர்களைச் சாட்டி தோற்ற தரப்பிற்கு தரக்கூடியதை மேலும் குறைக்கவோ இல்லாமல் செய்யவோ பார்க்கிறார்கள். ஆனால் தோற்ற தரப்பின் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?

தமது தரப்பில் தமக்கு உள்ள நெருக்கடிகளை எடுத்துக்கூறி ‘மக்கள் எதிர்க்கிறார்கள், மாணவர்கள் எதிர்க்கிறார்கள் அடுத்த தேர்தல்களில் இது எம்மைத் தோற்கடித்து விடும்’ என்று சொல்லியாவது தமது கோரிக்கைகைளிலிருந்து பின்வாங்கக் கூடாது. தமது பேரத்தை தாழ்ந்து போக விடக்கூடாது. இதுதான் பேரம் பேசும் அரசியல். அவ்வாறு பேரம் பேசுவதற்கு தமிழ்த்தரப்பு தன்னை ஓர் பலப்பிரயோக மையமாகக் கருத வேண்டும், கட்டியெழுப்ப வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தேர்தல் மூலம் பெற்ற மக்கள் அதிகாரத்தை வைத்து தமிழ்த்தரப்பானது தன்னை ஒரு வலு மையமாக கட்டியெழுப்பத் தவறிவிட்டது. அது தொடர்பான அரசியல் தரிசனம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படைத் தவறுதான் கைதிகளை விடுவிக்க முடியாமைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும்.

தன்னை ஒரு பலப்பிரயோக மையமாக வலு மையமாக கருதினால்தான் அப்பலத்தைப் பிரயோகித்துப் பேரம் பேசலாம். ஆனால் அப்படி எந்தப் பேரமும் இதுவரையில் செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ‘மாணவர்களும், மக்களும் தமிழ்மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்’ என்ற ஒரு குறிப்பே உண்டு. அவர்கள் எங்களை நெருக்குகிறார்கள் என்று கூறப்படவில்லை. அப்படி நெருக்குவதால் எங்களால் இறங்கிப் போக முடியாது. எனவே வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் நாம் ஓர் இறுக்கமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கலாம். அப்படி ஒரு நெருக்குதலை அவர்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் கைதிகளும் கேட்கிறார்கள், பொது அமைப்புக்களும் கேட்கின்றன. எனவே இம்முறை வரவு – செலவுத்திட்;டத்தின் மீதான வாக்கெடுப்பை கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் களமாக கையாள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிக் கையாள்வார்களோ தெரியவில்லை. மனோ கணேசன் கூறுவது போல அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டார்களா?

மக்கள் பிரதிநிதிகள் போதியளவு அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லையென்றால் அதை வெகுசன அமைப்புக்களே முன்னெடுக்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவ்வாறான வெகுசன அமைப்புக்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கவில்லை. வெகுசனக் கிளர்ச்சிகளின் மூலம் மக்கள் அதிகாரத்தை பெற்று மக்கள் பிரதிநிதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் உலக சமூகத்தின் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கத்தக்க வளர்ச்சிகள் எதையும் தமிழ் மக்கள் மத்தியில் காண முடியவில்லை.

கைதிகளின் விவகாரம் எனப்படுவது ஒன்றல்ல. அது அதைப்போன்ற பல விவகாரங்களின் ஒரு பகுதியே. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், காணிப்பிரச்சினை, மாவலி எல் வலயப்பிரச்சினை போன்ற ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாத ஓர் ஒட்டுமொத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே கைதிகளின் போராட்டமாகும். எனவே தமிழ் வெகுசன அமைப்புக்களின் இயலாமையின் விளைவே மேற்படி தீர்வு காணப்படாத அனைத்துப் போராட்டங்களுமாகும்.

இதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். 2009 மே மாதத்திற்குப் பின் தமிழ் எதிர்ப்பை கூட்டமைப்பு போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று விமர்சிக்கும் எந்தவொரு தரப்பும் தன்னை ஒரு மாற்று எதிர்ப்பு மையமாக இன்னமும் முழுமையாகக் கட்டியெழுப்பியிருக்கவில்லை. இதைக் கோட்பாட்டு ரீதியாகச் சொன்னால் 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பானது அதற்கேயான தனித்துவமிக்க சாத்வீக வடிவத்தை கண்டுபிடித்திருக்கவில்லை. இதை சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளுமே கண்டு பிடிக்க வேண்டும். இது தொடர்பில் ஆழமாகவும் விசுவாசமாக உரையாடப்பட வேண்டும். அப்படியொரு படைப்புத்திறன் மிக்க புதிய சாத்வீக போராட்ட வடிவத்தை கண்டுபிடிப்பதன் மூலம் முழு உலகிற்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும். முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள் அதைப்போலவே முழு உலகத்தையும் திகைக்கச் செய்யும் ஒரு சாத்வீகப் போராட்ட வடிவத்தையும் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியொரு வடிவம் கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்தில்தான் கடையடைப்பும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும், நடை பயணங்களும், கவனயீர்ப்புப் போராட்டங்களும் அரசாங்கத்தையோ அல்லது உலகத்தையோ அசைக்கத் தவறிவிட்டன.

