Jump to content

இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு

 

அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களையடுத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டம் காட்டியதற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதென்பது உண்மையிலேயே ஒரு பாசாங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது. இரு தரப்புகளுமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.ranilwikramasinga.jpgஅதனால் 2015 ஜனவரியில் நிலவிய உற்சாகமான நாட்கள் ஒரு முடிந்த கதையாகிப்போய்விட்டன. வரலாற்றில் முதற்தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் ஒன்றாக இணைந்திருக்கக்கிடைத்த வாய்ப்பும் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்ற சூழ்நிலையும் புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான அருமையான சந்தர்ப்பமாகும். ஆனால், அது இப்போது தவறவிடப்பட்டுவிட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 14 மாதங்கள் தான் இருக்கின்றன. அத்தகைய பின்புலத்தில் இப்போதுள்ள பிரச்சினை இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஆட்சி செய்வதென்ற பாசாங்கை இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ' நயநாகரிகத்துடன் ' தொடரக்கூடியதாக இருக்குமா என்பதேயாகும்.

இத்தகைய ஒரு கட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20 ஆவது  திருத்த யோசனை முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் விளைவும் தாக்கமும் ஒரு புறமிருக்க, ஜே.வி.பி.யின் திருத்த யோசனை நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணியைக் கையாளுவதாக அமைகிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். 

அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதென்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று 2015 தேசிய தேர்தல்களில் அதன் தலைவர்கள் நாட்டு  மக்களுக்கு உறுதியளித்தார்கள். அவர்கள் மாத்திரமல்ல, இதுகால வரையில் நடைபெற்றிருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களாக நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாகவே வாக்குறுதி அளித்தார்கள்.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் 1978 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருப்பதுடன் இனிமேல் ஜனாதிபதி பதவிக்கு வரப்போகிறவர்  தனக்கு முன்னதாக பதவியில் இருந்த ஜனாதிபதிகள் அனுபவித்திருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்றாலும் தற்போதைய வடிவில் இருக்கின்ற ஜனாதிபதி பதவிகூட மாகாணங்களுக்கு பயனுறுதியுடைய வகையில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்து சிறப்பான ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு   தடையாகவே இருக்கிறது.

தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் ஜே.வி.பி.யின் 20 ஆவது திருத்த யோசனை மாத்திரமே  அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை தற்போது அரசியல் அரங்கில் பேசு பொருளாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பல்வேறுபட்ட காரணிகள் அரசியலமைப்புச் சபையை ஒரு ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதால், 20 ஆவது திருத்த யோசனை இயல்பாகவே அதற்கென ஒரு பொருத்தப்பாட்டை பெற்றிருக்கிறது எனலாம். அரசாங்கத்தின் பங்காளிகளில் ஒரு பிரிவினர் அந்த யோசனையை விரும்பாதவர்களாக இருக்கின்ற அதேவேளை, மறுபிரிவினர் அந்த யோசனை சாத்தியமாகக்கூடியதாக எதையும் செய்வதற்கு முன்வராவிட்டாலும் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தயார் என்ற மனநிலையில் இருக்கின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படுமோ இல்லையோ 2019 ஜனாதிபதி தேர்தல் மீது கவனம் திரும்பியிருக்கின்றது என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அந்த பதவியின் மிகுந்த  முக்கியத்துவம் மாத்திரம் அல்ல, இத்தடவை தேர்தல் ராஜபக்ஷாக்களின் கதியை, அதாவது மீண்டும் அவர்கள் அதிகாரத்துக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்பைத்  தீர்மானிக்கப்போகிறது.

ஜனாதிபதி தேர்தல் மீதான கவனக்குவிப்பு எம்மை மீண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் காணக்கூடியதாக இருந்தததைப்போன்ற பிரசாரங்களுக்கு கொண்டுசெல்லப்போகிறது. வவுனியாவுக்கு தெற்கே பிரசாரம் ராஜபக்சாக்களின் கொள்ளை பற்றியதாகவும் வவுனியாவுக்கு வடக்கே பிரசாரம்  மனித உரிமை மீறல்களைப் பற்றியதாகவும் இருக்கப்போகிறது.

