Jump to content

“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
“எக கே கேம” (Eka Ge Kaema - එකගෙයි කෑම) என்பதை தமிழில் “ஒரே வீட்டில் புசித்தல்” என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு ஒரே பெண்ணை மணம்முடித்து வைப்பது சிங்கள சமூக அமைப்பில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மத்தியில் காலாகாலமாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வாழ்க்கைமுறை.
 
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் சகோதர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் மணமுறை நெடுங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக நிலவி வந்திருக்கிறது. அந்தப் பெண் ஆண் சகோதர்களுடன் அன்பையும், பாலுறவையும் பகிர்ந்துகொள்வார். அதேவேளை ஆண்கள் “பொது மனைவி” என்று கூறுவதை தவிர்த்தார்கள். அதற்குப் பதிலாக “ஒரே வீட்டில் உண்கிறோம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். அதுபோல மனைவி “நான் மூவருக்கும் உணவு சமைத்துப் போடுகிறேன்” என்பார் என்று ருல்ப் பீரிஸ் தனது “சிங்கள சமூக அமைப்பு: கண்டி யுகம் (1964)” என்கிற நூலில் குறிப்பிடுகிறார். இதை சேர் பொன் அருணாச்சலமும் எழுதியிருக்கிறார்.
 
"பலகணவர் மணம்" அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்று அகராதிகள் இதற்கான பதங்களை அறிமுகப்படுத்துகின்றன. நேபால், சீனா, வடஇந்திய பகுதிகளிலும் பல்வேறு சமூகக் குழுமங்களிடையே இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது.
 
“பண்டைய தாய்வழிச் சமூகத்தில் பல ஆண்கள் ஒரு பெண்ணை பொதுவில் அனுபவித்தார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாய் யார் என்று தெரிந்திருந்தது. தந்தை யார் என்று தெரிந்திருக்கவில்லை. பெண்ணைச் சுற்றியே வம்சாவளி அமைந்தது. எனவே ஆணை விலக்கிவிட்டு பெண்வழியில் மட்டுமே இரத்த உறவு கணக்கிடப்பட்டது” என்று எங்கெல்ஸ் "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலில் குறிப்பிடுவார். காலப்போக்கில் இவை எப்படி எல்லாம் மாறி இன்றைய குடும்ப அமைப்பு முறை நிறுவப்பட்டது என்பது தனிச்சொத்துடைமையின் நீட்சியே.
 
மகாபாரதக் கதையில் பாஞ்சாலி பஞ்சபாண்டவ சகோதர்கள் ஐவருக்கு மனைவியாக இருந்த கதை இன்றும் ஒரு வியப்பான கதையாக நோக்கப்படுகிறது.
 
pandavas.jpg
 
சிங்கள சமூகத்தில் நிலவும் குடும்ப – மண உறவுகள் பண்பட்டதாகவும், இனிமையானதாகவும் இருகிறது. இது போல மனித சமூகத்தில் சொற்பமாகவே காணப்படுகிறது.” என்று ஜோன் டேவி என்கிற ஆங்கிலேய ஆய்வாளர் தனது நூலில் தெரிவிக்கிறார். (Davy, John (1821), An Account of the interior of Ceylon).
 
பாலுறவு, விவாகம், விவாகரத்து போன்றவை மிகுந்த தாராளவாத, திறந்த, சுதந்திரமான ஒரு முறைமை சிங்கள சமூகத்தில் ஒரு காலத்தில் நிலவியிருப்பதை இனங்கான முடிகிறது.
 
ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வதை பொலிஜினி (Polygyny) என்பார்கள். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வதை பொலியாண்டரி (Polyandry) என்பார்கள். கண்டிய சிங்கள சமூகத்தில் இந்த இரண்டும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
 
உலகம் முழுவதும் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்வதை அத்தனை பெரிய அதிசயமாக பார்ப்பதில்லை. ஒரு வகையில் பல இனக்குழுமங்களில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டே இருக்கிறது. ஆனால் பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்துகொள்வதை ஆணாதிக்க சமூக அமைப்பு  ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், கலாசார சீர்கேடாகவும் பார்க்கிறது. வெறுக்கத்தக்க ஒன்றாகவும், ஒழுக்க மீறலாகவும் புனைந்தே வருகிறது.
 
