Jump to content

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயொரு கேள்வி?

அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதத்திற்குள் இழுக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக யாழ் களத்தில் அனேகர் வைரமுத்துவுக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்  வைரமுத்துவை எப்படி நீங்கள் புனிதராக நினைக்கிறியள்.

சின்மயி ஏதோ ஒரு இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறா அதை வைத்து யாரோ அவரால் காரியம் சாதிக்க்க நினைக்கிறார்கள். 

வைரமுத்து, ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்யும்போது கருனாநிதியின் கொல்லைப்புறத்தில் கொட்டியதை விழுங்கிக்கொண்டு இருந்தவர்தானே. 

ஆனால் ஒரு விடையம் கூடிய விரைவில் சின்மயி தற்கொலை செய்யலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். இந்தவிடையத்தில் பரிதாபத்துக்குரியவர் சின்மயி மட்டுமே.

Link to comment
Share on other sites

6 minutes ago, Elugnajiru said:

எதற்காக யாழ் களத்தில் அனேகர் வைரமுத்துவுக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்  வைரமுத்துவை எப்படி நீங்கள் புனிதராக நினைக்கிறியள்.

சின்மயி ஏதோ ஒரு இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறா அதை வைத்து யாரோ அவரால் காரியம் சாதிக்க்க நினைக்கிறார்கள். 

வைரமுத்து, ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்யும்போது கருனாநிதியின் கொல்லைப்புறத்தில் கொட்டியதை விழுங்கிக்கொண்டு இருந்தவர்தானே. 

ஆனால் ஒரு விடையம் கூடிய விரைவில் சின்மயி தற்கொலை செய்யலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். இந்தவிடையத்தில் பரிதாபத்துக்குரியவர் சின்மயி மட்டுமே.

எழுஞாயிறு நான் நினைக்கவில்லை இங்கு வைரமுத்துவை யாரும் புனிதராகவோ அல்லது உத்தமசீலனாகவோ பார்க்கின்றனர் என்று. வைரமுத்து ஒரு சந்தர்ப்பவாதி என்பதும், கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் சின்மயி மீது பலருக்கு இங்கு அனுதாபம் எழவில்லை. ஐயங்கார் என் தன் சாதிப்பெயரை high Engar என்று போட்டுக் கொள்கின்ற அளவுக்கு பார்ப்பனிய மேலாதிக்க எண்ணம் கொண்டவர் சின்மயி. மீன்களை மீனவர் கொல்கின்றனர், எனவே மீனவர்களை இலங்கை கடற்படை கொல்வது நியாயம் என தன் முகனூலில் எழுதிய மேலாதிக்க சிந்தனை கொண்டவர். தன்னுடன் ருவிட்டரில் விவாதம் செய்யும் போது கெட்ட வார்த்தைகள் பேசிவிட்டனர் (கவனிக்க: பாலியல் அவதூறு அல்ல) என்று சொல்லி பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் உதவியுடன் அவராட்சியில் இருவரை ஜெயிலில் அடைத்தவர் (அதில் ஒருவர் தன் அனுபவங்களை நூலாக வெளிட்டார்.. இன்னொருவருக்கு வேலையே பறி போய் அல்லல்பட்டார்).

சின்மயி வைரமுத்து மூன்றாம் நபர் மூலம் தன் தாயும் அருகிருக்கையில் அழைத்ததார் என்று கூறும் நிகழ்வு நடந்தது 2005 இல். அதே காலப்பகுதியிலும் ஜெயலலிதான் தான் ஆட்சியிலிருந்தார். ஜெயாவிடம் முறைப்பாடு செய்து இருக்கவும் முடியும்.

