Jump to content

பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள்

பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள

சு. கஜமுகன் (லண்டன்)

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. 

ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள பி.ரி.ஐ கட்சியானது தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற உள்ளுரிலும் சர்வதேசத்திலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

அணு ஆயுத பலத்தைக் கொண்டிருக்கும் நாடான பாகிஸ்தானானது, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள் என் பல்வேறு நாடுகளை தொடர்புபடுத்தும் ஒரு முக்கிய கேந்திர நிலையமாகக் காணப்படுகிறது. எழுபது வீதமான உலக வர்த்தகங்கள், அதிலும்  குறிப்பாக எண்ணெய் விநியோகங்கள் பாரசீக வளைகுடா ஊடாக நடை பெறுவதை அறிவோம். ஆகவே பாரசீக வளைகுடாவின் முகத்துவாரத்தில் காணப்படும் பாகிஸ்தானின் புவியியல் அமைவானது பாகிஸ்தான் முக்கியம் பெறுவதற்கு இன்னுமொரு காரணமாகும். இதன் காரணமாக தமது அரசியல் பொருளாதார சுயநலன்களுக்காக இந்தியா , சீனா போன்ற அதனை சுற்றி உள்ள நாடுகளும், மேற்கத்தைய நாடுகளும் பாகிஸ்தானில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றன. அதனால் பயங்கராவதம், மத அடிப்படைவாதம், மத மற்றும் இன ரீதியான பிளவுகளை மறைமுகமாக ஏற்படுத்துகின்றன. இந் நடவடிக்கைகள்  பாகிஸ்தானின் பொருளாதரத்தை சிதைவடையச் செய்கின்றது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த முனையும், பாகிஸ்தானின் வளங்ககளை சுரண்டிக் கொண்டிருக்கும் பிற நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது இம்ரானின் கான் அரசு எதிர்நோக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகும். 

பாகிஸ்தானின் பொருளாதாரமானது நெருக்கடி நிலையிலேயே உள்ளது. வெளிநாட்டுக் கடன்கள் அதிகமாகவும், வெளிநாட்டு முதலீடுகள், வருமானங்கள் குறைவாகவும், இறக்குமதிகளுக்கு அதிகமாக செலவழிக்கப்படும் நிலையுமே  காணப்படுகின்றது. கடந்த எட்டு மாதங்களில் பாகிஸ்தான் நாணயத்தின் பெறுமதியானது நான்கு தடவை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே வெகுவிரைவில் பொருளாதார வெடிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. மேலும், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அண்ணளவாக வெறும் ஐந்து சதவீதமாகவே காணப்படுகின்றது. 2018 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 வீதமாகக் காணப்பட்ட போதிலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அதன் வளர்ச்சியானது மூன்று சதவீதத்தை தாண்டாது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.  

அமெரிக்கா, தற்பொழுது பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியைக் குறைத்துள்ளது. ஆகவே பாகிஸ்தானானது அதன் உள்கட்டுமான வளர்ச்சிக்கு முதலீடு செய்யும் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. சீன அரசானது, தனது புதிய பட்டுப்பாதை( New silk Route) திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, சீபெக் (CPEC- china Pakistan Economic Corriodor) என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் வீதிகள், பெரும் தெருக்கள், துறைமுகங்கள் போன்ற அபிவிருத்திக்கு 57 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில், பாகிஸ்தான் 7 பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது. இத்திட்டமானது பாகிஸ்தானில் கட்டுமானப் பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கின்றதோடு மட்டுமல்லாமல், கடனையும் அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் பணப் பற்றாக்குறையையும், நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே கடன் மற்றும் செலவீனங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் ஐ.எம்.எப் பிடம் கடன் கேட்டு நிற்கின்றது பாகிஸ்தான் அரசு. ஆகவே கல்வி, மருத்துவம், சுகாதாரம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்யாமல் வெறுமனே கட்டுமானங்களுக்கு மட்டுமே செலவு செய்கின்றமையானது, பாகிஸ்தான் அரசை மேலும் கடனுக்குள் தள்ளி விடும் முயற்சி ஆகும். இது ஒரு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி அல்ல, மாறாக பாகிஸ்தானை தனது சுய அரசியல் பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முனையும் சீன அரசின் நடவடிக்கை சார்ந்ததாகும்.

சவூதி அரேபிய அரசானது பாகிஸ்தானில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளன. சர்வதேச நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் தமது சுய லாபங்களுக்காக பாகிஸ்தானில் முதலிட முண்டியடிக்கிறார்களே தவிர இங்கு மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்த, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள எவரும் தயாராகவில்லை. ஆகவே இம்ரான் கானின் அரசானாது, வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொண்டு வெறுமனே வியாபாரத்தை மட்டும் விஸ்தரித்து, நாட்டின் கடனை அதிகரிக்கச் செய்யப் போகின்றதா அல்லது திட்டமிட்ட பொருளாதாரக்கொள்கைகளை அமுல்படுத்தி மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கப் போகின்றதா என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

ஆசியாவிலுள்ள மிகவும் வறுமையான, அபிவிருத்தி குறைந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அதன் பொருளாதாரமானது விவசாயத்துறை , ஆடை மற்றும் தோல் உற்பத்தித்துறை போன்றனவற்றிலேயே தங்கியுள்ளது. இவற்றில் முதலீடு செய்யாமல், இத்தகைய துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் வெறுமனே பெருந்தெருக்கள், துறைமுகங்கள், போன்ற  உள்கட்டுமானங்களை மட்டுமே அபிவிருத்தி செய்வதனால் பாகிஸ்தான் மக்களுக்கு என்ன பலன்?. பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டின் அதிகார சக்திகளே இதனால் பயன் அடைவார்களே தவிர, சாதாரண பாகிஸ்தானின் மக்கள் அல்ல. 

