Jump to content

புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம்

space-720x450.jpg

புதன் கிரகத்தின் இரகசியங்களை அறிவதற்கான ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக அக்கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட இவ்விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள வெப்பம் கூடிய புதன் கிரகத்துக்கு பூமியிலிருந்து ஏவப்படவுள்ளது.

புதன் கிரகத்துக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்ட இக்கிரகத்தின் மேல் BepiColombo எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

பிரெஞ்ச் கயானாவின் (French Guiana) கவுரோவில் (Kourou) அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளித்தளத்தில் இருந்து ஒக்டோபர் 20 ஆம் திகதி இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது.

இவ்விண்கலம் 5.2 பில்லியன் மைல் (8.5 பில்லியன் கி.மீ) பயணத்தை மேற்கொண்டு ஏழு ஆண்டுகளில் தனது இலக்கை அடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

space1-384x288.jpg

space2-384x288.jpg

space3-384x288.jpg

 

http://athavannews.com/புதன்-கிரகத்தின்-மர்மங்க/

Link to comment
Share on other sites

ஐரோப்பா, ஜப்பான் கூட்டணியின் புதன்கிரகம் செல்லும் விண்கலங்கள்!

 

 
 
 
 
 
 
 
 
 
00:54
04:35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 

சூரியக் குடும்பத்தில் மிகச் சிறிய மற்றும் சூரியனுக்கு மிகவும் அருகிலுள்ள புதன்கிரகத்திற்கு இரண்டு ஆய்வுக்கலன்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஐரோப்பாவும், ஜப்பானும் விண்ணியல் தொழினுட்ப ரீதியாக கூட்டாக இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த விண்கலங்கள் இன்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படவுள்ளன.

பிரான்ஸ் – கயானாவில் உள்ள கௌரோ ஏவுதளத்தில் (Kourou spaceport) இருந்து எரியானே – 5 உந்துகணையின் உதவியுடன் அனுப்பப்படும் இரண்டு ஆய்வுக்கலன்களை இவ்விரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.

பெபிகொலம்போ என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுக்கலன்கள், 7 ஆண்டுகள், 9 ட்ரில்லியன் கிலோமீற்றர்கள் விண்வௌியில் பயணித்து இலக்கை அடைந்தவுடன் தனித்தனியாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஐரோப்பாவின் “புதன் கிரகத்திற்குரிய ஆய்வுகலன்” (Mercury Planetary Orbiter) மற்றும் ஜப்பானின் “புதன் காந்தசுழல் ஆய்வுக்கலன்” (Mercury Magnetospheric Orbiter) என்பன தமது பணிகளை சிறப்பாக ஆரம்பிக்கும் பட்சத்தில் புதன் பற்றியும் எமது சூரிய மண்டலத்தில் உள்ள ஏனைய கிரகங்களின் தன்மை பற்றியும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்று விண்ணியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாசாவினால் மேற்கொண்ட மெசேஞ்சர் ஆய்வுகளின் பின்னணியில், தற்போதைய ஆய்வை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இந்த ஆராய்ச்சி பொதுவாக சூரியனின் ஆற்றல் பரிணாமத்தைப் பற்றிய தகவலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

http://athavannews.com/ஐரோப்பா-ஜப்பான்-கூட்டணி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.