Jump to content

இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல்

ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேட்டடியின் வடிவம் வருமாறு,

கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது?

அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு அறிக்கைகள் கிடைத்துள்ளன. நாங்கள் பெருமளவு விசாரணைகளை மேற்கொள்வது இந்த நாடுகளின் அமைப்பில் ஊழல்கள் காணப்படுவதை புலப்படுத்துகின்றது. 

நான் கரிசனை கொண்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த ஒரு வருடங்களில் இலங்கை குறித்தே நாங்கள் அதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் இலங்கை குறித்து 12 விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு அடுத்தபடியாக சிம்பாப்வே குறித்து அதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஊழல் என்பது திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புபட்டதாக காணப்படலாம்.இதன் காரணமாக நாங்கள் இளம் வீரர்கள் மற்றும் பெண் வீராங்கனைகள் குறித்து அதிக கவலை கொண்டுள்ளோம்.தனக்குள்ளே ஊழலை உள்ளடக்கியுள்ள அமைப்பு முறையால் இவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

தேசிய அணிக்குள் நுழையும் இளம் வீரர் ஒருவர் அதிகாரம் உள்ளவர்களால் நெருக்கடியான நிலைக்குள்ளாகும் சூழலை தடுப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டுள்ளேன்.

இளம் வீரர்கள் ஊழல்களில் ஈடுபடமாட்டோம் என எதிர்த்தால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில விளையாட முடியாத நிலையும் அதற்கு இணங்கினால் தொடர்ந்து விளையாடக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இளம் வீரர்களாகயிருந்தவேiயே ஊழலில் ஈடுபட்டவர்கள் அணிக்குள் வருவது குறித்தும் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.இவர்கள் பின்னாளில் இளம் வீரர்களை ஊழல்களில் ஈடுபடுத்தலாம்.

ஆகவே அமைப்புமுறைக்குள் காணப்படும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பான விடயம் தொடர்பானது. நான் இந்த நச்சுவட்டத்தை உடைத்து இளம் வீரர்களை காப்பாற்ற  விரும்புகின்றேன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி - சமீபத்தில் நீங்கள் இலங்கை இங்கிலாந்து வீரர்களுடன் கலந்துரையாடினீர்கள். இதற்கு விசேட காரணம் ஏதாவது உள்ளதா?

பதில்- முதலில் இது தற்போது இடம்பெறும் இங்கிலாந்து இலங்கை தொடர்பானது இல்லை. கிரிக்கெட் உலகில் தீவிரமாக ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் படங்களை நாங்கள்  வீரர்களிடம் காண்பித்தோம்.

இதன் மூலம் நாங்கள் ஊழலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளோம். நாங்கள் அவர்களின் படங்களை காண்பித்து பெயர் விபரங்களை தெரிவித்துள்ளோம். இதன் மூலம் வீரர்களிற்கு சிறந்த முறையில தகவல்களை வழங்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த நடவடிக்கை ஏற்கனவே பலனளிக்க தொடங்கியுள்ளது அணிகளிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி- ஊழலில் ஈடுபட்டுள்ள எத்தனை பேரின் தகவல்களை வழங்கினீர்கள்?

பதில்-ஆறு பேரின் தகவல்களை வழங்கினோம்,இதேவேளை 12 முதல் 20 பேரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம்

கேள்வி- அனைவரும் ஆண்களா?

பதில்- நாங்கள் காண்பித்த படத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் சில பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி- அனைவரும் உள்ளுரை சேர்ந்தவர்களா?

பதில் -இலங்கையில் இலங்கையர்களும் இந்தியர்களும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். உலகின் ஏனைய பகுதிகளில் இந்தியாவை சேர்ந்தவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

sanath_33.jpg

கேள்வி - ஆகவே உங்கள்  விசாரணைகள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவில்லையா?

பதில்- நாங்கள் பலவகையான ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.நபர்கள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.

இலங்கையில் கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட பலரை விசாரணை செய்துவருகின்றோம் -இவர்கள் கிரிக்கெட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள்.இவர்கள் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களாகவும் முன்னாள் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும்,சிரேஸ்ட அதிகாரிகளாகவும் இருக்கலாம்.

இலங்கையின் ஜனாதிபதி பிரதமருடனான சந்திப்பின்போது வீரர்கள் அதிகாரிகள் எவருடைய பெயரையாவது நீங்கள் குறிப்பிட்டீர்களா?

பதில்- குற்றச்சாட்டை சுமத்தினால் மாத்திரமே நாங்கள் பெயர் விபரங்களை வெளியிடுவோம். குற்றச்சாட்டு சுமத்தியதும் நாங்கள் அடிப்படை விபரங்களை வெளியிடுவோம்.தீர்ப்பாயத்தில் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னரே முழுமையான விபரங்களை வெளியிடுவோம்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பில் நாங்கள் எந்த பெயர் விபரங்களையும் வெளியிடவில்லை.

(பேட்டியின் தமிழ் வடிவம் வீரகேசரி இணையம் )

 

http://www.virakesari.lk/article/42677

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.