சின்மயிக்கு பின்னால் இருப்பது தமிழ் தேசியத்தை, தமிழர்களை, தமிழை அடியோடு வேரறுக்க நினைக்கும் இந்துத்துவா கும்பலும், பிஜேபியும் ஆகும். முக்கியமாக சின்மயியின் குற்றச்சாட்டு வந்த நேரம் பிஜேபி நியமித்த தமிழக கவர்னர் மீது பல்கலைகழக மாணவிகளை பாலியல் சேவைக்கு அழைத்தவர் என்று நக்கீரன் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட நேரம். எனவே தான் சின்மயி சொல்வதை நம்புவது நம்பாமல் விடுவதற்கு அப்பால் அவரை எம்மில் பலர் எதிர்க்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனினும் நான் அந்தப் பெண்ணிற்காகப் பரிதபப்படுகிறேன் காரணம் அவரை அறியாமலேயே அவருள் நுழைந்துவிட்ட சாதியம் அவரது அழிவுக்குக்காரணமாகிவிட்டது இணையத்தள வியாபாரிகள் பணம் சம்பாடிக்கும் ஒரு ஊடகமாக இவர்களது செய்தி முன்னிலை வகிக்கிறது நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் பெண்வேடம்போட்டுப் பாடல்கள் பாடி ஒளித்துணுக்ககளை வெளியிட்ட  ஒருவர் மிக மோசமான விமர்சனங்களை ஜீரணிக்க முடியாது ரயில்முன்பு பாய்து தற்கொலை செய்துகொண்டார்.

இப்படி சின்மயிக்கு நடந்தால் இந்துத்துவா சக்திகளுக்கும் பாஜகவுக்கும் இன்னமும் நல்லதாப் போய்விடும். 

தவிர எமது கலைஞர்களை மதிக்காது தென்னிந்தியக் கலைஞர்களை புலம்பெயர் நாடுகளில் நிகழ்சி நடாத்தும் எம்மவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மட்டக்களப்பில் இன்றோ நேற்றொ தெரியவில்லை பாரதிராஜாவின் கால்களைக் குடும்பப்பெண்களை வைத்துக் கழுவிட்டார்களாம். இதில் என்ன வேடிக்கை என்ன்வென்றால் பாரதிராஜா புதுமுகக் கதாநாயகிகளைத் தேடுகிறேன் என மும்பையில் முகாமிட்டு கும்மாளமடிக்கும் பேர்வளியாகும்.

இங்கு எல்லாமே அபத்தமாக இருக்கின்றன.

சின்மயி சின்னத்தனமானவர்தான் ஒத்துக்கொள்கிறேன், வைரமுத்துவும் லேசுப்பட்டவரல்ல அதனைத்தான் யாழ்களத்தில் நினைவுபடுத்துகிறேன்.

ஒருவேளை வைரமுத்து பெயர் சொல்லி யாராவது ட்றை பண்ணியிருக்கலாம்.

இப்ப ஏ ஆர் ரகுமானுக்குக் குலைப்பன் அடிக்கத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியம் திராவிடம் ஈழம் என்பதற்கப்பால் தப்பு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.

நான் ஒழுங்காய் இருக்க வேண்டும். மற்றவன் என்னை நோக்கி சுண்டுவிரலை நீட்டாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவன் செய்த தப்புக்கு ஒட்டுமொத்த இனத்தையும் சமுதாயத்தையும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வைரமுத்து தவறு செய்தாலும் செய்யாவிட்டாலும் அது அவர் தனிப்பட்ட விடயம்.

இதற்குள் ஆரியம் திராவிடம் என கருணாநிதியின் சித்து விளையாட்டுகள் இனியும் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இப்ப ஏ ஆர் ரகுமானுக்குக் குலைப்பன் அடிக்கத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறன்.

இதன் விளைவு என்னவாயிருக்கும் என்றால், இனி எந்த ஒரு ஆணுமே சிம்மையியுடன் வேலை செய்ய தயங்குவார்கள்.

சென்னை தமிழில் சொல்வதானால், 'இது படா  பேயாரூ பார்ட்டிப்பா ....'  என்று சொல்லி விலகி விடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இதன் விளைவு என்னவாயிருக்கும் என்றால், இனி எந்த ஒரு ஆணுமே சிம்மையியுடன் வேலை செய்ய தயங்குவார்கள்.