1980 முதல் இன்று வரை பாகிஸ்தான் அரசானது பதின்நான்கு தடவை ஐ.எம்.எப் மிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 7.6 பில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 6.6 பில்லியன் டொலர் களையும், ஐ.எம்.எப் பிடமிருந்து கடனாகப்  பெற்றுக் கொண்டது. இம்ரான் கானின் அரசானது பத்து முதல் பதினைந்து பில்லியன் டொலர்கள் வரையான கடனை பெறும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. ஐ.எம்.எப் ஆனது கடன்களை வழங்கும்பொழுது அதன் கொள்கைகளான கல்வி மருத்துவம் சுகாதாரத்துக்கான அரச செலவைக் குறைத்தல், பொதுத் துறைகளின் செலவைக் குறைத்து அவற்றைத் தனியார் மயபப்படுத்தல் போன்றனவற்றை அமுல்ப்படுத்த கோரி கடன் பெற்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும். ஆகவே ஐ எம் எப் பின் அழுத்தம் காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது இம்ரான் கான் வழங்கிய வாக்குறுதிகளான கல்வி சுகாதாரம் மருத்துவத்தை அரசே வழங்கும், மக்களின் கடன்கள் நீக்கப்படும், இஸ்லாமிய நலன்புரி அரசு உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரலாம். 

சர்வதேச சக்திகள், பாகிஸ்தான் இராணுவத்திற்கு நேரிடையாகவே நிதி உதவி வழங்குகின்றது. இங்கு மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமே. இராணுவத்தையும் மீறி வெளி விவகாரக் கொள்கைகளை இம்ரான் அரசு கையாள்வதென்பது மிகப் பெரும் சவாலான விடயமாகும். சதாரி ஜனாதிபதியாக இருந்தபோது பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ யினை உள்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும் என கட்டளையிட்டார். பின்னர் ஐ.எஸ்.ஐ யின் அழுத்தம் காரணமாக இருபத்து நான்கு மணித்தியாலங்களில் அவ்வறிவித்தலை மீளப் பெற்றுக் கொண்டார் என்பது கடந்த கால வரலாறு. ஆகவே இம்ரான் கானின் அரசு, மக்கள் நலனுக்காக இராணுவத்தை மீறி செயற்படுமா என்பது கேள்விக்குறியே. 

மேலும், பாகிஸ்தான் இராணுவமானது ஆப்கானிஸ்தான், காஸ்மீர் போன்ற பிரதேசங்களில் தனது படை பலத்தை விஸ்தரிக்கவே முயலும். யுத்தத்தை முன்னெடுக்க முனையும். ஆகவே இம்ரான் கானைப் பொறுத்தவரை, அதனைக் கட்டுபடுத்தி, அதன் போர் செலவைக் குறைத்து அதனை மக்களுக்கு பயன்படுத்தல் என்பது மிகப் பெரும் சவாலாகவே காணப்படும். பாகிஸ்தான் அரசையும் அதன் வெளியுறவுக் கொள்கையையும் கட்டுபடுத்தும் ஒரு அதிகார சக்தியாகவே காணப்படுகின்றது ஐ எஸ் ஐ. ஆகவே இம்ரான் கான் மக்கள் நலன் சார்ந்த, இராணுவத்திற்கு எதிரான கொள்கைகளை முன்னெடுக்க முயன்றால் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். 

மேலும், மின்சாரப் பற்றாக்குறை, பண வீக்கம், ஊழல், நீர் பற்றாக் குறை, சுத்தமான குடி நீர் இன்மை, கறுப்பு பணப்புலங்கள், வறுமை, வேலையில்லாப் பிரச்சனை, பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு நிதி பற்றாக்குறை, பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் போன்ற பிரதேசங்களில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் எழுச்சி என பல்வேறு நெருக்கடிகள் பாகிஸ்தானில் காணப்படுகின்றன. இவற்றினைத் தீர்ப்பதற்கும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இம்ரான் அரசு முயற்சி எடுக்க வேண்டும். புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் என்ற கோசத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இம்ரான் கான் 2018 முதல் 2023 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில் இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவாரா என்பது கேள்விக்குறியாகும். மக்கள் அமைப்பாக திரண்டு போராட்டங்களை முன்னேடுத்தாலே இவை சாத்தியப்படும்.  

 

http://ethir.org/pakisthan-imranhan2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.