Jump to content

"கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியதை மாற்றிக்கொள்ள முடியுமா?" நக்கீரன் கோபால் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கோபால்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்த ஒரு செய்திக்காக,

, கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றம் கைது ஆணை வழங்காததால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், அந்த கைது விவகாரம் குறித்தும் ஊடக சுதந்திரம் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து...

கேள்வி: செவ்வாய்க்கிழமையன்று விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது?

பதில்: அன்றைய தினம் காலையில் நானும் இன்னும் இருவரும் புனேவில் என் நண்பர் பாலா என்பவரைச் சந்திப்பதற்காக செல்ல விமான நிலையத்திற்கு வந்தோம். 8.50க்கு விமானம். 7 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய உதவியாளருக்கு விமான நிலையத்தின் உளவுத் துறை காவலர் ஒருவர் அடிக்கடி போன் செய்து, என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்பதாகத் தெரிவித்தார்.

பிறகு விமான நிலையத்திற்குள் வந்து, போர்டிங் பாஸெல்லாம் வாங்கிய பிறகு விமான நிலையத்தைச் சேர்ந்த துணை ஆணையர் விஜயகுமார் என்பவர் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

நான் என்னுடன் வந்தவர்களிடம் நீங்கள், நமக்கான வாயிலில் நில்லுங்கள், நான் மேல் தளத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அவர்களும் சென்றுவிட்டார்கள். பிறகு நான் லிஃப்டில் ஏறியபோது, உடன் அந்த துணை ஆணையரும் ஏறினார். நான் கேட்டதற்கு, உதவி ஆணையர் வரப்போகிறார் என்றார்.

உதவி ஆணையரும் விமானத்தில் பயணம் செய்கிறாரா என்று கேட்டுவிட்டு, விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு நான் கழிப்பறைக்குச் சென்று திரும்பியவுடன், என்னை நெருங்கிய துணை ஆணையர் விஜயகுமார், உங்களிடம் உதவி ஆணையர் பேச விரும்புகிறார். நாம் விஐபிக்களுக்கான இடத்தில் காத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

பிறகு அங்கு சென்று காத்திருந்தோம். பிறகு விஜயகுமாருக்கு ஒரு போன் வந்தது. அதற்குப் பிறகு திடீரென பத்து பேர் சாதாரண உடையில் அறைக்குள் வந்தனர். வந்தவர்கள் உடனடியாக என் போனை பிடுங்கினர். நான் என்னைக் கைதுசெய்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை வெறும் விசாரணைதான் என்றார்கள். அதற்கு எதற்கு போனை பிடுங்குகிறீர்கள் என்றேன். பிறகு, என்னுடன் வந்திருப்பவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு புனே நகரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களிடம் விவரத்தைச் சொல்லவாவது என்னை அனுமதியுங்கள் என்றேன். அவர்கள் புனே சென்றுவிட்டால், அவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாது என்றெல்லாம் சொன்னேன். இருந்தபோதும் காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை.

ஏதோ தீவிரவாதியைக் கைதுசெய்வதுபோல கைதுசெய்தனர். பிறகு உதவி ஆணையர் புறப்பட்டுவிட்டார். துணை ஆணையரிடம் என் மீது என்ன வழக்கு என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. வெளியில் வந்த பிறகு ஒரு பட்டாலியன் காவல்துறையினர் என்னைப் பின் தொடர்ந்தனர். முதலில் ஜாம் பஜார் காவல் நிலையம் செல்வதாகச் சொன்னவர்கள் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

அங்கிருக்கும்போது வைகோ என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். என் வழக்கறிஞர் சிவகுமாரும் காத்திருந்தார். இருவரையும் வரச்சொன்னேன். ஆனால், வைகோ சத்தம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிவகுமார் மட்டும் வந்தார். அவர்தான் வைகோ மறியல் செய்து கைதாகிவிட்டார் என்று தெரிவித்தார்.

