Jump to content

யாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்…


Recommended Posts

54 minutes ago, தமிழ் சிறி said:

அண்டைய தேசத்தை,  சிந்திக்க வைக்கும்.

அண்டை தேசத்தை அந்தளவுக்கு மதிப்பிட்டால் அது தவறு என வரலாறு சொல்லும்!
ஹிந்தி வெறியும்  தமிழின விரோத வெறியும்  தலைக்கு மேலேறி எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ள அண்டைதேசம் இந்த(து) மத ஐயர்கள் ஊர்வலத்தில் முன்னிப்பதை கணக்கிலெடுக்காது.

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து புதனன்று முடிவு – சம்பந்தனுக்கு மைத்திரி உறுதி

 

maithri-sampanthan-1-300x200.jpgஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விவகாரத்துக்கு அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வலியுறுத்தினர்.

அரசியல் கைதிகள் 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரிடம் கோரினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், எதிர்வரும் 17ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இதுகுறித்து பேச்சு நடத்தி தீர்வு ஒன்றை எட்டலாம் என்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபரின்  உறுதிமொழியை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன், போராட்டத்தைக் கைவிடுமாறும், கோரியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/13/news/33438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய நடைபயணம் அநுராதபுரத்தை சென்றடைந்தது

anuradapura-prison-2-720x450.jpg

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த நடைபவணி, அநுராதபுரத்தைச் சென்றடைந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை அநுராதபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்த பேரணி குறித்த பேரணி, இன்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த 9ஆம் திகதி இந்த நடைபவணி ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, நேற்றிரவு மதவாச்சியை சென்றடைந்தது. அதன் பின்னர் அங்கிருந்து நேற்றிரவு அநுராதபுரத்தை நோக்கி நடைபவணி ஆரம்பமானது.

தற்போது அநுராதபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ள இப்பேரணி இன்று நண்பகல் 2 மணியளவில் அநுராதபுர சிறைச்சாலைக்கு எதிரில் தமது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளது.

இதன்போது, கிழக்கு பல்லைக்கழக மற்றும் ஏனைய பல்கலைக்கழ மாணவர்களும், பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வருகைத்தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைபயணத்தில் மதத்தலைவர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

anuradapura-prison-3.jpg

anuradapura-prison-1.jpg

 

http://athavannews.com/அரசியல்-கைதிகளின்-விடுத-28/

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகள் விடுதலையை வரவுசெலவுத் திட்டத்துக்கான ஆயுதமாக்குங்கள் – முதல்வர்

 

CM-metting-300x200.jpgஎதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று வடக்கு மாகாண முதல்வரின் செயலகத்தில், கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

CM-metting.jpg

“அரசியல் கைதிகளின் விடுதலையை, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு நிபந்தனையாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்று கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழக்குகளில் உதவுவதற்கான சட்டவாளர்கள் குழுவொன்றை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீண்ட உண்ணாவிரதப் போராட்டங்களினால் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதைக் கருதியும், அவர்களின் போராட்டத்தை வெளியில் இருந்து நாம் முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தும், உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம், அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று கோரிக்கை விடுப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

walk-to-Anuradhapura-1.jpg

walk-to-Anuradhapura-2.jpgwalk-to-Anuradhapura-3.jpgஇதற்கிடையே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, நேற்று வவுனியா, மதவாச்சி பகுதிகளைக் கடந்து சென்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். இன்று இந்தப் பேரணி அனுராதபுர சிறைச்சாலையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Link to comment
Share on other sites

 

கொட்டும் மழை - #எல்லாளன் தேசத்துள் நுழைந்தனர் பல்கலைக்கழக #மாணவர்கள்

 

43877823_2103528836363875_53183886131451

போராட்ட வடிவங்கள் மாறலாம் போராட்டம் மாறக்கூடாது! போராட்டம் கடினமானது என்றாலும் அதை இனிமையாக்கும் அழகான நிகழ்வுகள், நினைவுகள் போராட்டத்தை இனிமையானது என எண்ண வைக்கின்றன. மென்மேலும் வலு சேர்க்கின்றன.

அதனால் தான் சாதாரண மனிதர்களுக்கு வராத மனதுணிவும் மன உறுதியும் போராடும் மக்களுக்குள் அதிகமாக பிறக்கின்றன!

அவையே அவர்களை மென்மேலும் போராட தூண்டுகின்றன!

நன்மைக்காக நிகழ்த்தும் போராட்டங்கள் யாவுமே இன்பமயமானவையே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைகழக மாணவர்களின் நடைபயணத்தில் நேரில் சென்று கைகோர்த்த டக்ளஸ் தேவானந்தா!

