Jump to content

'எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து குறித்து வாய் திறக்காதது ஏன்?'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கு பாஜக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.

எஸ்.வி. சேகர்படத்தின் காப்புரிமை facebook Image caption எஸ்.வி. சேகர்

"திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஐக்கிய முற்போக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

"பாஜக ஆட்சியில் தமிழகத்தில் நெல்லை, மதுரை, தஞ்சை மாவட்ட மருத்துவமனைகளில் 150 கோடி ரூபாயில் உயர்சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. "

"செங்கல்பட்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று தமிழிசை தெரிவித்தார்.

பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட தமிழிசை, "பெண்கள் குறித்து தவறாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்ட எஸ்வி.சேகர் நடவடிக்கை தவறு என்று கருதி அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது."

"ஆனால், எஸ்.வி.சேகரை கண்டித்து பேசிய திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது வைரமுத்து மீது பகிரங்கமாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளபோது வாய் திறக்காமல் இருப்பது அவர்களின் பாரபட்ச தன்மையை காட்டுகிறது," என்றார்.

தமிழிசை Image caption பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழிசை

"பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றார்.

தொடர்ந்து பேசும்போது, "முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர்கள் மேல்முறையீடு செய்வதாக பதிலளித்துள்ளனர்.

ஆனால் குற்றச்சாட்டுக்காக முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கூறுவது தவறு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகவேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடு," என்றார்.

மேலும், 2ஜி குற்றச்சாட்டின்போது ஏன் திமுக பதவி விலகவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"சபரி மலைக்கு பெண்கள் செல்லமாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் பெண்கள் சென்றால் கூட்டம் அதிகரிக்குமே என்று கமல் கருத்து கூறியுள்ளார். "

"அவர் சினிமா தியேட்டரில் கூட்டம் வருவதுபோல் நினைத்து சொல்கிறார், ஆனால் சபரி மலைக்கு செல்வது வழிபாட்டுக்காகதான்," என்றும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-45849813

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.