Jump to content

கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்

2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத்  திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. 

அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் கூட, கூட்டமைப்பு எந்தவித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்காது, ஆதரவளித்து வந்திருக்கின்றது. இது, தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான அதிருப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது.

“மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அரசாங்கத்தின் பக்கம் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்ற தருணத்தில், 16 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு, பாதீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அதைத் தோற்கடித்துவிட முடியாது. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின்னர், தோற்றுவித்த புதிய அரசாங்கத்தை, நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே இருக்கும். அது, நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் தடுப்பதாகிவிடும்” என்கிற நிலைப்பாட்டை, இரா.சம்பந்தன் அவ்வப்போது கூறி வந்திருக்கின்றார். 

அதாவது, ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது மிகப்பெரியது. அந்த அர்ப்பணிப்பின் கனதியாலேயே, நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இருக்கின்றது. 

அப்படியான கட்டத்தில், அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் கூட, தங்களுடைய தலையாய கடமை என்று, சம்பந்தன் நினைக்கிறார்; வெளிப்படுத்தியும் வருகின்றார். 

ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பதோடும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதோடும், சம்பந்தனினதும் கூட்டமைப்பினதும் பொறுப்பு முடிந்துவிட்டதா என்கிற கேள்வியை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில், தமிழ்த் தேசிய அரசியல் சூழல், எழுப்பி வருகின்றது.

ஒரு கேள்வி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவில் எழுப்பப்படுகின்றது என்றால், அந்தக் கேள்விக்கான பதில், நியாயபூர்வமானதாக வழங்கப்படவில்லை என்று அர்த்தம். 

அந்தக் கேள்வி, அரசியல் ரீதியாக எதிரிகளால் மாத்திரம் எழுப்பப்படும் ஒன்றாக இருந்தால்கூட, அதைத் தவிர்ப்பதற்கான காரணத்தை, ஒருவாறு புரிந்து கொள்ளலாம். ஆனால் கேள்வியானது, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த மக்களால், கூட்டமைப்பைத் தமது தலைமையாகத் தேர்தெடுத்த மக்களால் எழுப்பப்படுகிறது. 

அந்தக் கேள்வியை, எந்தவொரு தருணத்திலும் புறந்தள்ளிவிட்டு, தமிழர் அரசியலையோ, உரிமைகளையோ பற்றிப் பேசமுடியாது. அந்தக் கட்டத்தில், தீர்க்கமான முடிவுகளின் பக்கத்துக்குக் கூட்டமைப்பினர் நகரவேண்டி இருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம், அதிக பட்சம் இன்னும் ஆறோ ஏழோ மாதமாக இருக்கும். நவம்பரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டுத் திட்டமே, நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிப் பாதீடாகவும் இருக்கும். 

அப்படியான கட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு, கூட்டமைப்பு சாதித்த விடயங்கள், அடைவுகள் குறித்து, மீளாய்வு செய்துபார்க்க வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது. 

“ஆட்சி மாற்றத்துக்காக ஒத்துழைத்தோம்; சர்வதேசத்தோடு முரண்படாது, விடயங்களைக் கையாண்டிருக்கின்றோம்” என்கிற விடயங்கள் மாத்திரம், தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி அடைவுகளை நிறைவேற்றப் போதுமானதா என்கிற கேள்வியைக் கூட்டமைப்பு, தனக்குள்ளேயே எழுப்ப வேண்டும். அதன் தார்மீகம் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் செயற்பட வேண்டும். 

ஆட்சி மாற்றத்தால் கிடைத்த ஜனநாயக இடைவெளியும் காணி விடுவிப்பு உள்ளிட்ட சில முன்நகர்வுகளும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை தான். ஆனால், அரசாங்கமாக, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் செயற்படவில்லை என்பதுதான் தொடரும் பிரச்சினை.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளப்போவதாக, மைத்திரியும் ரணிலும் கூறிக்கொண்டார்கள். அதைச் சம்பந்தனும் தமிழ் மக்களிடம் ஒப்புவித்திருந்தார். 

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பில், புதிய அரசமைப்பு ஊடாக, குறிப்பிட்டளவான அடைவுகளை அடைந்துகொள்ள முடியுமென்று அவர் நம்பினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், 19ஆவது திருத்தச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சில விடயங்களைத் தவிர, அரசியல் தீர்மானங்களை எடுப்பது தொடர்பில், அரசாங்கம் பாரிய வெளிப்படுத்தல்களைச் செய்யவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல், மைத்திரியும் ரணிலும் தங்களைப் பலப்படுத்துவது சார்ந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.  இந்தச் சிக்கலான நிலைமையைக் கூட்டமைப்பு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரிடமும் சரியான அழுத்தத்தைப் பிரயோகித்து, விடயங்களை நகர்த்தியிருக்க வேண்டும். 

ஆனால், வழக்கமாக சம்பந்தனின் விட்டுப்பிடிக்கும் அணுகுமுறையால், நிலைமை மோசமாகி இருக்கின்றது. அரசாங்கத்தை யார் காப்பாற்றுவார்களோ இல்லையோ, கூட்டமைப்பு, அதன் வழி நிற்கும் என்கிற நிலையை, மைத்திரியும் ரணிலும் உணர்ந்து விட்டார்கள். 