October 13, 2018
44077173_1881504845300093_13605013800112

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள பல்கலைகழக மாணவர்களிற்கு ஈ.பி.டி.பியும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அநுராதபுரத்திற்கு நேரில் சென்று, நடைபயணத்தில் ஈடுபடும் மாணவர்களிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த மக்ளஸ் தேவானந்தா- “தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

 

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவு செலவுத்திட்டம் மீதான ஆதரவு நிபந்தனையாக அரசுக்கு முன்வைக்க வேண்டும். தமது பிர்ச்சனை களைக்கான தீர்வுகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர் இந்த நிலையில் தாமே இந்த அரசை ஆட்சிபீடம் ஏற்றியதாக தம்பட்டம் அடிக்கும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் கண்மூடித்தனமாக அரசுக்கு முண்டு கொடுப்பது கண்டிக்கத்தக்கதாகும்“ என்றும் தெரிவித்தார்.43950770_903221366541461_15811109062914844049118_186497095582153_826395147908625

 

http://www.pagetamil.com/18859/

Link to comment
Share on other sites

 

சிங்கள் இளைஞர்கள் ஊர்வலம் போனவர்களுடன் முரண்படுகின்றனர்.  அவர்கள் கேட்கின்றனர் "...நீங்கள் எல்லாம் என்ன பொன்னையர்களா... ஒருத்தருக்கும் சிங்களம் தெரியாதா..வந்து ஒருவராவது எம்முடன் பேசுங்கள்' என்று கேட்கின்றனர்

கூட்டிக் கொண்டு போன தலைவர்களில் ஒருவர் கூட அவர்களுடன் பேசத் தயாரில்லை. சிங்கள மக்களுக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சனையை புரிய வைக்கவே சிங்கள பகுதிகளினூடாக இந்த ஊர்வலம் என்றவர்களில் ஒருவர் கூட சிங்களத்தில் கதைக்க தயாரில்லை. இது கொஞ்சம் முற்றி சிங்கள தமிழ் இளைஞர்கள் கைகலக்கும் சந்தர்ப்பம் உருவாகியிருந்தால் அங்கு போன தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை எந்தளவுக்கு உயிராபத்தில் சிக்கி இருக்கும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே குறித்த தர்க்கம் ஏற்பட்டது.

சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலை மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர்.

குறித்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.

http://globaltamilnews.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

 

சிங்கள் இளைஞர்கள் ஊர்வலம் போனவர்களுடன் முரண்படுகின்றனர்.  அவர்கள் கேட்கின்றனர் "...நீங்கள் எல்லாம் என்ன பொன்னையர்களா... ஒருத்தருக்கும் சிங்களம் தெரியாதா..வந்து ஒருவராவது எம்முடன் பேசுங்கள்' என்று கேட்கின்றனர்

கூட்டிக் கொண்டு போன தலைவர்களில் ஒருவர் கூட அவர்களுடன் பேசத் தயாரில்லை. சிங்கள மக்களுக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சனையை புரிய வைக்கவே சிங்கள பகுதிகளினூடாக இந்த ஊர்வலம் என்றவர்களில் ஒருவர் கூட சிங்களத்தில் கதைக்க தயாரில்லை. இது கொஞ்சம் முற்றி சிங்கள தமிழ் இளைஞர்கள் கைகலக்கும் சந்தர்ப்பம் உருவாகியிருந்தால் அங்கு போன தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை எந்தளவுக்கு உயிராபத்தில் சிக்கி இருக்கும்?

 

உங்கள் போன்றவர்களின் இப்படியான நிலைப்பாடுகளுக்கு ஒத்த காரணிகள் தான் சிங்கள பேரினவாதம் இந்த நவீனத்துவ உலகிலும் வாழ முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவில் ஆயுதம் வாங்க சிங்களவன் என்ன சிங்களமா பேசிறான். ஹிந்தியாவில்.. சீனாவில்.. ரஷ்சியாவில்.. இஸ்ரேலில்.. அங்கெல்லாம்.. ஆங்கிலத்தில் பேசி தானே தன் கருத்துக்களை பேசி எங்களை பயங்கரவாதி ஆக்கினான்.

சிங்கள மக்களுக்கு எங்கட பிரச்சனை கடந்த 60 வருசமா விளங்கல்லைன்னா.. அது எனியும் விளங்கப் போவதில்லை.. அல்லது அதற்கான இடம் வழங்கப்படப் போவதில்லை.

