Jump to content

"கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியதை மாற்றிக்கொள்ள முடியுமா?" நக்கீரன் கோபால் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கோபால்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்த ஒரு செய்திக்காக,

, கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றம் கைது ஆணை வழங்காததால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், அந்த கைது விவகாரம் குறித்தும் ஊடக சுதந்திரம் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து...

கேள்வி: செவ்வாய்க்கிழமையன்று விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது?

பதில்: அன்றைய தினம் காலையில் நானும் இன்னும் இருவரும் புனேவில் என் நண்பர் பாலா என்பவரைச் சந்திப்பதற்காக செல்ல விமான நிலையத்திற்கு வந்தோம். 8.50க்கு விமானம். 7 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய உதவியாளருக்கு விமான நிலையத்தின் உளவுத் துறை காவலர் ஒருவர் அடிக்கடி போன் செய்து, என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்பதாகத் தெரிவித்தார்.

பிறகு விமான நிலையத்திற்குள் வந்து, போர்டிங் பாஸெல்லாம் வாங்கிய பிறகு விமான நிலையத்தைச் சேர்ந்த துணை ஆணையர் விஜயகுமார் என்பவர் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

நான் என்னுடன் வந்தவர்களிடம் நீங்கள், நமக்கான வாயிலில் நில்லுங்கள், நான் மேல் தளத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அவர்களும் சென்றுவிட்டார்கள். பிறகு நான் லிஃப்டில் ஏறியபோது, உடன் அந்த துணை ஆணையரும் ஏறினார். நான் கேட்டதற்கு, உதவி ஆணையர் வரப்போகிறார் என்றார்.

உதவி ஆணையரும் விமானத்தில் பயணம் செய்கிறாரா என்று கேட்டுவிட்டு, விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு நான் கழிப்பறைக்குச் சென்று திரும்பியவுடன், என்னை நெருங்கிய துணை ஆணையர் விஜயகுமார், உங்களிடம் உதவி ஆணையர் பேச விரும்புகிறார். நாம் விஐபிக்களுக்கான இடத்தில் காத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

பிறகு அங்கு சென்று காத்திருந்தோம். பிறகு விஜயகுமாருக்கு ஒரு போன் வந்தது. அதற்குப் பிறகு திடீரென பத்து பேர் சாதாரண உடையில் அறைக்குள் வந்தனர். வந்தவர்கள் உடனடியாக என் போனை பிடுங்கினர். நான் என்னைக் கைதுசெய்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை வெறும் விசாரணைதான் என்றார்கள். அதற்கு எதற்கு போனை பிடுங்குகிறீர்கள் என்றேன். பிறகு, என்னுடன் வந்திருப்பவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு புனே நகரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களிடம் விவரத்தைச் சொல்லவாவது என்னை அனுமதியுங்கள் என்றேன். அவர்கள் புனே சென்றுவிட்டால், அவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாது என்றெல்லாம் சொன்னேன். இருந்தபோதும் காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை.

ஏதோ தீவிரவாதியைக் கைதுசெய்வதுபோல கைதுசெய்தனர். பிறகு உதவி ஆணையர் புறப்பட்டுவிட்டார். துணை ஆணையரிடம் என் மீது என்ன வழக்கு என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. வெளியில் வந்த பிறகு ஒரு பட்டாலியன் காவல்துறையினர் என்னைப் பின் தொடர்ந்தனர். முதலில் ஜாம் பஜார் காவல் நிலையம் செல்வதாகச் சொன்னவர்கள் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

அங்கிருக்கும்போது வைகோ என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். என் வழக்கறிஞர் சிவகுமாரும் காத்திருந்தார். இருவரையும் வரச்சொன்னேன். ஆனால், வைகோ சத்தம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிவகுமார் மட்டும் வந்தார். அவர்தான் வைகோ மறியல் செய்து கைதாகிவிட்டார் என்று தெரிவித்தார்.