சென்னை தமிழில் சொல்வதானால், 'இது படா  பேயாரூ பார்ட்டிப்பா ....'  என்று சொல்லி விலகி விடுவார்கள்..

குற்றம் செய்பவர்களை ஒதுக்குங்கள். தமிழினம் சுத்தமாகட்டும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குற்றம் செய்பவர்களை ஒதுக்குங்கள். தமிழினம் சுத்தமாகட்டும். :cool:

காட்டுங்கோ, ஒதுக்கிறோம் ....

தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்றனர்....

எம் ஆர் ராதா, எம் ஜி யாரை  சுட்டு  சிறை சென்றார். கருணாநிதிக்கு 3, சிவாஜிக்கு சி ஐ டி சகுந்தலா.... இன்னும் சொல்லலாம்.

அந்த நாளில் இருந்து பொம்பிளை பிரச்சனை  இருக்குது பாருங்கோ.... 

சினிமா அதனூடு தான் வளைஞ்சு நெளிஞ்சு வளருது....

ஒன்று, அதுவும் உந்த பாட்டுக்காரி ஏதோ ஆதாரம் இல்லாமல் சொன்னாலும் சொன்னா.... பல கிருஷ்ணர்கள் ...துச்சாதனால் புடவை உரியப்படட  திரெளபதிக்கு சேலை கொடுப்பது போல ஓடி வந்து நிக்கினம் பாருங்கோ.... :grin:

கட்டின பெண்டாட்டியை விட்டு விட்டு நடிகை நக்மாவே கதி என்று திரிந்த , பின்னர் நாலாவது கணவராக ராதிகாவை கட்டிகிட்ட   நாட்டாமை, #meetoo பத்தி ஆதரிச்சு பேசுறாரு...

வைரமுத்தர் வைரமும்  இல்லை. சின்மயி தங்கமும் இல்லை. எல்லாரும் சினிமா குட் டையில் ஊறிய மட்டைகள் தான். 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சினிமாத்துறையில் பிரகாசிப்பதற்கு பெண்கள் அப்பட்டமாக எல்லாம் இழந்துதான் பிரவேசிக்கிறார்கள் உச்சத்திற்கு வந்தாலும் அந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஒரு இளக்காரமான பேச்சு இருந்துகொண்டுதான் இருக்கும். சந்தர்ப்பத்திற்காக தங்களை இழப்பதும்.... தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைச் செரித்து கொள்ளவும் அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டால்தான் அந்தப்பெண் முன்ணணிக்கு வரமுடியும். இது தெரிந்து கொண்டே ஏற்பதாகும் பல பெண்களுக்கு  அவள் சார்ந்த உறவுகள் அந்நிலையை அவளுக்கு திணித்துவிடுவதாகும். ஆக திரையுலகம் சார்ந்த கலைத்துறை நெடுங்காலமாக இப்படித்தான் இயங்கி வருகிறது. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். சின்மயி அகம்பாவமும், பிரபலம் அடையும் பேராசையும் உடைய சர்ச்சைக்குரியவர். கவிஞர் வைரமுத்தையும் ஒழுக்க சீலர் என்று உரமாக சொல்வதற்கு அவர் ஒரு கவிஞர் என்பதைத் தவிர அவரின் தனிமனித வாழ்க்கை பற்றித் தெரியாது. ஆக ஏதுமில்லாத பிரச்சனை சின்மயின் சர்ச்சையான பேச்சாலும், பிரபல்ய ஆசையாலும் கவிஞர் மீது பாய்ந்துள்ளது. இந்தக்கதை இலகுவில் அணையாது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும் பிரபல கவிஞர்.... இது இன்னும் மூக்கும் முழியும் கீறீ அலங்கரிக்கப்பட்டு விதவிதமான சோடிக்கப்பட்ட புதிய வரைபடங்களுடன் இன்னும் முகநூலிலும் , ருவீட்டர்களிலும் அடுத்ததொரு பிரபலமானவர்களின் மீரூ வரும்வரை மங்காமல் ஒவ்வொருநாளும் புதிதாக வலம்வரும். சீரியல் பார்த்தும், விக்பொஸ் பார்த்தும் அலுத்துப்போனவர்களுக்கு சுவார்சியமான பொழுதுபோக்குத்தான் போங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

காட்டுங்கோ, ஒதுக்கிறோம் ....

தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்றனர்....

எம் ஆர் ராதா, எம் ஜி யாரை  சுட்டு  சிறை சென்றார். கருணாநிதிக்கு 3, சிவாஜிக்கு சி ஐ டி சகுந்தலா.... இன்னும் சொல்லலாம்.

அந்த நாளில் இருந்து பொம்பிளை பிரச்சனை  இருக்குது பாருங்கோ.... 

சினிமா அதனூடு தான் வளைஞ்சு நெளிஞ்சு வளருது....

ஒன்று, அதுவும் உந்த பாட்டுக்காரி ஏதோ ஆதாரம் இல்லாமல் சொன்னாலும் சொன்னா.... பல கிருஷ்ணர்கள் ...துச்சாதனன் புடவை உரியப்படட  திரெளபதிக்கு சேலை கொடுப்பது போல ஓடி வந்து நிக்கினம் பாருங்கோ.... :grin:
 

இதையெல்லாம் வரலாறு என்ற அடக்கத்துக்குள் புகுத்தும் போதுதான் சின்மயி போன்ற சில்லறைகள் இப்போது  பெண் விடுதலையாளிகளாக சித்தரிக்கப்டுகின்றார்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

சின்மயிக்கு, இனி வெளி நாடு, என் வேறு மாநில concert tours வருவது மிக கடினம்.

ஏன் கடினம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஏன் கடினம்? 

அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதற்குள் இழுக்கவேண்டும்?

சின்மயி சொல்வதில் இருந்து, சின்மயியைக் வைதமுத்திவிற்காக அழைத்த ஏற்றபட்டாளர், ஓர் மறைமுக  அழுத்தத்தை சங்கேத மொழியில் சின்மயியிடம் ஏற்றப்படுத்தி இருக்கிறார். சின்மயின் முறைப்பாட்டின் தொனி முற்றுமுழுதாக வைரமுத்துவை நோக்கியே இருந்தது. ஏற்றபட்டாளரிற்கு, வைரமுத்து தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், சின்மயி சூழ்நிலையை சரியாக சொல்லாததால் (சில அப்பாடகமாகவே பாரிய முரண்பாடு , விசா ஆகியவை), ஏற்றபட்டாளர்சின்மயியிடம்  நடந்து கொண்ட விதம்  குறித்து, உண்மை அல்லது பொய்களுக்கப்பால், சின்மயி ஏற்றபாடலாரை கூட பிரச்சனையின் மையத்தில் நிறுத்தி விடும் போக்கு காணப்படுகிறது.

முக்கியமாக, வைரமுத்து, ஏற்பட்டாளர்கள் ஆகியோருக்கு சின்மயி ஓர் வித நற்சான்று கொடுத்துள்ளார். அதாவது, எல்லோரும்  சின்மயின் அனுமதியைப் பெற முயன்று இருக்கிறர்கள். அது கிடைக்கதவிடாது, அவர்கள் சின்மயியை தொடவில்லை.  

ஆனால், சிமயி சொல்வது முழுவதும் அல்லது ஓர் பகுதியெனும் நடந்ததா என்பதே இப்போதைய பிரச்னை.  

அதனால், குற்றவியல் நீதி மன்றம் வைரமுத்துவை தண்டிப்பதத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. வைரமுத்து அப்பாவி என்று நீதி மன்றம்  சொன்னாலும்  வியப்பில்லை.

