Jump to content

ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன?

October 16, 2018
42694321_515139428947878_312931773741583

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட விதம், அன்றைய தினத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது.

நடைபயணம் சென்ற பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து விட்டார்கள் என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் முடிவில்லையேல் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக மாவை சேனாதிராசா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் “மிக நுணுக்கமாக“ சரியானவை அல்ல.

 

அப்படியானால், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதன் பின்னணி என்ன? இதைப்பற்றி கடந்த சில நாட்களாக தமிழ்பக்கம் திரட்டிய தகவல்களை தருகிறோம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட நடைபயணம் கடந்த 13ம் திகதி அநுராதபுரத்தை சென்றடைந்தது. மதியளமவில் சிறைச்சாலையை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையிலேயே மாவை சேனாதிராசா அநுராதபுரத்திற்கு சென்றிருந்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் சென்றிருந்தார்.

அரசியல் கைதிகள் சார்பில் சந்திப்பிற்காக மூவர் சென்றிருந்தனர்.

மாவையே பேச்சை ஆரம்பித்துள்ளார். “இன்று அரசியல்கைதிகளின் விவகாரம் வடக்கு கிழக்கில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் பின்னால் முழு தமிழர்களும் நிற்பதை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது“ என பேச்சை ஆரம்பித்துள்ளார்.

“உங்களை சாக விட முடியாது. நாங்கள் சில முயற்சிகள் எடுக்கிறோம். அவற்றை சொல்லி, உங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைக்கவே வந்துள்ளேன்“ என முடித்தார்.

 

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே சில முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது எல்லாவற்றையும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டனர். இம்முறை தெளிவான முடிவில்லாமல் நிறுத்தப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது மாவை சேனாதிராசா- “அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக வரும் 17ம் திகதி ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு உள்ளது. பாதுகாப்பு என்ற தலைப்பிலேயே- பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக- இந்த சந்திப்பு நடக்கும். அன்று நாங்கள் அழுத்தம் கொடுப்போம். ஏற்கனவே மைத்திரியை சந்தித்து பேசிய போது உங்களை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக அந்த பேச்சு இருக்க வேண்டுமென்பதற்காகவே 17ம் திகதி அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களை நம்புங்கள். நீங்கள் உயிருடன் இருந்தால்தான் விடுவிக்கும் முயற்சியையும் எடுக்கலாம். அரசியல்கைதிகளை விடுவிக்காவிட்டால் நாங்கள் வரவு செலவு திட்டத்தையும் எதிர்க்க தயங்கமாட்டோம்“ என மாவை குறிப்பிட்டார்.

இதன்போது, அரசியல் கைதிகள் ஒரு வாக்குறுதியை கேட்டுள்ளனர். “வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருக்கிறீர்கள். சரி. அதை நீங்கள் ஒரு பகிரங்க அறிக்கையாக வெளியிட வேண்டும்“ என கேட்டனர்.

மாவை அதற்கு சம்மதித்தார்.

இதன்பின்னர் அரசியல்கைதிகள் தரப்பிலிருந்து- “சரி உங்கள் வாக்குறுதியையும் நம்பி நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இப்பொழுது கைவிடுவது பொறுத்தமற்றது. ஏனெனில் எமக்காக பல்கலைகழக மாணவர்கள் நடந்து வருகிறார்கள். எல்லோரும் ஒன்றாக வந்து கேட்டபோது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக செய்யலாம். நீங்கள் இப்போது போய், பல்கலைகழக மாணவர்களுடன் சேர்ந்து வாருஙகள்“ என கூறப்பட்டது.

“சரி நான் பல்கலைகழக மாணவர்களுடன் பேசி செய்கிறேன்“ என மாவை பதிலளித்திருந்தார்.

 

இதுதான் அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறப்பட்ட அன்று நடந்த சம்பவம்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து திரும்பிய மாவை சேனாதிராசா, வழியில் நடைபயணத்தை மேற்கொண்ட பல்கலைகழக மாணவர்களை சந்தித்தார். வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு ஓரமாக- வீதியின் மறுகரை- நின்று பார்வையிட்டு விட்டு சென்றார். டக்ளஸ் தேவானந்தாவும் இதேவிதமாக பார்வையிட்டு விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

எனினும், மாவையுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாணவர்களுடன் அநுராதபுரம் வரை சென்றிருந்தார்.

இதேவேளை, நாளை- 17ம் திகதி- நடப்பதாக குறிப்பிடப்படும் சந்திப்பு எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாதாந்தம் நடப்பது வழக்கம். பாதுகாப்பு அமைச்சின் மாதாந்த ஆலோசனை கூட்டம் நாளை, ஜனாதிபதி தலைமையில் நடக்கவுள்ளது. “பாதுகாப்பு என்ற தலைமையில், உங்கள் விவகாரங்களை ஆராயவுள்ளோம்“ என மாவை சேனாதிராசா அரசியல்கைதிகளிற்கு வாக்களித்தது, பாதுகாப்பு அமைச்சின் வழக்கமான ஆலோசனை கூட்டத்திலா? அல்லது நாளைதினமே விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறிதொரு கூட்டத்திலா என்பது தெரியவில்லை.

 

நாளை வழக்கமான பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்திலேயே அரசியல்கைதிகள் விவகாரம் ஆராயப்படவுள்ளதெனில், அரசியல் கைதிகள் விவகாரத்தில் மைத்திரிபால சிறிசேனா விசேட ஏற்பாடுகள் எதையும் செய்ய தயாராக இல்லையென்பதை புலப்படுத்தும். அரசியல் கைதிகளிற்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யவும் அவர் தயாராக இல்லையென்பது புலப்படும்.

மைத்திரிதான் அப்படியெனில், அந்த சந்திப்பு குறித்த அதீத எதிர்பார்ப்பை கூட்டமைப்பின் ஒரு சாரரும், சமூக வலைத்தளவாசிகளும் ஏற்படுத்துவது வீணாண நம்பிக்கைச்சிதைவை ஏற்படுத்துவதாக அமையாதா?

 

http://www.pagetamil.com/19298/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.