கே. நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

ப. நீதிமன்றத்தில் நீதிபதி என்னைப் பார்த்து, உங்கள் மீது என்ன வழக்கு என்று தெரியுமா எனக் கேட்டார். தெரியாது என்றேன். பிறகு அந்த நக்கீரன் இதழைக் காண்பித்தார். நீங்கள் வெளியிட்ட கட்டுரைக்காக உங்கள் மீது 124வது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்றார்.

கே. இன்னமும் நீங்கள் எழுதியது சரிதான் என சொல்கிறீர்களா?

ப. என்னைக் கைதுசெய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியது தவறு என மாற்றிக்கொள்ள முடியுமா? நாங்கள் எழுதியது பத்தோடு பதினொன்றாக கடந்துசெல்லக்கூடிய செய்தி அல்ல. நித்யானந்தா விவகாரத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டபோது, 2 ஆயிரம் மறுப்புக் கடிதங்கள் எங்களுக்கு வந்தன. அந்த மறுப்பை வெளியிட்டோம். ஆனால், 2010ல் ஆர்த்தி என்ற பெண் வெளிப்படையாகவே புகார் கொடுத்தார். சிடிக்களும் வெளிவந்தன.

கே. எந்த ஒரு செய்தியையும் வெளியிடும்போது, யாரைக் குற்றம்சாட்டுகிறோமோ அவர்களுடைய தரப்பையும் கேட்க வேண்டுமல்லவா, இந்த விவகாரத்தில் ஆளுநரின் கருத்தைக் கேட்க முயன்றீர்களா?

ப. ஆம். போனில் தொடர்பு கொண்டோம். இந்தச் செய்தி எப்படி வெளியானது என்று சொல்கிறேன். எனக்குச் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அந்தப் பகுதியின் செய்தியாளர் ராமகிருஷ்ணன். எப்ரல் மாதத்தில் எனக்கு அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு போன் வந்தது. போன் செய்தவர், தான் கேள்விப்பட்ட செய்தியால் மனமெல்லாம் பாரமாக இருப்பதாகச் சொன்னார்.

தன்னை வந்து சந்திக்க முடியுமா எனக் கேட்டார். நான் ராமகிருஷ்ணனை அனுப்பினேன். அந்த நபர், ஒரு ஆடியோவைக் கொடுத்தார். அந்த ஆடியோ எங்களைப் பதற வைத்தது. அதை நூல் பிடித்து சென்றோம். நிர்மலா தேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பேசி வலைவிரிக்கும் ஆடியோதான் அது. அதற்குப் பின், கல்லூரி நிர்வாகம், மதுரைப் பல்கலை, துணைவேந்தர், வேந்தர் என்று முடிவுக்கு வந்தது. இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது அவர்கள் மறுத்தார்கள்.

மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் Image caption மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

கே. இந்தக் கைது நடவடிக்கையின்போது, எல்லாக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதாவது இதுபோல நீங்கள் அவரைப் பற்றி ஆதாரமில்லாமல் வெளியிட்டதற்காக ஆறு மாத தண்டனை கிடைத்ததாக சொன்னார். அது உண்மையா?

ப. டிடிவி தினகரனைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டோம். அதற்காக அவர் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு ஆண்டுக் கணக்கில் நடந்தது. முடிவில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி, எங்களை அறைக்குள் அழைத்து, 'நீங்கள் மேல் முறையீட்டில் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார். மேல் முறையீட்டில் விடுதலையானோம். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் விடுதலையானோம்.

தினகரனின் பூர்வீகத்தைப் பற்றி பல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, எப்படி பணம் கொடுத்து வென்றார் என்றெல்லாம் வெளியிட்டிருக்கிறோம். தினகரனுடன் இருப்பவர்கள் பெரும் பணத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் வந்த வழியைச் சொல்லியிருக்கிறோம். அதை யூ டியூப் வீடியோவாகவும் வெளியிட்டோம்.