எந்த வெளிநாட்டு ஏற்றபட்டாளராவது, இப்படிப்பட்ட பிரச்சனையை ஏட்படுத்தியவரை, அதுவும் சிமயி சொல்லும் பிரச்சனையை மிகவும் சீரியஸ் ஆக எடுக்கும் போலீஸ், மற்றும் நீதி துறை உள்ள நாடுகளில், ஏற்றபாட்டாளர்கள்  அழைப்பார்களா?       

இந்திய மாநில ஏற்றபட்டாளர்கள் கூட தயங்குவார்கள்.

சின்மயிக்கு, இன்னுமோர் பின்புற தொக்கும் தென்படுகிறது என்பது, சின்மயி சொல்லிய, அன்று அவர் career இல் பிரபலம் ஆகவில்லை, இன்று பிரபலம் ஆகிவிட்டேன் என்பதும், ஆகவே பிரச்னை career ஐ பாதித்தாலும் ஆகக்குறைந்தது சமாளிப்பேன் என்ற  தொக்கும் தென்படுகிறது.

இவை எல்லாம் சின்மயி சொன்னதில் இருந்து. மற்றப்படி குழுமிய (சாதியம், திராவிடம், ஆரியம்)  மற்றும் தனிப்பட்ட நடத்தை வாதங்கலாய் தவிர்த்து.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 10/19/2018 at 3:55 AM, Kadancha said:

அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதற்குள் இழுக்கவேண்டும்?

சின்மயி சொல்வதில் இருந்து, சின்மயியைக் வைதமுத்திவிற்காக அழைத்த ஏற்றபட்டாளர், ஓர் மறைமுக  அழுத்தத்தை சங்கேத மொழியில் சின்மயியிடம் ஏற்றப்படுத்தி இருக்கிறார். சின்மயின் முறைப்பாட்டின் தொனி முற்றுமுழுதாக வைரமுத்துவை நோக்கியே இருந்தது. ஏற்றபட்டாளரிற்கு, வைரமுத்து தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், சின்மயி சூழ்நிலையை சரியாக சொல்லாததால் (சில அப்பாடகமாகவே பாரிய முரண்பாடு , விசா ஆகியவை), ஏற்றபட்டாளர்சின்மயியிடம்  நடந்து கொண்ட விதம்  குறித்து, உண்மை அல்லது பொய்களுக்கப்பால், சின்மயி ஏற்றபாடலாரை கூட பிரச்சனையின் மையத்தில் நிறுத்தி விடும் போக்கு காணப்படுகிறது.

முக்கியமாக, வைரமுத்து, ஏற்பட்டாளர்கள் ஆகியோருக்கு சின்மயி ஓர் வித நற்சான்று கொடுத்துள்ளார். அதாவது, எல்லோரும்  சின்மயின் அனுமதியைப் பெற முயன்று இருக்கிறர்கள். அது கிடைக்கதவிடாது, அவர்கள் சின்மயியை தொடவில்லை.  

ஆனால், சிமயி சொல்வது முழுவதும் அல்லது ஓர் பகுதியெனும் நடந்ததா என்பதே இப்போதைய பிரச்னை.  

அதனால், குற்றவியல் நீதி மன்றம் வைரமுத்துவை தண்டிப்பதத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. வைரமுத்து அப்பாவி என்று நீதி மன்றம்  சொன்னாலும்  வியப்பில்லை.

எந்த வெளிநாட்டு ஏற்றபட்டாளராவது, இப்படிப்பட்ட பிரச்சனையை ஏட்படுத்தியவரை, அதுவும் சிமயி சொல்லும் பிரச்சனையை மிகவும் சீரியஸ் ஆக எடுக்கும் போலீஸ், மற்றும் நீதி துறை உள்ள நாடுகளில், ஏற்றபாட்டாளர்கள்  அழைப்பார்களா?       

இந்திய மாநில ஏற்றபட்டாளர்கள் கூட தயங்குவார்கள்.