கே. நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

ப. நீதிமன்றத்தில் நீதிபதி என்னைப் பார்த்து, உங்கள் மீது என்ன வழக்கு என்று தெரியுமா எனக் கேட்டார். தெரியாது என்றேன். பிறகு அந்த நக்கீரன் இதழைக் காண்பித்தார். நீங்கள் வெளியிட்ட கட்டுரைக்காக உங்கள் மீது 124வது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்றார்.

கே. இன்னமும் நீங்கள் எழுதியது சரிதான் என சொல்கிறீர்களா?

ப. என்னைக் கைதுசெய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியது தவறு என மாற்றிக்கொள்ள முடியுமா? நாங்கள் எழுதியது பத்தோடு பதினொன்றாக கடந்துசெல்லக்கூடிய செய்தி அல்ல. நித்யானந்தா விவகாரத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டபோது, 2 ஆயிரம் மறுப்புக் கடிதங்கள் எங்களுக்கு வந்தன. அந்த மறுப்பை வெளியிட்டோம். ஆனால், 2010ல் ஆர்த்தி என்ற பெண் வெளிப்படையாகவே புகார் கொடுத்தார். சிடிக்களும் வெளிவந்தன.

கே. எந்த ஒரு செய்தியையும் வெளியிடும்போது, யாரைக் குற்றம்சாட்டுகிறோமோ அவர்களுடைய தரப்பையும் கேட்க வேண்டுமல்லவா, இந்த விவகாரத்தில் ஆளுநரின் கருத்தைக் கேட்க முயன்றீர்களா?

ப. ஆம். போனில் தொடர்பு கொண்டோம். இந்தச் செய்தி எப்படி வெளியானது என்று சொல்கிறேன். எனக்குச் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அந்தப் பகுதியின் செய்தியாளர் ராமகிருஷ்ணன். எப்ரல் மாதத்தில் எனக்கு அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு போன் வந்தது. போன் செய்தவர், தான் கேள்விப்பட்ட செய்தியால் மனமெல்லாம் பாரமாக இருப்பதாகச் சொன்னார்.

தன்னை வந்து சந்திக்க முடியுமா எனக் கேட்டார். நான் ராமகிருஷ்ணனை அனுப்பினேன். அந்த நபர், ஒரு ஆடியோவைக் கொடுத்தார். அந்த ஆடியோ எங்களைப் பதற வைத்தது. அதை நூல் பிடித்து சென்றோம். நிர்மலா தேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பேசி வலைவிரிக்கும் ஆடியோதான் அது. அதற்குப் பின், கல்லூரி நிர்வாகம், மதுரைப் பல்கலை, துணைவேந்தர், வேந்தர் என்று முடிவுக்கு வந்தது. இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது அவர்கள் மறுத்தார்கள்.

மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் Image caption மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

கே. இந்தக் கைது நடவடிக்கையின்போது, எல்லாக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதாவது இதுபோல நீங்கள் அவரைப் பற்றி ஆதாரமில்லாமல் வெளியிட்டதற்காக ஆறு மாத தண்டனை கிடைத்ததாக சொன்னார். அது உண்மையா?

ப. டிடிவி தினகரனைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டோம். அதற்காக அவர் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு ஆண்டுக் கணக்கில் நடந்தது. முடிவில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி, எங்களை அறைக்குள் அழைத்து, 'நீங்கள் மேல் முறையீட்டில் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார். மேல் முறையீட்டில் விடுதலையானோம். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் விடுதலையானோம்.

தினகரனின் பூர்வீகத்தைப் பற்றி பல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, எப்படி பணம் கொடுத்து வென்றார் என்றெல்லாம் வெளியிட்டிருக்கிறோம். தினகரனுடன் இருப்பவர்கள் பெரும் பணத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் வந்த வழியைச் சொல்லியிருக்கிறோம். அதை யூ டியூப் வீடியோவாகவும் வெளியிட்டோம்.