கே. நீங்கள் ஒரு செய்தி குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் பதிலளிக்கவில்லை அல்லது மறுக்கிறார்கள். இருந்தும் அந்த செய்தியை நீங்கள் வெளியிட்டால், அது அவதூறாக இருப்பதாக அவர்கள் கருதினால், பாதிக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. முதலில் விளக்கம் கேட்க வேண்டும். கோர்ட் நோட்டீஸ் அனுப்பலாம். இல்லையென்றால் அவதூறு வழக்குத் தொடரலாம். இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை அணுகி என்னைப் பற்றி எழுதக்கூடாது எனத் தடை வாங்கலாம். இத்தனை வழி முறைகள் இருக்கின்றன.

கே. ஏப்ரலில் வந்த செய்திக்கு இப்போது வழக்குத் தொடர்ந்தது ஏன் என நினைக்கிறீர்கள், நீங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டது இதற்குக் காரணமா? செப்டம்பரில்கூட இந்தச் செய்தியுடன் ஒரு இதழ் வந்தது...

ப. அந்த இதழும் ஒரு காரணம். அது மட்டுமே காரணமல்ல. சில நாட்களுக்கு முன்பாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்த விவகாரம் வெளியில் வந்தால் பல அரசியல் தலைகள் உருளும் என்கிறார். இதைத்தானே நக்கீரனும் சொன்னது. ஐந்து இதழ்களுக்கு முன்பாக செப்டம்பரில் வெளிவந்த இதழில், ஸ்வாதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இறந்த ராம்குமாரைப் போலவே இந்த நிர்மலா தேவியும் கொல்லப்படலாம் என ஒரு செய்தியை எழுதினோம்.

கே. நீதிமன்றத்தில் இந்து என். ராமிடம் நீதிபதி பேசும்போது, நக்கீரன் இதழைக் காண்பித்து இது போன்ற படத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்று கேட்டபோது, ராம் நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார்..

ப. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இந்த செப்டம்பர் இதழைக் காண்பித்து, இப்படி செய்தி வெளியிடலாமா என்று கேட்டார். அப்போதுதான் நீதிபதி ராமிடம் அவ்வாறு கேட்டார். ராமும் நான் அப்படி வெளியிட மாட்டேன் என மறுத்தார். ஆனால், அவுட்லுக்கும் இந்தியா டுடேவும் இது போன்ற அட்டைப் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்றார். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் பி.டி. பெருமாள் குறுக்கிட்டு, இந்த வழக்கில் இந்த இதழ் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து காவல்துறையிடம் நீதிபதி கேட்டார். இல்லை என்றவுடன் அவர் அந்த இதழைத் தூக்கிப்போட்டுவிட்டார். அவர்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தினார்கள்.

 

கே. பத்திரிகைகளுக்கான சுதந்திரம் என்பது ஒரு கட்டற்ற சுதந்திரமா, எதை வேண்டுமானாலும் எழுத முடியுமா?

ப. முடியாது. எப்படி எழுத முடியும்?

கே. அப்படியானால், நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னீர்கள்? யூகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு செய்தியை எழுத முடியுமா?

ப. இதைத்தான் ராம்குமார் விவகாரத்திலும் சொன்னார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டுவிட்டாரே.

கே. யூகத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை இப்படி வெளியிடும்போது, பாதிக்கப்படுபவர்களுக்கு பதில் என்ன?

ப. இந்த நிர்மலா தேவி விவகாரத்தை முழுமையாகச் சொல்கிறேன். ஆடியோ வெளியானதும் தமிழக அரசு பல்கலைக்கழக வேந்தரை அழைத்து இதனை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கச் சொன்னது. உடனே வேந்தர், அதாவது ஆளுநர், ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். ஐந்து பேர் குழு கலைக்கப்பட்டது. அதே நேரம், இந்த வழக்கை சாத்தூர் காவல்துறை விசாரிக்காது, சிபிசிஐடி விசாரிக்குமென அரசு அறிவித்தது. சிபிசிஐடிக்கு அப்போது தலைவர் ஜெயந்தி. அவர் மாற்றப்பட்டு, அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். வேகமாக நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள், அவ்வளவுதான். முருகனின் மனைவி சுஜா என்பவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன் கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். இதைவிட என்ன வேண்டும்?