அதன்பின்னர், அவர்களுக்குத் தங்களைப் பலப்படுத்துவது மாத்திரமே, பிரதான விடயமாக மாறியது. அவர்கள், மேற்கொள்ள வேண்டிய முக்கிய அரசியல் தீர்மானங்களைக் கிடப்பில்போட்டு, அதிகார அரசியலைக் கையிலெடுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள்.

புதிய அரசமைப்பு தொடர்பான நம்பிக்கையை, சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் இன்னமும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த நம்பிக்கை சார்ந்து, அவர்களுக்குள்ளேயே மிகப்பெரிய அவநம்பிக்கை உண்டு. 

புதிய அரசமைப்புக்கான காலம் கடந்துவிட்டது; வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவிட்டன என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், அதையும் மீறி, அந்த நம்பிக்கையின் பக்கத்தில் நிற்கவேண்டி இருக்கிறது. 

ஏனெனில், அரசியல் தீர்வு தொடர்பிலும், புதிய அரசமைப்புத் தொடர்பிலும், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில், கூட்டமைப்பு வழங்கிய நம்பிக்கைகள், அளவுக்கு அதிகமாகும். 

2016க்குள் தீர்வு, 2017 தீபாவளிக்குள் தீர்வு என்று, சம்பந்தன் ஒவ்வொரு முறையும் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தும் போது, அதை மிகப்பெரிய உறுதிப்பாட்டோடுதான் வெளிப்படுத்தினார்; அதையே சுமந்திரனும் வெளிப்படுத்தினார். 

ஆனால், காரணங்கள் சொல்லப்படாமலே, ஒவ்வொரு அரசியல் தீர்மானத்துக்கான வாய்ப்புகளும் காலந்தாழ்த்தப்பட்டன.  

இன்றைக்கு, தமிழ் மக்கள் மத்தியில், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் கூட்டமைப்பு மீதும் எழுந்திருக்கின்ற அதிருப்தி என்பது, இரண்டு வடிவங்களில் வருவது. 
ஒன்று, அபிவிருத்தி சார்ந்த கட்டங்களிலானது.

மற்றையது, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாது, இழுத்தடிப்புச் செய்தமை/ செய்கின்றமை சார்ந்து வருவது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசமைப்பு உள்ளிட்ட விடயங்கள், அரசியல் தீர்மானங்களின் வழி வருபவை. இந்த விடயங்கள் சார்ந்து, ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் காட்டிலும், சில முன்னேற்றகரமான நகர்வுகளை, நல்லாட்சி அரசாங்கம் செய்திருக்கின்றது. ஆனாலும், அவற்றின் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. என்பதுதான் பிரச்சினை.

“அரசியல் கைதிகள் என்று, யாரும் இல்லை” என, ஒவ்வொரு முறையும் நீதி அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் கூறுகிறார்கள். அது, மஹிந்த காலத்தில் மட்டுமல்ல, தற்காலத்திலும் தொடரவே செய்கின்றது. 

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அப்படியான நிலையில், விடயங்களைக் கையாள்வது சிக்கலானதுதான். 

குறிப்பாக, சட்டரீதியான விடயங்களையும் சேர்த்துக்கொண்டுதான், அரசியல் தீர்மானமொன்றை அரசியல் கைதிகள் விடயங்களில் எடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், அதற்கான கடப்பாட்டை, அரசாங்கம் வெளிப்படுத்தாமல், தென்னிலங்கையின் அரசியல் இழுபறிக்குள் சிக்கி, விலகியோடிக் கொண்டிருக்கின்றது. 

இப்படியான கட்டத்தில், யாரைப் பற்றியும் எந்தவித அடிப்படைச் சிந்தனைகளும் இன்றி, அல்லாடும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதோ, அதற்கு ஆதரவளிப்பதோ, கூட்டமைப்பின் தலையாய பிரச்சினையல்ல. இப்போதாவது, மக்களின் எதிர்பார்ப்பை, வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு, கூட்டமைப்புக்கு உண்டு.

இருக்கின்ற சூழலில் இருந்து, இன்னொரு மோசமான சூழலுக்குள் நகர்ந்துவிடக்கூடாது என்கிற, சம்பந்தனின் நினைப்புச் சரியானதுதான். ஆனால், எந்தவித அடைவுகளும் இன்றி, அப்படியே தேங்குவதால், யாருக்கும் பலன் இல்லை. அதுவொரு குட்டையின் நிலையை ஏற்படுத்தும். 

மாறாக, இருக்கின்ற சூழலை,இன்னும் சிறப்பாக மாற்றும் கட்டத்தை நோக்கி, ஓடும் ஆற்றலுள்ள ஆறாக, கூட்டமைப்பு மாற வேண்டும். அதுதான் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பு-குட்டையாகத்-தேங்கக்கூடாது/91-223764

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு.... இனி வயசுக்கு வந்து என்ன, வராட்டி என்ன.
தன்னுடைய தலையிலேயே... மண் அள்ளிப்  போட்டுட்டு, இப்ப முழிச்சுக்  கொண்டு நிக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.