Jump to content

1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும் -:

October 11, 2018

 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

IPKF1.png?resize=800%2C450

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்று முதல் செயற்படுத்தியுள்ளது என்பதற்கும் இது உதாரணம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் என்ற யாப்புத் திருத்தம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை பிரகாரம் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முகமாக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் குறித்த திருத்தம் குறைந்த அளவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறெனினும் இலங்கையில் நிலவும் இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலோ, தமிழ் மக்களின் தனித்துவமான ஆட்சிமுறை குறித்த கோரிக்கையோ உள்ளடக்கப்படாமையினால் குறித்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். இதனால் தமிழ் மக்களும் இதில் நம்பிக்கை இழந்தனர்.

இன முரண்பாட்டை, போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய நிலையில் பலவந்தமாக தீர்வொன்றை திணித்து, அதனை நடைமுறைப்படுத்த போரை இந்தியா தேர்வு செய்தது. ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம் நடந்தது. சில மாதங்களிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. மிகப் பெரிய அளவில் இந்தியப் படைகள் பவான்இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கிய நாளே இன்றாகும். இந்தப் போர் நடவடிக்கையே இலங்கை, இந்திய, ஈழவிடுதலை மட்டங்களில் பெரும் தாக்கங்களை பிற்காலத்தில் உருவாக்கும் வகையிலும் அமைந்தது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தவும் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கவும் விடுதலைப் புலிகளிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவுமே இந்தப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்திய அரசின் அறிவித்தலின்படி, அரசியல் தீர்மானத்தின்படி இப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் சண்டை மூண்டது.

IPKF2.png?zoom=3&resize=324%2C223

அத்துடன் விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பன் முனைகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று வாரமாக நடந்த சண்டையின் பின்னர் யாழ் குடாநாட்டை இந்தியப் படைகள் கைப்பற்றின. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ் குடா நாட்டைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் 3 ஆண்டுகள் போரிட்டது. முடியாத நிலையில் அமைதி காக்க வந்ததாக கூறிய இந்திய இராணுவம் போர் செய்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. அமைதிப்படைகளின் முகத்திரை கிழிந்த நாட்கள் இவை.

யாழ்ப்பாணமே போர்க்கோலம் பூண்டது. இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இந் நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து விடுதலைப் புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன.

இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். இந்தப் போர் நடவடிக்கையில் இந்தியப் படைகள் 600பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.

இந்திய இராணுவத்தினர் தமிழ்ப் பொதுமக்களை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு ஊரடங்குச் சட்டங்களால் இருண்ட வாழ்வில் தவித்த ஈழத் தமிழ் மக்களை மிக நீண்ட நாட்கள் ஊரடங்கில் தள்ளியவர்கள் இந்தியப் படைகளே. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் 35 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வந்த அனைத்து தமிழ் மக்களும் இந்தியப் படைகளால் சுட்டுக்கொன்றழிக்கப்பட்டனர்.

image-3.png?resize=500%2C328

வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதை அடுத்து 1987 ஜூன் மாதம் வடமராட்சியில் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து செக்மேட் இராணுவ நடவடிக்கையை மேற் கொண்ட இந்தியப் படைகள் முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற பவான்இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் பொதுஇடங்களில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

யாழ் மருத்துவமனை, வீடுகள், சந்திகள் எனப் பல இடங்களிலும் இந்திய இராணுவம் புகுந்து கோரத்தாண்டவம் ஆடியது. அக்டோபர் மாதமே இந்தியப் படைகளின் கோரத் தாண்டவங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த மாதமாக அக்டோபர் மாதம் ஆக்கப்பட்டது. அமைதி வரும், தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களுக்கு போரும், கொலைகளும் அழிப்பும், பதுங்குகுழி வாழ்வும் பரிதவிப்பும் வழங்கப்பட்டன.

இலங்கை அரசு தமிழரை அழிக்கிறது என்று போராடி நிலையில் தீர்வு காண வந்ததாக சொன்னவர்களே யுத்தம் செய்த கொடிய நாட்கள். அமைதியை ஏற்படுத்த வந்ததாக சொன்னவர்களே தமிழர்களை அழித்தனர். இலங்கை அரசின் போர் வெறி எண்ணங்களையும் இன அழிப்பு கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தின இந்தியப் படைகள் . தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மிகவும் சீண்டிய பவான் நடவடிக்கை இந்தியப் படைகளுக்கு, அரசுக்கு எதிராக தமிழர்களை திரளச் செய்தது. வரலாற்றில் மிகவும் தவறான அரசியல் முடிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கைமுள்ளிவாய்க்கால் என்ற கூட்டு இனப்படுகொலைக்கும் வித்திட்டது எனலாம்.

image-Copy.png?resize=424%2C311image-4-Copy.png?zoom=3&resize=335%2C172

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

http://globaltamilnews.net/2018/99015/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.