Jump to content

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.

49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

ஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர்.

இந்த குற்றம் குறித்து பதிலளிக்க ஜெயசூரியாவுக்கு 14 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது.

445 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜெயசூரியா, 21 சதங்களையும், 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா.

110 டெஸ்ட் போட்டிகளில் 40.07 ரன்களை சராசரியாக வைத்திருந்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் பின் 2012ஆம் ஆண்டு வரை 20-20 போட்டிகளில் விளையாடினார் ஜெயசூரியா.

இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கையில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/sport-45865852

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…

October 16, 2018

sanath.jpg?resize=650%2C433

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு தன்னுடைய வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரும் முன்னாள் தேர்வுக்குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது நேற்று (15.10.18) குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் 14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐசிசி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பணத்திற்காக போட்டிகளை காட்டிக்கொடுத்தல், மைதானத்தை தயார் செய்வதில் மோசடி மற்றும் இது போன்ற குற்றங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை தன் மீது குற்றம் சுமத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காததிற்காகவே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களில் தான் எப்போதும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலத்திலும் அவ்வாறே நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிக்கான பதில்களை தன்னுடைய வழக்கறிஞர்கள் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.