Jump to content

மட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு


Recommended Posts

பற வே**, பறைச்சி என்றெல்லாம் சாதிய மற்றும் கேவலமான பிரயோகங்களுடன் நடக்கும் கிறிஸ்தவ நிகழ்வு.

இது மட்டக்களப்பில் நிகழ்ந்ததாகவும், இதை நடத்துகின்ற அந்த தரம் கெட்ட மனிதர் இயக்குநர் பாலுமகேந்திராவின் சகோதரர் என்றும், வெளிநாட்டில் இருந்து அண்மையில் தான் வந்து இந்தளவுக்கு சாதிவெறியையும் மதவெறியையும், மூட நம்பிக்கையையும் பரப்புகின்றார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வருகின்றன.

இப்படியானவற்றை எம் மண்ணில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந் நிகழ்வு தொடர்பான சரியான மற்றும் மேலதிகமான தகவல்கள் இருப்பின் பகிரவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அமைதி வேண்டித்தான்... மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள்.
ஆனால்... மேலே உள்ள காணொளியில், அந்த இளம் பெண்ணுக்கு இவர்கள் பேசும் பேச்சுக்களை பார்க்க,
இவர்கள் ஒரு மதத்  தலைவர்களாக இருப்பதற்கு  எள்ளளவும் தகுதி அற்றவர்கள்.
இப்படியான மதத்  தலைவர்களுக்கு வெளியில் வைத்து, (முதுகில்) நாலு தட்டு தட்டினால் தான்.... திருந்துவார்கள்.
அந்தப் பெண்... இனியும், அந்த வழிபாட்டு இடத்திற்கு செல்வார், என்று நான் நினைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

மன அமைதி வேண்டித்தான்... மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள்.
ஆனால்... மேலே உள்ள காணொளியில், அந்த இளம் பெண்ணுக்கு இவர்கள் பேசும் பேச்சுக்களை பார்க்க,
இவர்கள் ஒரு மதத்  தலைவர்களாக இருப்பதற்கு  எள்ளளவும் தகுதி அற்றவர்கள்.
இப்படியான மதத்  தலைவர்களுக்கு வெளியில் வைத்து, (முதுகில்) நாலு தட்டு தட்டினால் தான்.... திருந்துவார்கள்.
அந்தப் பெண்... இனியும், அந்த வழிபாட்டு இடத்திற்கு செல்வார், என்று நான் நினைக்கவில்லை. 

மத நிகழ்வு????

இது முழு செட் அப்...

பேச்சு அவயல பிடிச்ச ஆவிகள் மேல தான் விழுகுது.. அந்த மாதிரி தூசணத்தில பேசின தான் ஆவிக்கு புரியும் போல கிடக்குது....

பேச்சு வாங்கறவயல்.... கடைசில அவயல பிடிச்ச ஆவி ஓடி விடடமாதிரி நடிப்பினம்...

பிறகென்ன மிச்ச ஆக்கள்... எடுபடிவினம்... ?

********

Pariahs என்று (தமிழில் இருந்து வந்த) ஆங்கிலத்தில் சொல் இருப்பது தெரியுமா நிழலி?

ஊருக்கு ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் என்று பொருள்... (ஒரு விபரத்துக்கு சொன்னேன். இவர்கள் சொல்வதை நியாய படுத்த அல்ல)
 

Link to comment
Share on other sites

இவரை பார்த்தால் மத சம்மந்தப்பட்டவர் போல் இல்லையே, நவீன குறளிவித்தைக்காரன் போல் உள்ளது. தர்ம அடிவாங்கத் தகுந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்திலும் ஆவி இருக்கிறதென்று நம்புவோரை என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வின்சன்ட் பாலா என்று நினைக்கிறேன்...இவர் மட்டுவில் 90 களில் ஒரு கிறிஸ்தவ சபை வைத்திருந்தார் ...நல்லாய் கதைக்கத் தெரிந்தவர் ...அந்த நேரமே அங்குள்ள ஏழை மக்களை ஏமாத்தி நன்றாக உழைத்து ஒரே மகளை லண்டனில் நிறைய சீதனத்தோடு அப்பவே கட்டிக் கொடுத்தார்...நான் அங்கு இருக்கு மட்டும் அங்கே தான் இருந்தார்...பிறகு வெளிநாட்டுக்கு வந்தாரோ தெரியாது...பாலு மகேந்திராவின் சகோதரர் என்பதும் உண்மை தான் 

 

 

 


 

இப்பவும் சனம் அவரை நம்பி போகுது என்பதை நம்ப முடியாமல் உள்ளது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்திலும் இத்தனை விசர்ச் சனம் இருப்பதை நம்ப முடியவில்லை. எல்லாரும் இப்படிப் பத்திவைப் போட்டுவிட்டுப் போக அவர் தன்ர பாட்டிலை தொடர்வார். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragunathan said:

இந்தக் காலத்திலும் ஆவி இருக்கிறதென்று நம்புவோரை என்ன செய்வது ?

இந்த உலகில் எந்த நாட்டில் ஆவி, பேய்கள் இல்லையென்று நம்பாதவர்கள் இருக்கின்றார்கள்?

