Jump to content

முதல் பார்வை: ஆண் தேவதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: ஆண் தேவதை 

உதிரன்

aan-dhevathaijpg-1jpg

பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'. 

மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்டு வீட்டு வேலை செய்துகொண்டும், குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டும் சமுத்திரக்கனி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால், பைக், கார் என்று கடன் வாங்கி வாகனங்கள் வாங்கியதும், சொந்த வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கியதும் ரம்யா பாண்டியனை ஆபத்தின் எல்லையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அப்படி என்ன ஆபத்து நிகழ்கிறது, சமுத்திரக்கனி ஏன் வீட்டை விட்டுச் செல்கிறார், அன்பான வாழ்க்கையில் ஏன் நிம்மதி பறிபோனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

'பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தின் தூண்டுதலிலும், பெருநகரத்தில் உள்ள கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பையும் அடிப்பையாகக் கொண்டு 'ஆண் தேவதை' படத்தின் கதையைக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் தாமிரா. அவரின் அக்கறையை வரவேற்கலாம். 

சமுத்திரக்கனிக்கு அளவெடுத்து தைத்த சட்டை போன்ற பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் நிறைவாகச் செய்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டே இருப்பது மட்டும் அவரது முந்தைய படங்களை நினைவூட்டுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், மீட்டிங், மனைவி என்று எங்கேயும் எப்போதும் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். அந்தப் பாணி கொஞ்சல் அலுப்பூட்டுகிறது. மற்றபடி, பொறுப்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். லாட்ஜின் பக்கத்து அறையில் முனகும் சப்தம் தன் குழந்தைக்குக் கேட்கக்கூடாது என்ற அவஸ்தையில் பெருங்குரலெடுத்துக் கதை சொல்லும் உத்தி ஓரளவு எடுபடுகிறது. 

'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க ஒரு நல்வாய்ப்பு வழங்கப்பட்டும், அதை ஜஸ்ட் லைக் தட் காலி பண்ணியிருக்கிறார். அதுவும் தன் தோழியின் மரணத்தின் போது அவர் காட்டும் அதிர்ச்சி மிகச் சாதாரணமாக இருக்கிறது. 

ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். சுஜா வாருணி, ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என்று படத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் படத்தில் எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. 

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறது. 

''நீ பார்க்குற வேலை உனக்குள்ள இருக்குற அழகான பொண்ணைக் கொன்னுடுச்சு, நீ மகிழ்ச்சியா இருக்கியா'', ''பொம்பளைங்க உடம்புக்குள்ள புதையலைத் தேடுறவங்களுக்கு புடவை துவைக்குறது தப்பாதான் தெரியும்'' போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் தாமிரா கவனிக்க வைக்கிறார். நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்ற சமுத்திரக்கனியின் கேள்வி யோசிக்க வைக்கிறது. 

குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், அலுவலக நண்பனால் நிகழும் பாலியல் சீண்டல், அளவுக்கு மீறிய தவணை முறைக் கடனால் வரும் தொல்லைகள் என்று படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவை எல்லாம் கருத்துகளாக மட்டுமே இருக்கிறதே தவிர, படத்துக்கான வலுவான காட்சிகளாக உருமாறவில்லை. அதனால் திரைக்கதையும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்து போகிறது. 

சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் ஆகிய இருவரின் அணுகுமுறைகளும் போலியானதாக உள்ளது. அதுவும் தொண்டூழியம் செய்ததாக கனி சொல்வதெல்லாம் கதாபாத்திரத்தின் சரிவு. திடீரென்று வளரும் சண்டை பிரியும் அளவுக்கு மாறுவது சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வேலை பறிபோன பிறகும் அதை எதிர்க்காமல் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன், சொகுசு வாழ்க்கைக்காகவும், கெத்துக்காகவும் மட்டுமே ஆடம்பரமாக வாழும் தோழி கேட்டதற்காக கேள்வியே இல்லாமல் கடன் கொடுப்பது எப்படி சாத்தியம் போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன. கணவன் வேலைக்குப் போக, மனைவி குடும்பத் தலைவியாகவே இருப்பதாகக் கூறுவது அபத்தம். 

மொத்தத்தில் நகர வாழ்க்கையின் சிக்கலைக் கூறும் நல்ல கருத்துள்ள படம் பார்த்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால் 'ஆண் தேவதை'க்கு நிச்சயம் ஆதரவு தரலாம். 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25204590.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.