நிலைமாறுகால நீதியைப் பொறுத்தவரை, ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடரில் தனது உரையின்போது என்ன கூறப்போகிறார் என்று ஒருவித பதற்றநிலை காணப்பட்டத் அதை விளங்கிக்கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. 2015 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் ஏற்பாடுகளை கைவிட்டு மனித உரிமை மீறல்களிலோ போர்க்குற்றங்களிலோ ஈடுபட்டிருக்கக்கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி தனதுரையில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு அவர் செய்திருந்தாரென்றால், அது முன்னொருபோதும் இல்லாத ஒன்றாக அமைந்திருக்கும்.

எது எவ்வாறிருந்தாலும், நிலைமாறுகால நீதி தொடர்பிலான செயற்பாடுகள் ( 30/1 தீர்மானம் மீதான மார்ச் 2019 காலக்கெடு நெருங்கும் நிலையில் ) தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கலாம்.காணாமல் போனோர் விவகார அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது. அதை ஆராய்வதற்கென்று அவர் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். இழப்பீட்டு அலுவலக சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இம்மாதம் எடுக்கப்படவிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு தொடர்பான சட்டமூலமும் இம்மாதம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரங்கள் சகலது தொடர்பிலும் ஜனாதிபதி சிறிசேன எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதே இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும். ராஜபக்ஷாக்கள் எடுத்ததைப்போன்ற சிங்கள வலதுசாரி சக்திகளுக்கு விருப்பமான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுப்பாரா அல்லது 2015 அக்டோபர்  ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஒரு அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாரா? 

ஜனாதிபதி சிறிசேன அண்மைக்காலத்தில் தனது அதிகாரத்தை வெளிக்காட்டி தனமுனைப்புடன் சில நடவடிக்கைகளை எடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஸ்ரீலங்ஙன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மரமுந்திரிக்கொட்டை தரங்குறைந்ததாக இருந்ததகை் கண்டித்தது. ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்து இலங்கைத் தூதுவர் உட்பட தூதரக உத்தியோகத்தர்களைத் திருப்பியழைத்தமை, முப்படைகளினதும் பிரதான தலைமை அதிகாரி இரகசியப் பொலிசார் முன்னிலையில் ஆஜராகவேண்டியிருந்த சூழ்நிலையில் அவர் ஜனாதிபதிக்கு தெரியத்தக்கதாக நாட்டுக்கு வெளியே உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் பங்கேற்றைமை போன்ற சம்பவங்களை உதாரணத்துக்குக் கூறலாம்.இவையெல்லாம் ஆட்சி நிருவாக விவகாரங்களில் தனது அதிகார முத்திரையைப் பதிப்பதில் அவர் நாட்டம் கொண்டிருப்பதுடன் அரசாங்கப்பங்காளியான ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து தன்னை தூரவிலக்கிக்கொள்வதில் அக்கறையாக இருக்கிறார் என்பதையே வெளிக்காட்டுகின்றன. அதே போன்றே சுதந்திர கட்சியின் அதிருப்தியாளர்கள் மத்தியில் இருந்த கட்சி அமைப்பாளர்களை நீக்கிவிட்டு வர்களின் இடத்துக்கு ஜனாதிபதி தனது விசுவாசிகளை நியமித்த செயலையும் நோக்கவேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடத்துக்கும் சற்று கூடுதலான காலமே இருக்கிறது.அதற்கு முன்னதாக மாகாணசபைகள் தேர்தல்களுக்கான சாத்தியமும் இருக்கிறது. இவையெல்லாவற்றுடனும் சேர்த்து தற்போதைய அரசியலில் அதிகாரச் சமநிலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் சுவாரஸ்யமானதாக இருக்கப்போகிறது. அதற்குக் காரணம் முடிவுகளை முன்கூட்டியே துணிந்து சொல்வது சிரமம் என்பது மாத்திரமல்ல, களத்தில் இறங்கக்கூடிய வேட்பாளர்கள் யார் யார் என்பது இன்னமும் தெரியாமல் இருப்பதும்தான். எது எவ்வாறிருந்தாலும் அரசாங்கம் அதன் 2015 சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தில் எவையெல்லாவற்றையும் செய்யமுடியுமோ அவற்றைச் செய்வதில்தான் அதன் எஞ்சியிருக்கக்கூடிய ' நம்பகத்தன்மை' தங்கியிருக்கிறது.

- கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

http://www.virakesari.lk/article/42070

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.