கே. நீங்கள் ஒரு செய்தி குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் பதிலளிக்கவில்லை அல்லது மறுக்கிறார்கள். இருந்தும் அந்த செய்தியை நீங்கள் வெளியிட்டால், அது அவதூறாக இருப்பதாக அவர்கள் கருதினால், பாதிக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. முதலில் விளக்கம் கேட்க வேண்டும். கோர்ட் நோட்டீஸ் அனுப்பலாம். இல்லையென்றால் அவதூறு வழக்குத் தொடரலாம். இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை அணுகி என்னைப் பற்றி எழுதக்கூடாது எனத் தடை வாங்கலாம். இத்தனை வழி முறைகள் இருக்கின்றன.

கே. ஏப்ரலில் வந்த செய்திக்கு இப்போது வழக்குத் தொடர்ந்தது ஏன் என நினைக்கிறீர்கள், நீங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டது இதற்குக் காரணமா? செப்டம்பரில்கூட இந்தச் செய்தியுடன் ஒரு இதழ் வந்தது...

ப. அந்த இதழும் ஒரு காரணம். அது மட்டுமே காரணமல்ல. சில நாட்களுக்கு முன்பாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்த விவகாரம் வெளியில் வந்தால் பல அரசியல் தலைகள் உருளும் என்கிறார். இதைத்தானே நக்கீரனும் சொன்னது. ஐந்து இதழ்களுக்கு முன்பாக செப்டம்பரில் வெளிவந்த இதழில், ஸ்வாதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இறந்த ராம்குமாரைப் போலவே இந்த நிர்மலா தேவியும் கொல்லப்படலாம் என ஒரு செய்தியை எழுதினோம்.

கே. நீதிமன்றத்தில் இந்து என். ராமிடம் நீதிபதி பேசும்போது, நக்கீரன் இதழைக் காண்பித்து இது போன்ற படத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்று கேட்டபோது, ராம் நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார்..

ப. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இந்த செப்டம்பர் இதழைக் காண்பித்து, இப்படி செய்தி வெளியிடலாமா என்று கேட்டார். அப்போதுதான் நீதிபதி ராமிடம் அவ்வாறு கேட்டார். ராமும் நான் அப்படி வெளியிட மாட்டேன் என மறுத்தார். ஆனால், அவுட்லுக்கும் இந்தியா டுடேவும் இது போன்ற அட்டைப் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்றார். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் பி.டி. பெருமாள் குறுக்கிட்டு, இந்த வழக்கில் இந்த இதழ் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து காவல்துறையிடம் நீதிபதி கேட்டார். இல்லை என்றவுடன் அவர் அந்த இதழைத் தூக்கிப்போட்டுவிட்டார். அவர்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தினார்கள்.

 

கே. பத்திரிகைகளுக்கான சுதந்திரம் என்பது ஒரு கட்டற்ற சுதந்திரமா, எதை வேண்டுமானாலும் எழுத முடியுமா?

ப. முடியாது. எப்படி எழுத முடியும்?

கே. அப்படியானால், நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னீர்கள்? யூகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு செய்தியை எழுத முடியுமா?

ப. இதைத்தான் ராம்குமார் விவகாரத்திலும் சொன்னார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டுவிட்டாரே.

கே. யூகத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை இப்படி வெளியிடும்போது, பாதிக்கப்படுபவர்களுக்கு பதில் என்ன?

ப. இந்த நிர்மலா தேவி விவகாரத்தை முழுமையாகச் சொல்கிறேன். ஆடியோ வெளியானதும் தமிழக அரசு பல்கலைக்கழக வேந்தரை அழைத்து இதனை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கச் சொன்னது. உடனே வேந்தர், அதாவது ஆளுநர், ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். ஐந்து பேர் குழு கலைக்கப்பட்டது. அதே நேரம், இந்த வழக்கை சாத்தூர் காவல்துறை விசாரிக்காது, சிபிசிஐடி விசாரிக்குமென அரசு அறிவித்தது. சிபிசிஐடிக்கு அப்போது தலைவர் ஜெயந்தி. அவர் மாற்றப்பட்டு, அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். வேகமாக நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள், அவ்வளவுதான். முருகனின் மனைவி சுஜா என்பவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன் கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். இதைவிட என்ன வேண்டும்?

