Jump to content

இன்று உலக மனநல தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக மனநல தினம்

Mental-health-720x450.jpg

ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும்.

ஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது.

இன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நிலையிலும் உள்ளார்கள்.

அத்துடன் இணையத்தில் சித்திரிக்கப்படும் கனவு வாழ்க்கையை வாழ்வதற்கு முயன்று தோற்கும் பல இளைஞர்கள் மனமுடைந்து போவதும் அதன் விளைவாக அவர்களது மனநலம் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலையும் அதிகரித்துள்ளது.

மனநோயை சமாளிக்கத் தேவையான ஆதரவு மற்றும் கல்வி இன்னமும் இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என மனநல சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

நம் இளைஞர்கள் இன்றைய உலகில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்வான வளர்ச்சியை மேற்கொள்வதற்குத் தேவையானவற்றைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கவேண்டுமெனவும் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

‘நமது இளைஞர்களின் தேவைகளை வலியுறுத்தி இந்த ஆண்டு அனைத்தையும் நாம் பயன்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வுலகின் எதிர்காலம் இளைஞர்களையே சார்ந்திருக்கிறது என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த வருடத்தின் மனநல தினம் இளைஞர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், இளைஞர்களின் மனநல ஆரோக்கியம், இளைஞர்களின் தற்கொலை மற்றும் இளைஞர்களின் பாலின அடையாளம் குறித்து கவனம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே அதிகரித்துவரும் மனநோயை தடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மனநல ஆரோக்கியம் குறித்து இளைஞர்கள் தெளிவுபடுத்தப்படவேண்டுமெனவும் மனநலம் தொடர்பான ஆதரவு இளைஞர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டுமெனவும் உலக மனநல சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

http://athavannews.com/இன்று-உலக-மனநல-நாள்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.