Jump to content

அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!

DpynGclW0AAtilM.jpg

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் டுபாயில் ஆரம்பமானது.

இதில் நாணசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், பகர் சமான், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் தலா 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில், அவுஸ்ரேலியா அணி சார்பில் நதன் லயன் 4 விக்கெட்டுக்களையும், மார்னஸ் லபுஷங்கே  3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 145 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆரேன் பிஞ்ச் 39 ஓட்டங்களையும், மிட்சல் ஸ்ட்ராக் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் மொஹம்மட் அப்பாஸ் 5 விக்கட்டுக்களை வீழ்த்த, 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். தொடர்ந்து 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும், பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், 2 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில், பகர் சமான் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, அசர் அலி, 54 ஓட்டங்களுடனும், 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாதிய நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் 3 ஆம் நாளில் மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 120 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

மேலும் இதில் பாக்கிஸ்தான் அணி சார்பில் பாபர் ஆசாம் 99 ஓட்டங்களை, சர்ஃப்ராஸ் அகமட் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நாதன் லயன் 4 விக்கெட்களையும், மார்னஸ் லபுஷங்கே 2, மிட்செல் மார்ஷ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தல ஒரு விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் 3 ஆம் நாளில் 538 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்ரேலிய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

DpynGclWkAAZDHz.jpg

DpynGckX4AEbxpp.jpg

http://athavannews.com/அவுஸ்ரேலிய-அணிக்கு-இமாலய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

373 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

Dp3ZtzHWsAADFdG.jpg

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொரை 1-0 எனக் கைப்பற்றியது.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 538 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 373 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

1 விக்கெட் இழப்பிற்கு 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தினை, ஆரம்பித்த அவுஸ்ரேலிய அணி, 164 ஒட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

முன்னதாக தன் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, அவுஸ்ரேலிய அணி வெறுமனே 145 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 9 விக்கட்டினை இழந்து 400 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனால் அவுஸ்ரேலிய அணிக்கு 538 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 164 ஓட்டங்களில் சுருண்டு தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய மொஹம்மட் அப்பாஸ் போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இரு அணிகளுக்கிடையில் முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/373-ஓட்டங்களினால்-அபார-வெற்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.