சின்மயிக்கு, இன்னுமோர் பின்புற தொக்கும் தென்படுகிறது என்பது, சின்மயி சொல்லிய, அன்று அவர் career இல் பிரபலம் ஆகவில்லை, இன்று பிரபலம் ஆகிவிட்டேன் என்பதும், ஆகவே பிரச்னை career ஐ பாதித்தாலும் ஆகக்குறைந்தது சமாளிப்பேன் என்ற  தொக்கும் தென்படுகிறது.

இவை எல்லாம் சின்மயி சொன்னதில் இருந்து. மற்றப்படி குழுமிய (சாதியம், திராவிடம், ஆரியம்)  மற்றும் தனிப்பட்ட நடத்தை வாதங்கலாய் தவிர்த்து.  

 

 

அர்ஜுன் தனது முதுகைத் தடவினார் என்று சுருதி என்னும் நடிகை இன்று சொல்ல, அவரோ வழக்கு போடுவதாக சொல்லி உள்ளார்.

வைரமுத்து அநேகமாக நீதிமன்றம் போக தயாராகின்றார் என்றே தோன்றுகின்றது.

ஆதாரத்துக்கு பாஸ்ப்போர்ட்டினை தேடும் சின்மயி மிகவும் வருந்த நேரிடும்.

  • பாண்டே: இன்னும் கோட்டுக்கு போகலையே ...
  • சின்மயி: கோர்ட் லீவு... அதுதான் ... :grin:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது!!!!!
இடையிலை என்ன நடந்திருக்கும்???? :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

 

அர்ஜுன் தனது முதுகைத் தடவினார் என்று சுருதி என்னும் நடிகை இன்று சொல்ல, அவரோ வழக்கு போடுவதாக சொல்லி உள்ளார்.

வைரமுத்து அநேகமாக நீதிமன்றம் போக தயாராகின்றார் என்றே தோன்றுகின்றது.

ஆதாரத்துக்கு பாஸ்ப்போர்ட்டினை தேடும் சின்மயி மிகவும் வருந்த நேரிடும்.

 நானும் விடியக்காலமை ...வேலை மினக்கெட்டு....காணொளியைப் பார்த்தேன்!

சின்ன வயசில.....மாட்டைப்   பற்றிக் கட்டுரை  எழுதச்  சொன்னால் ....

மாடடைக் கொண்டு போய்...மரத்தில் ...கட்டிப்போட்டு ....மரத்தைப் பற்றிக் கட்டுரை எழுதிற மாதிரி இருக்கு!

சின்மயி...தேவையில்லாமல் ...ஆத்திரப் படுகிற பேர்வளி ..போல இருக்குது!

உண்மை அவர் பக்கம் இருந்தால்....ஆத்திரம் வராது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி!

metopressmeet-201018m1-720x450.jpg

#MeToo விவகாரம் குறித்து பெண்கள் தந்திருந்த ஆதரவைப் போன்று ஆண்கள் தரவில்லை எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை கேள்வி கேட்கும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை எத்தனை பேர் கேள்வி கேட்டுள்ளீர்கள்? என்று ஊடக சந்திப்பென்றில் மிகவும் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

#MeToo விவகாரம் குறித்து விசாரிக்கவும், நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். ஆனால் அந்த குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது என்று பாடகி சின்மயி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சின்மயிடம் தெடர்ந்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தன்னுடைய திருமணத்திற்கு ஏன் வைரமுத்து அழைக்கப்பட்டார்  என்ற கேள்விக்கு தான் பல முறை பதில் தெரிவித்துள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், தாயாரின் உடல்நிலைகாரணமாக சிலரை நேரில் சென்று அழைக்கமுடியாத காரணத்தால்  பி.ஆர்.ஓ மூலமே பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பின் மூலமாக வந்தவர்களில் ஒருவர் தான் வைரமுத்து என்றும்  சின்மயி கூறியுள்ளார்.

மேலும், வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது பற்றி உங்களால் ஊகிக்க முடியாது என்றும், அவரால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும் என்றும் ஊடக சந்திப்பின் போது பாடகி சின்மயி  தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகளும் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/metoo-விவகாரம்-வைரமுத்து-மீது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயி அவர்கள் வைரமுத்து விடையத்தில் சொல்வது எல்லாம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் வழக்கு என வரும்போது இதில் சிமயியால் வெற்றிகொள்ளமுடியாது. 

