Jump to content

தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் செல்லக்கூடாது: அமைச்சர் ஹரீன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ufhJuiz-720x450.jpg

தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் செல்லக்கூடாது: அமைச்சர் ஹரீன்

குறைந்த வருமானம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று தோட்ட தொழிலாளர்கள் தொழில்புரிவதைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

பண்டாரவளை, பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தில் தொழிலை முன்னெடுக்கவே விரும்புகின்றனர்.ஆனால் எவருமே சொந்த நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

மலையகத்திலேயே பல தொழில்வாய்ப்புக்கள் இருக்கின்றன. பல படித்த இளைஞர்கள் கூட வெளிநாடுகளுக்குச் சென்று தமது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறான இளைஞர்கள் பெருந்தோட்டங்களில் புதிய தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய தொழில்முனைவோருக்காக எமது அரசாங்கம் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஊடான சம்பள உயர்வு விடயம் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஒரு நியாயமான சம்பள உயர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினருக்கு உறுதுணையாக இருக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/தோட்ட-தொழிலாளர்கள்-வெளிந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்...ஒரு நாளைக்கு 1000 என்டால் ஒரு மாசத்திற்கு 30,000 வரும்...அவ்வளவு சம்பளம் அவர்களுக்கு கொடுப்பது சாத்தியமானதா?....யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/14/2018 at 4:26 PM, தமிழ் சிறி said:

தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தில் தொழிலை முன்னெடுக்கவே விரும்புகின்றனர்.ஆனால் எவருமே சொந்த நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை

முஸ்லிம்கள்,சிங்களவர்கள்  வெளிநாடு சென்று உழைப்பது பிழையில்லை தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடு போவதுதான் இவருக்கு பெரிய பிரச்சனை . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.