Jump to content

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக.. "றோ" புலனாய்வு அமைப்பு மீது, ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

49vUUcEj?format=jpg&name=600x314

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டபோது தாம் இதனை உறுதிப்படுத்தியபின்னர் தொடர்புகொள்வதாக கூறியபோதும் இந்தத்தகவல் அச்சுக்குப் போகும்வரையில் அவர் மீண்டும் தொடர்புகொள்ளவில்லை என ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதுடன் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தன்னைப்-படுகொலைச்-செய்ய/

Link to comment
Share on other sites

என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

 

maithri-press-1-300x200.jpgஇந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலைச் சதிக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவே இருந்தது என்று, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர், ECONOMY NEXT ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையையிட்டு தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், விசாரணைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சரைப் பார்த்து சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் அசாதாரணமான உறுதியுடன் இருந்தார் என்றும்,  தனது அரசாங்கம் மீது சிறிலங்கா அதிபர் கூறிய குற்றச்சாட்டுகளையிட்டு அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார் என்றும் அமைச்சரவை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டிய சிறிலங்கா அதிபர், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. என்று தெரிவித்த அமைச்சரவை வட்டாரம், சிறிலங்கா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அவர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதையும் வழங்காததால்,அதன் மீது அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, படுகொலைச் சதி தொடர்பான விபரங்களை வெளியிட நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பை சிறிலங்கா அதிபரின் முன்னாள் இணைப்பு அதிகாரியும், தற்போதைய மூத்த ஆலோசகருமான சிறிலால் லக்திலக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சிறிலங்கா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33518

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

 

maithri-modi-300x199.jpgதன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் சிறிசேன நேற்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியப் புலனாய்வுப் பிரிவு தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக, தனது அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தெரியாமல் இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார் என, அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம் தான். சிஐஏயின் இதுபோன்ற நடவடிக்கைகள் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்று சிறிலங்கா அதிபர் உரையாற்றியிருந்தார்.

அவர் அப்படிக் கூறியது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதிபர் செயலக ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, இதுபற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறினார். எனினும், இதுவரை அவரிடம் இருந்து  எந்தப் பதிலும் வரவில்லை.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு-, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா அதிபர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

எனினும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது சிறிலங்கா தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைப்பது இது தான் முதல்முறையல்ல. 2015 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்சவும், தனது தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சிறிலால் லக்திலகவிடம், வினவிய போது, மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக கூறினார்.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்து, கூத்தூ, தையங்கூத்தூ. 

சிலி சேனா நடிப்பதை விடுங்கள். சீனவை வடக்கில், கிழக்கில் இருத்துங்கள். உங்கள் கூத்தை ராஜாவூடு பக்காவாக ஆடுங்கள்.  

நாங்கள் உங்களுக்கு கைதட்டி, ஆரவாரிக்கிறோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  ஆளம்  தெரியாமல்  வாயை  விடுகிறார்

பாவம்

இப்பவே  அஞ்சலி  போட்டு  வைப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ‘றோ’ மீது குற்றம் சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன!!

 

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதனைத் தெரிவித்தார்.

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் றோவுக்குத் தொடர்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.

படுகொலைச் சதித் திட்ட குற்றச்சாட்டுடன், றோ தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகத் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://newuthayan.com/story/15/ஜனாதிபதி-றோ-மீது-குற்றம்-சாட்டவில்லை-ராஜித-சேனாரத்ன.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

வந்துட்டாரையா, வந்துட்டார்...

விமல் வீரவன்ச விபரத்தோட வந்திட்டார்... 

Suspect a RAW member bearing ID number RB317217/VJ: JO

சீனாக்காரன் நல்ல ஸ்பீடா போறான்யா .... இந்தியா காரன்... தடுமாறுறான் போல இருக்குதே..

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

http://www.dailymirror.lk/article/President-Sirisena-alleges-that-RAW-is-plotting-his-assassination-156981.html

http://www.dailymirror.lk/article/Suspect-a-RAW-member-bearing-ID-number-RB-VJ-JO-157013.html

http://www.dailymirror.lk/article/Rajitha-downplays-assassination-plot-on-Prez--157015.html

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை எதிர்காலக் காய் நகர்த்தல்களில் இவரைப் போட்டுத்தள்ளுவதாகவுமிருக்கலாம் என்பதற்கான ஊகத்தின் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும் இனிமேல் யார் இவரைப் போட்டுத்தள்ள நினைத்தாலும் மிகவும் சிரமமான விடையமாக இது இருக்கும்.

மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, அதே வேளை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிங்களம் தனது அரசியல் தலைமைகளைப் பாதுகாப்பதோடு சீனாவைத் தனக்கு மிக அருகில் கொண்டுவருவதற்கான காய் நகர்த்தல் 

தமிழர் விரோததேசம் இந்தியா இப்போது ஆப்பிழுத்த குரங்காக நிற்கிறது. இதைத் தமிழர்கள் வரவேற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்கு அப்பால், இலங்கை அரசு இந்த விஷயத்தினை தீவிரமாக எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

புது டெல்லி செல்லும் ரணில், இது விடயமாக ஆலோசிக்க, தனது நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திதிப்பினை ஒழுங்கு செய்ய கோரியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

http://www.dailymirror.lk/article/PM-to-discuss-with-Indians-157019.html

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை, ஒரு மனநலம் குன்றியவர், என இந்திய தூதரகம் தானாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் கைதானவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இலங்கை அரசு நேற்று பல விடயங்களை பகிரங்கப் படுத்தி இருந்தது.

இடையே, நேற்று மைத்திரி, மோடியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார் என்பது கவனிக்க தக்கது. 

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

இது விடயமாக பயங்கரவாத தடுப்பு பிரிவி DIG நலிந்த டீ சில்வா கட்டாய விடுப்பில் உள்ளதையும், IGP புண்ணிய டீ சில்வா ராஜினாமா செய்யும் அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.

*********

இன்று இந்திய தூதர் சித்து அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை கொலை செய்து போட்டு மகிந்தவை பதவியில் அமர்த்தும் பிளானாக   இருக்கும் ...பழியை புலியில் போட்டால் புலியும் உயிர்த்து விடும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்!

ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சி தொடர்பில் முழுமையான விசாரணைத் அவசியம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாட்டின் அரச தலைவரைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான தகவலை உடனடியாக நிராரிக்கப்பது முட்டாள் தனமானது, என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் மேலும் கூறுகையில், “தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் ஜனநாயக நாடுகள். இந்தியாவில் மூன்று காந்திகள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மகாத்மா காந்தி, பின் இந்திராகாந்தி, அதன் பின்னர் ராஜிவ்காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையிலும் அவ்வாறு படுகொலைகள் இடம்பெற்றன. அது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டது.

ஆனாலும் அரசியல் கொலைகளை நாம் இங்கு காணவில்லை. ஆனால் தற்போது, அரச தலைவர் ஒருவரைக் கொலைச் செய்யவுள்ளதாக தகவல் வெளியான போதிலும், அது குறித்து ஆராயாமல் அது பொய், உண்மையில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரு நாட்டில் அரச தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட போகின்றது என்றால் அது உண்மையோ பொய்யோ, அது குறித்து நீதி ஒழுங்காக செயற்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி கொலை சதி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு முன்னெடுத்து வருகின்ற நிலையில், இதற்கிடையில் பொய்யான பிரசாரங்கள் எமது சமூகத்தினரிடையே பரப்பப்ட்டு வருகின்றன.

இந்த கொலை சதி விவகாரம் உண்மையா அல்லது பொய்யா என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியமாகும்.

கொலை சதி தொடர்பில் தெரியப்படுத்திய நபரின் பின்புலம் தொடர்பில் ஆராயவோ அல்லது அவர் தொடர்பில் விமர்சனங்களையோ முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கூறிய விடயம் என்ன? அந்த விடயத்தின் தீவிரத்தன்மை தொடர்பிலே ஆராய வேண்டும்.

நீதியின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றமே அதன் உண்மை தன்மை தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்களும் எதிர் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் மாற்றுக் கருத்துக்களை கூறி இந்த விடயத்தை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.” என கூறினார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொள்ள-முயற்சி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dfgbn-1-720x450.jpg

திரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த 

அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த செயலானது வெட்கப்படவேண்டிய விடயம் என்பதுடன் மிகவும் பயங்கரமான விடயமாகும். அத்துடன் இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் இருந்துவரும் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

இந்திய புலனாய்வு அமைப்பு தன்னை கொலைசெய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவித்ததாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் இந்த தகவல்களை அமைச்சரவையில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் குறிப்பிட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் இவ்வாறு தெரிவித்தவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்திருக்கவேண்டும். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயவும் எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/திரிபுபடுத்தி-தகவல்-வழங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nalaka-1-720x450.jpg

ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­க சில்வா இன்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.

கொலை­ சதி விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பயங்கரவாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இர­க­சிய பொலிஸார் முன் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் ஆஜ­ரா­க­வில்லை.

இந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க முன்னிலையில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டது.

அந்தவகையில் நாலக சில்வாவிடம் 9 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் அவரை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொலைச்-சதி-வி/

Link to comment
Share on other sites

On 10/17/2018 at 11:08 AM, nunavilan said:

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

20 hours ago, Rajesh said:

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

Link to comment
Share on other sites

On 10/21/2018 at 11:11 AM, போல் said:

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.