அவர்கள் கைதான பிறகு, 15 முறை ஜாமீன் கோரியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. ஒருவர் கைதுசெய்யப்பட்டு 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லையென்றால் அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்கிறது. அல்லது குற்றப்பத்திரிகை தாக்கலான பிறகு பிணையில் விடுவிக்கலாம். 90 நாட்களும் கடந்து, குற்றப் பத்திரிகையும் தாக்கலான பிறகு, இந்த மூவருக்கும் இதுவரை பிணை கிடைக்கவில்லை. இப்படித்தானே ராம்குமார் விவகாரத்தில் நடந்தது.

நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ Image caption நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ

கே. ஆளுநர் மாளிகை என்ன செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..

ப. அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கலாமே.. ஏன் 6 மாதங்கள் காத்திருந்தார்கள்? விஷயம் அப்படியே போய்விடும் என்று நினைத்தார்கள். நாங்கள் தொடர்ந்து செய்தியை வெளியிடுவதால் எங்கள் குரலை அமுக்கப் பார்க்கிறார்கள்.

கே. உங்களை நீதிமன்றம் விடுவித்ததை சரி என்கிறீர்கள். அதே நீதிமன்றம்தான் நிர்மலா தேவிக்கு பிணையை கொடுக்கவில்லை. ஆனால், அதை ஏற்க மறுக்கிறீர்கள்?

ப. அப்படிச் சொல்ல வரவில்லை. யார் எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது. நிர்மலா தேவி எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். எங்கள் விவகாரத்தில் நீதிமன்றம் எங்கள் பக்கம் நின்றது பெரிய விஷயம். அதற்காக ஒரு நீதிமன்றத்தைப் பாராட்டி, இன்னொரு நீதிமன்றத்தைக் குறை சொல்ல முடியாது.

கே. உங்களுடைய நீண்ட பத்திரிகை அனுபவத்தில் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறீர்கள். பல அரசுகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்போதைய அரசுக்கும் முந்தைய அரசுகளுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்..

ப. ஜெயலலிதா காலத்தில் இருந்த துன்புறுத்தல் இப்போது இல்லை. சில நாட்களுக்கு முன்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர், 'நாங்கள் என்ன முன்பைப்போல, அலுவலகத்தைத் தாக்கினோமா, ஆட்டோவை அனுப்பினோமா, வழக்குதானே போடுகிறோம்' என்கிறார். அப்படியானால், அந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது அப்படியெல்லாம் கிடையாது என நம்புவோம். ஜெயலலிதா காலத்து துன்புறுத்தல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

கே. தனிநபர் வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. எது தனி நபர் வாழ்க்கை என்பதில் தெளிவு வேண்டும். நித்யானந்தா போன்ற ஒரு சாமியார், ரஞ்சிதாவுடன் சல்லாபம் செய்யும்போது எப்படி..

கே. இல்லை. அதற்குள் செல்ல வேண்டாம். யாரும் புகார் கொடுக்காத நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் ஊடகம் எப்படி நுழைய முடியும்? பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுக்காத நிலையில், மூன்றாம் நபரின் அந்தரங்கத்தில் நாம் தலையிட முடியுமா?

ப. இல்லை.முடியாது.

கே. ஒரு பத்திரிகையாளரின் சுதந்திரம் யாரால் வரையறுக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்? சுய கட்டுப்பாடா, அரசா, நீதிமன்றமா?

ப. அந்தப் பத்திரிகையாளர், ஒரு செய்தி எழுதும்போது அதற்கான வரையறையுடன் எழுத வேண்டும். அதைத் தாண்டிச் சென்றால் நீதிமன்றம் தலையிடும்.

கே. ஒரு செய்தியை வெளியிடும்போது, அதன் முழுமைத் தன்மையை ஆராய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன். நிர்மலா தேவி விவகாரம் நாங்கள் சொன்னதுபோல நடக்கும்போது, நீங்கள் மீண்டும் என்னை வந்து சந்திப்பீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.