சிங்கள ஆட்சியாளர்களும்.. இராணுவமுமே எமது இளையவர்களை கைதிகளை சிறை வைத்துச் சித்திரவதை செய்கிறது. தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் மன்னிப்பு என்று விடுவித்து விட்டு... வேண்டாதவர்களுக்கு புனர்வாழ்வு என்றும்.. சிறை என்றும்.. உலகை ஏமாற்றி வருகிறது. அதற்கு உலகம் ஒத்தூதுகிறது.

ஆகவே எமது குரலை பதிவு செய்ய வேண்டிய இடம்... எமது எதிர்ப்பை காட்ட வேண்டிய இடம்.. சர்வதேசத்தின் பார்வையை இழுக்கக் கூடியதும்.. சிங்கள ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக் கூடியதுமாக அமைவது முக்கியம்.

அந்த வகையில் இந்த போராட்ட வடிவம்.. வழமையாக சாதாரணமாகக் கடந்து போகும் வடிவத்தை விட வேறாக அமைவது தான் இங்கு எல்லோரினதும் கவனத்தை ஈர்கக் காரணமே தவிர.. சிங்களம் பேசி எமது உரிமைகள் பெறப்பட்டிருக்க முடியுமானால்... சிங்கள தேசத்தில் வாழ்ந்து கொண்டு எமக்கான அரசியலை முன்னெடுத்த பலரும் அதை சாதித்திருக்க முடியும். ஏன் சாதிக்க முடியவில்லை..????! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

 

சிங்கள் இளைஞர்கள் ஊர்வலம் போனவர்களுடன் முரண்படுகின்றனர்.  அவர்கள் கேட்கின்றனர் "...நீங்கள் எல்லாம் என்ன பொன்னையர்களா... ஒருத்தருக்கும் சிங்களம் தெரியாதா..வந்து ஒருவராவது எம்முடன் பேசுங்கள்' என்று கேட்கின்றனர்

கூட்டிக் கொண்டு போன தலைவர்களில் ஒருவர் கூட அவர்களுடன் பேசத் தயாரில்லை. சிங்கள மக்களுக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சனையை புரிய வைக்கவே சிங்கள பகுதிகளினூடாக இந்த ஊர்வலம் என்றவர்களில் ஒருவர் கூட சிங்களத்தில் கதைக்க தயாரில்லை. இது கொஞ்சம் முற்றி சிங்கள தமிழ் இளைஞர்கள் கைகலக்கும் சந்தர்ப்பம் உருவாகியிருந்தால் அங்கு போன தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை எந்தளவுக்கு உயிராபத்தில் சிக்கி இருக்கும்?

 

நாங்கள் இறங்கிப்போகோணும் அவையள் இறங்கி வரமாட்டினம்? சிங்களப்பகுதியள்ளை இருக்கிற தமிழர் எல்லாம் சிங்களத்திலைதான் கதைக்கினம் வியாபாரம் செய்யினம் தொழிலும் செய்யினம். சுமந்திரனுக்கு சொம்பு தூக்கிறதிலையே கொஞ்சச்சனம் திரியுது.

17 hours ago, தமிழ் சிறி said:

சைவ  குருமார்களின்,  ஒத்துழைப்புக்கு  மிக நன்றி.
நீங்கள்,  நடந்து வரும் நடை.... அண்டைய தேசத்தை,  சிந்திக்க வைக்கும்.
படத்திற்கு, மிக்க நன்றி.. குமாரசாமி அண்ணா.

இது வினோத சம்பவமில்லை சிறித்தம்பி! நாதாரி ஊடகங்கள் தான் முள்ளிவாக்காய்க்கால்  சம்பவத்தையே மூடிமறைத்தது......இப்ப எங்கடை பிரச்சனைகளை வெளியில் கொண்டுவர பல ஊடகங்கள் கைவசம் இருக்கின்றன. எமக்கு தெரியாத போராட்டங்களையெல்லாம் இந்த கெட்ட ஊடகங்கள் தான் வெளியே தெரியப்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people sitting

நாங்கள் பாதுகாப்பாக யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளோம் ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

கி.கிருஸ்ணமீனன்
தலைவர் 
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவித அழுத்தத்தையும் அரசுக்குக் கொடுக்க தமிழ்த் தலைமைகள் தவறியதால் சிங்கள அரசு வழமைபோல் கண்டுகொள்ளவில்லை.

கூட்டமைப்பு வழமைபோல் நல்லாட்சி அரசின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கும்!

அனுராதபுரம் அதிர்ந்தது என்று சொல்லி போனவர்கள் ஆறுதல்படவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொளியை இப்போதுதான் பார்த்தேன்.