வைரமுத்து ஒன்றும் ஒழுங்கான ஆள் கிடையாது ஏனெனில் கருனாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்போவாவது ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்கமுடியுமா கட்டிய மனைவி இருக்கும்போதே கூத்தியாள் வீடு வைத்திருந்து அவருக்குக் குழந்தையையும் பெற்றெடுத்தவர் கருனாநிதி அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவர் எப்படி ஒழுக்கமானவராக இருப்பார். 

முதலில் யாராக இருந்தாலும் அறம்சார்ந்து வாழவேண்டும் அரசியல்வாதிகளிலிருந்து சினிமாக்காரர் வரை யாராவது ஒழுங்கானவர்கள் என அடையாளம் காட்டமுடியுமா?  

சுவிசுக்குப்போனதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் மட்டும் வைத்திருந்கால் மட்டும் போதாது சுவிசுக்குச் சின்மயி எங்களுடன் வரவில்லை என யாராவது வாதிட்டால்தான் பாஸ்போர்ட்டை ஆதாரம் காட்டமுடியும் அப்படி எதுவும் இல்லையே சுவிஸ் சுரேஸ் உட்பட மாணிக்கம் வினாயகம் வரைக்கும்தான் கூறுகிறார்களே   சின்மயி எங்களுடன் சுவிஸ் வந்தார் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பெண்களுக்கு ஆதரவாகத்தான் உலகநாடுகளில் சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

#metoo ல சின்மை மற்றும் பெண்களால் ஆரம்பத்தில் குற்றம் சாட்டபட்டவர்களில் வைரமுத்து தவிர மற்ற அநேகமானோர் பிராமண வகுப்பை  சேர்ந்தோர் அவர்களில் இருவர் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.. வைரமுத்து மீதான குற்றசாட்டில் ஆண்டாள் தொடர்பான பிரச்சனை பின்னனியில் இருந்தாலும் வைரமுத்து இதை செய்திருக்கமாட்டார் என சொல்லமுடியா...

இப்பொழுது நடிகர் அர்ஜுன், நடிகர் தியாகராஜன் (பிரசாந்தின் தந்தை) மற்றும் சன் டிவிசெய்தியாசிரியர். பிரபல பதிப்பாளர்.முகனூல் பிரபலங்கள் என சென்று கொண்டே இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2018 at 7:38 PM, வல்வை சகாறா said:

பொதுவாக சினிமாத்துறையில் பிரகாசிப்பதற்கு பெண்கள் அப்பட்டமாக எல்லாம் இழந்துதான் பிரவேசிக்கிறார்கள் உச்சத்திற்கு வந்தாலும் அந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஒரு இளக்காரமான பேச்சு இருந்துகொண்டுதான் இருக்கும். சந்தர்ப்பத்திற்காக தங்களை இழப்பதும்.... தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைச் செரித்து கொள்ளவும் அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டால்தான் அந்தப்பெண் முன்ணணிக்கு வரமுடியும். இது தெரிந்து கொண்டே ஏற்பதாகும் பல பெண்களுக்கு  அவள் சார்ந்த உறவுகள் அந்நிலையை அவளுக்கு திணித்துவிடுவதாகும். ஆக திரையுலகம் சார்ந்த கலைத்துறை நெடுங்காலமாக இப்படித்தான் இயங்கி வருகிறது. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். சின்மயி அகம்பாவமும், பிரபலம் அடையும் பேராசையும் உடைய சர்ச்சைக்குரியவர். கவிஞர் வைரமுத்தையும் ஒழுக்க சீலர் என்று உரமாக சொல்வதற்கு அவர் ஒரு கவிஞர் என்பதைத் தவிர அவரின் தனிமனித வாழ்க்கை பற்றித் தெரியாது. ஆக ஏதுமில்லாத பிரச்சனை சின்மயின் சர்ச்சையான பேச்சாலும், பிரபல்ய ஆசையாலும் கவிஞர் மீது பாய்ந்துள்ளது. இந்தக்கதை இலகுவில் அணையாது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும் பிரபல கவிஞர்.... இது இன்னும் மூக்கும் முழியும் கீறீ அலங்கரிக்கப்பட்டு விதவிதமான சோடிக்கப்பட்ட புதிய வரைபடங்களுடன் இன்னும் முகநூலிலும் , ருவீட்டர்களிலும் அடுத்ததொரு பிரபலமானவர்களின் மீரூ வரும்வரை மங்காமல் ஒவ்வொருநாளும் புதிதாக வலம்வரும். சீரியல் பார்த்தும், விக்பொஸ் பார்த்தும் அலுத்துப்போனவர்களுக்கு சுவார்சியமான பொழுதுபோக்குத்தான் போங்கள்.

