Jump to content

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!

October 10, 2018

1 Min Read

chinmayi-vairamuththu.jpg?zoom=3&resize=

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார்.

அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இது என்றும் இவற்றை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் காலம் இதற்கு பதில் சொல்லும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.

இந்த விடயம் இணையத்தளங்கள், தமிழக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என பல்வேறு ஊடக தளங்களிலும் திசைமாறிய விவாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களை பகிர்ந்து பெண்களு்ககு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்க கொண்ட சமூக வலைத்தள செயற்பாடு, தமிழ் சூழலில் வைரமுத்து – சின்மயி ஆதரவு தரப்புக்களின் மோதலாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் இவ் விடயம் தொடர்பான போக்கை அவதானிக்கும்போது, எதற்காக இச் செயற்பாடு தொடங்கப்பட்டது என்பதையே மறக்க வைத்து தவறான பொழுதுபோக்கு ஊக்குவிப்பாக மாறியுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?: வைரமுத்து விளக்கம்!

October 10, 2018
Chinmayi-calls-him-liar-696x464.jpg

கவிப்பேரரசு வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி சுமத்திய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டையடுத்து, இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.

வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.pagetamil.com/18490/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு, கவிஞர் வைரமுத்து மறுப்பு..

வà¯à®°à®®à¯à®¤à¯à®¤à¯

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார்.

பிரபலமாகும் ஹாஷ்டாக்

#metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக  பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். 

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும்  இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

à®à®¿à®©à¯à®®à®¯à®¿

எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்

சின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

Chinmayi

இது தொடர்பாக ஊடகத்தினர் வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்து அது முடியாத நிலையில், புதன் கிழமையன்று வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். 

ஆனால், வைரமுத்து பொய் சொல்வதாக சின்மயி மீண்டும் தெரிவித்திருக்கிறார். 

Chinmayi

 

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலிருந்து வெளியாகும் பெரும்பாலான ஊடகங்கள் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் சின்மயி விமர்சனம் செய்திருக்கிறார். 

"வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துய்ப்பவர். இதை சாகும்வரை சொல்வேன். இது தொடர்பாக ஒரு டிக்கரைக்கூட வெளியிடாத தமிழ் செய்தி சானல்கள், தில்லி செய்திச் சானல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டதும் என்னிடம் 'பைட்' கேட்கிறார்கள். முடியாது" என்று கூறியிருக்கிறார். 

சின்மயிக்கு நடிகர் சித்தார்த், இயக்குனர் சி.எஸ். அமுதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

https://www.bbc.com/tamil/india-45808123

Link to comment
Share on other sites

 
இந்தியா ருடே வின் யுரியூப் பதிவின் கீழ் இருந்த கருத்துக்களில் சில.  
 
 
 
Quote

 

This vairamuthu is a wolf in a sheep skin. Earlier too, he stoked a controversy by using derogatory language on Andal,the Hindu Goddess.This fellow must be sued and punished.Shame on him.
----
This vairamuthu talking about Goddess Andal, shame on you man
------
Feeling ashamed of viramuththu... H.raja correct ah dhaan thittiyirukkan...
----
what kind of title is that "Chinmayi Sripaada opens up about being sexually harassed by Vairamuthu"?. she told that incident happened in 2004. Why she kept silent over 14 years?. Most importantly, In 2010, At her wedding ceremony, she got a blessing on his foot. I don't think any girls like getting a blessing who had tried before. Apart from that, she had no proof regarding her speculation. If she has, she should have gone to file a police complaint Instead of speaking in media. Finally, all I can say that vairamuthu sir has been the political target over the past years for trivial gain for the particular party which never done any good for us. Ok, Let's watch the game.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைம் லைட்டில் இல்லையென்றால் சனம் மறந்து விடுவினம் கண்டியளோ நல்லதோ கெட்டதோ சனம் பேசிக்கொண்டே இருக்க வேணும் ..முன்னர் இப்படி தான்  இட ஒதுக்கீடு விவகாரத்தில் முகநூலில்   அலப்பறை செய்து சாதி ரீதியாக தான் சார்ந்த அப்போதைய முதல்வர் ஜெ வை துணைக்கு  அழைத்து திருப்பத்தூர் சார்ந்த அரசு உத்தியோகத்தர் ஒருவரை களி தின்ன வைத்தவை.. யார் கண்டது இரண்டும் சொல்லி வைத்து கொண்டு கூட லைம் லைட்டுக்கு வந்திருக்கலாம் . இது பிரியாமல் ஆரியம் / திராவிடம் , பெண்ணியம் /ஆணியம் என புடுங்கு படுறவை பேக்கியமாகவும் இருக்கலாம் . வேறு முக்கிய விடயத்தை மறக்கடிக்க முயற்சியாகவும் இருக்கலாம் யார் கண்டது அவயாளுக்கு தான் உண்மை வெளிச்சம் .

டிஸ்கி:

"எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் காலநேரத்தை கருத்தில் கொள்க"  ?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிம்யி தனது மீரூ இயக்கத்திற்கு கொடுக்கும் விளம்பரமாகும்.

ஒருவேளை வைரமுத்து சின்னப்பொண்ணுன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கலாம்.. அதை எல்லாம் பாலியல் துன்புறத்தல் என்ற கோணத்தில் பார்ப்பதற்கு தனி விசாரணையும் தீர்ப்பும் வரணும்.

இப்ப எல்லாம்.. சுதந்திரப் போராளிகளையே பயங்கரவாதம் என்று சொல்லிக் கொள்ளும் உலகில்........ சிம்யீ.. தனது ருவிட்டருக்கும்.. சமூக வலைக் கணக்குகளுக்கும் பார்வையாளர்களை இழுக்கச் செய்யும் ஒரு தந்திரமே இது. 