நீதிவிசாரணைகள் ஏதுமின்றி வேண்டுமென்றே சிறைகளில் அடைபட்டிருக்கும் உறவுகளுக்காக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் அநுராதபுரத்தை அடைந்தபோது வெறும் இரண்டு சிங்கள இளைஞர்களால், சிறை வாசலிலேயே வைத்து தடுத்து, மிரட்டப்பட்டு திருப்பியனுப்பப்படுகிறது.

"சிங்களம் பேசக்கூடியவர்கள் இருக்கிறீர்களா, சிங்களமும் தமிழும் பேசுபவர்கள் இருக்கிறீர்களா? இங்கே அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறீர்களா? இங்கே நிற்கவேண்டாம், திரும்பிப் போங்கள், திரும்பிப் போங்கள் " என்று ஒருவன் தனியாளாக வந்த மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்து ஏகதொணியில் கேட்கிறான். பதில்சொல்ல எவறுமில்லை.

"இங்கே அரசியல் கைதிகள் என்று எவருமில்லை, இருப்பது பயங்கரவாதிகள். இவர்களை என்ன செய்ய வேண்டுமென்பதை அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அரசாங்கம் எடுத்த முடிவை மதிக்கவேண்டும். அப்படியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால், நீங்கள் தேசத் துரோகிகள், தேசத் துரோகிகள்"  என்று இன்னொருவன் கூக்குரலிடுகிறான்.

இதற்கிடையில் சிங்களம் தெரிந்த தமிழ் மாணவன் ஒருவன் முன்னால் வந்து நிலைமையை விளக்க முற்பட்டாலும்கூட, "நான் சொல்வதைக் கேள், திருப்பிப் பேசாதே, உன்னுடைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு திரும்பிப் போ" என்று அதட்டும் தொனியில் முதலாவது சிங்களவன் கூறவும், "தம்பி, இஞ்சால வா, நாங்கள் போவம் "என்று யாரோ ஒருவர் தமிழில் மெல்லிய குரலில் கேட்பது புரிகிறது. பின்னர், தமிழ் மாணவர்கள் மெதுவாகக் கலைந்து செல்கிறார்கள்.

இந்தச் சம்பவம் போதும் இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள.

நடக்கும் அநீதிக்கு நீதிகேட்டுப் போனவர்களை, ஒரு சிறிய இனவாதிகளின் கூட்டம் விரட்டுகிறது, காவல்த்துறை வேடிக்கை பார்க்கிறது, மீதிச் சிங்களம் அமைதியாக நடப்பதை ஆமோதிக்க, நீதிகேட்டுச் சென்றவர்கள் நாய்களைப் போல விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

ஏன், இந்த மாணவர்கள் சென்றது யாருக்காக? சிறையில் வாடுபவர்கள் அவர்களது உறவினர்களா? அவர்களை விடுவிக்கவேண்டுமென்பதில் இந்த மாணவர்களுக்கு இருக்கும் அக்கறை என்ன?

மேடைக்கு மேடை அரசியல் சாணக்கியம் பேசும் அதிமேதாவித் தமிழ் தெருப்பொருக்கிகளும், அரசுக்கு முண்டுகொடுக்கும் சுயநலத் துரோகிகளும் செய்யவேண்டியதையல்லவா இவர்கள் செய்கிறார்கள்? ஏன் இவர்களுடன் தாமும் இணையவேண்டும் என்று அந்த அரசியல்ப் பொறுக்கிகள் நினைக்கவில்லை? ஏன், இவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கவேண்டும் என்று இந்த மேதாவிகள் நினைக்கவில்லை? ஏனென்றால், இந்தப் பொறுக்கிகளுக்கும், அதிமேதாவிகளுக்கும் நடப்பது தெரியும். எவர் என்ன சொன்னாலும் சிங்களம் அசையாதென்பது தெரியும், அதனால் லாவகமாக விலகிநின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

இங்கே தோற்றதோ, விரட்டப்பட்டதோ அந்த மாணவர்கள் கிடையாது. மாறாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய இனம். இங்கே அவர்களை விரட்டியது வெறுமனே இரண்டு சிங்களக் காடையர்கள் இல்லை. மாறாக, தமிழர்களைப் போரில் வென்று, முற்றாக அடிமைகொண்ட சிங்களப் பெளத்தப் பேரினவாதம். அந்த இரு சிங்களவர்களின் முகத்திலும் தெரிந்தது வெற்றிச் செருக்கும், அடிமைகள் எம்மீதான ஏளனமும்தான்.

முடிவு என்னவென்று தெரிந்திருந்தும்கூட, தமது ஆதங்கத்தைச் சிங்களப் பூமியில் பதிவுசெய்யச் சென்ற அனைத்து யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள்.

உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இந்தப் பொறுக்கிகளுக்கும், அதிமேதாவிகளுக்கும் நிறையவே இருக்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

ஆகவே எமது குரலை பதிவு செய்ய வேண்டிய இடம்... எமது எதிர்ப்பை காட்ட வேண்டிய இடம்.. சர்வதேசத்தின் பார்வையை இழுக்கக் கூடியதும்.. சிங்கள ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக் கூடியதுமாக அமைவது முக்கியம்.

  1. சர்வதேசத்தின் பார்வையை இனியா இழுக்க வேண்டி இருக்கிறது?
  2. ஏன், இவ்வளவு காலமும் இலங்கையில் நடப்பது சர்வதேசத்துக்கு தெரியாதா? தெரியாமலா, இத்தனை இலேட்சம் மக்களையும் அகதிகளாக ஏற்று கொண்டார்கள்? 
  3. சிங்கள ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக் கூடிய இடம் என்று நீங்கள் கூறுவது எது? அதற்கு இலங்கையில் நடப்பது இனியா தெரிய வேண்டி இருக்கிறது? தெரிந்தால் கேள்வி கேட்பார்களா? கேள்வி கேட்டு என்ன பயன்? 

இனியும் இப்படி கூட்டமைப்பு போல ஊரை பேய்க்காட்டி என்ன காணப் போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

வாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்: வடக்கு- கிழக்கு மாணவர்கள் எச்சரிக்கை

IMG-1773-719x450-696x436.jpg

 

எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

நீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.

எனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.

தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.

இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மை பற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.

மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.quicknewstamil.com/2018/10/13/வாக்குறுதிகள்-பொய்த்துப/?fbclid=IwAR0KhdJJrF0ghcNn6Gx3WVsBI0ei8Tf5jJpmcS-7McpA2nwUpy6RCPYiHfU

Link to comment
Share on other sites

On ‎10‎/‎13‎/‎2018 at 6:39 PM, நிழலி said:

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒரு வன்முறைப் போராட்டமாக உலகிற்குக்காட்ட சிங்களம் எத்தனிக்கும் என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. இந்தக் காடையர்களுக்கு எந்த மொழியில் பேசி விளக்க முற்பட்டுருந்தாலும் இவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியிருக்கும் அதற்கு இடம்கொடாது அமைதியாக விலகிச்சென்ற மாணவர்களின் செயற்பாடு வரவேற்புக்குரியது.  

Link to comment
Share on other sites

On 10/13/2018 at 10:09 PM, நிழலி said:

 

அப்பிடியே பிளேட்டை மாத்தி போட்டிருக்கு ஒரு கும்பல்!
அதுக்கு வக்காலத்து வாங்க இன்னொரு கும்பல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் உடனடியாக திட்டமிடப்பட்டதில்லையே. உண்மையில் அந்த மாணவர்களின் போராட்டம் காரணமாகவே சுத்துமாத்து அரசியவாதி சுமந்திரனும் சுரணைகெட்ட அரசியவாதி சம்பந்ததும் ஒருசில உறுதிமொழிகளை சொறிலங்கா அரசு அதிகாரிகளிடம் வாங்கிக்கொள்ள முடிந்தது.

இவ்வளவு காலமாக இந்த இரண்டு சுத்துமாத்து அரசியல்வாதிகளையும் கண்டுகொள்ளாத  சொறிலங்கா அரசு அதிகாரிகள் இப்போது இவர்களை வைத்தே மாணவர் போராட்டத்தை வலுவிழக்க முயற்சி செய்துள்ளது.

அதன் ஒரு முயற்சியே அப்பிடியே பிளேட்டை மாத்தி போட்டிருக்கும் இந்த முயற்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…

October 15, 2018

3 Min Read

IMG_9583.jpg?resize=720%2C405

கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக இன்றைய தினம் 15 10 2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்”

13/10/2018

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து  அநுராதபுரம் வரையான நடைப்பயணம்

மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது.
உலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள மக்களினதும் ஒன்றுபட்ட கூட்டாகவே அவரவர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைகளைச் சீர்தூக்கிப்பார்க்கின்ற, தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

இத்தகைய நடைமுறை உண்மைநிலை இவ்வாறிருக்க, இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக்கொண்டு சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இலங்கைச் சனநாயக சோசலிச குடியாட்சி முறைமையின்கீழ் செயற்பட்டபோதிலும், தமக்கெனத் தனித்துவமான இறையாண்மையைக்கொண்ட சிறுபான்மையினர்களின் அடிப்படையுரிமைகள், பெரும்பான்மைச்சமூகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டமையானது தமிழர், சிங்களவர் ஆகிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கட்டிவளர்க்க வழியமைத்தன என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும், ஆட்சி அதிகாரங்களைத் தமக்குச் சார்பாகப் பெருபான்மையினரால் அமைக்கப்பட்டு அதனையே தமது பேரினவாத போக்கிற்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் முனைந்துவந்துள்ளனர். அவ்வாறான முறைசாரா அதிகாரத்தினூடாக பாராபட்சமான சட்ட நடைமுறைகள் திணிக்கப்பட்டு சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகள் இன்றுவரை ஒடுக்கப்படுகின்றன.