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் 
"முன்னுக்கு வரமுடியும்" என்று நீங்கள் கூறும் இந்த வார்த்தை 
மிகவும் தெளிவுடன் பார்க்கப்படுத்தல் வேண்டும்.

இவர்கள் என்ன சமூக சேவையில் முன்னுக்கு வருகிறார்களா?
சொந்த பணத்தை பெருக்குவத்துக்கும் 
புகழுக்கும் மட்டுமே படுக்கையை பகிர்கிறார்கள் 
அதில் இருக்கும் லாப நட்ட கணக்கு அவர்களது 
தனிப்பட்ட விடயம் .... சமூகம் இதுக்கு கவலை கொள்ள தேவைஇல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

#metoo ல சின்மை மற்றும் பெண்களால் ஆரம்பத்தில் குற்றம் சாட்டபட்டவர்களில் வைரமுத்து தவிர மற்ற அநேகமானோர் பிராமண வகுப்பை  சேர்ந்தோர் அவர்களில் இருவர் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.. வைரமுத்து மீதான குற்றசாட்டில் ஆண்டாள் தொடர்பான பிரச்சனை பின்னனியில் இருந்தாலும் வைரமுத்து இதை செய்திருக்கமாட்டார் என சொல்லமுடியா...

இப்பொழுது நடிகர் அர்ஜுன், நடிகர் தியாகராஜன் (பிரசாந்தின் தந்தை) மற்றும் சன் டிவிசெய்தியாசிரியர். பிரபல பதிப்பாளர்.முகனூல் பிரபலங்கள் என சென்று கொண்டே இருக்கிறது.

இது தான் பிரச்சனையே.

இதை மருவளமாக பாருங்கள், ஆண்கள் இயல்பாக நடந்ததை (நடித்ததை) யோசித்து விட்டு, அட அவரும் அப்படியான எண்ணத்தில் செய்திருப்பாரோ என்று metoo அதிர்கிறது.

சிலருக்கு மனசாட்சி தார்மீகம், பலருக்கு சட்டம் தார்மீகம், இன்னும் பலரோ இதத்திற்கிடையில்.

ஓர் தரப்பு (மேட்டூவின் படி சினிமா துறை ஆண்கள்) தார்மீகம் எப்படி இருக்கிறதோ, அதற்கு உட்படுவர்களும் அப்படித்தானே இருக்கவேண்டும்.

சட்டத்தில் நீதி இல்லை. எல்லாமே விதிகள்.

வைரமுத்து செய்தது குற்றம் என்றால், தமிழ் நாட்டில் கோடி கணக்கான குற்றங்கள் தமிழ் நாட்டில் கணவன்-மனைவிக்கு இடையில் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரகுமான்,வைரமுத்துவைப் பற்றி என்ன சொன்னார்,ஏன் வைரமுத்து தன மனைவியை பொது இடங்களுக்கு கூட்டிச் செல்வதில்லை போன்ற செய்திகளையும் கொண்டு வந்து இணைக்கலாமே!....

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.