கணவனின் இறப்பு, விவாகரத்து, விலகல் என்பவற்றின் பின்னர் செய்துகொள்ளும் மறுமணத்தையே ஏற்றுக்கொள்ளாத சமூகம் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் வாழ்கையைப் பகிர்வதை ஏற்றுக்கொள்ளுமா என்ன? ஆனால் சிங்கள சமூக பண்பாட்டில் நெடுங்காலமாக பொதுவழக்கில் எற்றுகொள்ளப்பட்டிருந்தது. அந்த சமூக் வழக்கை முறைகேடான ஒன்றாக பார்க்கவில்லை.
 
இலங்கையில் பலதாரமணம் சட்டவிரோதமான ஒன்று. ஆனால் கண்டிய திருமணச் சட்டத்தில் ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகிற முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தத் திருமணம் சகோதர்களுடன் ஒன்றாக செய்துகொள்ளப்படுவதில்லை. ஒருவர்; குறிப்பாக மூத்தவர் தான் திருமணம் முடித்து பெண்ணை அழைத்துவருவார்.
 
குடும்பத்தின் சொத்துக்கள் அக்குடும்பத்திலேயே தொடர்ந்தும் வழிவழியாக பாதுகாக்கப்படுவதற்காக இது தொடர்ந்து வந்திருக்கிறது. சொத்துக்களைப் பாதுகாப்பது பற்றிய அச்சம் கொண்ட நிலவுடைமைச் சமூகத்தினர் மத்தியில் அதிகம் இருந்திருக்கிறது. ஆக கொவிகம சாதியினர் மத்தியிலேயே  இந்த வழக்கம் அதிகமாக இருந்துவந்ததை நாம் ஊகிக்கலாம். அதேவளை சிங்கள சமூகத்தில் சகல சமூக மட்டத்திலும் இந்த வழக்கம் இருக்கவே செய்தது  அதையே பல்வேறு ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
 
Robert%2Bknox%2Bpolyandry.JPG
 
ரொபர்ட் நொக்ஸ் தனது நூலில் 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கைதியாக வாழ்ந்தனுபவித்து பின்னர் எழுதிய (Historical Relation of Ceylon) நூலில் இதை உறுதிப்படுத்தும் வகையில் கண்டிய சமூகத்தில் ஒரு பெண் இரு  கணவர்மாருடன் ஒன்றாக குடித்தனம் நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்ததாகவும் குழந்தைகள் அந்த இருவரையும் சொந்தத் தகப்பனாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.
 
“பல கணவர் முறை” இருந்ததற்கான ஒரு நிகழ்வாக “மகுல்மகா விகாரை ஓலைச்சுவடிகள்” வெளிப்படுத்திய ஆதாரம் குறிப்பிடத்தக்கது. 14ஆம் நூற்றாண்டில் ருகுணு தேசத்தை ஆண்ட பராக்கிரமபாகு சகோதர்கள்  ஒரே பெண்ணை திருமணம் முடித்திருந்தார்கள் என்கிறது. கோட்டை பகுதியை ஆண்ட 6வது விஜயபாகு தன்னுடைய சகோதரனுடன் மனைவியைப் போது மனைவியாக ஆக்கி வாழ்ந்து வந்தார் என்கிறது வரலாறு.
 