நவீனமும் அணு குண்டும் என ஆர்ப்பரிக்கும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இல்லாத பேய்க்கதைகளா ஆசியாவிலும் மட்டக்களப்பிலும் இருக்கின்றது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

இவர் வின்சன்ட் பாலா என்று நினைக்கிறேன்...இவர் மட்டுவில் 90 களில் ஒரு கிறிஸ்தவ சபை வைத்திருந்தார் ...நல்லாய் கதைக்கத் தெரிந்தவர் ...அந்த நேரமே அங்குள்ள ஏழை மக்களை ஏமாத்தி நன்றாக உழைத்து ஒரே மகளை லண்டனில் நிறைய சீதனத்தோடு அப்பவே கட்டிக் கொடுத்தார்...நான் அங்கு இருக்கு மட்டும் அங்கே தான் இருந்தார்...பிறகு வெளிநாட்டுக்கு வந்தாரோ தெரியாது...பாலு மகேந்திராவின் சகோதரர் என்பதும் உண்மை தான் 

 

 

 


 

இப்பவும் சனம் அவரை நம்பி போகுது என்பதை நம்ப முடியாமல் உள்ளது ?

 

நான் புளியந்தீவில் இருந்த காலங்களில் இவர்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப் பார்த்தது கிடையாது. மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை மதத்திற்குப் பின்னால் மாறடிக்கிறவர்கள் இறுதியில் கண்டது எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragunathan said:

நான் புளியந்தீவில் இருந்த காலங்களில் இவர்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப் பார்த்தது கிடையாது. மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை மதத்திற்குப் பின்னால் மாறடிக்கிறவர்கள் இறுதியில் கண்டது எதுவுமில்லை.

தற்போது இவர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக தெரிகிறது ஆனால் இவர்கள் அனைவரும் வீடு , காசு , இதர சுகங்களுக்காக மதம் மாற்றப்பட்டவர்கள்  பல வருடங்களுக்கு முன் இந்துவாக இருந்தவர்கள் இது  மட்டக்களப்பு முகத்துவாரம் செல்லும் வீதியில் அமைந்துள்ளதாக சொன்னார்கள் இன்று சென்று பார்த்தன் அங்கு நடந்ததா தெரியல வேறு இடமாக இருக்கலாம் மட்டக்களப்பில் தான் வேற ஓர் அமைவிடத்தில் நடந்திருக்கலாம் இப்படி மாறியவர்கள் வீட்டில் அருகில் இருக்கும் மற்ற மக்கள் பயப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள் எந்த நேரமும் கூச்சலும்ம் குக்குரலும் தான் இவர்கள் பொழுது போக்கு 

ஆரம்ப காலத்தில் உள்ள  கிறிஸ்த்தவர்கள் இவர்களை போல் அல்ல ஆனால் இவர்கள் நோக்கம் வறுமையை  கண்டு பிடித்து மூளை சலவை செய்து மனம் , மதம் மாற்றி விடுதல் மற்றும் விடுதலை கொடுத்தல் என்ற பதாகைகள் பேனர்கள் மட்டும் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலுமகேந்திராவின் சகோதரர்

அதே  அதட்டதல் தெரிகிறது

பெண்கள் சார்ந்து.....???

கவனம்  உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள்மேல் அவநம்பிக்கை கொண்ட சமூகம் இருக்கும் வரை இப்படியானவை வளரத்தான் செய்யும். இந்தாளை கயித்தில் தலைகீழாக தொங்கக் கட்டிவிட்டு காவோலை கொளுத்தி அந்த நெருப்பில் மிளகாய்ப் பொடியை போட்டு மக்கள் தண்டனை கொடுப்பார்களாக. மதத்தின் பெயரால் ஏமாற்றுபவர்கள் பொதுவெளியில் மக்களால் தண்டிக்கப்படவேண்டும். மதம் மனிதகுலத்தை பண்படுத்த மாத்திரமே.... எல்லா மதத்திலும் இப்படியானவர்கள் ஏராளம். பக்தி என்ற பெயரால் கண்ணை மூடிக்கொண்டு பகுத்தறிவை தொலைத்தவர்கள் அதிகமான சமூகம் நம்முடையது... இதுவும் நடக்கும் இன்னமும்  நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அதிகமானவர்கள் இளம்பெண்களாகவே பங்குபற்றி  இருக்கின்றனர் .பக்தி என்ற பெயரால் பகுத்தறிவை   தொலைத்தவர் களா ?. நவீன உலகில் போலிகள் ஏராளம்    நம்பி ஏமாறாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடையின் பின்புறத்தில் அமெரிக்கா இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் தேசியக்கொடிகள் தெரிகின்றன.
இந்துக்களை வெறிபிடித்த ஆவிக்கூட்டமாக மதமாற்றம் செய்வதற்கு சர்வதேச சதியோ?
சிங்கன் பெண்களுடன் செய்யும் அட்டகாசங்களுக்கு  MeToo இல் கோர்த்துவிட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

ஏன் அதிகமானவர்கள் இளம்பெண்களாகவே பங்குபற்றி  இருக்கின்றனர் .பக்தி என்ற பெயரால் பகுத்தறிவை   தொலைத்தவர் களா ?. நவீன உலகில் போலிகள் ஏராளம்    நம்பி ஏமாறாதீர்கள் 

வறிய குடும்பத்து பெண்கள் இலகுவாக ஏமாந்து போகிறார்கள் ஆசையென்ற மாயையில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.