Jump to content

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’

Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது.

போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   

இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் இப்போது எழுந்திருக்கும் கவனத்துக்கு மத்தியில், முக்கியமான அங்கிகாரமாக, இந்த விருது அமைந்திருக்கிறது. ஆனால், மறுபக்கமாகப் பார்க்கப் போனால், ஏற்கெனவே மிகப்பெரிய இயக்கமாக மாறியிருக்கும் இவ்விடயத்தில், நொபெல் பரிசும் இணைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.   

காலாகாலமாக, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகிவந்த பெண் சமூகம், பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த ஆண்டாக, 2017ஆம் ஆண்டை, அதாவது கடந்தாண்டை, குறிப்பிட முடியும். 

உலகளவில், #MeToo என்ற இயக்கம் உருவானது. “நானும் பாதிக்கப்பட்டேன்” என்ற அர்த்தத்திலான அந்த இயக்கம், உலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரின் மறுபக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தது.   

இந்த #நானும் என்கின்ற இயக்கத்தின் பயணம், மேற்கத்தேய நாடுகளிலேயே பெரும்பாலும் ஆரம்பத்தில் தங்கியிருந்தாலும், கீழைத்தேய நாடுகளையும் இப்போது பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், இப்போது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற பிரபலம் யார் தெரியுமா? கவிப்பேரரசு வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து, தமிழ் சினிமாவிலும் இலக்கியத்திலும் முக்கியமான ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனங்கள், எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. தன்முனைப்புக் கொண்ட ஒருவர் என்ற விமர்சனம், எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தன்முனைப்பை, வித்துவச் செருக்கு என்ற வகைக்குள்ளும் அடக்க முடியும் என்ற அடிப்படையில், அவரது கலையை இரசிப்பதை அவ்விமர்சனங்கள் தடுத்து நிறுத்தியதில்லை.   

ஆனால், இப்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள், தன்முனைப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிடையாது. பாலியல் குற்றச்சாட்டுகள். அதுவும், ஒருவர், இருவரால் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. ஏராளமான பெண்கள், அக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களில், பிரபல பாடகியான சின்மயியும் ஒருவர். சின்மயி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, 2005ஆம் அல்லது 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பானது என்று அவர் குறிப்பிடுகிறார். அதிலும், ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட இசைத்தட்டுக்கான வெளியீட்டு விழாவின் போது தான், முகவர் மூலமாக, வைரமுத்து தன்னை அணுகினார் என்றும், மறுத்த பின்னர் தனது இசை வாழ்க்கை முடிக்கப்பட்டுவிடும் என எச்சரிக்கப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டுகிறார். இது நடக்கும் போது, வைரமுத்துக்கு, 51 அல்லது 52 வயது இருந்திருக்கும்.   

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அண்மைய சில நாள்களில் சிக்கிய முதலாவது பிரபலம், வைரமுத்துவல்லர். இந்த #MeToo அல்லது #நானும், இந்திய அளவில், அண்மைய சில நாள்களில் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின், வெளிவிவகாரத்துக்கான இராஜாங்க அமைச்சர் தொடக்கம், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நகைச்சுவையாளர்கள் வரை, இக்குற்றச்சாட்டுகள் பாதித்திருக்கின்றன. 

மறுபக்கமாக, ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதியரசராக, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனோ மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை, அண்மைக்காலத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், கவனோவின் நியமனம் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், பெரியளவு கலந்துரையாடல்களை எழுப்பியிருந்தன.   

இவ்வாறு, பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, “குற்றச்சாட்டு முன்வைக்கும் போதெல்லாம் அனைவரையும் நம்பினால், ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்ற வழக்கமான நிலைப்பாடு எங்கே போனது?” என்ற கேள்வி எழுப்பப்படும். ஒரு வகையில் பார்க்கப் போனால், நியாயமான கேள்வியாகத் தான் இருக்கிறது.   

ஆனால், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையெல்லாம், அப்படியே நம்பிவிடுங்கள் என்பது, இங்கிருக்கும் நிலைப்பாடு கிடையாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, நிரபராதியாகக் கருதப்படுவதில் பெரிதாகப் பிரச்சினைகள் இல்லை. ஆனால், ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத பல பெண்கள், தனித்தனியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், குற்றஞ்சாட்டப்படுபவரை “நிரபராதி” என்று கருதுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால், நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகள் வேறானவை. ஆனால், பொதுமக்களின் மட்டத்தில், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, நம்பத்தகுந்ததாக எழுப்பப்பட்டால், அவர் மீது சந்தேகப் பார்வை எழுவது வழக்கமானது.   

“எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இவர், எமது வீட்டிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்” என்று யாராவது குற்றஞ்சாட்டினால், குற்றஞ்சாட்டப்படும் நபர் மீது, எமது சந்தேகம் விழும் தானே? அவர் தான் குற்றவாளி, அவருக்குச் சிறைத்தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று, நீதி அடிப்படையிலான எண்ணங்களில்லாமல், “இச்செயலை இவர் செய்திருப்பார்” என்று, குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை வைத்து எடைபோடுகிறோம், இல்லையா? அப்படியானால், பாலியல் குற்றச்சாட்டுகளின் போது மாத்திரம், அதே பாணியிலான எண்ணத்தை நாம் கொண்டிருப்பதில்லை?   

அதற்கு, முக்கியமானதொரு விடயம் இருக்கிறது. ஏனைய விடயங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, குற்றச்சாட்டை முன்வைப்பவரை, “பொய் சொல்கிறார். இவர் பொய்யர்” என்ற அடிப்படையுடன், முற்சார்பு எண்ணத்துடன் எதிர்கொள்வதில்லை. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போரை மாத்திரம், மேற்படி முற்சார்பு எண்ணத்துடன் தான் அணுகுகிறோம்.   

ஆகவே, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் அனைவரையும் நம்ப வேண்டுமா?” என்ற கேள்விக்கான பதிலாக, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும், அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால், குற்றச்சாட்டை முன்வைப்பவர் பொய்யர் என்ற முற்சார்பு எண்ணத்துடன் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதை நிறுத்துவோம்” என்பது தான் அமையும்.   
அதேபோல், “பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்ற, அடிப்படையற்ற வாதத்தையும் நிறுத்த வேண்டியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்கள் இவை: லாரி நாசர், பில் கொஸ்பி, பில் ஓ ரைலி, ஹார்வி வைன்ஸ்டீன், மோர்கன் ஃபிறீமன், சார்ளி றோஸ், அஸிஸ் அன்சாரி, மற் லவெர், றிச்சர்ட் பென்ஸன், அல் ஃபிராங்ளின், லூயிஸ் சி.கே, றோய் மோர், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பென் அஃப்ளெக்.   

இவர்களில் அநேகமாக எல்லோரின் பெயரையும், சர்வதேச ரீதியில் செய்திகள் பற்றிய அக்கறை கொண்டோர் அறிந்திருப்பர். ஆகக் குறைந்தது, இந்தப் பட்டியலில் காணப்பட்டோரில் சிலரின் பெயரையாவது, அறிந்திருப்பர்.   

ஆனால், இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் எத்தனை பேரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்? சர்வதேசச் செய்திகளை ஆழமாக வாசிப்பவர்களாலேயே, இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் ஒருவரின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பது, எந்த விதத்தில் நியாயமான விமர்சனமாக அமையக்கூடும்?   

கவிஞர் வைரமுத்துத் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, நடிகரும் அண்மைக்காலத் தமிழ்த் திரையரங்கில் முற்போக்குச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படுபவருமான சித்தார்த், முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார்: “குற்றஞ்சாட்டுபவர் தனது பெயரை வெளியிட்டால், பிரபலத்துக்காகச் செய்கிறார் என்கிறீர்கள். குற்றஞ்சாட்டுபவர் அநாமதேயமாக இருந்தால், அவரின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறீர்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார். நியாயமான கருத்தாகவே அது அமைந்திருந்தது. “என்ன செய்தாலும் குற்றஞ்சாட்டுபவரை நம்பமாட்டோம்” என்ற வீராப்பில் இருப்பவர்கள் தான், இப்படி இரு பக்கங்களையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.   

இன்றைக்கு வைரமுத்து மீதும் ஏனைய இந்தியர்கள் மீதும் எழுந்திருக்கின்ற இக்குற்றச்சாட்டுகள், நாளைக்கு இலங்கையையும் வந்தடையக்கூடும். ஏனென்றால், இலங்கையிலும் நிறைய வைரமுத்துகள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எனவே, நாம் தயாராக இருக்கிறோமோ?   

