Jump to content

நடு வானில் ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: வெளியேறிய விண்வெளி வீரர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.

கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது நாசா வெளியிட்ட ட்வீட்.

 

திட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.

கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது நாசா வெளியிட்ட இந்த ட்வீட்.

 

திட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும்.

சோயுஸ்படத்தின் காப்புரிமை EPA

ஏவப்பட்டபோது, ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் உள்ள விண்வெளி வீரர்கள் அதில் இருந்து பேலிஸ்டிக் இறங்கு வாகனம் மூலம் புவிக்குத் திரும்பியதாகவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் 'நாசா' தெரிவித்துள்ளது.

சோயுஸ் ராக்கெட் மிகப் பழமையான ராக்கெட் வடிவமைப்பு என்றபோதும் இது பாதுகாப்பானது என்று கூறுகிறார் பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ்.

மேலே ஏறுகிற ராக்கெட் காலியான தமது எரிபொருள் கட்டங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது என்று கூறிய அவர், ராக்கெட்டில் இருந்த விண்வெளி வீரர்கள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கவேண்டிய நேரத்தில் அவர்கள் எடை இழந்ததாக உணர்ந்ததாக குறிப்பிட்டிருந்தனர். எனவே ராக்கெட்டில் ஏதோ சரியில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45823540

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோயஸ் ரொக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

October 12, 2018

Soyuz.jpg?resize=780%2C438சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற சோயஸ் ரொக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பாக ரஸ்ய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ரொக்கெட்டில் இருந்த ரஸ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி மற்றும் அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பணிபுரிவதற்காக அவர்கள் செல்ல இருந்தனர். ரொக்கெட் புறப்படும் போது சரியாக இருந்தாலும், அடுத்த 90 நொடிகளில் அதில் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்ததனைத் தொடந்து ரொக்கெட் மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.

soyuz-rocket.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2018/99146/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை தொடக்கம்

விசாரணை தொடக்கம்படத்தின் காப்புரிமை Reuters

சோயஸ் ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில், சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ராக்கெட்டில் இருந்த ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி மற்றும் அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பணி நிமித்தமாக அவர்கள் செல்ல இருந்தனர். ராக்கெட் புறப்பாடு சரியாக இருந்தாலும், அடுத்த 90 நொடிகளில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கோளாறு இருப்பதாக கூறியதையடுத்து ராக்கெட் தரையிரக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-45832447

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.