பலிக்கடா.. வைரமுத்து. ?

இதுதான் சொல்லுறது அவளைத் தொடுவானேன்.. அவஸ்தைப் படுவானோன். எப்பவுமே ஆண் என்பவன் பிற மனிதர்களிடம் இருந்து ஒரு சில அடிகள் தள்ளி இருப்பது அவனுக்கும் பாதுகாப்பு.. அவனின் சுயத்துக்கும் செக்கியூரிட்டி. 

இப்ப எல்லாம் ஒரு பெண்ணை தொட்டுப் பேசினாலும்.. பாலியல் துன்புறுத்தல்..

குழந்தையை தொட்டா.. சிறுவர் துன்புறுத்தல்..

ஒரு நண்பனை தொட்டா.. கேய்.. 

இப்படி மனித சமூகம் தனது சமூக வாழ்வியல் நடத்தையை ஒழுக்கத்தை இழந்து தொடர்வது.. சீக்கிரம் மனித இனம் அழிவை சந்திக்கப் போகிறது.. என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். அதற்கு தீனி போடுது.. சமூக ஊடகங்கள் என்ற பெயரில் நச்சுக்களை விதைக்கும் வியாபார தந்திரங்களே ஆகும். 

குற்றங்களுக்கும்.. நடத்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து செல்வதை ஊடகங்கள் சிலவும் தவறான நடத்தை உள்ள மனிதர்களும் தம்மை நியாயப்படுத்த இதை இப்போ கையில் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.

ஒழுக்கமா உள்ள மனிதர்கள் ஒழுக்கமா கம்முன்னு தானும் தம் பாடுமுன்னு போய்க்கிட்டே இருக்கார்கள். 

Link to comment
Share on other sites

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

கண்களால் பேசியிருப்பான்....கவிஞன்,

 

ஐயோ...என்னை அழைக்கிறானே...,

என்று அழுது புலம்புகிறாள்..சின்மயி !

 

உன்னைத் தொட்டானா.....இல்லை,

உனது புடவையாவது களைந்தானா என்றால்..,

இல்லைவே....இல்லை!

காலம் கடந்து விட்டது,

இப்போது நினைவில்லை..என்கிறாள்!

 

ஆரியம்......,

சீதையைக் காட்டடித் தானே....,

இராவணனை அழித்தது!

அடியே...இலக்குவன் கீறிய கோட்டை,

எதற்காகத் தாண்டினாய் என்றால்...,

ஐயோ...ஐயோ....நினைவில்லை என்றாள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

 

 

 

 

 

 

இதைப் படித்துப் பார்க்கையில்,

1) வைரமுத்து இவரை தொட்டதில்லை.

2) தொட்டுவிட ஒரு அழைப்பை விடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

இது Me Too இயக்கத்துக்கு போதுமானதல்ல. இளையோர்கள் let’s have a drink tonight என இன்றைய காலங்களில் அழைப்பதுகூட வில்லங்கம் ஆகிவிடுமே, இதன் அடிப்படையில் பார்த்தால்?!

 

இது உண்மையிலேயே பாலியல் துன்பத்துக்கு ஆளானவர்களின் முயற்சிகளை நீர்த்துப் போக செய்வதில் போய் முடியப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த maybe எல்லாம் நம்பிக்கை கிடையாது..  அதுவும் பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் விடயம்( ? )போக இங்க இவ்வளவு அமளி துமளி நடக்கு .. யாருப்பா ?

memees.php?w=240&img=b3RoZXJfY29tZWRpYW5

Link to comment
Share on other sites

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

Link to comment
Share on other sites

26 minutes ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

 

சின்மயியே பிஜேபிக்கு சொம்பு தூக்குது.. இது சின்மயிக்கு சொம்பு தூக்குது!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

ஐயோ ஐயோ .... இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா?

இந்த பொண்ணு என்ன நிரூபிக்க போகிறா என்றால் இது வைரமுத்துவின் 
கவிதை என்று நிரூபிக்க போகிறாவாம்.
வைரமுத்துவின் கவிதையை நீங்க ... லாபகமாக சொருகுவதில்லை 
என்பதுக்கு என்ன ஆதாரம்?

முதல்ல பிரண்டுக்கு நடந்த கொடுமை என்று தொடங்கி ....
2 நிமிடம் பேசும்போதே எனக்கு நடந்த கொடுமை என்கிறது. 

ஊர் இல்லை பேர் இல்லை ... இதுக்கெல்லாம் வைரமுத்து பதில் சொல்ல வேண்டுமா? 

இந்த கூட்டத்தால் உண்மையாக பாதிக்கபடும் பெண்களுக்கும் நியாயம் தழுவ போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

வைர முத்துவின் கள்ளிக்காட்டு இதிகாச நூல் வெளியீட்டிற்கு சென்ற எனது மாமிக்கும் இவ்வாறு நடந்தது 
நள்ளிரவில் போனில் தொடர்பு கொண்டு ஒரு கவிதை வாசித்தார் 
கவிதையின் ஹைலைட் :

ஒரு குச்சி ஒரு குல்பி ..!
நீ செருப்பு நான் பருப்பு ...!
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால,

குறுக்கு சிறுத்தவளே.....

உன் மார்புக்கு நடுவில செத்துவிட தோனுதடி எனக்கு..

என்று முதல்வன் படத்தில எனக்கு பாடினார் என்று மணிசா கொய்ரால வந்து #Metoo போடப்போகுது...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்   என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................
    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.