Jump to content

உயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி!

October 19, 2018

vairamuthu-.jpg?resize=600%2C450

தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து சுகவீனம் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. இவர்மீது திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.

இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து காணொளி நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரையில் உள்ள அப்போலோ வைத்தியவாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/99934/

 

Link to comment
Share on other sites

கவிஞர் வைரமுத்து விரைவில் பூரணசுகம் பெற்று தனது கலைப்பயணத்தை தொடரவேண்டும். நாங்கள் கவிஞரின் பாடல்களை ரசித்தோமே தவிர அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து ரசிக்கவில்லை. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையுமே எமக்கு தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி!

இதுவே இவர்  மீதான அபிப்பிராயத்தை  மாற்றப்போகிறது....

ஏற்கனவே குடும்ப  வாழ்வில்  தனிமையிலுள்ள  இவரது  இது போன்ற தொடர்  செய்கைகள்

இவரை  சந்தேகிக்கவே   செய்யும்

9 minutes ago, கலைஞன் said:

கவிஞர் வைரமுத்து விரைவில் பூரணசுகம் பெற்று தனது கலைப்பயணத்தை தொடரவேண்டும். நாங்கள் கவிஞரின் பாடல்களை ரசித்தோமே தவிர அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து ரசிக்கவில்லை. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையுமே எமக்கு தெரியாது. 

நீங்கள்  சொல்வது  உண்மைதான்

ஆனால் இவர் கவிஞர்  என்ற  இடத்திலிருந்து

வழி  காட்டி  என்ற நிலையை  தானாகவே  ஏற்படுத்தியிருக்கிறார்??

Link to comment
Share on other sites

கவிஞர் வைரமுத்துவும், கருனாநிதியும் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஆதலில், கருனாநிதி கடைப்பிடித்த வழிகளிலேயே வைரமுத்துவும் செல்ல முனைகிறார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.