இதற்கு இன்றுவரை உயிருள்ள மாபெரும் சாட்சியமாக இருக்கின்ற விடயமே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமாகும். சிறைகளிலே எவ்வித காரணங்களும் அறியாமல், அல்லது தெரிவிக்கப்படாமல் அரச அதிகார ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரிந்த வகையில் நீதிக்குப்புறம்பாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது. போர் முடிவுக்கு வந்ததாக இதே அரச ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு இற்றைக்கு ஒரு தசாப்தத்தை அண்மித்திருந்தபோதிலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான நடைமுறையில் எவ்விதமான மாற்றங்களுமில்லாத வாழ்வுநிலையிலேயே தமிழர்கள் இன்றும் அவலங்களைச் சுமக்கின்றனர்.

இதனிடையே, நம்பகமாக வாக்குறுதிகளை வழங்கி, தமது அதிகாரங்களைத் தமிழர்களின் துணைக்கோடலுடன் அமைத்துக்கொண்ட ‘நல்லாட்சி’ எனும் நடைமுறையரசின் பாராமுகம், இவ்விவகாரத்தில் நம்பகத்தன்மையை இழந்துள்ளதோடு, மாறாக பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சி அதிகாரம் மீதான சந்தேகங்களையுமே தமிழர்களிடம் மீண்டும் மீண்டும் வலுவடையச்செய்திருக்கின்றன.

அரச இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று குரல்கொடுக்கத் துணிந்த அரச அதிபரினால், தங்களது தேசத்திலுள்ள சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறு பாரமுகமாகச் செயற்படமுடிகின்றது? குறிப்பாக, தமிழர்களுக்கு அநீதி இழைத்து, கொடிய போரைவழிநடத்திய இராணுவத் தளபதிக்குகூட ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரப்பிரயோகமூடாக பொது மன்னிப்பை வழங்கமுடிந்த ஜனாதிபதி அவர்கள் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாரமுகமாக இருக்கின்றார்?

இவற்றையெல்லாம் வினவுகின்ற நாங்கள் யார்? ‘மாணவர்கள்’ , இந்த நாட்டில் போர் ஓய்வு நிலைக்குவரும்போது சிறுவர்களாக இருந்தவர்கள், ஆனால் இன்று நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப்பார்க்கும் அறிவுப்பக்குவம் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள். உண்மையிலேயே அமைதியாகவும் , நேர்த்தியாகவும் தன்குடிமக்களை நல்வழிப்படுத்துகின்ற நல்லாட்சி அதிகாரமொன்று நிலவுமெனில், நாங்கள் ஏன் எங்கள் இயல்புவாழ்க்கையைவிட்டு வீதியில் இறங்கி அறவழியில் எங்களை வருத்திப் போராடுகின்றோம்? எங்கள் தாய் தந்தையர், உறவுகள் ஏன் இன்னமும் கண்ணீருடன் வீதியில் நின்று போராடுகிறார்கள் ? இவ்வாறு சிந்திக்கும் தறுவாயில்தான்” நாங்கள் யார்” என்ற அடையாளத்தையும், எங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும், எங்களுக்கான அடிப்படை உரிமைகளையும் சிந்திக்கவிழைகின்றோம்.

எல்லோரையும் போல எங்களுக்கான இறைமையும் மதிக்கப்படுகின்ற புறச்சூழலில் நாங்கள் இவ்வாறு அல்லல்படத்தேவையில்லை என உறுதியாக நம்புகின்றோம். ஒரு அமைதியான, உரிமைகளைச் சமத்துவமாக மதிக்கின்ற ஒரு நல்ல புறச்சூழலை எவ்வாறேனும் தோற்றுவிக்கும் நல்லெண்ணத்தில் நாங்கள் மானசீகமாக முன்வைக்கின்ற பின்வரும் கோரிக்கைகளை சிரத்தையுடன் கவனத்தில் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து போகாது, எங்களது துயரங்களையும் கடந்து இங்குவந்துள்ளோம்.

எங்களது தார்மீகமான கோரிக்கைகள்.

1) இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோலவேண்டும்.

2) தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத்த் தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.

3) இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்கவேண்டும். இவற்றை நடைமுறைச்சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம். மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்.

நன்றி!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள்

October 12, 2018
Memo to UN Secretary General by Jaffna University and Northeast Tamil Students about the release of Tamil Political Prisoners
Sri Lanka since its independence from Britain has consistently denied even the basic rights of Tamil minority resulting in tension between the Sinhalese majority and Tamil minority. Furthermore the Sinhalese majority have established Governments that consistently discriminated against Tamils and denied even the basic rights of Tamils.
One of the most glaring examples of this attitude of the Sri Lankan Government is the issue of Tamil political prisoners. The imprisoned Tamil political prisoners have no idea why they were imprisoned or were not informed of the reason for why they have been imprisoned. The imprisonment of these Tamil Political Prisoners contravenes any international standards.
Even though the Sri Lankan Government has announced that the war has come to an end about ten years ago, Tamils still don’t have any basic rights, resulting in enormous hardship, because of their identity.
Furthermore, the current Governments which gave numerous promises to Tamils to get their support to come to power have renegade on those promises. As a result of this, Tamil’s suspicion of Sri Lankan Government has deepened. Additionally Tamils lost any confidence in Sri Lankan Government to address their legitimate grievances.
Sri Lankan President went all the way to the United Nations General Assembly to speak and to take steps to protect Sri Lankan Security forces that have committed war crimes and crimes against humanity against Tamils. But the same President is completely ignoring the plight of the Tamil political prisoners.
Especially, if Sri Lankan President can pardon a Commander of the Sri Lankan Security forces, who have committed abuses against Tamils including international crimes, how can he ignore the plight of Tamil political prisoners?
We as students are raising these questions. We were children when the war came to a bloody end in May 2009, resulting in thousands of Tamils were killed and Tamil women were sexually assaulted and raped by the Sri Lankan Security forces. Today we have grown up and going to Universities and have the ability to identify and analyze right from wrong.
If there is a genuine government which governs the country without discrimination and are taking genuine steps and administrating the country in a democratic and non-discriminatory manner, then why should we the students, have to sacrifice our studies and normal life to fight peacefully but with great pain and suffering and facing difficulty and challenges? Why should Tamil students’ parents also have to undergo difficulties and fight for justice? It is during this time we started to think about the discrimination against us and what our rights are.
Like everyone else, if we also enjoy our basic rights and live without discrimination, then we strongly believe that there is no need to struggle or to suffer. To achieve a genuine non-discriminatory and non-bias life for Tamils, we submit the following requests for your kind consideration.
1) Release all the Tamil political prisoners who are imprisoned in several prisons in Sri Lanka, immediately and unconditionally.

2) Immediately revoke Prevention of Terrorist Act (PTA) and to hold any inquiries impartially.

3) Tamils who were disappeared by the Sri Lankan Security Forces should receive impartial investigation.

By addressing these issues and other issues of concern, Tamils will be able to return to their normal life. These are not unreasonable demands. As students we think rationally to seek the welfare of everyone. We are confident that your efforts will bear fruit. Thank you.
Sincerely,

Jaffna University Students
North, East Tamil Students

Jaff-uni-un-1.jpg?resize=600%2C800Jaff-uni-un-2.jpg?resize=600%2C800Jaff-uni-un-4.jpg?resize=600%2C800Jaff-uni-un3.jpg?resize=600%2C800

 

http://globaltamilnews.net/2018/99484/

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள மகஜர் வருமாறு.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம்.

 

மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது.

 

students-2018-300x165.jpgஉலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள மக்களினதும் ஒன்றுபட்ட கூட்டாகவே அவரவர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைகளைச் சீர்தூக்கிப்பார்க்கின்ற, தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

 

இத்தகைய நடைமுறை உண்மைநிலை இவ்வாறிருக்க, இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக்கொண்டு சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இலங்கைச் சனநாயக சோசலிச குடியாட்சி முறைமையின்கீழ் செயற்பட்டபோதிலும், தமக்கெனத் தனித்துவமான இறையாண்மையைக்கொண்ட சிறுபான்மையினர்களின் அடிப்படையுரிமைகள், பெரும்பான்மைச்சமூகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டமையானது தமிழர், சிங்களவர் ஆகிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கட்டிவளர்க்க வழியமைத்தன என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும், ஆட்சி அதிகாரங்களைத் தமக்குச் சார்பாகப் பெருபான்மையினரால் அமைக்கப்பட்டு அதனையே தமது பேரினவாத போக்கிற்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் முனைந்துவந்துள்ளனர்.

