Jump to content

கடவுள் எங்கே இருக்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அன்பர்  கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது.

பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின்  அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர்  எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார்.

யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார்.

"மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார்

சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்றார் நண்பர் .

தொலைத்த இடத்தில் தான்.வேறெங்கே என்றார்.
தொலைத்த இடம் இருட்டாக இருக்கிறது என்று வேறு இடத்தில் தேடுவோமா? இது நண்பர் 

என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது., என்று கேட்டார்.

அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார் நண்பர் . புரியவில்லையே என்றார்.

நம்முள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இறைவனை, எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறாய்.

இது ஞான மார்க்கம். இதுதான் உண்மை. முதலில் புரிவது சிரமமாக இருக்கும்.ஞானிகள் காட்டிய வழி.மூழ்கினால் முத்தெடுக்கலாம்.

கண்ணதாசன் பாட்டு ஒன்று தெரியுமா?

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே,, அவர் ஏதும்
அறியாரடி ஞானத் தங்கமே,,

ஞானிகளின் சில புத்தகங்கள், சித்தர் பாடல்கள் தொகுப்பு கொடுத்தார் நண்பர் . எந்த கட்டாயமும் இல்லாமல் சும்மா படித்துப் பார். தெளிவு பிறக்கும்.
இலக்கு புரியும். அப்புறம் வா இருவரும் இன்னும் ஆழமாக உரையாடுவோம்.

குழப்பமாக அவர்  நண்பன் தலையசைத்தான்.
ஆனால் அவன் பார்வையில் ஒரு தேடல்
தெரிந்தது.

இனி அவனுள் இருக்கும் இறையே அவனை வழி நடத்தும். ஒரு ஞானி தன்னை சுற்றியிருக்கும் மாயையை நீக்கி தன்னையும் தன் மூலத்தையும் உணரப்போகிறார்.

நன்றி ஞானக் களஞ்சியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் எப்படி ஆறாம் அறிவைப் பெற்றான் என்று ஆறாம் அறிவை வைத்துக் கண்டுபிடிக்க முடியாததால்தான் கண்டுபிடிக்காததைக் கடவுள் என்றான்?

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்ததுபோன்று நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றோம் என்பதை இன்னொரு மனித குலம் போன்ற ஒன்றை உருவாக்கி விடைகளை கண்டடையும்போது கடவுள் காணாமல் போய்விடுவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடைகளை கண்டடையும் போது கடவுளும் காணாமல் போவார்.

அப்போது இந்த உலகமும் காணாமல்  போகும்.

ஏனென்றால் இன்றைய தேதியில் உலக நடவடிக்கைகளை கண்கூடாக பார்க்கும் போது வருங்காலம் அழிவில் இருக்கின்றது  என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

இருக்கும் இயற்கையை பாதுகாக்க வக்கில்லை. கடவுளை தேடுகின்றார்களாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே " என்றும்

" உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும்

  திருமூலர் அருளிய பின் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில்....பலரது ...அடாத செயல்களை நியாயப் படுத்த..ஒரு கடவுள் எப்போதும் தேவைப்படுவார்!

சில வேளைகளில் சண்டைகளை நியாயப் படுத்தப் பல கடவுள்களும் தேவைப்படுவதுண்டு!

 

கடவுள்களை...உபயோகித்தே...ஆரியம்....தமிழகத்தை அழித்தது...இன்றும் அழிவு தொடர்கதையாகவே உள்ளது!

 

ராஜ ராஜன் என்ற ஒரு மாபெரும்....ஆழுமையை...அறிவு ஜீவியை....இந்தக் கடவுள்களைக் கொண்டே வசியப்படுத்தினார்கள்!

 

அல்லா...என்ற கடவுளின் பெயரால்....உலகம் முழுவதுமே....அழிவை நோக்கிப் பயணிக்கின்றது!

 

கிறிஸ்துவ மதத்தின் பெயரால் ...காவு கொள்ளப் பட்ட...உயிர்களின் எண்ணளவு....கணக்கிலடங்காதது என்று கூறப் படுகின்றது!

அழிக்கப் பட்ட கலாச்சாரங்களுக்கும் ...அளவு கிடையாது!

ஒரு மனிதனின்......பழி பாவங்களைச் சுமப்பதற்கும்....ஒரு கடவுள் இருந்தே ஆக வேண்டும்!

 

திருப்பதி உண்டியலில்....எவ்வளவுக்குப் பணம் சேருகின்றதோ...அவ்வளவுக்குப் பாவங்களை அவர் சுமக்கிறார்!

இலங்கையில்...நம்ம நல்லூர் முருகனும்....இந்த விசயத்தில் அவ்வளவு குறைந்தவரல்ல!

2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்

தேனுக்குள் இன்பம் செறிந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே 

           ---திருமூலர் அருளியது. இனி நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

பாலாழி மீனாளும்...பான்மைத்து...அருளுயிர்கள்...,

மாலாழி ஆழும் அறிந்து....!

 

தாயுமானவ சுவாமிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.