Jump to content

பூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, "Ms XYZ mentioned you in their tweet" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன்.

என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம்.

ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கி, பிறகு பாலிவுட்டை அடைந்து, தற்போது இந்திய ஊடகங்களையே வந்தடைந்திருக்கிறது. பல வகைகளில் தங்களிடம் அத்துமீறிய ஆண்களின் செயல்பாட்டை பல தசாப்தங்களாக மனதில் மூடி வைத்திருந்த பெண்கள், கடைசியாக தற்போது முழு மனவுறுதியுடன் அதை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், சட்டரீதியாக பார்க்கும்போது தற்போது வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளில் எத்தனை உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதில் தெளிவில்லாமல் பலர் சமூக ஊடகங்களில் போரிட்டு வருகிறார்கள்.

ட்விட்டரில் எழுத்துகள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும், ஸ்கிரீன் ஷாட்டுகள் மூலமாகவும் வெளிவந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன் என்றோ, எதிர்த்து பேசுகிறேன் என்றோ இதற்கு அர்த்தமல்ல. ஆனால், சில விடயங்களில் மற்றொரு கோணமும் இருக்கும். இந்த இயக்கம் தனிப்பட்ட முறையில் பெண்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை பழித் தீர்த்துக்கொள்வதற்காக தவறான வழியில் பயன்படுத்தபடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

#BelieveWomen, #BelieveSurvivors போன்ற ஹாஸ்டேக்குகள் மூலம் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், குற்றச்சாட்டுகளை உறுதிசெய்வதற்கும் வழியே இல்லை.

என்னுடைய ட்விட்டர் செய்தியோடையில் பலரும் #MeToo இயக்கத்தை செம்மையாகவும், நீர்த்துப்போகாமலும், நேர்மையுடனும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்கு வலியுறுத்துகின்றனர்.

#MeToo வாயிலாக குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர், தன் மீதமான குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு கூட தெரிவிக்காமல், "இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றுவதென்பது வீண் செயல். ஏனெனில், பெண்கள் என்ன கூறுகிறார்களோ அது…." என்ற பதிலோடு முடித்துக்கொண்டார்.

இது ஏற்படுத்திய விளைவு என்ன?

#MeToo வாயிலாக வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து பல ஊடக நிறுவனங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி, பல ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவி விலகினர், சிலர் தாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் அத்துமீறிய பெண்களிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்க முயன்று வருகிறார்கள்.

பூதாகரமாகும் #MeToo: என்ன சொல்லுகிறது ஆண் சமூகம்?படத்தின் காப்புரிமை Getty Images

நான் பயப்பட வேண்டுமா?

நீங்கள் இதுவரை பெண்ணொருவரை தொந்தரவு செய்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு உங்களது அடிமனது கூறும் பதில் இதற்கு போதுமானது.

இந்த கடுமையான சூழலை எப்படி கடந்து செல்வது?

முதலில் இந்த #MeToo என்பதை ஆண்களை மையமாக கொண்ட ஒன்றாக மட்டும் ஆக்கிவிட வேண்டாம். இதன் பிறகும் உங்களுக்கு பயமிருந்தால், பெண்களின் உலகத்திற்கு வாருங்கள். ஆம், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெண்கள் இப்படித்தான் கழிக்கிறார்கள்.

இரண்டாவதாக, #MeToo இயக்கம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அளவையும், இதுபோன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தைகள் சமூகத்தில் எப்படி ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

பூதாகரமாகும் #MeToo: என்ன சொல்லுகிறது ஆண் சமூகம்?படத்தின் காப்புரிமை Getty Images

மூன்றாவதாக, இனியாவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உங்களது நண்பர்களை புகழ்வதை, பாராட்டுவதை நிறுத்திவிட்டு, அதன் வீரியத்தை யோசித்து பாருங்கள்.

உங்களது ஆண் நண்பர்கள் குழுவில், பைத்தியக்காரத்தனமாக பேசும் விடயங்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் பயத்தை உண்டாக்கும் நிகழ்வாக மாறுகிறது என்பது குறித்து பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை.

இனி பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் உங்களது நண்பர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில் நீங்களும் அந்த குற்றத்திற்கு துணை போனவராக கருதப்படுவீர்கள்.

பூதாகரமாகும் #MeToo: என்ன சொல்லுகிறது ஆண் சமூகம்?படத்தின் காப்புரிமை TARAOBRIENILLUSTRATION

கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக பரபரப்பை உண்டாக்கி இருக்கும் இந்த விவகாரம், ஆண்களின் செயல் மற்றும் பேச்சுரீதியிலான நடத்தையில் சுய-விழிப்பை உண்டாக்கியுள்ளது. பணியிடத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்கும் முயற்சியில் இது ஒரு படி முன்னேறியதை காட்டுகிறது.

ஆனால், இந்த #MeToo இயக்கம் ஆண்களை தனிமைப்படுத்தி, மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் ஒன்றாக மாறாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஆண்கள் தங்களது நிகழ்கால செயல்பாடுகள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்று உணர்வதை போன்று, ட்விட்டுகள் நீக்கப்படலாம், ஆனால் ஸ்கிரீன் ஷாட்டுகள் அப்படியே இருக்கும் என்பதை பெண்களும் உணர வேண்டும்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.