அவர்கள் கைதான பிறகு, 15 முறை ஜாமீன் கோரியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. ஒருவர் கைதுசெய்யப்பட்டு 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லையென்றால் அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்கிறது. அல்லது குற்றப்பத்திரிகை தாக்கலான பிறகு பிணையில் விடுவிக்கலாம். 90 நாட்களும் கடந்து, குற்றப் பத்திரிகையும் தாக்கலான பிறகு, இந்த மூவருக்கும் இதுவரை பிணை கிடைக்கவில்லை. இப்படித்தானே ராம்குமார் விவகாரத்தில் நடந்தது.

நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ Image caption நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ

கே. ஆளுநர் மாளிகை என்ன செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..

ப. அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கலாமே.. ஏன் 6 மாதங்கள் காத்திருந்தார்கள்? விஷயம் அப்படியே போய்விடும் என்று நினைத்தார்கள். நாங்கள் தொடர்ந்து செய்தியை வெளியிடுவதால் எங்கள் குரலை அமுக்கப் பார்க்கிறார்கள்.

கே. உங்களை நீதிமன்றம் விடுவித்ததை சரி என்கிறீர்கள். அதே நீதிமன்றம்தான் நிர்மலா தேவிக்கு பிணையை கொடுக்கவில்லை. ஆனால், அதை ஏற்க மறுக்கிறீர்கள்?

ப. அப்படிச் சொல்ல வரவில்லை. யார் எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது. நிர்மலா தேவி எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். எங்கள் விவகாரத்தில் நீதிமன்றம் எங்கள் பக்கம் நின்றது பெரிய விஷயம். அதற்காக ஒரு நீதிமன்றத்தைப் பாராட்டி, இன்னொரு நீதிமன்றத்தைக் குறை சொல்ல முடியாது.

கே. உங்களுடைய நீண்ட பத்திரிகை அனுபவத்தில் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறீர்கள். பல அரசுகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்போதைய அரசுக்கும் முந்தைய அரசுகளுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்..

ப. ஜெயலலிதா காலத்தில் இருந்த துன்புறுத்தல் இப்போது இல்லை. சில நாட்களுக்கு முன்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர், 'நாங்கள் என்ன முன்பைப்போல, அலுவலகத்தைத் தாக்கினோமா, ஆட்டோவை அனுப்பினோமா, வழக்குதானே போடுகிறோம்' என்கிறார். அப்படியானால், அந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது அப்படியெல்லாம் கிடையாது என நம்புவோம். ஜெயலலிதா காலத்து துன்புறுத்தல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

கே. தனிநபர் வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. எது தனி நபர் வாழ்க்கை என்பதில் தெளிவு வேண்டும். நித்யானந்தா போன்ற ஒரு சாமியார், ரஞ்சிதாவுடன் சல்லாபம் செய்யும்போது எப்படி..

கே. இல்லை. அதற்குள் செல்ல வேண்டாம். யாரும் புகார் கொடுக்காத நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் ஊடகம் எப்படி நுழைய முடியும்? பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுக்காத நிலையில், மூன்றாம் நபரின் அந்தரங்கத்தில் நாம் தலையிட முடியுமா?

ப. இல்லை.முடியாது.

கே. ஒரு பத்திரிகையாளரின் சுதந்திரம் யாரால் வரையறுக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்? சுய கட்டுப்பாடா, அரசா, நீதிமன்றமா?

ப. அந்தப் பத்திரிகையாளர், ஒரு செய்தி எழுதும்போது அதற்கான வரையறையுடன் எழுத வேண்டும். அதைத் தாண்டிச் சென்றால் நீதிமன்றம் தலையிடும்.

கே. ஒரு செய்தியை வெளியிடும்போது, அதன் முழுமைத் தன்மையை ஆராய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன். நிர்மலா தேவி விவகாரம் நாங்கள் சொன்னதுபோல நடக்கும்போது, நீங்கள் மீண்டும் என்னை வந்து சந்திப்பீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.