ஆனால், இதில் இலகுவான விடயம் என்னவென்றால், நாங்கள் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, நம்பிக்கையுடன் அவற்றைச் செவிமடுப்பது தான், நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கையாக இருக்கிறது. செய்வோமோ?     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வைரமுத்துவும்-சிக்கியிருக்கின்ற-நானும்/91-223464

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியான முறையில் மிகவு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தி. பொதுவாகவே இந்திய சினிமா என்பது இவற்றைப்போல் அசிங்கங்கள் நிறைந்தவைதான் உச்ச நட்சத்திரன் எனப்படும் கமல்காசன் ஆரம்பத்தில் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத நடிகைகளிலிருந்து சிறீவித்யா உட்பட இப்போது அவரது நண்பனின் மகள் காஜத்திரி ரகுராம் வரைக்கும் தொடுசல் வைத்திருந்தது ஊரறியும் அதேபோல் தமிழ் சினிமாவில் தொடர்புடையவர்கள் அனேகமாணோர் அம்மணமானவர்களே. சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப்பெற்ற சித்தார்த்துடன் ஊர் சுற்றிய விடையம் உலகப்பிரபல்யம் சமந்தாவின் திருமணத்தின்போது சித்தார்த் வெளியிட்ட ருவீற்றர் பிரியாணிக்கதை அதைவிடப் பிரபல்யம். 

கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கான பாடலாகிய ஒரு தெய்வம் தந்த போவே எனும் பாடலை  சின்மயி பாடியது ஒரு நடு இரவுப்பொழுதில் அப்போது அவர் பதினெட்டு வயதை எட்டவில்லை ஏ ஆர் ரகுமானது ரெகார்டிங் தெயேட்டரிலிருந்து வெளிவர அதிகாலை நேரமாகிவிட்டது காலப்போக்கில் அவர் ஏ ஆர் ரகுமானைக்கூட பாலியல் ரீதியில் என்னைத் தொந்தரவுசெய்தார் எனக்கூறக்கூடும். 


இது மிகவும் திட்டமிட்ட முறையில் அமீர்சா எனும் பஜக பிரமுகர் தலைமையிலான திராவிடத்துகெகிரானதும் தமிழ் நாட்டில் கீழ் சாதியினருக்கானதுமான பிரச்சாரமும் பழிவாங்கல் நடவடிக்கையுமே.

தமிழ்நாட்டில் மிகவும் பிரச்சனையான செய்திகளைத் தலைப்புச்செய்தியாகப் போடாத வடநாட்டு மீடியாக்கள் இச்செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கு.

காரணம் தமிழ்நாடு ஏதோ ஒருவிதத்தில் காலம்காலமாக வடநாட்டவர்களை வயித்த்ரிச்சல்படவே வைத்திருக்கு அதன் வெளிப்பாடே இவை யாவும் 

தவிர திராவிடத்துக்கு எதிரான காய்நகர்த்தல் என நான் கூறுயது உண்மையாகவிருந்தால் எனக்கு மிக்க மகிழ்சியே  திராவிடம் அழிந்து தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் வளரவேண்டும் என்பதே எனது எண்ணம்.

மற்றப்படி இத்திட்டமிடுதலில் வீணாகப் பலியாகப்போவது சின்மயி மட்டுமே வைரமுத்துக்கு அவரது தலையில் இருக்கும் டை அடித்த மயிர் ஒன்று களண்டுபோனதுக்குச் சமம் அவ்வளவே ஆனால் காலப்போக்கில் சின்மயி இச்செய்தியை வெளியிட்டதால் மிகவும் மனவுளைச்சலுக்குப் படிப்படியாக ஆளாவார் அதன்மூலம் அவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடலாம் அல்லது தற்கொலையே செய்துகொள்ளாம் அதுகூட பாஜகவுக்கு இனிப்பான விடையமே.

நான் நினைக்கிறேன் பாஜாக சின்மயியை ஏதோ ஒரு விடையத்தையிட்டு மிரட்டுகிறது அதன் வெளிப்பாடே இதுவாக இருக்கலாம். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.