 

அவ்வாறான முறைசாரா அதிகாரத்தினூடாக பாராபட்சமான சட்ட நடைமுறைகள் திணிக்கப்பட்டு சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகள் இன்றுவரை ஒடுக்கப்படுகின்றன.

 

இதற்கு இன்றுவரை உயிருள்ள மாபெரும் சாட்சியமாக இருக்கின்ற விடயமே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமாகும். சிறைகளிலே எவ்வித காரணங்களும் அறியாமல், அல்லது தெரிவிக்கப்படாமல் அரச அதிகார ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரிந்த வகையில் நீதிக்குப்புறம்பாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது. போர் முடிவுக்கு வந்ததாக இதே அரச ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு இற்றைக்கு ஒரு தசாப்தத்தை அண்மித்திருந்தபோதிலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான நடைமுறையில் எவ்விதமான மாற்றங்களுமில்லாத வாழ்வுநிலையிலேயே தமிழர்கள் இன்றும் அவலங்களைச் சுமக்கின்றனர்.

 

இதனிடையே, நம்பகமாக வாக்குறுதிகளை வழங்கி, தமது அதிகாரங்களைத் தமிழர்களின் துணைக்கோடலுடன் அமைத்துக்கொண்ட ‘நல்லாட்சி’ எனும் நடைமுறையரசின் பாராமுகம், இவ்விவகாரத்தில் நம்பகத்தன்மையை இழந்துள்ளதோடு, மாறாக பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சி அதிகாரம் மீதான சந்தேகங்களையுமே தமிழர்களிடம் மீண்டும் மீண்டும் வலுவடையச்செய்திருக்கின்றன.

 

அரச இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று குரல்கொடுக்கத் துணிந்த அரச அதிபரினால், தங்களது தேசத்திலுள்ள சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறு பாரமுகமாகச் செயற்படமுடிகின்றது? குறிப்பாக, தமிழர்களுக்கு அநீதி இழைத்து, கொடிய போரைவழிநடத்திய இராணுவத் தளபதிக்குகூட ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரப்பிரயோகமூடாக பொது மன்னிப்பை வழங்கமுடிந்த ஜனாதிபதி அவர்கள் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாரமுகமாக இருக்கின்றார்?

 

இவற்றையெல்லாம் வினவுகின்ற நாங்கள் யார்? ‘மாணவர்கள்’ , இந்த நாட்டில் போர் ஓய்வு நிலைக்குவரும்போது சிறுவர்களாக இருந்தவர்கள், ஆனால் இன்று நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப்பார்க்கும் அறிவுப்பக்குவம் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள். உண்மையிலேயே அமைதியாகவும் , நேர்த்தியாகவும் தன்குடிமக்களை நல்வழிப்படுத்துகின்ற நல்லாட்சி அதிகாரமொன்று நிலவுமெனில், நாங்கள் ஏன் எங்கள் இயல்புவாழ்க்கையைவிட்டு வீதியில் இறங்கி அறவழியில் எங்களை வருத்திப் போராடுகின்றோம்? எங்கள் தாய் தந்தையர், உறவுகள் ஏன் இன்னமும் கண்ணீருடன் வீதியில் நின்று போராடுகிறார்கள் ? இவ்வாறு சிந்திக்கும் தறுவாயில்தான்” நாங்கள் யார்” என்ற அடையாளத்தையும், எங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும், எங்களுக்கான அடிப்படை உரிமைகளையும் சிந்திக்கவிழைகின்றோம்.

 

எல்லோரையும் போல எங்களுக்கான இறைமையும் மதிக்கப்படுகின்ற புறச்சூழலில் நாங்கள் இவ்வாறு அல்லல்படத்தேவையில்லை என உறுதியாக நம்புகின்றோம். ஒரு அமைதியான, உரிமைகளைச் சமத்துவமாக மதிக்கின்ற ஒரு நல்ல புறச்சூழலை எவ்வாறேனும் தோற்றுவிக்கும் நல்லெண்ணத்தில் நாங்கள் மானசீகமாக முன்வைக்கின்ற பின்வரும் கோரிக்கைகளை சிரத்தையுடன் கவனத்தில் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து போகாது, எங்களது துயரங்களையும் கடந்து இங்குவந்துள்ளோம்.

 

எங்களது தார்மீகமான கோரிக்கைகள்.

 

1) இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோலவேண்டும்.

 

2) தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத்த் தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.

 

3) இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

 

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்கவேண்டும். இவற்றை நடைமுறைச்சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.

 

மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்.

 

நன்றி!

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள்

http://www.eelamenews.com/?p=122220

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.