இப்படி ஒரு வெற்றிடத்தில்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஐநூறு நாட்களுக்கும் மேலாக வயதான உறவினர்கள் தெருவோரங்களில் மழையில் நனைந்தும், வெய்யிலில் காய்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். காணிகளை மீட்பதற்கான போராட்டங்கள் நீர்த்துப்போய் ஓராண்டைக் கடந்து விட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் உடல் வலிக்க நடை பயணம் போனார்கள். ஆனால் கைதிகளுக்கு இன்று வரை விடிவில்லை. எனவே கூட்டமைப்பு பலப்பிரயோக அரசியலை முன்னெடுக்குமோ இல்லையோ வெகுசன அமைப்புக்கள் அதை முன்னெடுக்கும் வளர்ச்சிக்கு வரவேண்டும். வரும் 24ம் திகதிக்குப் பின் தமிழ் மக்கள் பேரவை அப்படியொரு வளர்ச்சிக்குப் போகுமா?

போக வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்கள் தமது கூட்டுரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவே முடியாது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கைதடிச் சந்திப்பில் சித்தார்த்தனும், அவரோடு வந்திருந்த கஜதீபனும் வெகுசன அமைப்புக்களை நோக்கி பின்வரும் தொனிப்பட ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள். ‘உங்களுடைய போராட்டத்தின் உக்கிரத்தைக் கண்டு தலைவர்கள் பயப்பட வேண்டும். நாங்கள் பயப்பட வேண்டும். அரசாங்கம் பயப்பட வேண்டும். எனவே நீங்கள் உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள். நாங்களும் உங்களோடு வருகிறோம்.’

அது உண்மைதான். கைதிகளுக்காக மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்குமாக பெருந்திரள் வெகுசனப் போராட்டங்கள் முன்னெடுக்குமாயிருந்தால் அவை ஒரு புதிய பலப்பிரயோக அரசியலுக்கு வழி திறக்கும். மக்கள் ஆவேசமாகப் போராடும் போது தலைவர்கள் பின்னே வரவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையும் உட்பட எல்லாப் பொதுசன அமைப்புக்களும், இடதுசாரி அமைப்புக்களும் இது தொடர்பாக ஆழமாகவும், விசுவாசமாகவும் சிந்திக்க வேண்டும்.

ஆட்சி மாற்றத்தின் பின் கிடைத்த அதிகரித்த ஜனநாயக வெளியை ஈழத் தமிழர்கள் ஒரு பரிசோதனை வெளியாகப் போதியளவு பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். இந்த வெற்றுடத்துள் ஒன்று மாறி வேறொன்றாக புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பி போராட்டக்காரர்களின் மையம் சிதறடிக்கப்படுகின்றது. இதற்கு ஆகப்பிந்திய உதாரணம் மகாவலி எல் வலயம். அது ஒரு புதிய பிரச்சினையே இல்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலான ஒரு பிரச்சினை. ஏனைய போராட்டங்கள் பிசுபிசுத்துப் போன ஒரு பின்னணிக்குள் அது ஒரு புதிய விவகாரமாக மேலெழுகிறது. நீரைக் குடுத்து நிலத்தைப் பறிக்கும் ஒரு திட்டமெனப்படுவது இன ஒடுக்கு முறையின் ஒரு பகுதிதான். இப்படியாகப் புதிது புதிதாக விவகாரங்கள் மேலெழும் பொழுது போராட்டக்காரரின் கவனம் அவ்வப்போது திசை திருப்பப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் அதாவது மாவலி எல் வலயமும் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம் காணிப்பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய அனைத்தும் ஓர் ஒட்டுமொத்தப் பிரச்சினையின் வௌ;வேறு வெளிநீட்டங்கள்தான். எனவே இப்பிரச்சினைகளை ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தோடு அணுகும் ஒரு மக்கள் அமைப்பு வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வெவ்வேறு தொலை இயக்கிகளால் நடாத்தப்படும் போராட்டங்களைப் போலன்றி தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்கான ஒரு போராட்டம் அதன் ஒட்டுமொத்த வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட ஒரு மக்கள் அமைப்பு வேண்டும். அது பரந்த தமிழ்ப் பொதுப்பரப்பில் தன்னை ஓர் வலு மையமாகக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழகம், டயஸ்பொறா, தாயகம் ஆகிய மூன்று களங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு வெகுசனப் போராட்ட அமைப்பே தமிழ் மக்களை மீட்பதற்குரிய புதிய வழிகளைத் திறக்கும்.

 

http://globaltamilnews.net/2018/100058/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.