இலங்கையில் இந்த சம்பிரதாயம் பற்றி சமீபகாலத்தில் அறியத்தந்தது ஒரு தொலைக்காட்சி நாடகமே. 1993 இல் வெளியான “பெத்தேகெதர” (Baddegedara) என்கிற பெயரில் ஜயசேன ஜயக்கொடி எழுதி வெளியிட்ட நாவல் 1996இல் தொலைக்காட்சித் தொடர் நாடகமாக வெளியானது. கிராமத்தில் அண்ணனுக்கு திருமணமுடித்துக் கொடுக்கப்பட்ட பெண் தம்பிக்கும் மனைவியாக்கப்பட்டு நடத்தும் வாழ்க்கைப் பற்றியது அந்தக் கதை. பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்து போயிருந்த ஒரு மரபை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து பேசுபொருளாக்கியது இந்த நாடகம் தான்.
 
மிகச் சமீபத்தில் தொலைக்காட்சிக்காக ஒரு பாடல் தயாரிக்கப்பட்டது (Eka Gei Kema). அந்தப் பாடலில் மூத்த சகோதரனுக்கு திருமணம் முடித்து கொடுக்கப்பட்ட பெண் இளைய சகோதரனுக்கும் மனைவியாக்கப்பட்டபோதும் அந்தப் பெண் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்ற இளைய சகோதரன் படும் வேதனை, ஏக்கம், தவிப்பு, காதல் பற்றியதாக அமைக்கப்பட்டிருந்தது. யூடியுபில் இந்தப் பாடல் மிகவும் பிரசித்தம்.
 
சகோதரர் ஒருவர் மனைவியுடன் ஒன்றாக உறவுகொள்ளும் போது வெளிக்கதவின் வாசலில் தனது உள்ளாடைத் துண்டை (கோவணம்) சமிக்ஞைக்காக தொங்கவிட்டிருப்பார். மற்றவர் அதைப் புரிந்து கொண்டு விலகிச் செல்வார். இந்தக் காட்சியும் அந்தப் பாடலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 

வழக்கொழிந்தது எப்போது?
 
காலப்போக்கில் இந்த மரபு சமூக அளவில் கேலிக்குரிய ஒன்றாக மாறியபோது மெதுமெதுவாக வழக்கொழிந்து போனது.
 
1815இன் பின் இலங்கையில் படிப்படியாக ஆங்கிலேய விக்டோரியா சட்டங்கள் அறிமுகமாயின. 1819இல் நீதிமன்ற ஆணையாளர்களால் “பல கணவர்” முறையை பின்பற்றும் சிங்கள அரச அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்கும்படி அறிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷார் பல கணவர் முறையை 1859 இல் தடை செய்தத்துடன் மூன்று வருட சிறைத்தண்டனையை அறிமுகப்படுத்தினார்கள். 1907ஆம் ஆண்டின் 19இலக்க விவாகப் பதிவு சட்டத்தின் படி (ஒரே கணவர் – ஒரே மனைவி) சம்பிரதாயபூர்வமான பல கணவர் முறை முற்றிலும் முடிவுக்கு வந்தது. “Twentieth Century Impression of Ceylon (1907)” (பக்கம் 337) என்கிற நூலில் சேர் பொன் அருணாச்சலம் “கண்டிய சமூக அமைப்பில் நிலவிய ஒரே பெண்ணை பல சகோதர்கள் மணமுடிக்கும் முறை இனிமேல் சட்டபூர்வமானதில்லை. அவ்வாறான விவாகத்தை பதிவு செய்ய சட்டத்தில் இனி இடமில்லை” என்று குறிப்பிடுகிறார்.
 
இந்த வழக்கம் தாராளவாத முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டபோதும் பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஒன்று. திருமணம்-மணமகன் தெரிவு பெண்ணுக்கு உரிய ஒன்றாக இருக்கவில்லை. பெரியவர்கள் தீர்மானித்து முடித்து வைப்பார்கள். பெண் அந்த வீட்டுக்கு சகல ஆணுக்கும், அவரின் குடும்பத்துக்குமான பணிப்பெண்ணாக செல்கிறார். அந்த ஆண்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணிவிடையோடு, பாலுறவுத் தேவையையும் நிறைவு செய்யும் ஒரு பாலியல் இயந்திரமாக அப்பெண்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர்.

நன்றி - அரங்கம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.